சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
“ப்ராமிஸ்ஸா சீக்கிரம் வரணும்?” – என்றாள் ஸ்நேஹா “ப்ராமிஸ் டா என் செல்லம், நீ… நீ போயி படுத்துக்கோ…நா” – கண்ணீர் எந்த தடைகளுமின்றி வந்துகொண்டிருந்தது. வந்த அழுகையால் முழுதாய் பேசி முடிக்க முடியவில்லை. என்னாச்சும்மா? பேசுமா… இஸ்ஸ்….. நீ போயி படுத்துக்கோ….. அம்மா வரேன், சரியா.. – அழுதுகொண்டே பேசினாள். சரிமா… – ஒன்றும் விளங்காதவளாய் ஸ்நேஹா மீண்டும் அறைக்கு சென்று படுத்தாள். பாத்ரூம் உள்ளே உள்ள கண்ணாடியில் அழுது சிவந்த கன்னங்களை பார்த்து தண்ணீரால் கழுவினால். மனதில் உள்ள எண்ணங்களை கழுவ முடியவில்லை அவளாள். முந்தானையை சரி செய்து, பெட்ரூமுக்கு சென்று குழந்தைகளுடன் படுத்து உறங்க முயற்ச்சி செய்தவளுக்கு தூக்கம் வரவில்லை. ஸ்நேஹா வை தன் நெஞ்சுடன் அனைத்து தலையில் தடவி தூங்க வைக்க…. இப்போது அவளுக்கும் கண்கள் சற்று லேசாக அயர்ந்தது சிறிய கண்ணீர் துளியுடன். கடைசியாய் ஏதாவது ஒரு முடிவை எடுக்கலாம் என்றவளுக்கு தூக்கம் குறுக்கிட்டது. நல்ல தூக்கம் தூங்கினாள். அடுத்த நாள் காலை…. படுக்கையில் எழுந்து அமைதியாய் அமர்ந்திருந்தாள். இரவு நேரம் அழுதது கொஞ்சம் கண்களை லேசாக வீங்கச் செய்திருந்தது. அமைதியாய் சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள் இப்போது ராகவின் கடிதத்தைப் பார்த்தாள். அதில் உள்ள வார்த்தைகளை பொறுமையாக படித்து எப்படி எல்லாம் தன்னை வர்னிச்சி இருக்கான் என்று வியந்தாள். இரவு நேரம் முழுதும் அவளது எண்ணங்களை அதிகாரம் செய்த ராகவின் சிந்தனைகள் அதிகாலை எழுந்த பிறகும் கூட இறக்கம் இல்லாமல் அவளின் சிந்தனைகளை தனது கட்டுக்குள் வைத்திருந்தது. மனதில் ஒரு புறம் பயம் இருந்தாலும் அவள் அதில் ஒரு ரகசிய இன்பம் கண்டாள். டிங்..டிங். – என்று calling bell சத்தம் கேட்டு கடிதத்தை தனது handbag உள்ளே வைத்தாள். உள்ளே வந்தது குமார். கண்கள் சற்று சோர்வாக இருந்தது, கூடவே போதிய தூக்கம் இல்லை என்று சங்கீதாவுக்கு குமாரைப் பார்க்கும்போது நன்றாக தெரிந்தது. எப்படியும் மீண்டும் ஒரு வாக்கு வாதம் தொடரலாம் என்று மனதில் எண்ணி இருந்தாள் சங்கீதா. குமார் சங்கீதாவை நேரடியாக பார்க்காமல் தனது ஷர்ட்டை கழட்டிவிட்டு நேராக படுக்கை அறையை நோக்கி நடக்க சங்கீதா பேச ஆரம்பித்தாள்.


“ராத்திரி எங்கே தங்கி இருந்தீங்க?” “உனக்கு எதுக்குடி சொல்லணும்?” “சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேணாம். நான் கட்டாய படுத்தல.” “நீ மட்டும் எல்லாத்தையும் சொல்லிட்டு செய்ரியாடி?” – முறைத்து பேசினான் குமார். கண்கள் லேசாக சிவந்திருந்தது. சற்றே அருகினில் நிற்க அவனது கோலம் முந்தைய இரவு கொஞ்சம் குடித்திருக்கிறான் என்று தெரிய வைத்தது. “ஹ்ம்ம்.. again asusual I expected this kumar” – சலித்துக் கொண்டே பேசினாள். வாயில் ஏதோ கோவமாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தான் குமார். அதைக் கேட்டு சங்கீதா ஏதுவா இருந்தாலும் சத்தமா சொல்லுங்க என்றாள். “ஆங்… நல்லா ஆடுனியே மேடைல “ஷீலா கி ஜவாணி” பாட்டுக்கு, அந்த மாதிரி நாலு பார் ல ஆடினா கூட இன்னும் நிறைய காசு குடுப்பாங்க.” – கையில் watch அவிழுத்து அருகில் உள்ள மேஜையில் விசிறி அடித்தான். “என்ன சொன்னீங்க?” – முன்புறம் இருந்த முடியை கைகளால் எடுத்து பின்னாடி போட்டு அவன் அருகில் வந்து கோவமான கண்களால் கேட்டாள் சங்கீதா. “நல்ல்ல்லா நாலு இடத்துல இப்படியே ஆடுடி, ஏற்கனவே அவனவன் என்னை இளக்காரமா பார்க்குறான், இன்னும் நல்லா கேவலமா பார்ப்பான்.” – இதைச் சொல்லும்போது குமாரின் முகம் ஆரோக்கியமற்ற உணர்ச்சிகளின் அவல உச்சிக்கு சென்றது. வார்த்தையைப் பார்த்து பேசுங்க குமார், நான் ஒன்னும் நாலு இடத்துல ஆடி போழைக்குரவ இல்ல.. – சங்கீதாவுக்கும் கண்கள் சிவந்தது. நான் வெறும் ஒரு 4 நிமிஷம் ஒரு சின்ன stage dance ஆடினேன்.. அது தப்பா?” “ஆங்… பேசுடி, பேசு, இன்னும் நல்லா பேசு, கூட கூட பேசு, பொத்திக்குட்டு கேட்ப்போம் னு தோணல இல்ல?” “எதுக்கு நான் ஒண்ணுமே சொல்லாம வாய் மூடிக்குட்டு இருக்கணும் னு எதிர்பார்க்குறீங்க? என் பக்கம் இருக்குற நியாயத்தை எடுத்து சொல்லுறேன்..” “ஒஹ்ஹ்….. நியாயம் பேசுறியா என் கிட்ட?…. நான் ஒன்னு சொன்னா அதை நீ சும்மா கேட்டுக்குட்டு அப்படியே நிக்குரதுல என்னடி தப்பு? பொண்டாட்டிதானே நீ.” “நானும் அதையேதான் உங்களுக்கு நியாபகப் படுத்துறேன், நான் பொண்டாட்டிதான், ஆனா அடிமை கிடையாது.” “இருக்கனும்டி, எனக்கு அப்படிதான் நீ இருக்கணும், எனக்கு உன்னால கெளரவம் குறையுதுடி…. ஆமாம்…. இந்த நாலு சுவருக்குள்ள உன் கிட்ட இதை சொல்லுரதுல எனக்கு ஒன்னும் அசிங்கம் இல்லைடி” – குமாரின் குரல் அதிகரித்தது. அந்த சத்தத்தில் ஸ்நேஹா படுக்கை அறையில் இருந்து என்னமோ ஏதோ என்று பயந்து எழுந்தாள்.. “நா….” – பேச ஆரம்பித்தவளை பேச விடாமல் தடுத்து மீண்டும் தொடர்ந்தான் குமார். பேசக் கூடாதுடி, என்னடி கூட கூட பேசுற…., நீ பேசுவ…. காரணம் எனக்கு நீதான் இந்த வேலைய வாங்கிக் குடுத்த, எப்படி வாங்கிக் குடுத்த? அந்த ராகவ் கிட்ட ஈசி ஈசி வாங்கிக் குடுத்த அப்படிதானேடி?” – இதைச் சொல்லும்போது குமாரின் முறைக்கும் பார்வை சங்கீதாவை அதிகம் எரிச்சலடயசெய்தது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 23-09-2019, 06:41 PM



Users browsing this thread: 1 Guest(s)