Adultery ➰ அண்ணி •❖• கீத்து
#1
டிஸ்கிளேய்மர்

கதைக்களம், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உறவு கொள்வது போல காட்சியமைப்பு இருக்கும்..

அசிங்கப்படுத்துதல், அவமானப்படுத்துதல், தகாத உறவு மற்றும் இதர வகையான பாலியல் காட்சிகள் இருக்கலாம்..

பிடிக்காதவர்கள் தயவு செய்து இக்கதையை தவிர்க்கவும்..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
【01】

படித்ததில் பிடித்த, சொக்கும் விழி பார்வையிலே என்ற கதை காமக் கதையாக இருந்தால் என்ற பார்வையில்..

சங்கீர்த்தனா(@கீத்து)

எங்கு? யாருக்கு? என்று பிறந்தாள் என தெரியாது. ஒரு ஆஸ்ரமத்தில் வளர்ந்து, அவர்களின் உதவியுடன் கல்லூரி படிப்பை முடித்து, தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாள்.

[Image: e23aafc68ab9c46eaf8e31b7fa6726ca.jpg]

ரவி குமார்(@குமார்)

கீத்துவின் பாஸ், சிடு மூஞ்சி, முன் கோபம் அதிகம், யாரைக் கண்டாலும் எரிந்து விழுவது போல இருக்கும். ஆனால் தொழில் என்று வரும்போது ரொம்ப யோசனை செய்து தெளிவான முடிவுகளை எடுப்பதில் கில்லாடி. அப்பாவை முன்மாதிரியாக வைத்து வளர்ந்தவன். பணம், அந்தஸ்து, கவுரவம் இவைதான் மிக முக்கியம்.

ரகு குமார்(@ரகு)

கீத்துவின் காதலன், குமாரின் தம்பி ஊடகவியலாளர், கோபம் கிலோ எவ்ளோ என கேக்கும் அளவுக்கு குணம் உள்ளவன். முக்கியமான முடிவுகளை எடுக்க ரூம் போட்டு யோசிக்கும் பழக்கமும் இல்லை. பிறரிடம் கலந்து பேசி முடிவெடுக்கும் பழக்கமும் இல்லை. பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி..

ஷிவானி

ரவி & ரகுவின் செல்லத் தங்கை. குணம் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து செய்த கலவை. அவர்கள் இருவர் என்றால் இவளுக்கு உயிர். இவள் என்றால் அவர்களுக்கு உயிர். தவறு யாரு செய்தாலும் எதிர்த்து கேட்க தயங்குவதில்லை. தனக்கு பிடித்த விஷயங்களை தயங்காமல் செய்பவள்.

மித்ரா

ஊடகவியலாளர்

திவ்யா

குமார் @ரவி குமாரின் காதலி
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#3
Very Nice Start Bro
Like Reply
#4
【02】

தாலியை எடுத்து கட்டுங்கோ என அர்ச்சகர் சொல்ல.

கைகளை கூப்பியபடி நின்ற கீத்து, தன் கண்களை மூடி எதுவும் தப்பாக நடக்கக் கூடாது என வேண்ட ஆரம்பித்தாள்..

கீத்துவின் காதலன் அந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்ட தயாரானான்.

அடுத்த சில விநாடிகளில் கீத்துவால் தன் நெஞ்சில் தாலி உரசுவதை அவளால் உணர முடிந்தது.

அதே வினாடி "அய்யோ", "ஏய் ஏய்", "என்ன பண்றடா" என ஆளாளுக்கு சத்தம் போட.

தன் கண்களை திறந்தாள் கீத்து. அவள் எதிரில் நின்று கொண்டிருப்பது குமார்.

குமார் வேறு யாருமல்ல, கீத்துவின் காதலன் ரகுவின் அண்ணன்.

தாலியை எடுக்க கை நீட்டிய தன் தம்பியை கீழே தள்ளி விட்டுவிட்டு, அந்த தாலியை எடுத்து முதல் முடிச்சை போட்டுவிட்டு இரண்டாவது முடிச்சை போட்டுக் கொண்டிருந்தான் குமார்...

குமார் தன் தம்பியின் காதலி கீத்து கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி...

- - நேற்று - -

கீத்து வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை செய்கிறார்களோ இல்லையோ ஆனால் எப்போதும் போல இன்று காலையும் அந்த அலுவலகம் மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எல்லாத்துக்கும் காரணம் அவர்கள் முதலாளியின் மீதிருக்கும் பயம் தான்.

ஆனால் சங்கீர்த்தனாவுக்கு வேலை சுத்தமாக ஓடவில்லை. அவள் தன் காதலனையும் காதலையும் பற்றி யோசித்தாள்.

கீத்துவுக்கு ரத்த சொந்தங்கள் யாரேனும் இன்னும் இருக்கலாம். ஆனால் அவள் சொல்லிக் கொள்வதற்க்கென யாரும் இல்லை. வேலை பார்க்கும் மகளிருக்கான விடுதியில் இப்போது வாழ்கிறாள்.

உழைத்து தன் சொந்த காலில் நிற்க ஆரம்பித்த பிறகு அவள் வாழ்வில் சந்தோஷம் நிறைந்து இருந்தது அவளுடைய காதலனாக ரகு அவள் வாழ்வில் வரும்வரை அவளுக்கு இப்போது இருக்கும் பெரிய உறுதுணை மற்றும் கவலை இரண்டுமே அந்த ரகு தான்.

ரகுவை அந்த அலுவலகத்தில் சிலர் பிளே பாய் என்று சொல்லி கேட்டிருக்கிறாள். ஆனால் அவன் பெண்களிடம் வழிந்து பார்த்ததில்லை. ஆனால் அங்கு வேலை செய்யும் சில பெண்கள் எல்லாவற்றையும் குடுக்க தயாராக இருப்பது போல இருக்கு பேசுவதை பார்த்திருக்கிறாள்.

ரகு விளையாட்டு புத்தி உள்ளவன் என்பதை நன்கு அறிவாள். சிலமுறை அவனுடன் ஹோட்டலில் தங்கியதும் உண்டு. உடலுறவை தவிர வேறு எல்லாம் செய்துவிட்டார்கள்.

தான் அனாதை, எல்லாம் கொடுத்தால் ஒருவேளை தன்னை கழட்டி விட்டுவிட்டு போய் விடுவான் என்ற எண்ணம் அவளிடம் இல்லாமல் இல்லை. இருந்தாலும் அந்த வயதிற்கு வரும் ஆசை, அவளும் காதலிக்கிறாள்.

குட் மார்னிங் டியர் என்று சொல்லிய தன் காதலன் ரகுவை இடது புறம் திரும்பி நிமிர்ந்து பார்த்து புன்னகை புரிந்தாள்.

ஒரு முக்கியமான விஷயம், என்கூட வா என்று சொல்லி அவள் கையை பிடித்தான்.

அவளும் கையை தட்டி விடாமல் அவன் பின்னால்  சென்றாள்.

ரகு நுழைந்தது அந்த நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டர் அறை. அந்த எம்டி வேறு யாருமல்ல ரகுவின் அண்ணன் குமார் என்கிற ரவிக்குமார் தான்.

அண்ணா..

நிமிர்ந்து பார்த்தான் குமார்.

என்னடா எனக் கேட்டவன் தன் தம்பியின் அருகில் நிற்கும் சங்கீர்த்தனாவை கண்களால் மேய்ந்தான்.

குமாரின் அந்த பார்வை எப்போதும் போல அவளை அசௌகரியமாக உணர வைத்தது. அவள் தன் தலையை குனிந்து கொண்டாள்.

ரகு : அண்ணா, நானும் கீத்து(சங்கீர்த்தனா)வும் நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறோம்.

குமார், கீத்து இருவருக்கும் அதிர்ச்சி.

"வாட் " என்றான் குமார். கீத்து தன் கைகளை ரகுவிடமிருந்து விடுவிக்க முயற்சி செய்தாள்.

உனக்கு என்ன வசதி இல்லைன்னு இப்படி ஒரு அனாதையை கல்யாணம் பண்ணனும்னு நினைக்குற?

அனாதை என்ற வார்த்தையை கேட்ட கீத்துவின் மனம் வலித்தது. அவள் கண்களில் நீர் தேங்கியது. குமார் இப்படி அவள் மனதை காயப்படுத்துவது ஒன்றும் முதல் முறையல்ல..

ரகு : எதுக்கு நீ அவளை பார்த்து அப்படி பேசுற, நாம எல்லாரும் தான் அவளுக்கு சொந்தம்.

மண்ணாங்கட்டி.. நீ லவ் பண்ணுனா உடனே அவளுக்கு நாங்க சொந்தம் ஆகிடுவோமா..

ரகு : எதுக்கு இப்படி பேசுற..?

நீ எவள வேணும்னாலும் லவ் பண்ணு, ஆனா கல்யாணம் பண்ணுற பொண்ணுக்கு அந்தஸ்து இருக்கனும். இப்படி யாரும் இல்லாத. அனாதையாக இருக்க கூடாது..

கீத்து கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் அவள் கன்னங்களை தொட்டு, கீழே வழிந்து கொண்டிருந்தது. என்ன செய்ய முடியும்? எம்டியை திட்டவா முடியும்?

ரகு : நான் உனக்கு தகவல்தான் கொடுக்க வந்தேன், உன் அனுமதி கேட்க வரவில்லை என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறினான்.

இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்குறேன் என கத்திக் கொண்டே, அந்த அறையை விட்டு வெளியேறிய இருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் குமார்.

தன்னுடைய இருக்கைக்கு வந்த கீத்து அவளது டெஸ்க்கில் தலை கவிழ்ந்த படி மிச்ச மீதி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

கீத்து தோள்களை தொட்டு, ரிலாக்ஸ் டியர் என்றான்.

ஏண்டா இப்படி பண்ற என கொஞ்சம் கோபமாக கேட்டாள்.

எதுவா இருந்தாலும் நான் காரணம் இல்லாமல் செய்ய மாட்டேன்னு உனக்குத் தெரியும்.

ஆமா, அது என்னவோ உண்மை தான். ரகு எல்லா விஷயங்களையும் நன்கு யோசித்து முடிவுகளை எடுப்பவன். இருந்தாலும்..

உங்க அண்ணன் பேசுவதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..

நா‌ன் உன்கூட இருக்கும் போது என்னடி பயம் எ‌ன்று‌ ஆரம்பித்தான், அவள் மனது ரிலாக்ஸ் ஆகி ஓரளவுக்கு நார்மல் ஆகும் வரை அங்கேயே அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

நடந்த விஷயங்களை நினைக்க நினைக்க அவளுக்கு வேலையும் ஓடவில்லை. அதற்க்கு பிறகு வேறு எந்த பஞ்சாயத்தும் இல்லாமல் அந்த நாள் முடிந்தது....
Like Reply
#5
【03】

வேலை முடிந்து ஹாஸ்டல் சென்றவள் எண்ணம் எல்லாம் அவள் காதல், ரகு, கல்யாணம் என பல சிந்தனைகளில் மூழ்கியது. அவள் தூங்குவதற்கு அதிகாலை ஆகிவிட்டது.

மறுநாள், அவளது ஃபோன் ரிங் ஆன போது தான் விழித்து தன்னுடைய செல்போன் எடுத்துப் பார்த்தாள்.  அவளை அழைத்தது அவளின் காதலன் ரகு..

அய்யோ சாரி டா, இன்னும் கொஞ்ச நேரம் என சொல்லி அந்த ஃபோன் கால் கட் செய்தாள். நேரத்தை பார்க்கும் போது,  காலை மணி 8 தாண்டிவிட்டது.

அவசர அவசரமாக குளித்து முடித்து, சிறிது மேக்கப் போட்டுக் கொண்டாள். தன்னிடம் இருந்த ஒரு எளிமையான சேலையை அணிந்து கொண்டாள்.

கீத்து மற்றும் ரகு இருவரும் கோவிலுக்கு வந்து சேரும் போது, ரகுவின் தங்கை ஷிவானி மற்றும் அவனது நண்பர்கள் ஜெய் மற்றும் ஜான் இருவரும் அங்கே இருந்தார்கள்.

ஷிவானி : ஏண்டா இவ்ளோ லேட்?

ரகு : மேடம்க்கு ராத்திரி நிறைய கனவு, அப்படியே ரொம்ப நேரம் தூங்கிட்டாங்க. கால் பண்ணி எழுப்பி ரெடியாகி கூட்டிட்டு வர வேண்டாமா.

நீ இங்க வா என கீத்துவை அழைத்த ஷிவானி, கலைந்து கிடந்த கீத்து முடிகளை சரி செய்தாள்.

கீத்து : எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஷிவானி..

ஷிவானி : யாரு அண்ணன நினைச்சா?

கீத்து : ஆமா..

ஷிவானி : என்ன பயம்? அதெல்லாம் ஒண்ணும் பயப்பட வேண்டாம். ஆல் குட்.

கீத்து : அப்படியிருந்தால் சந்தோஷம்.. ஆனா..

ஷிவானி : என்ன ஆனா.. வேணும்னா பாருங்க அண்ணன் இப்ப வருவான்.

கீத்து : எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?

ஷிவானி : கல்யாணத்துக்கு வரலைன்னா, நான் பேச மாட்டேன்னு சொல்லிட்டேன். சோ எனக்காக கண்டிப்பா வருவான்...

ரகுவை கோபம் வந்தால் வார்த்தைகளால் ஒரு வழி பண்ணும் குமார் தன் தங்கையை வார்த்தைகளால் இதுவரை பெரிதாக கடிந்து கொண்டதில்லை. இதுவரை தன் தங்கை கேட்டு அவளை பாதிக்காத எந்த விஷயமும் குமார் இதுவரை மறுத்ததும் கிடையாது. அதனால் தான் ஷிவானி உறுதியாக சொல்கிறாள்.

ஷிவானி அண்ணன் கண்டிப்பாக வருவான் என சொல்லி முடித்த அதே வினாடி கோவில் வாசலில் குமார் மற்றும் அவன் காதலி திவ்யா இருவரும் காரில் வந்து இறங்கினர்...

ரகுவின் அருகில் வந்ததும், திவ்யா அவள் காதலன் குமாரை போலவே வார்த்தைக்கு வார்த்தை அனாதை, நீ எப்படி உன் அண்ணனுக்கு இப்படி துரோகம் செய்யலாம் என பேச ஆரம்பித்தாள்.

உங்களுக்கு அவளைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என ரகு மற்றும் ஷிவானி இருவரும் ஒருசேர திவ்யாவிடம் சொன்னார்கள்.

ஏற்கனவே தம்பியின் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இறுகிய முகத்துடன் இருந்த குமாரின் முகம் தன் தம்பி மற்றும் தங்கை தன்னுடைய காதலியை எதிர்த்து கேள்வி கேட்பதை கேட்டதும் மேலும் இறுகியது.

தேவையில்லாமல் பேசி வாங்கிக் கட்டிக்கொண்டது போல திவ்யா உணர்ந்தாள்.

எல்லாரும் வந்தாச்சா எ‌ன்று‌ கேட்டார் கோவில் அர்ச்சகர். ஆம் என ஷிவானி சொல்ல, மாலைகளை எடுத்துக் கொடுத்தார்.

மணக்கோலத்தில் ரகு மற்றும் கீத்து மாலைகள் அணிந்திருக்க..

மணப்பெண் கீத்து தன் இரு கைகளையும் கூப்பி கும்பிட்ட படி நின்றாள்..

தன் தம்பி ரகு, இந்த மோசமான பெண்ணை மணப்பதை தன்னால் தடுக்க முடியவில்லையே என்று தன் காதலி திவ்யாவிடம் சொல்லி விட்டு வெறுப்பு மிகுந்த மனநிலையில் குமார் அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஷிவானி தன் இரண்டாவது அண்ணன் கல்யாணம் நடைபெறும் சந்தோஷத்தில் இருந்தாள். தான் கேட்டுக் கொண்டதால் தனக்காக மட்டுமே இங்கே வந்திருக்கும் மூத்த அண்ணன் குமாரை நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது.

இங்கே வாங்கோ  என சொல்லி மாலைகள் அணிய சொல்லி, தாலியை எடுத்து கட்டுங்கோ என அர்ச்சகர் சொல்ல. கீத்துவின் காதலனை கீழே தள்ளிவிட்டு அவன் அண்ணன் குமார் தாலியை கட்டிவிட்டான். அவன் தாலி கட்டுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி...

கீத்து அதிர்ச்சியுடன் கீழே கிடந்த ரகுவை பார்க்க, அதே அதிர்ச்சி நிறைய தன் அண்ணன் குமாரை பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. குமார் மூன்றாவது முடிச்சை போட்டு விட்டு கீத்துவை
பார்த்தான்.

கீத்து கண்கள் கண்ணீரால் பெருகி இன்னும் ரகுவை பார்த்துக் கொண்டிருந்தது.

யூ பாஸ்ட்டர்ட் என திவ்யாவின் குரல்.

ரகுவிடம் இருந்த தன் முகத்தை விலக்கி என்னடா இப்படி பண்ணிட்ட என்பதைப்‌ போல குமாரை பார்த்தாள் கீத்து.

நீ என்ன காரியம் பண்ணிட்ட குமார் எ‌ன்று‌ திவ்யா கேட்க, குமார் முகத்தில் அவன் காரில் இருந்து இறங்கி வந்த போது இருந்த அதே இறுக்கம். அவன் என்ன நினைக்கிறான் எ‌ன்று‌ யாராலும் முகத்தை பார்த்து கண்டுபிடிக்க முடியாது.

ரகு, ஷிவானி மற்றும் திவ்யா மூவரும் குமாரை பார்த்து சீறினர். ஆனால் குமார் முகத்தில் துளியும் மாற்றமில்லை.

அர்ச்சகர் மற்றும் ரகுவின் நண்பர்கள் அங்கே நடக்கும் விஷயங்களை வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...

கல்யாணம் பற்றி ஆயிரம் கனவுகள் கண்டிருந்தாள் கீத்து. நேற்று ரகு கல்யாணம் என்று சொல்லும் போதே அவளுக்கு அதிர்ச்சி.

ஹாஸ்டல் சென்ற பிறகு, ஓரளவுக்கு தன் மனநிலையில் இந்த திடீர் கல்யாணத்துக்கு ஓகே என்னும் அளவுக்கு மாற்றம். அவள் மனது இரவு தூங்கும் போது கல்யாணம் எப்படி நடக்கும் என்ற ஒத்திகை பார்த்தது, அந்த ஒத்திகையில் தனக்கு தாலி கட்டியவது தன் காதலன் ரகு.

இப்போது கீத்து கண்களில் கண்ணீர் பொல பொலவென வழிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என அவளுக்கு புரியவில்லை. அவள் எதுவும் சொல்வதால் குமார் கட்டிய தாலி இல்லையென ஆகிவிடுமா?
Like Reply
#6
good start
Like Reply
#7
【04】

ரகு : ஏண்டா இப்படி பண்ணுன..

திவ்யா : யூ சீட்டிங் பாஸ்ட்டர்ட் என சட்டையை பிடித்து உலுக்கினாள்..

எஸ், ஹி இஸ் எ சீட்டிங் பாஸ்ட்டர்ட். ஏற்கனவே சிலமுறை திவ்யாவை  அனுபவித்துவன்.

திவ்யாவின் கைகளை பிடித்து விலக்கி, சாரி என்று சொன்னான். திவ்யாவுக்கு துரோகம் செய்த வருத்தம் கொஞ்சம் கூட குமாரிடம் இல்லை. தான் செய்த விஷயம் தவறு என்ற குற்ற உணர்ச்சி துளியும் இல்லை.

சீட்டிங் பாஸ்ட்டர்ட், இடியட், ஐ ஆம் ஏ ஃபூல், ஐ ஹேட் யூ என சொல்லி கன்னத்தில் பளார் என ஒரு அடி கொடுத்தவள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

திவ்யா இதற்க்கு மேல் என்ன செய்ய முடியும்? இன்னொரு பெண்ணை அதுவும் தன் தம்பியின் காதலியை தாலி கட்டி தன் மனைவியாக்கிக் கொண்டவனை என்ன செய்ய?

தரையில் இருந்து எழுந்து ஏண்டா இப்படி பண்ணுன என குமார் சட்டையை பிடித்தான் ரகு.

டேய் டேய் என ரகுவை தடுக்க ஜெய் & ஜான் முயற்சி செய்தார்கள்.

நா‌ன் தா‌ன் இ‌ந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன்னு நேத்தே சொன்னேன் என ரொம்ப கூலாக தன் தம்பிக்கு பதிலளித்தான் குமார்.

அதுக்காக இப்படி பண்ணுவீங்களா, இது நியாயமா என தன் கோபத்தை காட்டினாள் ஷிவானி. அவளுக்கும் ரகுவை போல சட்டைய பிடித்து கேள்வி கேட்க வேண்டும் போல இருந்தது.

இப்படி உங்களின் போட்டி, தான் சொல்வது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டான் என்ற கோபம் ஷிவானிக்கு.

ரகு சட்டையை விடுவித்தான்.  குமாரை அடிக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் அவனுக்கு அந்த எண்ணம் நிச்சயமாக வந்து போனது. தன் பற்களைக் கோபத்தில் கடித்துக் கொண்டே குமாரை பார்த்துக் கொண்டிருந்தான் ரகு..

போட்ட திட்டம் எல்லாம் வீணா போன வருத்தமா மிஸ்டர் ரகு எ‌ன்று‌ நக்கலாக கேட்டான் குமார்.

குமாருக்கு தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற திமிர். ரகுவுக்கு குமார் மூக்கை உடைக்க வேண்டும் போல எண்ணம் வந்தது. தன் கைகளை முறுக்கினான்.

கீத்து : ரகு...

ரகு கீத்துவை பார்த்தான்..

கீத்து : போலாம்..

குமார் : மேடம், நான் தான் உங்க ஹஸ்பண்ட். அவன் கிடையாது. என்கிட்ட சொல்லு.

கீத்து : தாலி கட்டுனா மட்டும் ஹஸ்பண்ட் ஆகிட முடியாது மிஸ்டர் குமார்..

குமார் : வாட்..

கீத்து : நான் உங்களை புருஷனா ஏத்துக்க வேண்டாமா மிஸ்டர் குமார்.

ரகு தன்னருகில் இருக்கும் தைரியத்தில் அப்படி பேசினாள்.

நேற்றிலிருந்து அழுகை அதிகமாக இருப்பதால் கோழை எ‌ன்று‌ நினைக்க வேண்டாம். தன்னம்பிக்கை, தைரியம் நிறைந்தவள். அதே நேரம் பூவை போல மென்மையானவளும் கூட.

பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் தைரியமாக எதிர் கொள்ளும் திறன் படைத்த பெண். என்ன இது கொஞ்சம் வித்யாசமான பிரச்சனை. இதை அணுகுவது சுலபம் அல்ல. அதற்காக குமார் சொல்லுக்கு மண்டையை மட்டும் ஆட்டப் போதும் பெண்ணும் அல்ல.

குமார் : அப்ப இந்த தாலிக்கு என்ன அர்த்தம் என அவன் கைகள் நெஞ்சின் மேல் இருந்த சேலை மேல் உரச தாலியை தூக்கி காட்டினான்.

என்ன இருந்தாலும் நம்ம ஊர் கலாச்சாரம் பற்றி அறிந்த பெண் தானே கீத்து. குமார் சொல்லிய அந்த வார்த்தைகள் கீத்து நெஞ்சை ஊடுருவ தன் தலையை குனிந்து கொண்டாள்

சில வினாடிகளில் அப்படியே ரகு மற்றும் ஷிவானியை பார்த்தாள்.

ஷிவானி : அண்ணா நீ பண்றது சரியில்லை

ரகு கீத்துவை, உனக்காக நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்பதை போல பார்த்தான்.

ரகு : நீங்க பண்ணுன விஷயம் மட்டும் சரியா மிஸ்டர் குமார்?

தன் அண்ணன் பதிலுக்கு காத்திருக்காமல் கீத்து கைகளை பிடித்து "வா போகலாம்" என்றான் ரகு.

அர்ச்சகர் ரகுவை தம்பி என சொல்லி நிறுத்தினார். சில சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்றார். ரகுவுக்கு துளியும் விருப்பம் இல்லை. இருந்தாலும் எதிர்க்கவில்லை.

குமார் மீண்டும் நக்கலாக தன் தம்பியை பார்த்து சிரித்தான். அர்ச்சகர் சொன்ன சம்பிரதாயங்கள் முடிய, கீத்து நெற்றியில் குங்குமம் வைத்து அவளை தன் மனைவியாக உறுதி செய்தான். தன் ஏளனம் நிறைந்த சிரிப்பை மீண்டும் ரகுவை பார்த்து உதிர்த்தான்.

குமார் : இப்ப கூட்டிட்டு போ..

ரகு தன் அண்ணனை எரித்து விடுவது போல பார்த்தான். வேறு என்ன செய்ய முடியும்.?

ரகு தான் கீத்துவை கூட்டிக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு (குமார், ரகு, ஷிவானி வாழும் வீடு) வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நொடி ரகுவை கட்டிபிடித்து ஓ வென அழுது புலம்பி கண்ணீர் வடித்தாள் கீத்து.. தன் கழுத்தில் தாலி ஏறிய நேரத்தில இருந்து அவள் கண்களில் தேங்கிய நீர் அனைத்தும் வெளியே வந்தது.

ரகு அவளை கட்டிப் பிடித்தபடி சமாதானம் செய்ய தன்னால் ஆன முயற்சியை செய்தான்.

அவர்களின் பின்னால் வீட்டுக்குள் வந்த ஷிவானி கண்ணிலும் கண்ணீர். அண்ணி பிளீஸ் அண்ணி அழாதீங்க அண்ணி என சமாதனம் செய்ய முயற்சி செய்தாள்.

கீத்து இன்னும் தன் காதலனை கட்டிப் பிடித்தபடி இருந்தாள்...

ரகு அண்ட் ஷிவானி எவ்வளவோ முயற்சி செய்தும் கீத்துவை சமாதானம் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் கீத்து அருகில் இருவரும் உட்கார்ந்தார்கள். என்ன செய்ய? நடந்த சம்பவம் அப்படி..

ஷோபாவில் அவள் அருகே இருந்த ரகு மடியில் தலைவைத்து படுத்தாள்.

ரகு : கவலைபடாதே, எல்லாம் சரியாகும் என அவள் தலையை தடவினான்.

கீத்து : ஏன் உங்க அண்ணா இப்படி என் வாழ்க்கையை நாசம் பண்ணுனாங்க?
Like Reply
#8
【05】

ரகு : நடந்தது நடந்து போச்சு, இனி நல்லதே நடக்கும்..

கீத்து : இதுக்கு மேல என்ன நடக்க போகுது என மனதில் ஒரு வெறுமை நிறைந்து சொன்னாள்.

மீண்டும் அமைதி..

ரகு : அவரு ஏன் இப்படி பண்ணுனாருன்னு எனக்குத் தெரியும்..

ரகு மடியில் படுத்திருந்த கீத்து எழுந்தாள்.

கீத்து & ஷிவானி இருவரும் கீத்துவை "உனக்கு என்ன தெரியும்" என்பதைப் போல பார்த்தார்கள்.

ரகு முகத்தில் இப்போது ஓரளவுக்கு தெளிவு இருந்தது.

ரகு : நீ எதுக்கும் பயப்பட வேண்டாம். இந்த வீட்டுல நீ சந்தோஷம் நிறைந்து இருப்ப..

ஷிவானி : ஆ.. ஆமா... அண்ணி..

ரகு : எங்களை நம்பு கீத்து..

ஷிவானி : என்னையும்.. எங்களையும்..

ரகு : நீ இப்படி அழுதுகிட்டே. இருக்கக் கூடாது. நீ பழைய கீத்துவா மாற வேண்டும். நான் என்னோட கீத்துவா மீண்டும் உன்னை பார்க்கணும்.

கீத்து : சொல்றது ரொம்ப ஈசி டா..

ஷிவானி : அப்படி நினைக்காதீங்க அண்ணி..

ரகு : நீ தெளிவா இருந்தா மட்டும் தான், இந்த பிரச்சனைய நாம எதிர் கொள்ள முடியும் என தைரியம் கொடுக்க முயற்சி செய்தான்.

ஷிவானி : எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.

ரகு : போ, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.

ரகு ஓரளவுக்கு நார்மல் நிலைக்கு வந்து விட்டான்.

ஷிவானி அதிர்ச்சியில் இருந்து மீண்டு விட்டாள்.

கீத்துவுக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சம் திரும்ப வரும் எண்ணம். இருந்தாலும் நடப்பதை நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை வந்தது...

ரகு : ஷிவானி, அவளை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ.

கீத்து அழுது அழுது அவள் முகம் வீங்கியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் மதியம் எந்த உணவும் சாப்பிடவில்லை.

மாலையில் ஷிவானி கீத்துவை எழுப்பி டீ குடிக்க சொன்னாள்..

கீத்து : வேண்டாம்..

ஷிவானி : நீங்க சாப்பிடாமல் அண்ணா எதுவும் சாப்பிடாது.

கீத்து : ஷிவானியை பார்த்தாள்.

ஷிவானி : கஷ்டம் தான், பட் பிளீஸ்.

மாலையும் எதுவும் சாப்பிடாமல் அப்படியே படுத்து தூங்கி விட்டாள்.

இரவு படுக்கையில் இருந்த கீத்துவை எழுப்பி கை பிடித்து ரகு அண்ட் ஷிவானி இழுக்க, 5 மினிட்ஸ் எ‌ன்று‌ சொல்லி படுக்கையில் இருந்து எழுந்து தன் முகத்தை கழுவிக் கொண்டு டைனிங் டேபிள் நோக்கி வந்தாள்.

அங்கே தன் காதலன், கணவன் மற்றும் ஷிவானி ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருப்பதைப் பார்த்தாள்.

வா டியர் என்ற ரகுவை பார்த்து சிரித்தாள். ஷிவானி அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தாள்.

ஷிவானி : அண்ணி இட்லி வேணுமா இல்லை சப்பாத்தி?

குமார் : ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாதவளா இருந்தவ எதுக் கொடுத்தாலும் சாப்பிடுவா..

அந்த வார்த்தை கீத்து தொண்டையைக் ஏதோ கவ்விப் பிடிப்பதை போல உணர்ந்தாள். அவள் கண்களில் மீண்டும் கண்ணீர்.

ஷிவானி : அண்ணா, இதெல்லாம் ரொம்ப ஓவர்.

கீத்து எனக்கு பசிக்கவில்லை என எழுந்தாள். ஆனால் அவளை நகர விடாமல் ரகு கைகள் பிடித்தது.

இங்கே நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல சப்பாத்தி சாப்பிட்டான் குமார்.

ரகு : நீ உட்காரு..

ரகு : ரெண்டு பேருக்கும் இட்லி வை ஷிவானி..

கீத்து கைகள் அந்த பிளேட் உள்ளே போக மறுத்தது.

ரகு : இந்த வீட்டுல, நீயும் ஒருத்தி கீத்து. உன் புருசனுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை உனக்கும் இருக்கு என கீத்து வாயில் இட்லி ஊட்டினான்.

ரகு : கேக்குதா மிஸ்டர் குமார் என சத்தமாக சொன்னான்.

குமார் தன் தம்பி ரகுவை முறைத்தான். குமாரை பார்த்த கீத்து அடுத்து என்ன சொல்வான் என நினைத்து கொஞ்சம் பயந்தாள்.

குமார் : அது என் பொண்டாட்டி, இந்த ஊட்டி விடுற வேண்டாம்.

ரகு : சாப்பிடு டியர் என கெஞ்ச..

குமார் : இந்த கொஞ்சி பேசுற வேலையை இதோட நிறுத்திக்க என கோபத்தில் கத்திவிட்டு மாடியில் இருக்கும் தன் அறைக்கு சென்றான்.

குமார் போட்ட சத்தத்தில் கீத்து மற்றும் ஷிவானி இருவரும் பயந்து போய் விட்டார்கள்.

ரகு : அவன விடு டியர். டென்ஷன் பார்ட்டி.

ஷிவானி : ஆமா, சீக்கிரம் பி.பி. ஏறி சாகப் போறான்.

மூவரும் சிரித்தனர்.

ரகு : நீ சாப்பிடு டியர் என அவளுக்கு மூன்று இட்லிகள் ஊட்டி விட்டான்..

நடந்த சம்பவங்கள் அனைத்தும் வினோதமாக இருந்தாலும் தன் அண்ணனான ரகு மற்றும் கீத்துவை மட்டுமே ஷிவானியால் ஜோடியாக பார்க்க முடிந்தது. ஏற்கனவே அவர்கள் காதல் பற்றி தெரியும். அவர்கள் இருவருடரும் சேர்ந்து நேரங்கள் செலவிட்டுள்ளதால், இப்போது அவர்கள் இருவரும் கொஞ்சுவதையோ இல்லை சாப்பாடு ஊட்டி விடுவதையோ பார்க்கும்போது அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)