Romance நீ கவிதைகளா…
#1

படித்ததில் பிடித்த "எந்தன் செல்லம்மா" என்ற கதை "நீ கவிதைகளா.." என்ற தலைப்பில் கொஞ்சம் காமத்துடன்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

நீ கவிதைகளா…
கனவுகளா…
கயல்விழியே…

நான் நிகழ்வதுவா…
கடந்ததுவா…
பதில் மொழியே…

உன்னோடு நெஞ்சம்…
உறவாடும் வேளை…
தண்ணீர் கமலம்தானா…

குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்த ரகுவின் ஃபோன் ரிங் டோன் ஒலிக்க ஃபோன்காலை அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.

ரகு...

சொல்லு கயல்.

உங்க வீட்டுக்கு முன்னாடிதான் நிக்கிறேன். வெளிய வர்றீங்களா?

வாட் எனக் கேட்டுக் கொண்டே லுங்கியை அரையும் குறையுமாக இடுப்பில் சுற்றியபடி வெளியே எட்டிப் பார்த்தான்.

ஏய் நீ எங்க இங்க.?

ஏன் உங்களைப் பார்க்க வரக் கூடாதா?

சில விநாடிகளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

கொஞ்சம் வெயிட் பண்ணு பிளீஸ் என அவசர அவசரமாக பிரஷ் பண்ண ஆரம்பித்தான். மீண்டும் தெருவை எட்டிப் பார்க்க இந்த முறை தன் கையை அசைத்தாள் கயல். பதிலுக்கு கையை அசைத்தான்.

அழகாக வெளியே செல்வதற்கு ஏற்றார் போல கிளம்பி வந்திருந்த கயலை அப்படியே பார்க்க செல்ல முடியுமா?

அவசர அவசரமாக காக்கா குளியல் ஒன்றை போட்டு தன்னிடம் இருந்த நல்ல ஆடையை அணிந்தான்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#3

என்ன இவ்வளவு நேரம்?

குளிச்சிட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.

அதுக்குள்ள குளிச்சிட்டீங்களா..!

காக்கா குளியல். பேச்சுலர் லைஃப் என புன்னகைத்தான்.

கயல் பதிலுக்கு சிரித்தாள்.

என்ன சென்னைக்கு வந்திருக்க? எதும் விசேஷமா?

இல்லை.

அப்புறம்?

உங்களைப் பார்க்கதான் வந்தேன்.

என்னை பார்க்கவா என தட்டுத் தடுமாறி கேட்டான்.

பார்க்க மட்டுமில்லை. அப்படியே அவுட்டிங் போலாம்னு நினைச்சு வந்தேன்.

ஷாக் அடித்தது போல நின்றான்.

என்னாச்சுங்க?

உண்மையாவா?

ஆமா. உங்களுக்கு இன்னைக்கு லீவு தான?

ஆமா என தலையை அசைத்தான்.

எனக்கும் லீவு. அதான் உங்களை பார்த்துட்டு போகலாம்னு கிளம்பி வந்துட்டேன்.

பேன்ட் பாக்கெட்டில் பர்ஸ் இல்லை. போய் பர்ஸ் எடுத்துட்டு வர்றேன் என சொன்னவனின் கையைப் பிடித்தாள்.

என்கிட்ட பணம் இருக்கு.

கயல் பணத்தை செலவு செய்வதா என அவனுள் சிறு தயக்கம்.

ஏன் தயங்குறீங்க.

இல்லை பர்ஸ்.

பரவாயில்லை. இன்னைக்கு நான் செலவு பண்ணுனா நாளைக்கு நீங்க செலவு பண்ண மாட்டீங்களா?

அது இல்லை. ஐடி கார்ட்.

பயப்படாதீங்க. நான் உங்களை கடத்திட்டு போய் ஒண்ணும் பண்ண மாட்டேன் என சிரித்துக் கொண்டே தன் கணவனின் கரங்களை பற்றிக் கொண்டாள் கயல்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#4
Very nice start
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)