சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
ராகவால் இதை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றான் இப்போது TV யில் ஒரு (Click)காட்சி ஓடிக்கொண்டிருந்தது, அந்த காட்சியில் வரும் அழகான முதிர்ச்சியான மங்கை ஒரு வாலிபனின் திறமையைக் கண்டு வியந்து பாரட்டுகிறாள் -அமைதியாய் இருந்த இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்து மென்மையாக சத்தம் இன்றி சிரித்தார்கள். “பாராட்டு வெறும் கடிதத்துக்கு தானா? அதை எழுதினவனுக்கு இல்லையா? – என்று ராகவ் அந்த காட்சியில் வரும் வாலிபனைப் போல கேட்க, சங்கீதா மெல்ல அருகே வந்து அவனின் தலையில் மென்மையாக ஒரு முத்தம் குடுத்தாள். அப்போது ராகவ்க்கு ஒரு நொடி உடல் முழுதும் புல்லரித்தது.நான் சொல்ல நினைச்சதெல்லாம் உன் பாக்கெட் ல இருக்குற கடிதத்துல எழுதி இருக்கேன் டா.. நான் இங்கே இருந்து கிளம்பினதுக்கு அப்புறம் படி ப்ளீஸ். என்று சொல்லிவிட்டு கிளம்பும்போது கதவின் அருகே சென்றவள் ஒரு நிமிடம் நின்று ராகவின் முகத்தைத் திரும்பிப் பார்த்து சிரித்தாள். ராகவும் அவனுடைய தேவதையின் சிரிப்பை தரிசித்தான். அவள் குடுத்த கடிதத்தை தனிமையில் பிரித்து உற்சாகமாய் படிக்க தொடங்கினான்..


அதில்….. என்னை முழுதாய் திருடியவனே…. உன்னைப் போல எனக்கு வர்னிச்சி எழுத வராது டா.. ஆனா மனசுல உள்ள உண்மைய சொல்லுறேன்…. வாழ்க்கையில் நான் தொலைத்த இன்பங்கள், தேடும் சந்தோஷங்கள், வேண்டிய நிம்மதி, விரும்பும் அமைதி… இவை அனைத்தும் எனக்கு உன்னிடம் இருந்துதான் கிடைக்குது. எவ்வளவோ முயற்சி பண்ணாலும் என்னதான் எனக்கு நானே விளக்கங்கள் குடுத்தாலும் என்னால் உன்னை மறக்க முடியாது. நீ சொன்ன மாதிரி உன் உணர்வுகளும் அன்பும் என் மனசை உரசுறதை நானும் நிறைய நேரங்களில் மௌனமாய் அனுபவித்திருக்கிறேன். அந்த ரகசிய சந்தோஷத்தை இன்று தான் முதலில் உனக்கு தெரியப் படுத்துகிறேன். மனசார சொல்லுறேண்டா….. உன் காதல ஏத்துக்க பெருமை படுகிறேன். Yes….. I am in Love with you with immense proud. (தமிழில்: ஆம், நானும் உன்னை காதலிக்கிறேன்… உன் காதலை ஏற்றுக் கொள்ள நான் அளவிலா பெருமை படுகிறேன்.) -இப்படிக்கு உன் சரா.. இந்த கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து hooohooo bingo yes yes yes…. ummmmaaahhhhh ummmaaahhhhh ummmaahhhhhh என்று அவளின் கடிதத்துக்கு முத்தங்கள் குடுத்து துள்ளி குதித்தான் ராகவ். இப்போது அவளிடம் இருந்து ராகவ்க்கு sms வந்தது. பார்த்தான்..

[Image: download+(1).jpg]
(beep beep) message from sangee: “படிச்சிட்டியா டா? …..” (beep beep) message from raghav: “hmm…. படிச்சேன் ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல”.. (beep beep) message from sangee: “டேய் மண்டு, அதுல என்னடா உனக்கு புரியல” (beep beep) message from raghav: “அதென்னது சரா?” (beep beep) message from sangee: “சொல்ல மாட்டேன்” (beep beep) message from raghav: “தயவுசெய்து சொல்லு சங்கீ ப்ளீளீளீளீளீளீளீளீளீளீளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….” (beep beep) message from sangee: “நீயெல்லாம் எப்படிடா CEO ஆன மக்கு மக்கு….” (beep beep) message from raghav: “ஆமாம் நான் ஒரு மக்குதான் என் தேவதை தான் எனக்கு எல்லாம் சொல்லித் தரனும்…. சொல்லு….” (beep beep) message from sangee: “ச்சே என் வாயாலேயே சொல்ல வைக்கிறானே….., சங்கீதா + ராகவ் = சரா…. போதுமா…. ச்சீ.. வெட்கமா இருக்குடா, இதுக்கு மேல எதுவும் புரியலைன்னு கேட்காத என் கிட்ட….” அடுத்த மெசேஜ் எதிர் நோக்கி phoneஐ மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 05-10-2019, 09:37 AM



Users browsing this thread: 1 Guest(s)