Thriller ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - ( completed )
#1
Exclamation 
வணக்கம் நண்பர்களே!!!
மீண்டும் xossip வந்துவிட்டது போல உணர்கிறேன்.

இது நான் xossipஇல் முதல் முதல் முறை dibba வாங்க உதவிய, முதல் பரிசு பெற்ற கதை ஆகும்,  இது போட்டி நடுவர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டதால் யாரும் படிக்க வாய்ப்பில்லை.

[ps: Any Jasotha, Johncy and Jo fans here? Unfortunately I've lost the story, If anyone have it, contact me in pm, i wish to continue]

சரி கதைக்கு செல்வோமா,,

Theme: Medical Thriller
ரிவன்ஜ் பொருள் : பழிக்குப்பழி;
பழிக்குப் பழிவாங்கும் செயல்;
பழிவாங்கும் எண்ணம்;

என் பெயர் ஜெயசூர்யா. நான் ஒரு எம்பிபிஎஸ் டாக்டர். இந்த டிசம்பர் வந்தால் எனக்கு வயது 50. எனக்கு இருப்பதோ ஒரே வீடு, ஒரே கிளினிக், ஒரே மனைவி, ஒரே பெண் குழந்தை.
என் மனைவிக்கு வயது 40, என் குழந்தைக்கு வயது 19.

நாங்கள் இருப்பது ஊட்டி, எங்கள் இருவருக்குமே சொந்த ஊரு கோயம்புத்தூர் தான், ஆனால் கல்யாணம் ஆன முதல் வருடத்திலேயே ஊட்டியில் வந்து செட்டில் ஆகிவிட்டோம். எங்களுக்கு நாங்கள் மூவர் தான்,  

கல்யாணம் ஆகி 20 வருடமாகிறது. என் மனைவி பக்கத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிகிறாள். அவள் பெயர் சந்திரா. 
அப்புறம் எங்களின் ஒரே செல்ல மகள் கீர்த்திகா. 12ஆவது வரை எங்களுடன் ஊட்டியில் தான் கான்வென்ட்டில் படித்தாள், இப்பொழுது கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் காலேஜில் இரண்டாமாண்டு ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருக்கிறாள். மிகவும் அன்பான குடும்பம் எங்களுடையது. என் மனைவியே பேரழகி, எங்கள் குழந்தை என் மனைவியைவிட அழகாக இருக்கும்.

அவள் எங்களுடன் இல்லாத இந்த இரண்டு வருடமும் ரொம்ப கஷ்டமாக இருந்தது, சனிக்கிழமை ஆனால் போதும், நாங்கள் இருவரும் எங்கள் குழந்தையை பார்க்க கிளம்பி விடுவோம். ஒவ்வொரு வாரமும் இப்படித்தான். அந்த ஏரியாவிலேயே கிளினிக் வைத்திருக்கும் ஒரே டாக்டர் நான்தான், அதனால் ரொம்ப பிரபலம் நாங்கள். 

காசுக்கும், அன்புக்கும் பஞ்சமில்லை. இந்த 20 வருடத்தில் ஒருமுறை கூட எங்களுக்குள் சண்டை சச்சரவு வந்ததில்லை. பொறுமையின் சிகரம் என்று என்னை எல்லோரும் சொல்வார்கள், நான் கோபப்பட்டதே இல்லை. எதற்கும் அழட்டிக்கொள்ள மாட்டேன்.

எங்கள் மகள் குழந்தையாக இருக்கும் போதே முடிவெடுத்துவிட்டோம், ஒருவர் அன்பு காட்ட வேண்டும், இன்னொருவர் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று.
நான் அன்பானவனாகவும், என் மனைவி கண்டிப்பானவளாகவும் நடிக்க ஆரம்பித்து, இன்று வரை வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. எங்கள் குழந்தைக்கு எங்கள் இருவர் மேலும் உயிர். நான் கொஞ்சம் ஜாலி டைப் என்பதால் என்னுடன் தான் அதிகமாக ஷேர் செய்துகொள்வாள். சில விஷயங்களை அம்மாக்கு தெரிய வேணாம்பா என்று சொல்வாள். ஆனால் நான் என் மனைவியிடம் சொல்லி விடுவேன். அவளிடம் எதையும் நான் மறைத்ததில்லை.
[+] 1 user Likes POPE XVIII's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மிகவும் சந்தோசமாக போய் கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கை. ஒருநாள் கிளினிக்கில் இருக்கும் போது என் மகள் கால் பண்ணினாள். டாடி இதுபோல் எங்கள் காலேஜில் ஹாஸ்பிடல் விசிட் கூட்டி கொண்டு போகிறார்கள், பெங்களூரு போகணும் என்று சொன்னாள். அம்மாகிட்ட கேட்டுக்கடா செல்லம் என்றேன். நீங்க ஓகேவா சொல்லுங்க என்றாள். எனக்கு ஓகேமா, ஆனா அம்மாகிட்ட கேட்டுக்க என்றேன். எப்படியோ என் மனைவியிடமும் சொல்லி பெர்மிஸ்ஸன் வாங்கிவிட்டாள். 30 பேர் போவதாகவும், 4நாட்கள் என்றும் சொன்னாள்.


கொஞ்ச நேரத்தில் மீண்டும் கூப்பிட்டாள், எப்போமா போகணும் என்றேன், நாளைக்கு டாடி என்றாள், என்ன ஒடனேவா என்றேன். ஆமாம் டாடி என்றாள். நானும் அம்மாவும் ட்ரெயின் ஏத்தி விட அப்போ வந்தர்றோம்மா என்றேன். இல்ல வேணாம், பேரண்ட்ஸ்லாம் வர அல்லோடு இல்ல, அதில்லாம நான் என்ன குழந்தையா என்றெல்லாம் சொல்ல, செரி என்றும் நானும் விட்டுவிட்டேன்.

இருந்தாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஏதோ எனக்கு செரியாகபடவில்லை.

வீட்டுக்கு வந்ததும் இரவு மனைவியிடம் சொன்னேன், அவளும் ரொம்ப யோசிக்காதீங்க என்று மட்டும் சொல்லி விட்டு படுக்க போனாள். முதல் நாள் ஃபோனில் பேசினாள் என் குழந்தை, இங்கே வந்துசேர்ந்துவிட்டோம் என்று. அடுத்த இரண்டு நாட்கள் ஃபோன் வரவில்லை, ட்ரை பண்ணி பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. 

ஒருகட்டத்தில் பயம் வந்துவிட்டது, என் மனைவி, கீர்த்தி போன் பண்ணினாலா என்று கேட்டாள், நான் நேற்று தான் பேசினேன் என்று பொய் சொல்லிவிட்டேன். ஏதோ தவறாக இருக்கிறது என்பது மட்டும் எனக்கு புரிந்தது.

மணி: 8:00
நேரம்: காலை
என்னால் இங்கே இருப்பு கொள்ள முடியவில்லை நேராக காலேஜ்க்கே பார்க்க போய்விட்டேன். அங்கே போனதும் அவர்கள் டீனை பார்க்க சொன்னார்கள், விசாரித்து பார்த்ததில், அப்படி ஏதும் ஹாஸ்பிடல் விசிட் எங்கள் காலேஜ் மூலமாக போகவில்லை என்று சொன்னார்கள். அதுவே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என் குழந்தை இப்படி என்னிடம் பொய் சொல்லிவிட்டாலே என்று இருந்தது, நான் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை, செரி யாரெல்லாம் மேம் லீவ் போட்டு போயிருக்கிறார்கள் என்றேன். பவித்ரா தான் உங்க பொண்ணோட க்ளோஸ் ஃபிரெண்டு அவளும் மூணுநாளா வரல, இது சந்தேகம் தான், அவகூட தான் போயிருக்கா என்று சூர்றா சொல்ல முடியாது என்றார். நான் அவர்களிடம் கேட்டு அந்த பெண்ணின் நம்பரை வாங்கிக்கொண்டேன். 

அவர்கள் திரும்பி வரும்போது கண்டிப்பாக பனிஷ்மெண்ட் உண்டு என்றார். நான் மெலிதாக சிரித்தபடி கிளம்பினேன். அந்த பவித்ரா பொண்ணுக்கு கால் செய்தேன், அவள் போன் சுவிட்ச்ஆஃப் என்று வந்தது, எனக்கு தலையே வெடிக்கும் போல இருந்தது, பேசாமல் பெங்களூர் கிளம்பி போய் விடலாமா என்று கூட யோசித்தேன், ஆனால் அங்கே எங்கு போவது, எப்படி தேடுவது.
Like Reply
#3
இதற்கிடையே என் மனைவி வேற கால் செய்து என்னாச்சு, எங்க போனீங்க என்று கேள்வி வேறு, நான் எதையோ சொல்லி சமாளித்தேன்,
பேசாமல் போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்றால், நம்மூரு என்றால் பரவாயில்லை, வேறு மாநிலம் வேறு, என்ன செய்வது. குழப்பத்தில் எனக்கு பைத்தியமே பிடிப்பது போல இருந்தது.

செரி வீட்டுக்கு போகலாம் என்று முடிவெடுத்து கிளம்ப ஆரம்பிக்கும் போது, டீன் கால் செய்தார். நான் சொல்லுங்கமேம் என்றேன். பவித்ரா அப்பாக்கு கூப்பிட்டேன், அவரு அவகிட்ட பேசி இருக்காரு, பேசுனதுல அவளுக்கும், உங்க பொண்ணுக்கும் ஆக்சிடன்ட் ஆனதா சொல்றாங்க, என்றார்.

அவர் ஆக்சிடன்ட் என்று சொன்னதுமே எனக்கு அதிர்ச்சியில் அந்த இடமே ஃபேடு அவுட் ஆகி, மயக்கம் வந்தது, நல்ல வேலையாக கீழே விழுகவில்லை, உட்கார்ந்து விட்டேன். ஃபோன் கைதவறி கீழே விழுந்தது, மூச்சு இறைத்து, நெஞ்சு பக்கம் வலி வேறு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினேன்.

மீண்டும் அவருக்கு கால் பண்ணினேன், என்னாச்சு சார் என்றார், ஒண்ணுமில்ல மேம், ஃபோன் கீழ விழுந்திடுச்சு என்றேன்,  எந்த இடத்துல இருக்காங்க, எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டேன், அவர் சொன்னதும் நோட் பண்ணிக்கொண்டேன், 


மணி: 11:00
பொழுது: காலை
என் மனைவியிடம் நான் வெளியூர் போகிறேன் என்று மட்டும் சொல்லி ஃபோனை கட் செய்து, காரை அங்கேயே போட்டுவிட்டு, ஃபிலைட் பிடித்து ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போனேன், 

ஹாஸ்பிட்டலையும் சென்றடைந்தேன், கண்களெல்லாம் கண்ணீர், தேடி ஓடினேன், பேரை கண்டுபிடித்தேன் ஐசியுவில் இருப்பதாக சொன்னார்கள், எனக்கு அப்போதே எதோ பெரிய அடி போல என்று புரிந்தது, ஐசியு போனேன், அங்கே என்னை உள்ளே அனுமதிக்கவில்லை, பிறகு நானும் டாக்டர் என்று சொல்ல, என்னை அனுமதித்தார்கள், என் அன்பு மகளை நான் பார்த்தேன், முகமெல்லாம் காயம், கீறல், கையில் கட்டு, காலில் கட்டு, உடம்பில் அடிபடாத இடமே இல்லை, அவள் இதய துடிப்பு சத்தமும், மெஷினின் கிலிங் கிலிங் சத்தம் மட்டுமே கேட்டது.

அவளை பார்க்கும்போது, ஆக்சிடன்ட்டில் அடிபட்டதுபோல தெரியவில்லை. எனக்கு சந்தேகம் வந்தது, என் மகள்கூட இருந்த பெண் எங்கே என்று கேட்டேன், அவளுக்கு சாதாரண அடிதான், கீழே ஜெனரல் வார்டில் இருப்பதாக நர்ஸ் சொன்னார்.

என் மகளின் ரிப்போர்ட்ஸை கேட்டேன், டாக்டர் வருவாரு அவர்கிட்டயே கேட்டுகங்கோ, கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ என்று, கன்னடம் கலந்த தமிழில் சொன்னார். 

கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் டாக்டர் வந்தார், அவர் ஓரளவு நல்ல தமிழ் பேசினார், நானும் என்னை டாக்டர் என்று அறிமுகம் செய்து கொண்டேன். அப்போ உங்ககிட்ட சொல்ல பிரச்னை இருக்காது என்றார். என்ன மேம் என்றேன், நர்ஸ் என்னனு சொன்னாங்க என்றார், ஆக்சிடன்ட் என்று சொன்னார்கள் என்றேன். 

பொம்பளபுள்ள பாருங்க அதான் நாங்க அப்படி சொல்ல சொன்னோம், என்றார், எனக்கு புரியவில்லை மேம் என்றேன். ஏக்ச்சுவளி  உங்க பொண்ண கேங் ரேப் பண்ணிருக்காங்க என்றார். எனக்கு தலையில் இடி இறங்கியது, நான் அமைதியாக காட்டிகொண்டேன்.

அவர் எக்ஸ்பிளைன் பண்ண வந்தார், வேணாம் மேம், ரிப்போர்ட்ஸ் குடுங்க நானே படுச்சு பாத்துக்கிறேன் என்றேன். படிக்க படிக்க எனக்கு கண்ணீர் ஊத்தியது, நான்கு பேர் என் பெண்ணை சீரழித்திருக்கிறார்கள், 

கொலை செய்வது நோக்கம் இல்லை என்று எழுதி இருந்தது, அவர்களிடம் சண்டை போட்டிருக்கிறாள், அதில் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள், இன்னும் பலது இருந்தது, இன்னும் தாங்கவன்னா கொடுமையை என் குழந்தைக்கு செய்திருக்கிறார்கள், எனக்கு அதற்க்கு மேல் படிக்க முடியவில்லை.

இதெல்லாம் உண்மை இல்லை, எல்லாமே கனவு, கனவு என்று கண்மூடி திறந்தேன், இல்லை எல்லாம் நிஜம் தான், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செத்துவிடலாம் போல இருந்தது, என் குழந்தை எவ்வளவு துயரத்தை அனுபவித்து இருப்பாளோ தெரியவில்லை.
[+] 5 users Like POPE XVIII's post
Like Reply
#4
Good start. Continue
Like Reply
#5
Welcome pop bro good start continue
Like Reply
#6
Good start bro... Continue
Like Reply
#7
i think that story is in pratilipi in the name of kallukkul oru kathal
everything is fair in love and war
Like Reply
#8
font size romba kutty ya iruku perusu pannuga.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#9
Bro continue அசாதாரன காதல் கதை
Like Reply
#10
waiting for update........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#11
சூப்பர் நண்பா தொடர்ந்து எழுதுங்கள்
Like Reply
#12
super starting story.i am like this story.
Like Reply
#13
Wait for your next update
Like Reply
#14
Nice start..
Like Reply
#15
(28-11-2019, 01:30 AM)Balasind18 Wrote: Good start. Continue

(28-11-2019, 02:26 AM)Krish126 Wrote: Welcome pop bro good start continue

(28-11-2019, 06:10 AM)Mr Strange Wrote: Good start bro... Continue

(28-11-2019, 06:39 AM)riril94 Wrote: i think that story is in pratilipi in the name of kallukkul oru kathal

(28-11-2019, 07:32 AM)manigopal Wrote: font size romba kutty ya iruku perusu pannuga.

(28-11-2019, 07:53 AM)Lovlysandy Wrote: Bro continue  அசாதாரன காதல் கதை 
story backup என்கிட்ட இல்ல bro, யாராச்சு வச்சிருந்தா என்கிட்ட share பன்னுங்க
(28-11-2019, 08:01 AM)manigopal Wrote: waiting for update........

(28-11-2019, 08:41 AM)Vaaliba Vayasu Wrote: சூப்பர் நண்பா தொடர்ந்து எழுதுங்கள்

(28-11-2019, 01:09 PM)rr2486 Wrote: super starting story.i am like this story.

(28-11-2019, 01:09 PM)rr2486 Wrote: Wait for your next update

(28-11-2019, 02:48 PM)Jeevanantham Wrote: Nice start..

நன்றி நண்பர்களே!!!
Like Reply
#16
bro great start sema interestingly going continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#17
nice.pls ccontinue
Like Reply
#18
நினைக்கயில் நெஞ்சில் ரத்தம் வழிவது போல இருந்தது. எல்லோரும் எங்கள் ஏரியாவில் என்னை பொறுமையான டாக்டர், நல்ல டாக்டர், என்பார்கள், ஏழைகளிடம் நான் காசு வாங்கியதே இல்லை, எல்லோரும் என்னை வாழ்த்தி விட்டு தான் போவார்கள்,

ஒருவரின் வாழ்த்து கூடவா என் குழந்தையை காப்பாற்றவில்லை. என்று எனக்குள் புலப்பினேன், மீண்டும் அந்த டாக்டரிடம் போனேன், அவரிடம் விசாரிக்க, கர்ப்பப்பை severeஆக டேமேஜ் ஆகி இருப்பதால், எடுக்க வேண்டும் என்றார், என் மகளுடனே என் வம்சம் முடிந்து விட போகிறதே என்று கவலையாக இருந்தது, எனினும் என் குழந்தை உயிரோடு இருந்தாலே போதும் என்று தோன்றியது.

ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்றேன், இப்போ அன்கான்சியஸாக இருக்கிறாள், தலையிலும் அடிபட்டு இருக்கு, ஸ்கேன் செய்யவேண்டும் என்றார். இன்னும் ஒரு 10 நாட்களில் கண் முழித்து விடுவார். வலி தெரியக்கூடாது என்பதற்காக ஹெவி செடேடிவ் குடுத்திருப்பதாக கூறினார்.

பார்க்க allow பண்ணுவீர்களா என்றேன், ஓகே என்றார், நான் பக்கம் போனேன், என் குழந்தை வெறிபிடித்த ஓநாய்களிடம் சிக்கி சின்னாபின்னமான ஒரு ஆட்டிக்குட்டியை போல கிடந்தாள். என்னை அறியாமல் என் கண்ணில் இருத்து  கண்ணீர் ஊற்றியது.

உங்க ஊருக்கு கொண்டு போவது என்றால் கொண்டு செல்லுங்கள் என்றார். இல்லை டாக்டர் இங்கேயே இருக்கட்டும் என்றேன். நாளை என் மனைவியை கூட்டி வருவேன், அவளிடம் ஆக்சிடன்ட் என்றே சொல்லுங்கள் என்றேன். அவர் சிரித்து, யு டோன்ட் ஒர்ரி டாக்டர் என்றார். நான் தேங்க்ஸ் சொல்லிவிட்டு என் குழந்தையுடன் போன அந்த பெண்ணை தேடி போனேன்.

அவள் கீழே ஜெனரல் வார்டில் இருந்தாள், ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்தது, கையில் லேசான சிராய்ப்பு காயங்களும் இருந்தது, இந்த பெண்ணிற்கு ஏதும் பெரிய பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை. என்னைப் பார்த்ததும் எழும்பி உட்கார முயற்சி செய்தாள், நான் உட்காருமா என்றேன்.

அவளை இப்பொழுது தான் முதல் முதலாக பார்க்கிறேன், எப்டிமா இருக்கு ஒடம்பு என்றேன், இப்போ பரவாயில்லை அங்கிள் என்றாள். உன் அம்மா, அப்பாலாம் எங்கமா என்றேன், அவங்கலாம் வரமாட்டாங்க என்றாள், செரி அது எனக்கு எதுக்கு என்று நான் ஏதும் கேட்கவில்லை, எங்க போனீங்க, எதுக்கு போனீங்க என்று கேட்க அவள் பதில் சொல்லவே இல்லை.

பாப்பா உன் ஃப்ரெண்ட மேலே போய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வா, அப்புறம் நீயே சொல்லுவ என்றேன். அழுக ஆரம்பித்தாள், சொல்லுமா என்றேன். என் அண்ணாவோட ஃபிரெண்டு தான் விக்கி, எங்கண்ணா மூலமா தான் எனக்கு தெரியும், அதில்லாம எங்க சீனியர் அவன். 

கீர்த்தியை லவ் பண்றதா சொன்னான், என்கிட்டே ஹெல்ப் கேட்டான், நானும் அவ நம்பரை குடுத்தேன், அதற்கப்பறம் ரென்டு பெரும் பேசி லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு இதையெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அப்பறம் என்றேன். இப்படியே ஒரு 6 மாசம் இருக்கும். ஒருநாள் அவுட்டிங் போலாம்னு முடிவு பண்ணோம், ஆனா டைம் கிடைக்கல, சோ இந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணி, 

உங்ககிட்ட பொய் சொல்லி பெர்மிஸ்ஸன் வாங்கிட்டா கீர்த்தி. 3 நாள் முன்னாடியே விக்கி கார்ல கெளம்புனோம், அப்புறம் என்றேன், அவன் கூட 3 ஃபிரெண்ட்ஸ் வந்தாங்க, அவங்க மூணு பேருமே எங்க சீனியர்ங்கிற நால நாங்க சகஜமா பழகுனோம். 

பெங்களூர்ல இருக்க விக்கி ரிசார்ட்க்கு போனோம், அவங்களுக்குலாம் ஒரு ரூம், நானும் கீர்த்தியும் ஒரு ரூம். நைட்லாம் ரொம்ப ஜாலியா பேசிட்டு சிருச்சுட்டு இருந்தோம். கீர்த்தி என்கிட்டே இதுதான் என் வாழ்க்கையிலேயே நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்த நாளு, அத ஏற்படுத்தி குடுத்த உனக்கு தேங்க்ஸ்டின்னு சொன்னா.

நான் அப்புறம் என்றேன். நாங்க எல்லாரும் ட்ரிங்க்ஸ் பண்ணிருந்தோம், கீர்த்தி வேணாம்னு சொல்லிட்டா, ஒரு 1 மணி இருக்கும் போது கீர்த்தி அழுகுற, மொனகுற சத்தம் கேட்டுச்சு, என்னன்னு பாத்தா, அவங்க 3 பேரு கீர்த்தி கை கால பிடுச்சுக்க, விக்கி கீர்த்திக்கிட்ட தப்பு பண்ணிட்டு இருந்தான்.

நான் கத்துனேன், அவங்க என்ன உள்ளே போடினு சொல்லி கதவை பூட்டிட்டாங்க, விடியற வரை கீர்த்தி அலறல் சத்தம் மட்டும் தான் கேட்டுட்டே இருந்துச்சு, என்றாள். காலைல கதவை திறந்து விட்டாங்க, நான் கீர்த்தி எங்கன்னு கேட்டேன், அவ மாடில இருந்து குதிச்சுட்டா, கீழ கெடப்பா அப்டின்னாங்க.

அதுக்கப்பறம் தான் நான் ஆம்புலன்ஸ கூப்பிட்டு இங்க வந்து சேர்த்தோம் என்றாள். செரி உனக்கு எப்படிமா காயம் ஆச்சு என்றேன், நான் விக்கியை அடுச்சேன், அவன் என்னை ஸ்டெப்ஸ்ல இருந்து தள்ளி உட்டுட்டான், அதுல தான் இந்த சிராய்ப்பு என்றாள்.

அவள் என்னிடம் முழுதாக கூறவில்லை என்பது புரிந்தது, இடையில் பொய் கலந்து சொல்கிறாள் என்பதும் தெரிந்தது. நான் விஷயம் இவ்வளவு தான், 4 பேர் என் பெண்ணை கொடூரமாக சீரழித்து இருக்கிறார்கள், அது மட்டும் உறுதி. அங்கிள் போலீஸ்டலாம் வேணாம், எனக்கு பயமா இருக்கு என்றாள். இல்லமா போலீஸ்ட்ட போகமாட்டேன், என் பொண்ணோட மானம் தான் முக்கியம் என்றேன். அவர்கள் பெயரை கேட்டேன், சொன்னாள்.

மணி: 2:00
பொழுது: மதியம்
பிறகு என்னை அவர்களிடம் கூட்டிட்டு போ என்றேன், வேண்டாம் அங்கிள் என்று தயங்கினாள், இல்லமா நான் ஏதும் பண்ணிடமாட்டேன் என்றேன்.
அவலும் செரி என்றாள், நான் போனேன் அவளுடனே, எனக்கு மனம் முழுக்க கோபம், ஆனால் கூலாக இருப்பது போல இருந்தேன். அந்த ரிசார்ட் வந்தது, அங்கிள் வேணாம் அங்கிள் எனக்கு பயமா இருக்கு, என்றாள், ஒன்னும் இல்லமா வா எங்கூட என்று கூட்டிக்கொண்டு போனேன். 

உள்ளே போனோம், அங்கே ஒரு 4 பசங்க உட்கார்ந்து இருந்தனர், பார்தாலே தெரிந்தது பணக்கார வீட்டு பசங்கள் என்று, நல்ல வாட்ட சாட்டமாக இருந்தார்கள். என்னை பார்த்ததும் எழுந்தார்கள்,  பவித்ரா உடனே, இவர் தான் கீர்த்தியோட டாடி என்றாள். அவர்கள் அதிர்ச்சியாக என்னை பார்த்தனர். நான் பக்கம் போய் ஐ யம் டாக்டர் ஜெயசூர்யா என்று கை நீட்டினேன், ஒருவன் விக்கி என்றான், இன்னொருவன் விஷ்ணு என்றான், இன்னொருவன் சம்பத் என்றான், கடைசி ஆள் ராஜ் என்றான். நல்லா இருக்கீங்களா என்றேன், நல்லா இருக்கோம் என்றார்கள். 

நான் ஓகே ப்பா, இன்னொரு நாள் மீட் பண்ணலாம் , என்ஜாய் யுவர் டே என்று சொல்லிவிட்டு, வாம்மா போலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு போனேன். ஏன் அங்கிள் இப்படி பண்ணீங்க என்றேன், இல்லமா பின்னாடி இவர்களால என்பொண்ணுக்கு எந்த பிரச்னையும் வந்துட கூடாதுல அதான் என்றேன். செரிமா உன்ன பத்தி சொல்லு என்றேன், எங்கம்மா, அப்பா, அண்ணா எல்லாருமே டாக்டர்ஸ் தான் அங்கிள், 

அண்ணா அமெரிக்கால இருக்கான், அம்மா, அப்பா இங்க தான் இருக்காங்க, ஒரு சின்ன சண்டை அதனால எங்கூட ஒரு, ஒரு வருஷமா பேசுறது இல்ல என்றாள். செரிமா நான் உன்னை கோயம்புத்தூர்ல விற்றவா என்றேன், அப்போ கீர்த்தி என்றாள், அவ அங்கேயே இருக்கட்டும், நாளைக்கு அவ அம்மாவை கூட்டிட்டு அங்க போயிருவேன் என்றேன், 

எப்படி அங்கிள் இவ்ளோ கூலா ஹாண்டில் பண்றீங்க என்றாள், முடுஞ்ச விஷயத்துக்கு ரியாக்ட் பண்ணி என்னமா யூஸ் இருக்கு என்றேன். செரி காலேஜ்ல ஏதும் சொல்லவேண்டாம் என்றேன். ச்ச ச்ச கண்டிப்பா சொல்லமாட்டேன் அங்கிள் என்றாள்.

இருவரும் ஃபிலைட் பிடித்து கிளம்பினோம், 
அவளை காலேஜ் ஹாஸ்டலில் விட்டிவிட்டு நான் ஊட்டி போனேன். 
[+] 5 users Like POPE XVIII's post
Like Reply
#19
Super super bro continue
Like Reply
#20
Super boss continue
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)