Romance காதலே... காதலே.... தனிப்பெரும் துணையே!
#1
"டேய் தம்பிகளா" வாசு அண்ணன் குரல் கேட்டது.


கோதாவரி நதி கரை ஜன வெள்ளத்தில் இருந்தது. கோதாவரியை பார்த்த பிறகு தமிழ் நாட்டில் ஓடும் ஆறுகள் எல்லாம் எனக்கு காவாய்களாக தோன்றின. ஆறுன்னா அது கோதாவரிதான்!

"அண்ணே" என்று ரவி கட்டிக்கொண்டான். எனக்கோ இருப்பே கொள்ளவில்லை.

"என்னடா உன் தோஸ்த்து காதல் ஜுரத்துல தவிக்கிறானா?" என்றார் வாசு அண்ணன் ரவியிடம்.

"எங்கண்ணே தூங்க விடுறான். வயிறு பசிக்குது.... அவளை பார்க்காம சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்"

"தம்பி நிகில், அவ அப்படி என்ன பேரழகியா.... ஆந்திரா முழுக்க செம பிகருங்க தான்"

எனக்கு கடுப்பு வந்தது. "அண்ணே!".... ஏதாவது சொல்லிவிடப்போகிறேன் என்று அடக்கிக்கொண்டேன்.

"அண்ணே மெய்யாலுமே அவ செம பிகருண்ணே.... நேத்து திருவிழாவுல காட்டினானே.... சான்ஸே இல்ல... அவ மட்டும் இல்ல..." இழுத்தான் ரவி

"அவ பிரண்டுமா" ரவி அண்ணன் பல நேரங்களில் நடிகர் சிங்கம்புலி போல பேசுவார்.

"டேய் உதைப்பேன்டா" ரவியை பார்த்து கடுப்பானேன்

"இருடா.... (ரவியை பார்த்து) நீ சொல்லுடா தம்பி"

"அந்த பொண்ணோட அம்மாவும்..... அய்யோ.... தூக்கத்துல அவங்க தான்"

"மச்சி வேண்டாம்" எனக்கு கொலை வெறி. என் ஆளின் அம்மா. எனக்கு மாமியார் ஆகப்போகிறவர். அவரை போய்....

"தம்பிகளா.... நியூட்டன் 4ம் விதி என்ன சொல்லுது தெரியுமா?"

"என்னது நியூட்டன் 4வது விதி வேற எழுதி இருக்காரா? 3 வரைக்கும் தானே படிச்சிருக்கேன்" ரவி பல நேரங்களில் இப்படி அசடாக பேசுவான்.

"எழுதி இருக்காரு தம்பி. எழுதி எங்க பூட்டனுக்கு பாட்டன் அட்ரஸுக்கு கூரியர் அனுப்பிட்டு செத்துட்டாரு.... அதை விடு.... அந்த விதி என்ன சொல்லுதுன்னா... ஒரு செம பிகர் தான் இன்னொரு செம பிகருக்கு அம்மாவா இருக்க முடியும்" இருவரும் சிரித்தாலும் எனக்கு கடுப்புத்தான் வந்தது.

"அண்ணன் போதும்ணே.... பெரியவங்கள போயி வயசு வித்தியாசம் இல்லாம...." என்றேன்.

"என்னடா ரொம்ப சீரியஸ் ஆகிட்டே" வாசு அண்ணன் குரல் மாறியது.

"6 மாசம் ணே. அவளும் என்ன பார்க்க தொடங்கிட்டா.... என்ன நினைக்கிறான்னு தெரியலை. ஆனா.... போனவாரம் அவ பஸ் ஏறுற எங்க பம்பிங் ஸ்டேஷன் ஸ்டாப்பில நான் வழக்கமா நிக்கிற மரத்தடியில் நிக்காம, பொட்டிக்கடைக்கி பின்னாடி மறைஞ்சி நின்னேன். என்னை தேடினா.... அப்புறம் அவ பாக்குறா மாதிரி வந்தப்புறம் தான் ... என்னை ஒரு முறை முறைச்சா பாருங்க..."

"என்னடா சுப்ரமணியபுரம் சீனை ஆந்திரா ராஜமுந்திரி டவுனுல வெச்சி ரிமேக் பண்ணுறான்"

"அண்ணே அவன் டிப்பார்ட்மெண்ட் வேற. so... நான் அந்த பொண்ணை நேத்து தான் பார்த்தேன். இவனை பார்த்ததும் அவ கண்ணுல முதல்ல ஆச்சர்யம்... அப்புறம் ஒரு மாதிரி... எப்படி சொல்றது... சம்திங் அண்ணே... அது காதலா, ஸ்நேகமா ஏதோ ஒண்ணு" ரவி கூட உணர்ச்சிவசப்பட்டான்.

"என்னன்னு இன்னைக்கு பைசல் பண்ணிடுவோம் விடு. ஒரு சர்பத்தை குடிச்சிக்கிட்டே காத்திருப்போமே " அண்ணன் பேச்சை கேட்டு சர்பத்திற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அவளுக்காக காத்திருந்தோம்.

அவள் வருவதற்குள், அல்லது சர்பத் ரெடியாவதற்குள் எங்களைப்பற்றி....

நானும் ரவியும் பெட்ரோகெமிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு கேம்பஸ் மூலம் ரிலையன்ஸின் கிருஷ்ணா-கோதாவரி பேசின் பிராஜெக்டில் வேலை பார்க்கும் Graduate Engineering Trainees. இருவருக்கும் வயது 22. ராஜமுந்திரியில் முதல் போஸ்டிங். வந்து 6 மாதங்கள் ஆகிறது. (வேலைக்கு சேர்ந்த 2ம் வாரம் அவளை முதன்முறையாக பார்த்தேன்)

இங்கு வந்த பின்புதான் வாசு அண்ணன் அறிமுகம். மதுரைகாரர். பாசக்காரர். இங்கே எங்கள் நிறுவனத்தின் காண்டிராக்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வயது 35+ இருக்கும்.

கதை நடக்கும் காலம் 2013-14.

வெள்ளை பென்ஸ் வருவது தெரிந்தது. என்னை விட ரவி தான் அதிகம் பரபரப்பானான்.

"மச்சி அவ பென்ஸ் டா"

"ஏன்டா பென்ஸ்ல வர்ற புள்ளையையா லவ் பண்ணுரே?" அண்ணன் கேட்டார்.

மற்ற வாகனங்கள் எதுவும் இந்தப்பகுதியில் அனுமதி இல்லாதபோது இந்த பென்ஸ் மட்டும் நேற்றும் விழா இடத்திற்கு வந்தது. இன்றும் வருகிறது.

வண்டி நின்றது.

பின் கதவு திறந்தது.

மெரூன் புடவையில் வெளிவந்த பெண்ணைப் பார்த்து....

"இந்தப்புள்ளையா.... செமையா இருக்குடா" அண்ணன் வாயைப்பிளந்தார். ரவி நமுட்டு சிவப்பு சிரித்தான்.

 "அண்ணே.... அவங்க என் மாமியார்ணே"

"ஏதே.... (என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு) ம்கூம்.... "

மற்றொரு பின் கதவு திறந்தது. வெள்ளை சுடித்தார். சிவப்பில் மஞ்சள் பூ போட்ட கமீஸ். அதே கலர் & டிசைனில் ஷால். அவள். என்னவள். (ஹி ஹி... பேரு தெரியாதுங்க!)

"தரமான பீசுடா"

"என்னண்ணே பீசு கீசுன்னுட்டு..."

"சரி.... தம்பி பொண்டாட்டி ஆகிடிச்சி. நல்லா இருங்க"

"இவளும் இவ அம்மாவும் அளவான உயரமாத்தான் இருக்காங்க. இவ அப்பன் தான்... இதோ இறங்குறான் பாருங்க..." என்றேன். அவள் 5 அடி 3-4 அங்குலம் உயரம் இருப்பாள். மாமியாரும் அவள் உயரம் தான். அப்பன் தான் 6 அடி இருப்பான். மலை மாதிரி. ராட்சசன்.

"அடேய்.... அடப்பாவிகளா.... இந்த ஆளா" கிட்டத்தட்ட அலறினார் அண்ணன்.

"என்ணே தெரிஞ்சவரா?"

எங்கள் இருவரையும் முரட்டுத்தனமாக பின்னால் இருந்த வளையல் கடைக்கு பின்பாக தள்ளிக்கொண்டு சென்று.... ஹஸ்கி குரலில் "சமரசிம்மா ரெட்டி காரு டா" என்றார்.

"அட.... ரெட்டி காரு வந்தது பென்ஸ் காரு" - ரவி நேரங்காலம் தெரியாமல்.

"என்னண்ணே விவேக் காமெடி கேரக்டர் பேரா இருக்கு" எனக்கும் அண்ணனின் சீரியஸ்னெஸ் புரியவில்லை.

"அடப்பாவிகளா அவரு பெரிய எம்.பி.டா"

"எம்.பி.ல என்ன பெருசு சிறுசு. எல்லாரும் பார்லிமெண்ட்ல ஒரே மாதிரி சீட்ல தான் உட்காரப்போறானுங்க" - ரவி

"அப்போ என் மாமனார் எம்.பி.யா" - எனக்கு சந்தோசம் கொள்ளவில்லை.

"எம்.பி. சம்சாரத்தை நேத்து சைட் அடிச்சிட்டேன்" ரவி என்னை வெறுப்பேத்த சொன்னான்.

"அது சம்சாரம் இல்லடா... எம்.பி. வைப்பாட்டி. அவர் சம்சாரத்துக்கு 2 பசங்க தான். கடோற்கஜனுங்க மாதிரி இருப்பானுங்க."

"அடேய்... நீ காதலிக்கிறது வைப்பாட்டி பொண்ணா?" சத்தமாக ரவி சொன்னது நல்ல வேலையாக அக்கம்பக்கத்தில் கேட்கவில்லை.

[Image: 241746120_242565336_1251056082027225_786...6377_n.jpg] [Image: 241746121_242669283_571003843944765_5448...55_n-1.jpg] [Image: 241746122_243666966_111319067981172_2213...n-webp.jpg] [Image: 241746125_244020423_277016787608791_2907...n-webp.jpg]
தொடரும்.....

(மாடல்: தெலுங்கு நடிகை விஷ்வஸ்ரீ)
[+] 4 users Like meenafan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Excellent start and narration with comedy layed in.  clps welcome Heart
Like Reply
#3
Super start bro. Please write the other story too.
Like Reply
#4
Superbbbbb
Like Reply
#5
Very nice
Like Reply
#6
Great start mate
Like Reply
#7
Thank you friends for the support.
Like Reply
#8
super
Like Reply
#9
Super Start Bro
Like Reply
#10
Hope you continue both stories in parallel and complete it. Please leave the story in the middle and disappoint us.
Like Reply
#11
Nice start
Like Reply
#12
Arumai
Like Reply
#13
Super sago
Like Reply
#14
Superb starting.
Like Reply
#15
Sema start
Like Reply
#16
Superrrrrrrrrrr
Like Reply
#17
எனக்கோ ரவி சொன்னது கோவத்தை கிளப்பி விட்டது.

"டேய்... என் ஆளை பத்தியோ அவங்க வீட்டை பத்தியோ பேசுனே..." அவன் சட்டையை பிடிக்க போய் விட்டேன்.

"அடேய் தம்பிகளா செத்த நேரம் சும்மா இருங்கடா." வாசு அண்ணன் பதறினார்.

என் ஆளுடைய குடும்பம் வரும்போது கூட்டம் சற்றே விலகி மரியாதை செலுத்துவதை இன்று தான் கவனித்தேன். (நேற்று வரை என் அறிவுக்கண் அவள் முன் மூடியே இருந்தது)

மனதிற்குள்...'என்ன அழகு எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகு....' பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. சட்... அந்த படத்திலும் (லவ்டுடே) ஹீரோயின் அப்பன் வில்லன் ஆச்சே! ஏதடா வம்பு என்று மனதை கட்டுப்படுத்தினேன்.

"பின்னாடி வர்ற பையன் யாருண்ணே" ரவி கேட்டான். அப்போது தான் நானும் கவனித்தேன்.

"அது நம்ம நிகிலோட மச்சான்"

"அடேய்... மச்சான் கூட இருக்கானா உனக்கு"

என் ஆளுக்கு ஆண் பிள்ளை வேஷம் போட்டது போல இருந்தான் அந்த பையன். நிச்சயம் தம்பியாக தான் இருக்கும்.

எனக்கு ஒரு ஆர்வம். "இவ்வளவு சொல்லுறீங்களே அண்ணே.... என் ஆளோட பேரை சொல்லுங்க பார்ப்போம்" என் பெயர் தெரியாத 6 மாத காதல் வாழ்க்கையில் இன்று அவள் பெயர் தெரிந்துவிடப் போகிறது.

"சொல்லி விடுங்கண்ணே. பாவம் பையன். 6 மாசமா லவ் பண்ணுறான் பேரே தெரிஞ்சிக்காம" ரவி எனக்கு வில்லனாகவே மாறி வருகிறான்.

"அடப்பாவி.... உனக்கு தெரியாம தான் என்னை கேட்டியா. அவ அம்மா பேரு வேணுமா சொல்றேன். அவ பேரை நீயே கண்டுபிடி" என்றார் வாசு அண்ணன். டேய் ரவி.... உன்னை...

"அண்ணே அவங்க அம்மா பேரு சொல்லுங்கண்ணே" ரவி என்னை வெறுப்பேற்றவே மீண்டும் மீண்டும் என் வருங்கால மாமியாரை இழுக்கிறான்.

"பத்மஜா"

"வாவ்.... செம கிக்கா இருக்குண்ணே... பேரை நினைச்சே கையடிக்கலாம் போல" ரவி இப்படி சொன்னாலும்... என் மாமியாரின் பெயர் தந்த போதையில் ரவி மேல் எனக்கு கோவம் வரவில்லை.

மாமியாரை கவனித்தேன். Longshot. அவர்கள் அழகிற்கும் பெயருக்கும்.... ஆமாம்! ச்சீ ச்சீ.... மாமியார். இன்னொரு தாய். அவங்களை போயி.... சகவாசம் சரியில்லை.

நாங்கள் இருந்த பக்கம் தான் அவர்கள் வந்துக்கொண்டு இருந்தனர். அதுவரை அவள் அம்மாவின் பின்னல் நடந்து வந்த 'அவள்' அவங்களை ஓவர் டேக் செய்து முன்னால் வந்தாள்.

"சரி தம்பிகளா. பட்டறையை கிளப்புவோமா. நான் குடும்பஸ்தன். ஊருல பிள்ளை குட்டிகள் இருக்கு. உசுரு முக்கியம். வாங்க போகலாம்"

"அண்ணே ஒரு 10 நிமிஷம் ணே" நான் பேச நினைத்ததை ரவி சொன்னான்.

"என் உயிரே ஒய்யாரமா நடந்து வருதுண்ணே" என்னை அறியாமல் என் வாய் பேசியது.

"ரொம்ப உருகாத.... உசுரே போயிடும்" வாசு அண்ணன் சொல்லி முடிக்கவில்லை....

**டமார்** என்று பெரிய சத்தம். துப்பாக்கி சூடு.

கூட்டமே அலறியது.

நான் அவளை பார்த்தேன். அவளை மட்டும் தான் பார்த்தேன். அவளுக்கு வெகு அருகில் இருந்த ஒரு பேன்சி கடையின் கண்ணாடி உடைந்து இருந்தது.

எனக்குள் இருந்த சிங்கம், புலி, சிறுத்தை (சூர்யா, விஜய், கார்த்தி அல்ல...) எல்லாம் ஒரே சமயத்தில் எழுந்துக்கொள்ள....

4 எட்டு ஓடி அங்கிருந்து அப்படியே பாய்ந்து.....

அவளை... ஆம் அவளை அப்படியே அணைத்தபடி பிடிக்க...

மீண்டும் **டமார்**

"ஆ!" நான் தான்.... (சிரிக்காதீங்க ப்ளீஸ்!)

"விஷ்வஜா" மாமியாரின் அலறல். நான் சரிந்தேன்.... அவளோடு. நல்ல வேலை அந்த இடம் ஆற்றங்கரை. முழுவதும் ஆற்றுமணல். அப்படியும் அவள் தலை எதிலும் மோதி விடக்கூடாது என்று அவள் பின்னந்தலை பகுதியில் என் வலது உள்ளங்கையை வைத்து பிடித்தபடியே.... விழுந்தேன்.... இல்லை இல்லை..... விழுந்தோம். நான் அவள் மேல்...

இந்த வாய்ப்பு.... ஐயோ இப்படி ஒரு வாய்ப்பு.... ஆண்டவா நன்றி.... கோட்டானு கோட்டி நன்றி....

ஏன் எனக்கு கண்ணை கட்டுகிறது?

என் கண்கள் ஏன் மூடுகின்றன?

இருள்!

எத்தனை நேரம் என்று தெரியவில்லை....

மழைத்துளிகளா? மீண்டும் மழைச்சாரல்

ஐயோ வலி. எங்கே வலிக்கிறது? அது தான் தெரியவில்லை. இடது பக்கம் முழுவதும் வலிக்கிறதே. ஐய்யோ.... கத்த திராணி இல்லை.

"தம்முடு .... " பெண் குரல். எத்தனை இனிய குரல். புல்லாங்குழலை விழுங்கி விட்டாரா என்ன... அப்படி ஒரு இனிமை. ஆ... இந்த வலி வேற.....

"டேய் தம்பி..." அட நம்ம சிங்கம்புலி அண்ணன்.... ச்சே... வாசு அண்ணன்.

"தமிழா நீங்கோ" அதே இனிய குரல் தான் சற்றே கொச்சையான தமிழ் உச்சரிப்போடு விசாரித்தது.

"ஆமாம் அக்கா" அட ரவி. நான் மெல்ல கண் திறந்தேன்.

பஞ்சு மெத்தை மேல் கிடப்பதாக உணர்ந்தேன். இல்லை இல்லை....

அது மெத்தை இல்லை. தொடை. ஆம்...

கண் விழித்து பார்த்த போது.... ரொம்ப நெருக்கத்தில் அந்த அழகு முகம். இது வேறு ஒரு முகம் தான். ஆனால் அத்தனை அழகு. என் கண்களுக்கு நேர் மேலே அந்த அழகான மூக்கின் ஓட்டைகள். உள்ளே தெரிந்தது மூக்குத்தியின் உட்புற திருகாணி. (வலி - அது வேற டிப்பார்ட்மெண்ட். BGM போல வலி ஒரு பக்கமாக கதறிக்கொண்டு இருந்தது)

மூக்கின் ஓட்டைகள் சற்றே பெரிதுதான். குடைமிளகாய் மூக்கு... இல்லை இல்லை... பஜ்ஜி போடுவார்களே அந்த மிளகாய் போன்ற மூக்கு... வலி ஒருபக்கம்... இந்த அழகு மூக்கை பார்த்து மூடு ஒரு பக்கம். அந்த பெண்ணின் கண்களை பார்த்தேன். பயமும் கவலையும் இருந்தாலும் ஒரு ஏக்கமும் கவர்ச்சியும் தெரிந்தது. என்ன ஒரு பார்வை.

எங்கும் ஒரே பரபரப்பு.

"தம்பி.  பயப்படாத.... இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம்" அந்த பெண் தான்.

"மச்சி.... ஒன்னும் இல்லை டா. கையில தான் புல்லெட் பட்டிருக்கு. பயம் ஒன்னும் இல்லை." - ரவி பதறினான். என்னது புல்லெட்டா.... டேய் கைப்புள்ளை... தூங்குஊஊஊ.... மீண்டும் கண் சொக்கியது.

"புல்லட் எல்லாம் இல்லைப்பா.... தம்பி டேய்.... நீ ஒருத்தன்" வாசு அண்ணன் ரவியை கடிந்துக்கொள்கிறார் போல....

எத்தனை நேரம்... நாள்.... யுகங்கள்..... ஜென்மங்கள்.... தெரியவில்லை.

என் ஆள்.... அய்யோ அவள் பெயரை கேட்டேனே.... என்னவோ சொல்லி அழைத்தார்களே என் அத்தை. என்ன.... என்ன... என்ன...

அவள் வந்தாள். 'என் பெயர் என்ன சொல்லு பார்ப்போம்' என்றாள். "அதே" இனிய குரல். ஆனால் அது உன் குரல் இல்லையே என் காதலியே?

இப்போது இவள் வந்தாள். மூக்கழகி. யார் இவள். என்ன அழகு மூக்கு. என்னப்பார்வை உந்தன் பார்வை.... பாடினேன். அவள் கவர்ச்சி மூக்கால் என்னை வருடினாள். அந்த ஏக்க பார்வையால் என்னையும் ஏங்க வைத்தாள்..... என்னப்பார்வை உந்தன் பார்வை.... மீண்டும் பாடினேன்.

எந்த உலகம் இது. அழகிகளின் உலகமா.... இந்த 2 அழகிகளை தவிர வேறு யாரும் இல்லையா? ஆகா.... எனக்கும் இந்த 2 அழகிகளும் மட்டுமே ஒரு தனி உலகை ஸ்ருஷ்டித்து விட்டானா பிரம்மன். இல்லை. பிரம்மனாக இருக்க முடியாது. that guy is a boring creator. இந்த உலகை காமன் தான் ஸ்ருஷ்டித்து இருக்க வேண்டும். அது என்னவள் மீண்டும் என்னை நோக்கி வருகிறாள். அதே வெள்ளை டாப்ஸ் & ரெட்+யெல்லோ பேண்ட்.

'என் பெயர் ஞாபகம் வந்துச்சா இல்லையா?' சற்றே மிரட்டும் தொனியில். ஆனால் அதே flute குரல்.

'அவளை விடு... என் மூக்கழகை பார்' இவள். ஐயோ உன் மூக்கு & கண்ணை பார்த்தால் எனக்கு மூட் ஏறுதே அழகியே....

"விஷ்வஜா நூ இன்டிக்கி வெல்லு. நேனு உன்டுத்தானு இக்கட" சுந்தர தெலுங்கில் அதே குரல் [விஸ்வஜா நீ வீட்டுக்கு போ... நான் இங்கே இருக்கேன்]

'ஞாபகம் வந்துடிச்சி.... விஷ்வஜா....விஷ்வஜா.... மாமியார் பேரு கூட...'

"மச்சி.... என்னடா சொல்றே... மச்சி" ரவி.

"தம்பி இருங்கோ.... சிஸ்டர் சிஸ்டர்..." புல்லாங்குழல் குரல்.

"are you alright" இந்த குரலும் இனிமையாகத்தான் இருக்கு... ஆனால் புல்லாங்குழல் effect மிஸ்ஸிங்.

"சிஸ்டர்.... பேஷண்ட் ஏதோ மாட்லாடுத்தாரு" புல்லாங்குழல் ஊதியது [சிஸ்டர்... பேஷன்ட் ஏதோ பேசறாரு]

"மீறு அந்திரிணி பயட்ட வெல்லெண்டி ப்ளீஸ்" கெஞ்சும் குரலில் பெண் ஒருத்தி. [நீங்க எல்லாம் கொஞ்சம் வெளிய போங்க ப்ளீஸ்]

நர்ஸாக இருக்கும். நர்ஸ் நல்லா இருப்பாளா தெரியலையே... சேச்சியா இருந்தா நல்லா இருக்கும்... ட்ரீட்மென்ட்டை சொன்னேன்.... இன்னும் கண் விழிக்காவிட்டாலும் என் கவலை எனக்கு.

{இதுக்கு மேல தெலுங்கு-தமிழ் போடாமல் கேரக்டர்கள் எல்லோரும் தமிழில் பேசுவது போலவே எழுதுறேன். இதுக்கு மேலே தெலுங்கை கொல்ல முடியலை}
   
நான் உடலை அசைக்கிறேன் என்பதை உணர்ந்தேன். யாரோ என் கையை பிடிக்கிறார்கள்.

"என்னாச்சு" ஆண் குரல். who is this disturbance. ஓ! டாக்டரா இருந்துட்டு போகட்டும்.

என் உடல் மேல் எதோ பொருள் மெல்ல அழுத்தப்பட்டது. (ஸ்டெத்?)... சின்ன கசமுசா...

"மிஸ்டர்... நான் பேசுறது கேக்குதா?" என்று கேட்டார் இங்கிலீஷில். நீ போய்யா. உன் பேச்சை கேட்க வரலை. அவளை வரச்சொல்லு. ஏவளை. என்னவளை.... இல்லை இல்லை.... அவளை நான் அப்புறமா பார்த்துக்கிறேன். தட் புல்லாங்குழல் குரலழகி. மூக்கழகி. காந்த கண்ணழகி... யாரோ அவள் யாரோ அவள்.... திரும்பவும் பாடுறேனா என்ன?

"சிஸ்டர் ஹி ஐஸ் சிங்கிங்" சிரிக்கிறார் டாக்டர்.

அடச்சே....

மெல்ல கண் விழித்தேன்.

பச்.... நர்ஸ் சேச்சி இல்லை! இருந்தாலும் பரவா இல்லை. tan கலரில் பெரிய கண்களோடும், மெல்லிய ஆனால் நீளமான லிப்ஸ்டிக் இல்லாத உதட்டோடும்.... நன்றாகவே இருந்தாள். வயது எப்படியும் 30 இருக்கும். இடுப்பு பகுதி சற்றே விரிவாக தெரிந்தது. எப்படியும் 2 சுகப்பிரசவம் ஆகியிருக்கும்.

"ஹலோ மிஸ்டர்" டாக்டர் தான்.

நீங்க இன்னும் போகலையா டாக்டர்!

"எஸ்.... தண்ணீர்... வாட்டர்..."

"டோன்ட் ஒரி. யு ஆர் ஆல் ரைட். உங்க கையும் 10 டேஸ்ல சரியாகிடும்."

ஸ்பூனில் என் வாயிற்குள் தண்ணீர் ஊற்றினாள் அந்த தெலுங்கு நர்ஸ். உதட்டையும் ஈரமாக்கிக்கொண்டேன். கிட்டத்தில் அவளது sharp nose சூப்பராக இருந்தது. இவளும் மூக்குத்தி போட்டிருக்கிறாள். மிகச்சின்ன பொட்டாக. மூக்கின் ஓட்டை தெரியும் படி தலையை சாய்த்தால், உள்ளே திருகாணி இருப்பதை பார்க்க வேண்டும். அதுவே செம கிக்காக இருக்கும்.

"மச்சி..." - ரவி

"நிகில்" - வாசு அண்ணன்

பின்னால் இரண்டு பெண்கள் சற்றே தயங்கியபடி வந்தனர்.

முதலில் வரும் சேலை கட்டிய பெண்...

பின்னால் என்னவள். என் முகத்தில் சிறுநகை. அப்பாடா... என் காதலியே.... என்னை தேடி வந்துவிட்டாயா... அது போதும் கண்மணியே...

முன்னால் வந்த பெண் "தம்பி.... ரொம்ப தாங்க்ஸ். என் பொண்ணு உசுரை காப்பாத்திட்டீங்க..." கைகூப்பினார். கண்கள் கலங்கின.... கண்கள்.... அந்தக்கண்கள்..... அதே கண்கள்....

அட... குரலும்.... புல்லாங்குழல்....

மூக்கை கவனித்தேன்... சற்றே எட்டத்தில் இம்முறை. பஜ்ஜி மிளகாய்.... அந்த மூக்குத்தி...

ச்ச.... அத்தையா! ஐயோ... ச்சே.... இது ரொமான்ஸ் கதையாச்சே. சாரி அத்தை. இதை இன்செஸ்ட் ஆக்க இருந்தேனே, பாவி நான்.... சாரி அத்தை. சோ சாரி.

let me focus on my ஆளு.... அட.... திரும்ப பெயரை மறந்துட்டேன்.

[Image: 241758076_217683359_976336523123284_9215...7571_n.jpg]

அவளே அருகில் வந்தாள். "thank you so much. by the way I'm Vishwaja" என்றாள்.

விஸ்வஜா... என் உயிரே! (திரும்பவும் உயிரா....)

[Image: 241758081_218003887_1009362279868601_880...0743_n.jpg]

ரவி என் மாமியாரை தின்றுவிடுவது போல் பார்த்து கொண்டிருந்தான். ராஸ்கல்.

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு. உங்களை காப்பாத்த முடிஞ்சதே போதும்"

"உங்களுக்கு பெரிய மனசு தம்பி. நீங்க டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் நானும் விஜ்ஜுவும் பக்கத்தில இருந்து பார்த்துக்குவோம்"

"தேங்க்ஸ்.... (அத்தைன்னு வாயில வந்தது... பிறகு தான் ரவி சொன்னது ஞாபகம் வர) அக்கா" என்றேன். அத்தை பொண்ணா இருந்தா என்ன அக்கா பொண்ணா இருந்தா என்ன.... எனக்குத்தான் விஜ்ஜு டார்லிங் எனக்குத்தான்.

நல்ல வேலை அந்த எம்.பி. காட்டெருமையை காணோம்.

[Image: 241758078_217702820_241759294428116_2774...2655_n.jpg]

[Image: 241758084_218417004_594119271555055_2950...6834_n.jpg]

தொடரும்....


[Image: 241758087_218472126_214138657141830_5874...9466_n.jpg]
[+] 3 users Like meenafan's post
Like Reply
#18
Sema thala, Nijathayum kadhayavum mingle senju eluthi asathuringa.
Like Reply
#19
Absolutely beautiful narration
Like Reply
#20
ஒரு தலையாய் இருந்த காதல் சந்தர்ப்பம் கூடி வந்தால் இருபக்கமும் துளிர்க்கும். நண்பர்கள் உசுப்பேத்துவது. மாமியாரின் அழகு படுத்தும் பாடு. மாமனார் கொடுக்கும் மரண பயம். அருமையான நடை. படத்தில் இருக்கும் பெண் நல்ல அழகு
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)