Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்!
#1
இப்போது தமிழகத்தில் நிலவும் குளிருக்கே நம்மில் பலரும் நடுங்கி இரவில் கூடுதல் போர்வைகள் தேடியும், ஃபேன் வேகத்தைக் குறைத்தும் வருகிறோம். ஆனால் வருடத்தின் பாதிக்கும் மேல் கடும் குளிரில் (சில நேரங்களில் -60 டிகிரி செல்சியஸைத் தொடும் வெப்பம்) எப்படி உயிர்பிழைக்கிறதென்று தெரியுமா?
[Image: 147673_thumb.jpg]
லகம் சுற்றியும் விலங்குகள் அனைத்திடமும் (நம்மையும் சேர்த்து) இருக்கும் மிக முக்கிய உந்துதல் அடுத்த தலைமுறையை வெற்றிகரமாக இந்த உலகத்திற்குக் கொண்டுவந்து சேர்த்து தன் இனத்தை உயிர்வாழவைப்பதே! இதற்காக ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு விதமான சவால்களை எதிர்கொள்கிறது. அப்படியான ஒரு சர்வைவல் கதைதான் இதுவும். 
அன்டார்டிகாவின் இலையுதிர் காலம் அது, வெயில் காலம் முடிவுற்று குளிர்காலம் நெருங்கும் நேரம். முதலில் சுற்றியிருக்கும் கடல்கள் உறையத்தொடங்கும். இந்தக் காலத்தில்தான் உறைந்திருக்கும் கடல் பகுதிக்கு ஆயிரக்கணக்கில் வருகின்றன இந்த எம்பெரர் பென்குயின்கள். காரணம் இனப்பெருக்கக் காலத்தில் இந்த உறைந்த கடல்தான் இந்தப் பென்குயின்கள் எந்த வித அச்சுறுத்தலும் இல்லாத மிக பாதுகாப்பான இடம். அடுத்த கோடைக்காலம் வர சுமார் 9 மாதங்கள் ஆகும். அதுவரை இந்த உறைந்த கடல் உருகாமல் இருக்கும். அடுத்த தலைமுறையைச் சரியாகப் பெற்று வளர்க்க இந்தப் பென்குயின்களுக்கு இந்த 9 மாதங்களில் ஒவ்வொரு நாளும் மிகவும்முக்கியம். ஆனால், இதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க உலகின் மிகக் கடுமையான, இரக்கமற்ற குளிர்காலத்தை இவை சமாளித்தாக வேண்டும்.
[Image: Penguins_9_13384.jpg]


உறைந்த கடலுக்கு வந்து சேரும் எம்பெரர் பென்குயின்கள் 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
கடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்! - by johnypowas - 22-01-2019, 11:41 AM



Users browsing this thread: 1 Guest(s)