20-09-2019, 05:42 PM
நடிப்பு - சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா
தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கே.வி.ஆனந்த்
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியான தேதி - 20 செப்டம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 3/5
ஒரு கமர்ஷியல் படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் அடங்கிய படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி. ஆனந்த்.
பிரதமர், அரசியல், நாட்டுப்பற்று, பாதுகாப்பு, காஷ்மீர், பாகிஸ்தான், சதி, சூழ்ச்சி, காதல், பாசம், விவசாயம், போராட்டம், கார்ப்பரேட்... இவ்வளவு விஷயங்களையும் ஒரே படத்துக்குள் எந்த சிக்கலும் இல்லாமல் சரியான விதத்தில் சேர்த்து படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுவாரசியமாக பரபரப்பாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
மிலிட்டரி இன்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து பிரதமர் மோகன்லாலின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் சூர்யா. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர் மோகன்லால். ஒரு உயிர் போனாலும் 100 உயிர் காப்பாற்றப்ட்டால் தவறில்லை என்று நினைப்பவர். அப்படிப்பட்டவர் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். அதன்பின் அவருடைய மகன் ஆர்யா, அரசியல் சூழ்நிலை காரணமாக பதவியேற்கிறார். அவரையும் கொல்லத் துடிக்கிறார்கள். அவரையும் கொல்லத் துடிப்பது யார், மோகன்லாலைக் கொன்றது யார் என ஆர்யாவின் தனிப்பட்ட பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படும் சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே இது வேறு ஒரு மாதிரியான படம் என்பதை இயக்குனர் கே.வி.ஆனந்த் புரிய வைத்து விடுகிறார். விவசாயத்திலிருந்து ஆரம்பமாகி, நாட்டின் பாதுகாப்பு, பிரதமர் என கதை நகர்ந்து, கார்ப்பரேட் முதலாளியின் சூழ்ச்சியால் அரசியல் கொலையாக மாறி, வாரிசு அரசியலுக்கு நகர்ந்து, விவசாயம், காவிரி டெல்டா பிரச்சினையில் வந்து படம் முடிவடைகிறது.
எந்த சந்தர்ப்பங்களில் எந்தக் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டுமோ அதைச் சரியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். முந்தைய அரசு செய்த தவறுகள் என சிலவற்றை வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள். விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள்.
கடந்த சில படங்களாக கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே நடித்த சூர்யா, இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை மட்டுமே வழங்கியிருக்கிறார். அவரைக் கதிர் கதாபாத்திரத்திற்குள் அடக்கி சரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். பாதுகாப்பு அதிகாரி என்றால் அந்த கம்பீரம், எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உணர்வு, கழுகுப் பார்வை என சூர்யாவின் நடிப்பில் அத்தனை பொருத்தம். கதிர் என்ற கதாபாத்திரப் பெயரில் கூட விவசாயக் குறியீடு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இயற்கை விவசாயியாகவும் விவசாயத்துக்கு ஆதரவாக குரல் உயர்த்துகிறது கதிர் கதாபாத்திரம்.
தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கே.வி.ஆனந்த்
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியான தேதி - 20 செப்டம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 3/5
ஒரு கமர்ஷியல் படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் அடங்கிய படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி. ஆனந்த்.
பிரதமர், அரசியல், நாட்டுப்பற்று, பாதுகாப்பு, காஷ்மீர், பாகிஸ்தான், சதி, சூழ்ச்சி, காதல், பாசம், விவசாயம், போராட்டம், கார்ப்பரேட்... இவ்வளவு விஷயங்களையும் ஒரே படத்துக்குள் எந்த சிக்கலும் இல்லாமல் சரியான விதத்தில் சேர்த்து படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுவாரசியமாக பரபரப்பாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
மிலிட்டரி இன்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து பிரதமர் மோகன்லாலின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் சூர்யா. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர் மோகன்லால். ஒரு உயிர் போனாலும் 100 உயிர் காப்பாற்றப்ட்டால் தவறில்லை என்று நினைப்பவர். அப்படிப்பட்டவர் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். அதன்பின் அவருடைய மகன் ஆர்யா, அரசியல் சூழ்நிலை காரணமாக பதவியேற்கிறார். அவரையும் கொல்லத் துடிக்கிறார்கள். அவரையும் கொல்லத் துடிப்பது யார், மோகன்லாலைக் கொன்றது யார் என ஆர்யாவின் தனிப்பட்ட பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படும் சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே இது வேறு ஒரு மாதிரியான படம் என்பதை இயக்குனர் கே.வி.ஆனந்த் புரிய வைத்து விடுகிறார். விவசாயத்திலிருந்து ஆரம்பமாகி, நாட்டின் பாதுகாப்பு, பிரதமர் என கதை நகர்ந்து, கார்ப்பரேட் முதலாளியின் சூழ்ச்சியால் அரசியல் கொலையாக மாறி, வாரிசு அரசியலுக்கு நகர்ந்து, விவசாயம், காவிரி டெல்டா பிரச்சினையில் வந்து படம் முடிவடைகிறது.
எந்த சந்தர்ப்பங்களில் எந்தக் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டுமோ அதைச் சரியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். முந்தைய அரசு செய்த தவறுகள் என சிலவற்றை வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள். விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள்.
கடந்த சில படங்களாக கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே நடித்த சூர்யா, இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை மட்டுமே வழங்கியிருக்கிறார். அவரைக் கதிர் கதாபாத்திரத்திற்குள் அடக்கி சரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். பாதுகாப்பு அதிகாரி என்றால் அந்த கம்பீரம், எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உணர்வு, கழுகுப் பார்வை என சூர்யாவின் நடிப்பில் அத்தனை பொருத்தம். கதிர் என்ற கதாபாத்திரப் பெயரில் கூட விவசாயக் குறியீடு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இயற்கை விவசாயியாகவும் விவசாயத்துக்கு ஆதரவாக குரல் உயர்த்துகிறது கதிர் கதாபாத்திரம்.
![[Image: VM_125135000000.jpg]](https://img1.dinamalar.com/cini/CineGallery/VM_125135000000.jpg)
first 5 lakhs viewed thread tamil