04-10-2019, 09:36 AM
கோதம் நகரத்தின் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தில் கடந்த பல ஆண்டுகளில் சீஸர் ரொமெரோ, ஜாக் நிக்கல்சன், ஹீத் லெட்ஜர் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்தப் பாத்திரத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார்கள்.
அதுபோலவே இந்தப் படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய, கண்ணீரும் ரத்தமும் தோய்ந்த வண்ணத்தைக் கொடுத்திருக்கிறார் ஜாக்வின் ஃபோனிக்ஸ். டார்க் நைட் படத்தில் ஹீத் லெட்ஜர் ஜோக்கராக நடித்த பிறகு, வேறு யாரும் அந்த அளவுக்கு ஜோக்கருக்கு உயிர் கொடுக்க முடியுமா என நினைத்திருந்த நேரத்தில், அதைத் தாண்டிச் செல்கிறார் ஜாக்வின்.
படத்தின் காப்புரிமை@JOKERMOVIE/TWITTER
படத்தின் கதை 1980களில் நடப்பதால், அதற்கேற்றபடி ஒரு நகரத்தை, துல்லியமாக உருவாக்கியிருப்பது அசரவைக்கிறது. படத்தின் பிற்பாதியில் சிறிது நேரம் தொய்வடையும் படம், இறுதியை நெருங்கும்போது மீண்டும் சூடுபிடிக்கிறது.
படத்தில் சில விஷயங்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. எதிர்கால பேட்மேனை இந்தப் படத்தில் குழந்தையாக சந்திக்கிறார் ஜோக்கர். அது பிற படங்களில் காலக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால், சினிமாவை ஜாலியான பொழுதுபோக்காக பார்ப்பவர்களுக்கான படம் அல்ல இது. வித்தியாசமானவர்கள், குறைபாடுள்ளவர்களுக்கு ஒரு சமூகத்தில் எப்படி இடமளிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் இந்தப் படம், நேரம் செல்லச்செல்ல பார்ப்பவர்களை ரொம்பவுமே தொந்தரவு செய்கிறது. சமூகத்தால் ஒதுக்கப்படும் ஒருவர் அதற்குப் பதிலாக வன்முறையைக் கையில் எடுப்பது சரிதானா என்ற கேள்வியையும் படம் எழுப்புகிறது.
மிகச் சிறந்த நடிகர்களைக் கொண்டு, மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் இது. ஆனால், பார்த்து முடிக்கும்போது தீவிரமான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
அதுபோலவே இந்தப் படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய, கண்ணீரும் ரத்தமும் தோய்ந்த வண்ணத்தைக் கொடுத்திருக்கிறார் ஜாக்வின் ஃபோனிக்ஸ். டார்க் நைட் படத்தில் ஹீத் லெட்ஜர் ஜோக்கராக நடித்த பிறகு, வேறு யாரும் அந்த அளவுக்கு ஜோக்கருக்கு உயிர் கொடுக்க முடியுமா என நினைத்திருந்த நேரத்தில், அதைத் தாண்டிச் செல்கிறார் ஜாக்வின்.
![[Image: _109091399_6b7799fe-6f8b-47dd-9197-98aabc3327e8.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/183F7/production/_109091399_6b7799fe-6f8b-47dd-9197-98aabc3327e8.jpg)
படத்தின் கதை 1980களில் நடப்பதால், அதற்கேற்றபடி ஒரு நகரத்தை, துல்லியமாக உருவாக்கியிருப்பது அசரவைக்கிறது. படத்தின் பிற்பாதியில் சிறிது நேரம் தொய்வடையும் படம், இறுதியை நெருங்கும்போது மீண்டும் சூடுபிடிக்கிறது.
படத்தில் சில விஷயங்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. எதிர்கால பேட்மேனை இந்தப் படத்தில் குழந்தையாக சந்திக்கிறார் ஜோக்கர். அது பிற படங்களில் காலக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால், சினிமாவை ஜாலியான பொழுதுபோக்காக பார்ப்பவர்களுக்கான படம் அல்ல இது. வித்தியாசமானவர்கள், குறைபாடுள்ளவர்களுக்கு ஒரு சமூகத்தில் எப்படி இடமளிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் இந்தப் படம், நேரம் செல்லச்செல்ல பார்ப்பவர்களை ரொம்பவுமே தொந்தரவு செய்கிறது. சமூகத்தால் ஒதுக்கப்படும் ஒருவர் அதற்குப் பதிலாக வன்முறையைக் கையில் எடுப்பது சரிதானா என்ற கேள்வியையும் படம் எழுப்புகிறது.
மிகச் சிறந்த நடிகர்களைக் கொண்டு, மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் இது. ஆனால், பார்த்து முடிக்கும்போது தீவிரமான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
first 5 lakhs viewed thread tamil