。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️
#1
Heart 
இது எனது நான்காவது கதை

Episode -1

10 ம் நூற்றாண்டு


மகேந்திரபுரி. பொன்முகலி ஆறு பாய்ந்து செழித்து வளம் கொழிக்கும் நாடு.பொன்முகலி ஆற்றின் நீர் வயல்களில் பாய்ந்து பொன்னை போல் நெல்லை விளைய வைப்பதால் ஆற்றுக்கு பொன்முகலி என பெயர் வந்தது.மரங்களில் உள்ள தேன் கூட்டில் அளவுக்கு அதிகமாய் தேன் சேர்ந்து சொரிந்து கொண்டு இருக்கும்.பழுத்து விழும் பழங்களும்,தேனும்,பசுக்கள் தானாக சொரியும் பாலோடு கலந்து பஞ்சாமிர்தம் சாலையில் ஆறாக ஒடும் வளம்மிக்க தேசம் அது.மக்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு அதிகமாக பெற்று மகிழ்ச்சியோடு இருந்த தேசம் அது.லட்சுமி கடாட்சம் மிகுந்த நாடு.அதற்கு காரணம் அந்த நாட்டின் இளவரசி தேவமங்கை மதிவதனி..

இந்த நாட்டின் அரசன் மகேந்திரவர்மன்.அவன் சற்று கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்து இருந்தான்.குங்கிலியம் மற்றும் வாசனை திரவியங்கள் போடப்பட்டு நறுமணம் கமழ நவரத்ன சிம்மாசனத்தில் வீற்று இருந்தான்.

அமைச்சர் அரசரிடம் வந்து,
அரசே,நான் தங்களுக்கு ஒரு நற்செய்தி கொண்டு வந்துள்ளேன்.ஆனால் தங்கள் முகம் வாட்டமாக உள்ளதே என்ன காரணம்?

வாருங்கள் அமைச்சரே,என் மகளின் எதிர்காலத்தை நினைத்து தான் வருந்தி கொண்டு இருந்தேன்.

தங்கள் மகளுக்கு என்ன குறை மன்னா,ஶ்ரீதேவியின் அழகோடு பிறந்தவர் உங்கள் மகள்.அழகு மட்டுமா,அறிவு,வீரம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவர் அவர்.எட்டு திக்கிலும் உள்ள மன்னர்கள் அவர் அழகை கண்டு மெய்மறந்து நான்,நீ என போட்டி போட்டு கொண்டு பெண் கேட்கின்றனர்.அதற்காக தானே தாங்கள் நாளை சுயம்வரம் ஏற்பாடு செய்து உள்ளீர்கள்.

ஆம் அமைச்சரே,என் ஒரே மகள் மதிவதனி. மதியும்,உடலில் வதனமும்,நெஞ்சில் வீரமும் ஒரு சேர பெற்றவள்.அவளை போன்ற சிறந்த அழகி இந்த உலகிலேயே கிடையாது.அவளை நினைக்கும் போது என் மனம் பெருமையில் பொங்குகிறது.ஆனால்....?

என்ன ஆனால் அரசே?

அவள் அழகுக்கு ஈடான ராஜகுமாரனை தேடி கண்டுபிடித்து மணம் செய்து வைக்க என்பதே என் ஆசை.

ஆம் ஒரு தகப்பனாரின் முக்கிய கவலையே அது தானே மன்னா..! அதற்கு தானே தாங்கள் எட்டு திக்கிலும் உள்ள எல்லா நாட்டிற்கும் செய்தி அனுப்பி உள்ளீர்கள்.

ஆம் உண்மை தான் அமைச்சரே,ஆனால் ஒரு நாட்டிற்கு மட்டும் அனுப்பவில்லை.

அது எந்த நாடு மன்னா? ஏன்?

அது நமது நாட்டின் தென் பகுதியில் இருந்து 250 மைல் தொலைவில் இருக்கும் மாயமலை நாடு தான்.

கேள்விப்பட்டு இருக்கிறேன் மன்னா,முழுக்க முழுக்க மலைகள் சூழ்ந்த நாடு அது.மலைகளும்,மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகள் அரணாக இருப்பதால் அந்த நாட்டை யாரும் வெற்றி கொள்ள முடியவில்லை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அது மட்டுமல்ல அமைச்சரே,அந்த நாட்டை ஆளும் காத்தவராயன் சரியான ஒரு பெண் பித்தன். இதுவரை அவன் கவர்ந்து சென்று மானபங்கபடுத்திய பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா...காளி உபாசகன் வேறு.மந்திர தந்திரங்களும் அறிந்தவன்.மதிவதனி பிறப்பதற்கு முன் நம் நாட்டின் மீது படை எடுத்து வென்று செல்வங்களையும்,பெண்களையும் கவர்ந்து சென்றவன் அவன்.அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு ஏற்கனவே நான்கு மனைவிகள்.

மன்னா,நம் அரசர் வம்சத்தில் பலதார மணம் ஏற்புடையது தானே..!அவனுக்கு அறிவும் அழகும் இருந்து நம் இளவரசிக்கு பொருத்தமாக இருந்தால் கட்டி கொடுக்கலாமே...

புரியாமல் பேசாதீர்கள் அமைச்சரே,அவர் மகன் என்றால் கட்டி கொடுத்து விடலாம் பிரச்சினை இல்லை.என்னோட பிரச்சினையே காத்தவராயன் தான்.அவன் சரியான பெண் பித்தன் கூறினேன் அல்லவா,அவன் என் பெண்ணை பார்த்தால் கண்டிப்பாக விட மாட்டான்.கரும்பு சக்கை போல பிழிந்து எடுத்து விடுவான்.

தாங்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது மன்னவா,

அவன் உங்களை வென்ற பொழுது வேண்டுமானால் இளைஞனாக வாட்டசாட்டமாக இருந்து இருப்பான்.ஆனால் இப்பொழுது கண்டிப்பாக கிழட்டு புலியாக இருப்பான்.அவனால் நம் தேவியை ஒன்றும் பண்ண முடியாது..

அது தான் இல்லை அமைச்சரே,அவனுக்கு வயது ஆனாலும் இன்னும் அதே வலுவோடு இருப்பதாக தான் கேள்விப்பட்டேன்.பூதத்தீவின் அரசன் மாறவர்மனை போன மாதம் வெறும் கைகளாலயே தலையை பிடுங்கி எறிந்தான் என்றால் அவன் புஜபலம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.

கேட்கவே கொடூரமாக இருக்கிறது மன்னா.

இன்னொரு விசயம் அமைச்சரே,அழகான பெண்களை கண்டால் அவனுக்கு மயக்கம் என்று கூறினேன் அல்லவா?அது போல் எந்த அழகான பெண்ணும் அந்த அருவருப்பான காட்டு பன்றி போல் இருக்கும் அவனிடம் மஞ்சத்தில் படுத்து விட்ட பிறகு அவனிடம் மயங்கி மீண்டும் மீண்டும் மையல் கொள்ள துடிக்கும் ரகசியம் ஏனோ புரியவில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் மன்னா,தாங்கள் தான் நாளை சுயம்வரம் வைத்து உள்ளீர்களே.அதில் பாரதத்தின் வட பகுதியில் இருக்கும் கோசல நாட்டின் அரசனுக்கு தங்கள் பெண்ணை மணம் முடித்து கொடுத்து விடுங்கள்.பாரதத்தின் தென் பகுதியில் இருக்கும் காத்தவராயன் வட பாரதம் எல்லாம் செல்ல மாட்டான்.பிரச்சினை தீர்ந்தது.

மன்னர் மீண்டும்"என்னோட கவலைக்கான காரணம் என் மகளின் ஜாதகம் தான் அமைச்சரே."

ஏன்,தங்கள் திருக்குமராத்தி ஜாதகம் அஷ்ட ஐஸ்வர்யங்கள் உள்ள ஜாதகம் ஆச்சே.

ஆம்,ஆனால் அவள் பதினெட்டு வயது பூர்த்தி ஆன பிறகு ,தன்னை விட மூன்று மடங்கு அதிகம் வயதான நபரிடம் தான் மூர்க்கத்தனமாக கன்னி கழிக்கப்படுவாள் என்று உள்ளது.காத்தவராயன் வயதோ 54.இப்பொழுது என் கவலைக்கான காரணம்  உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

அப்படி எல்லாம் நடக்காது மன்னா,தங்கள் புதல்வி வீர பராக்கிரமம் நிறைந்தவர்.அவனால் தங்கள் மகளை நெருங்க கூட முடியாது..நான் சொல்ல வந்த நற்செய்தியையே முற்றிலும் மறந்து விட்டேன்..தங்கள் புதல்வி வருஷ நாட்டின் மீது படையெடுத்து சென்று வெற்றி கொண்டு வீர லட்சுமியாக திரும்பி வந்துள்ளார்.
வாருங்கள் அவரை வரவேற்போம்...

பட்டத்து யானையின் மீது அமர்ந்து வந்த மதிவதனியை நாட்டு மக்கள் அனைவரும் பூமாரி பொழிந்து வரவேற்றனர்.

அமைச்சரும்,மன்னரும் உப்பரிகையில் நின்று அவள் மீது மலர் தூவி தங்கள் வாழ்த்துக்களை  பகிர்ந்தனர்.

தளபதி,மன்னர் அருகே வந்து "வேந்தே இளவரசியின் வில்லாற்றல் மிகவும் அருமை.இன்று அவர் போர்க்களத்தில் செயல்பட்ட விதம் அப்பப்பா காண கண் கோடி வேண்டும். சூரப்புலியாய் பாய்ந்து அவர் வில்லில் இருந்து புறப்பட்ட பாணங்கள் அரை நாழிகையில் வருஷ நாட்டின் பலம் மிகுந்த வேழ படையை அழித்து விட்டது.அவரை போல ஒரே நொடியில் இரு அம்புகளை எய்து இரு யானைகளின் நெற்றியை துளைப்பவர் இந்த உலகில் யாருமே கிடையாது.இவர் ஒருவரே பத்து ஆண் மகன்களுக்கு சமம்..என பாராட்டினார்.

மகேந்திரவர்மன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் தன் மகளின் சிரசில் கை வைத்து " எழுந்திரு மகளே,உனக்கு அநேக கோடி நன்மைகள் உண்டாகட்டும்.என்றும் வீரத்திருமகளாய் வலம் வருவாய்.எனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லாத குறையை நீ தான் தீர்த்தாய்.உன்னை நினைத்து என் மனம் உவகை கொள்கிறது."

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தந்தையே..

மகளே,உனக்கு ஒரு முக்கியமான விசயம்.நாளை உனக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்து உள்ளேன்.108 தேசங்களில் இருந்து உன்னை பெண் பார்க்க மன்னர்கள்,இளவரசர்கள் எல்லோரும் வருகின்றனர்.உனக்கு யார் விருப்பமோ அவரை நீ தேர்ந்தெடுத்து மணம் முடித்து கொள்ளலாம்."

"தந்தையே என்ன இது அவசரம்?.ஏன் எனக்கு கூட சொல்லாமல் இந்த ஏற்பாட்டை செய்தீர்கள்..!நான் இன்னும் இமயம் முதல் குமரி வரை வெற்றி கொள்ள வேண்டிய நாடுகள் பல உள்ளது.அதிலும் முக்கியமாக நம் நாட்டின் செல்வங்களை கொள்ளை அடித்து போன மாயமலையை நிர்மூலமாக்க வேண்டும் என்று கத்தினாள்..

அதை கேட்டு மகேந்திரவர்மன் பயந்து பதறினார்.

வேண்டாம் மகளே,உன் எண்ணம் ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும்..மாயமலை மட்டும் வேண்டாம்..

தளபதி அப்பொழுது வந்து"தாங்கள் சிறை பிடித்து வந்த வருஷ நாட்டின் மன்னன் கந்தமாறனை என்ன செய்யலாம்?என்று கேட்டார்.

"அவனை கொண்டு போய் பாதாள சிறையில் போடுங்கள்.." என்று மன்னர் கூற,

வேண்டாம் தந்தையே,முச்சந்தியில் பூமியில் அவன் உடலை புதைத்து தலையை யானையின் காலால் இடற விடுங்கள்.இதுவே என் ஆணை..

மகளே மதிவதனி,என்ன இது கொடூரம்..!வழக்கமாக சிறையில் தள்ளுவது தானே நமது வழக்கம்.

இல்லை தந்தையே,இந்த மாதிரி கடும் தண்டனைகள் கொடுத்தால் மட்டுமே நமது நாட்டின் மீது எதிரிகளுக்கு பயம் வரும்.இதை விட கொடும் தண்டனை அந்த மாய மலை மன்னனுக்கு காத்து இருக்கிறது..என்று கர்ஜித்தாள்..

யாருக்கு யார் தண்டனை கொடுக்க போகிறார்கள்?எதிர்காலத்தில்...

குறிப்பு:- இந்த கதை மன்னர் காலம் மற்றும் நிகழ் காலத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து எழுதப்படுவது.மன்னர் காலத்தில் வரும் உரையாடல்கள் கொஞ்சம் தூய தமிழில் எழுத வேண்டி இருக்கும்.சிலருக்கு புரியாமல் போகலாம்.மன்னித்து கொள்ளவும்..இந்த கதை நிகழ்காலத்தில் பேயாக வந்து நாயகியை அடைவது போல் இருக்கும்.உண்மையில் இந்த கதை பெரும் சவாலை கொடுக்க போகிறது என அறிவேன்.என்னால் முடிந்த வரை சிறப்பாக கொடுக்க முயற்சி செய்கிறேன்.குறைகளை சுட்டி காட்டவும்..நன்றி  Namaskar Namaskar Namaskar
My thread


காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் 

https://xossipy.com/thread-57993.html

நினைவோ ஒரு பறவை

https://xossipy.com/thread-56596.html
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by snegithan - 23-09-2023, 08:16 PM



Users browsing this thread: 5 Guest(s)