சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
சங்கீதா - இடை அழகி 68

சரி சொல்லுங்க, காலைல எங்கே போய் இருந்தீங்க மேடம். ராகவ் பார்க்க போய் இருந்தேன்.. – வியர்வைப் பனித் துளிகளை தனது கைக்குட்டையால் நெற்றியில் துடைத்துக் கொண்டே பேசினாள் இந்த தேவதை. “ஒஹ்ஹ்….” – கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்து கிண்டலாய் சிரித்தாள் ரம்யா.. “சப்”… இதோ பார்.. நீ இப்படி எல்லாம் சிரிச்சா நான் அப்புறம் பேசவே மாட்டேன் போ..


“ஹா ஹா.. சரி சரி சொல்லுங்க..” “கொஞ்சம் ஆழமா கீறல் ஏற்பட்டிருக்கு, அவன் நெஞ்சுல மருந்து வெச்சி பிளாஸ்டர் போட்டு இருகாங்காடி. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி.” “ஹ்ம்ம்.. ஆமாமாம் உங்களாலதானே ஆச்சு….” – ரம்யாவுக்கு ஏதோ சங்கீதாவை வெருப்பேத்துவதில் சின்ன சுகம்.. இதைக் கேட்டவுடன் கோவத்தில் சங்கீதா அப்படியே சாப்பிட்ட கையுடன் எழுந்து தட்டை எடுத்துக் கொண்டு நடக்க…. “அய்யோ ஒரு நிமிஷம் இருங்க, ஐஅம் சாரி, ஐஅம் சாரி….” – சற்று பாடுபட்டு சங்கீதாவின் கையைப் பிடித்து மீண்டும் அமரவைத்தாள் ரம்யா. கண்னங்கள் சிவந்திருந்தது, நெற்றி இன்னும் வேர்த்து இருந்தது இந்த தேவதைக்கு. “நானா போய் அவன சாவி எடுத்து நெஞ்சுல குத்திக்க சொல்லி சொன்னேன். கொஞ்சமாவது அறிவு இருக்கணும், அந்த கோபிய சும்மா ஓட சொல்லி இருந்தா கூட போதும், பெரிய இவனாட்டம் சாவிய எடுத்து குத்திக்குட்டான் ராஸ்கல்.” – ராகவ் மீது இருக்கும் காதல் காரணமாக கொண்ட கோவத்தில் சகஜமாக பேசிவிட்டாள் சங்கீதா. சில நொடிகளுக்கு பிறகு ஏன் இப்படி பேசினோம் என்றெண்ணி ரம்யாவின் முகம் பார்ப்பதைத் தவிர்த்து மெளனமாக சாப்பிட ஆரம்பித்தாள். உள்ளே வரும்போது இருந்த முகத்தின் பிரகாசத்தையும், ராகவ் பத்தி பேசும்போது சங்கீதாவின் முகத்தில் மாறுபடும் உணர்வுகளையும் ரம்யா கவனிக்க தவறவில்லை. பட படவென ராகவ் பத்தி பேசிய பின்பு ரம்யா ஒன்றும் பேசாமல் இருப்பதைக் கண்டு சற்று சங்கோஜமானது சங்கீதாவுக்கு.. என்னடி? பேசு ஏதாவது, நான் ஏதாவது தேவை இல்லாம கோவப் பட்டிருந்தா சாரி – என்றாள் சங்கீதா.. ச்ச…. ச்ச…. என்ன மேடம் என் கிட்ட போய் formal அ பேசுறீங்க. free யா விடுங்க. உங்களுக்கு மனசளவுல கொஞ்சம் relaxation வேணும். நான் சொன்னா மாதிரி வேணும்னா 2 நாள் லீவ் எடுங்க – ரம்யா பேசும்போது சங்கீதா குறுக்கிட்டாள். எனக்கு relaxation வேலையிலையும் என் மனசுக்கு பிடிச்சவங்க கூட பேசுறதுலையும்தான். வீட்டுல இல்ல. அப்படியே இருந்தாலும் அது என் பசங்களோட மட்டும்தான். actually நான் இன்னைக்கி காலைல அவனை பார்க்குற idea ல இல்ல, ஆனா… ஆனா..? என்ன சொல்லுங்க மேடம்.. காலைல கொஞ்சம் மணசு சரி இல்ல. அதான் நேரா வேலைக்கு வர்ரத விட கொஞ்சம் ராகவ் கிட்ட பேசிட்டு வரலாம் னு தோணுச்சி. ஒஹ், ஏன் எங்க கிட்ட எல்லாம் பேசக் கூடாதா? இதற்கு சங்கீதாவிடம் இருந்து மௌனம்.. மீண்டும் ஏதோ கொஞ்சம் தவறாக கேட்டு விட்டோமோ என்று எண்ணி ரம்யா பேச்சை மாற்றினாள். “சரி சரி விடுங்க மேடம்.. இப்போ கொஞ்சம் relaxed இருக்கீங்களா?” “ஹ்ம்ம்..” – சாப்டுக்கொண்டே தலையை மெதுவாக ஆட்டினாள். இப்போது ஏனோ திடீரென மனதில் ராகவிடம் கூறிய காதலை எண்ணினாள் சங்கீதா, அப்போது…. “என்னைப் பத்தி நீ என்ன நினைக்குற ரம்யா?” ஹா ஹா என்ன இது திடீர்னு புது கேள்வி? சப்.. சொல்லுடி.. – சத்தமே இல்லாமல் ஒரு பெருமூச்சு அவளிடம். “ஹ்ம்ம்… எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிப்பீங்க. எதையும் டக்குன்னு செய்ய மாட்டீங்க? நல்லா ஆழ்ந்து சிந்திச்சி முடிவு எடுப்பீங்க. ஆனா அதையும் சீக்கிரமாவே எடுப்பீங்க. கடைசியில எடுக்குற முடிவு உங்க மனசாட்சிக்கு விரோதமா இருக்காது. முக்கியமா இன்னொன்னு சொல்லணும். என்னது? – பார்வையில் ஆச்சர்யகுரியுடன் கேட்டாள் சங்கீதா. உங்க முடிவு முழுக்க முழுக்க உங்க மனசளவுல யோசிச்சி எடுக்குற முடிவா அமையும். யாருடைய தேவை இல்லாத advice ம் காதுல வாங்கிக்காம எப்போவும் சொந்தமாதான் முடிவு எடுப்பீங்க. அதே சமயம் அது தப்பான முடிவாவும் இருந்ததில்லை. ஹ்ம்ம்… வேறென்ன விட்டுட்டேன்.. (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தாள்).. ஆங்.. முடிவு எடுத்த பிறகு வீணா மனசை போட்டு குழப்பிக்க மாட்டீங்க. எதையும் தைரியமா ஒரு கை பார்ப்பீங்க. you will take the perfect decision at the end.” – என்று ரம்யா கூறியதும் சங்கீதாவின் முகத்தில் ஒரு மௌனமான புன்னகை தோன்றியது. “சரி ஏன் இதை கேட்டீங்கன்னு சொல்ல முடியுமா? – என்றாள் ரம்யா..” “ஒன்னும் இல்ல, சும்மா திடீர்னு கேட்கணும்னு தோணுச்சி. என்னைப் பத்தி மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு சொல்லி கேட்கனும் போல இருந்துச்சி. அதான்.”


“ஹலோ…. நான் உங்க friend, என்னை ஏன் மதவங்கன்னு சொல்லி ஒதுக்குறீங்க?” “தெரியும் டி, அதான் உன் கிட்ட மட்டும் வெளிப்படையா நானே கேட்டு தெரிஞ்சிகுட்டேன். இல்லைனா இப்படி வாய் பேசுற ஜென்மமா நான். ஹா ஹா – தன்னைத் தானே கிண்டல் அடித்துக் கொண்டாள் சங்கீதா.” ரம்யா பேசியது அனைத்தையும் கேட்டு முடித்தவுடன் சாப்பாடு தட்டை wash areaவில் போட்டுவிட்டு தன் இருக்கைக்கு செல்வதற்கு முன் ரம்யாவிடம் இருந்து தனியே விலகி வந்து ராகவ்க்கு தன் mobile எடுத்து “I Love You so much sweetheart” என்று sms அனுப்பினாள் ராகவின் தேவதை. (beep beep) message from SH (sweet heart) – “SH” என்று சங்கீதா, ராகவின் பெயரை மொபைலில் store செய்திருந்தாள். அதில் இருந்த message: “I born in this world only for you sara” என்றிருந்ததைப் பார்த்து ஒரு நொடி சந்தோஷத்தின் உச்சத்தில் லேசாக கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள் போங்க அதை யாருக்கும் தெரியாமல் முந்தானை நுனியால் லேசாக துடைத்துக் கொண்டு மனதில் சொல்லிக் கொண்டாள் “you are crazy about me da…. my sweet rascal”.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 07-10-2019, 10:54 AM



Users browsing this thread: 2 Guest(s)