Thriller திருட்டு பூனை
#1
Episode - 1


நமது கதாநாயகன் பெயர் பிரபு வயது 21, பார்க்க பழம் போல இருப்பான், தலையில் நன்கு எண்ணெய் வைத்து, இடது பக்கத்தில் இருந்து வகுடு எடுத்து வாரி, கண்ணாடி போட்டிருப்பான், கண்ணாடி அணிந்த காரணம் என்னவென்றால், சிறு வயதில் இருந்து 24 மணி நேரமும் படிப்பு படிப்பு படிப்பு, மற்ற பிள்ளைகள் போல விளையாட வீட்டை விட்டு வெளியே சென்றால் அம்மா அடி வெளுத்து விடுவாள், அவளுக்கு ஒரே ஒரு கவலை, எங்கு இவன் சரியாக படிக்காமல் போய்விட்டால் இவன் தந்தை போல வேலை வெட்டி இல்லாமல் கூலி வேலை செய்ய நேரிடும் என்ற ஒரே கவலை, அவளோ வீடு வீடாக சென்று பத்து பாத்திரம் தேய்ப்பவள், பிரபுவிற்க்கு ஒரு தங்கச்சி, அவளுக்கு நீ தான் டா கல்யாணம் பண்ணனும், "அவளுக்கு அப்புறம் தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்", இதையே அவன் வீட்டில் அவன் பெற்றோர் அவன் காதில் மந்திரம் போல ஓதி ஓதி, அவன் கனவிலும் அதே வார்த்தைகள் வரும்.

அவன் பார்க்க ஒல்லியாகவும் சற்று உயரமாக இருப்பான், சரியாக சொல்ல வேண்டும் என்றால் 5.6 அடி உயரம் 58 கிலோ எடை

பள்ளியில் அவனது பட்ட பெயர் எலும்பன், கல்லூரியில் அவனது பட்ட பெயர் ஓம பாடு, வீட்டின் அருகில் உள்ள நண்பர்கள் வைத்த பெயர் பொட்ட பிரபு, ஏன் என்றால் விளையாடுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே வர மாட்டான் என்று.

அவன் படித்தது அரசு பள்ளி என்றாலும் அனைத்து வகுப்பிலும் அவனே முதல் மதிப்பெண் வாங்குவான், +2 படிக்கும் போது 500/600 மதிப்பெண் வாங்கினான்

பொறியியல் படிக்க councelling சென்ற போது, ஓர் அளவிற்கு நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தாலும் வங்கியில் கடன் தராததால் அவனால் படிக்க முடியவில்லை.

ஏன் கடன் தரவில்லை என்றால் அவன் குடிக்கார அப்பனுக்கு வங்கி மேலாளரிடம் பேச சாமர்த்தியம் இல்லை, அந்த மேலாளர் உங்கள் விலாசத்திற்கு இந்த வங்கி வராது என்று சொல்ல, வேறு வங்கியில் அது நொட்டை இது நொட்டை என்று சொல்ல

என்ன செய்வது நாம் வாங்கிய கல்வி கடன்களை திருப்பி கட்டினால் தானே இவர்கள் போல ஏழைகள் மீது அவர்கள் இறக்கம் காட்ட

புரிகிறது அரசியல் பேச வேணா ப்ரோ, அத தான சொல்ல வரீங்க ஓகே its alright.

அவன் அம்மா பத்து பாத்திரம் தேய்க்கும் இடத்தில் ஒரு வீட்டு உரிமையாளரிடம் வங்கி மேலாளரிடம் பேச சொல்லி உதவி கேட்க, அவரும் உதவி செய்ய முன் வர

அடியே தேவிடியா அப்போ நான் ஆம்பள கிடையாதா, எனக்கு சாமர்த்தியம் இல்லையா என்று அவளை வம்புக்கு இழுத்து அடித்து, பையனுக்கு சிபாரிசும் அவளுக்கு வேலையும் கெடுத்தான் அவனது குடிக்கார அப்பன்.

அவன் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோது அவன் அப்பா சாராயம் குடித்து குடித்து ஒரு கட்டத்தில் விக்கியே சாக, அவன் வேலைக்கு செல்லும் நிர்பந்ததில் தள்ளப்பட்டான்.

அவன் வாத்தியார் ஒருவர் பிரபல மோட்டார் வாகன கம்பெனியில் மெஷின் ஆபரேட்டராக வேலை வாங்கி தர, அந்த வருமானம் ஓர் அளவிற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது

அவன் 10/+2 வகுப்பு தகுதியுள்ள அரசு பணியிடங்களுக்கு தயார் ஆகி வந்தான், அவன் நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் அவனுக்கு எளிதாக அரசு வேலை கிடைத்துவிட்டது

இப்பொழுது அவன் வீட்டில் அவன் வைத்தது தான் சட்டம், அவன் அம்மா அவனை கேட்காமல் எதுவும் செய்வதில்லை, அவன் தங்கையும் அவன் பேச்சை மதித்து வந்தாள்.

இப்பொழுது கரெஸ்ல் b.com இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான்.

இதை எல்லாம் படித்து விட்டு அவன் மீது இறக்கமோ அல்லது மரியாதையோ உங்களுக்கு வந்தால் அது தவறு, நான் சொன்னது எல்லாம் பூனையை பற்றி, சொல்ல போவது திருட்டு பூனையை பற்றி

அடுத்த பாகமும் படித்து விட்டு முடிவு செய்யுங்கள்

அவன் அப்பாவியா அல்லது அட-பாவியா என்று.
[+] 2 users Like srinath12's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[Image: images-2024-02-24-T191125-796.jpg]

மன்னிக்கவும் தலையில் எண்ணெய் வைத்தார் போல் புகைப்படம் கிடைக்கவில்லை, இவர் ஸ்பைடர் மேன் கதாநாயகன் நீங்கள் அறிந்ததே, அதனால் இது சூப்பர் ஹீரோ கதை என்று நினைத்து விட வேண்டாம், ஆனால் கண்டிப்பாக த்ரில்லிங் ஆக கொண்டு செல்வேன்.
[+] 1 user Likes srinath12's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)