இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete
#1
தடம் எண் 1

சித்தூர் இரயில்வே நிலையம்.

சூரியன் மேற்கில் மறைய துடித்துக்கொண்டிருந்த மாலை நேரம், மழை மேகங்கள் அப்பகுதியை சற்று இருள் சூழ்ந்ததாகவே அடித்திருந்தது. காற்றும் சற்று சில்லென்று தென்றலாக வீசிக்கொண்டிருந்தது. பயணிகள் தத்தம் ப்ளாட்பாரங்களை தேடிச் சென்றுக்கொண்டிருந்தனர். 


கிழக்குத் திசையில் லேசான இடிச்சத்தம் கேட்கத்துவங்கிய அதே நேரத்தில், நிலையத்தின் ஒலிப்பெருக்கியில் கொய்ங்ங் என்ற சப்தத்தை தொடர்ந்து “பயணிகள் கவனத்திற்கு மும்பை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் வண்டி எண் 16381 சரியாக 4.50 க்கு ப்ளாட்பார்ம் நெம்பர் 2க்கு வந்து சேரும்”, என்ற அறிவிப்பு இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழிகளில் ஒலித்தது.

ப்ளாட்பார்ம் நெம்பர் 2ல் இருந்த பயணிகள் வண்டி வரும் திசையை உற்று நோக்கத் துவங்கினர், டிக்கெட் கவுண்டர்களில் இருந்த சிலர் வேகமாக டிக்கெட்களை பெற்றுக்கொண்டு ப்ளாட்பார்ம் நோக்கி ஓடத் துவங்கினர்.

அப்படி ஓடியவர்களில் அந்த இளம் ஜோடிகள் அனைவரது கண்களையும் திரும்பி பார்க்க வைத்தனர் என்பதை அங்குள்ளவர்களின் பார்வைகள் அவர்கள் மீது நிலைத்திருந்ததை வைத்து நம்மால் உணர முடிந்தது.

“அய்யோ சீக்கரம் விமல் ட்ரைன் வருவதை அனவுன்ஸ் பன்னிட்டாங்க வேகமாக வா” அப்பெண் அவளது கணவனை தூரிதப்படுத்தியவாறு நடக்க அவனோ அவளது இடுப்பில் கைகளால் சில்மிசங்களை செய்தவாறு இறுக்கியபடி நடந்துக்கொண்டிருந்தான்.

“இப்படி பப்ளிக்கா ச்ச்சீ….” அவளது அழகான அந்த வெட்கம் அங்கிருந்தவர்களின் உணர்ச்சிகளை தூண்டியது. 


“என் பொண்டாட்டி நான் எங்க வேணா பன்னுவேன் ம்ம்ம்.”. அவன் சிரித்தவாறு இடுப்பில் இருந்த கையை எடுக்காமல் அவளை ப்ளாட்பார்மிற்கு நடத்தி சென்றான்.

க்ரீச்சிட்ட சப்தத்துடன் இரயில் வந்த நிற்க அனைவரும் வேக வேகமாக எறினர். ஜோடிகள் இருவரும் இழைந்தபடியே அந்த கம்பார்ட்மென்டில் ஏறினர்.

இரயில் மெல்ல நகரத் துவங்கியதும் அவன் அவளிடம் கேட்கத் துவங்கினான்.

“ஷாலு…. ஷால்ல்லுலுலுலு…..” 


“ம்ம்ம் எப்படா வண்டி ஏறுவோம்ன்னு காத்திட்டிருந்த இப்ப நச்சரிக்க ஆரம்பிச்சுட்ட இல்ல?”

“ப்ளீஸ் ப்ளீஸ்டி நான் லைப்ல் எப்படில்லாம் கற்பனை பன்னி வச்சிருக்கனோ அப்படியெல்லாம் வாழ்ந்து பார்த்துரனும்டி நீ என் செல்ல பொண்டாட்டில்ல புருஷன் ஆசையை நிறைவேற நீயும் ஒத்துழைக்கனும்….”

“நோ நோ நேத்து நீ சொன்னப்பவே நான் சொல்லிட்டேன் எனக்கு புடிக்கலன்னு”

“படிச்ச மாடர்ன் கேர்ல்ன்னு உன்ன செலக்ட் பன்னினேன் நீ என்னடான்னா சை…..”

அவன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு கடுகடுவென ஆனான்.

இருவரும் சற்று நேரம் பேசாமல் எதிர் எதிர் பக்கமாக பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

தடக் தடக் என்ற இரயிலின் ஓசை அவர்களது இதயத்திலும் எதிரொலித்தது.

அவர்களது இந்த மௌன நேரத்தில் நாம் அவர்கள் இருவரையும் பற்றி தெரிந்துக்கொள்வோம். 


விமல், வயது தற்போது 28, நல்ல திடகார்த்தியமான உடம்பு, எப்போதும் கண்களில் மின்னும் குறும்புப் பார்வை, நடுத்தர உயரம், 


“கலர்ன்னா கமல்ஹாசன் கலர்டா”, என அவனது நண்பர்கள் சொன்னாலும், மாநிறம் என்பது அவனை அறிந்த அனைவருக்கும் தெரிந்ததே.

படித்தது பி.ஈ சாப்ட்வேர், நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் சொந்தமாக சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து, அதில் சுமார் 60 பேர் வரை வேலைக்கு அமர்த்தி பெரிய அளவில் இல்லையென்றாலும் மாதம் சில லட்சங்களை இலாபமாக பெற்று நிறைவான வாழ்க்கையை வாழும் சராசரி ஆள்.

தன்னிடம் வேலைக்காக நேர்முகத்தேர்விற்கு வந்த ஷாலு என்கிற ஷாலினியின் அழகில் மயங்கி லவ்வோ லவ் என அவள் பின்னால் சுற்றி பின்னர் இருவரும் இணைந்து இரண்டு வருடங்கள் அவளோடு சேர்ந்து சுற்றிவிட்டு ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 09:06 AM



Users browsing this thread: 1 Guest(s)