சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
தோளில் தூங்கும் குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு போட்டிருக்கும் உடைகளை கழற்றி விட்டு, உள்ளாடைகளையும் அகற்றினாள் அந்த தேவதை. நைட்டி எதுவும் இல்லாததால் ஒரு காட்டன் blouse அணிந்து, காட்டன் புடவை ஒன்றை உடுத்தினாள். புடவை கொசுரை மெதுவாக அவளது கைகள் மடிக்க, மனதில் எண்ணங்கள் மீண்டும் அவளை ஆக்ரமித்தது. கொஞ்சநேரம் எண்ணங்களால் உறைந்து நின்றவள் மீண்டும் சுதாரித்துக் கொண்டு கொசுரை இடுப்பில் சொருகி முந்தானையை பேருக்கு ஏதோ மேலே போட்டுக் கொண்டு தூக்கம் வராததால் hall க்கு வந்து அமர்ந்திருந்தாள். மனதில் பல விதமான எண்ணங்கள் பல விதத்தில் வந்து தாக்கியது. வேகமாக பறக்கும் பட்டாம்பூச்சியின் முதுகில் ஒரு சிறிய கூழாங்கல்லை வைத்தால் எப்படி பளு தாங்க முடியாமல் பறக்காமல் இருக்குமோ அதைப் போல காலையில் நடந்த விழாவைப் பற்றி யோசிக்கமுடியாமல், விழாவுக்கு வந்த பிரபலங்கள் பாராட்டியதை யோசிக்க முடியாமல், இவ்வளவு ஏன், கடைசியாக கிளம்புவதற்கு முன்பு அவளுடைய unknown number குழப்பத்துக்கு பதில் கிடைத்தும் அதைப் பற்றி கூட அதிகம் யோசிக்க முடியாமல் அவளது மனதை அதிகமாக ஆக்கிரமித்தது ராகவின் காதல்தான். இந்த நினைவு மீண்டும் ஒரு முறை ரமேஷ் அவளது வாழ்வில் எட்டிப் பார்ப்பது போல் இருந்தாலும் “சப்” என்று உச்சுக் கொட்டி மீண்டும் ராகவின் எண்ணங்கள் ஓடின. hall ல் உள்ள chair ல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒன்றும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். ‘ஓய்ங்.. ஓய்ங்..’ என்று மெதுவான சந்கீதத்துடன் fan மேலே சுத்திக்கொண்டிருருந்தது. தன் முன் இருக்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து க் கொண்டே இருந்தாள் சங்கீதா. அலுவலகத்தில் அவள் femina புத்தகத்தில் படித்தது நியாபகம் வந்தது.


குடும்ப பெண்களுக்கு வரக் கூடிய மண அழுத்தம் பற்றி கூறியது, சுய கெளரவம் பற்றி விவாதித்தது, மனதுக்கு ஏற்ப சந்தோஷங்களில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டுமென்று படித்தது அனைத்தையும் சிந்தித்தாள். அதில் இருந்த மற்றொரு கேள்வியில் வேலைக்கு செல்லும் ஒரு பெண் தன் கருத்துகளுக்கு ஒத்து போகும் ஒரு நபரிடம் காதல் ஏற்படுகிறது என்று கூறி இருந்ததும், அதற்க்கு அந்த புத்தகத்தில் ஒரு பெண் ஆலோசகர் அது ஒன்றும் பெரிய கொலைக் குத்தம் இல்லை என்று பதில் அளித்ததும் இன்றைய நவ நாகரீக உலகில் discreet relationship (ரகசிய உறவு) வைத்தாலும் அதையும் பெண்களால் balance செய்து குடும்பத்தை நடத்த முடியும் என்றும், அவ்வாறு செய்வதின் மூலம் பல மண அழுத்தங்களுக்கு அது தீர்வு குடுக்கும் என்று படித்தது அனைத்தும் அவளது மனதில் ஓடின. இன்னும் பலவிதமான சிந்தனைகள் மனதை ஆட்கொண்டன…. “சப்” என்று உச்சு கொட்டி மெதுவாக கண்களை மூடி சாய்ந்தாள் – மூடிய இமைகளுக்குள் அவளுடன் ராகவ் சிரிக்கிறான், phone ல் பேசுகிறான், அவளுக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறான், கிண்டல் பண்ணுகிறான், மணிக் கணக்கில் அவளுடன் நேரம் போவது தெரியாமல் பேசி சிரிக்க வைக்கிறான். அணு அணுவாய் அவளது உணர்வுகளை மதிக்கிறான், அவளது பெண்மையை ரசிக்கிறான். அவள் மணம் ஒத்து போகும் விதம் அவளுடன் IOFI வளாகத்துக்குள் அவளைப் பார்த்து அன்புடன் வாய் நிறைய வர்ணித்து அழைக்கிறான், ராகவ்…. ராகவ்…. ராகவ்….ராகவ்…. ராகவ்…. மூச்சு விட்டால் ராகவ், கண்களை மூடினால் ராகவ், தூங்கும்போதும் கனவில் ராகவ். ராகவ் பத்தி பேசும்போது அவள் குழந்தைகள் கூட குதூகலிக்கின்றன. முழுக்க முழுக்க அவளுடைய சிந்தனைகள் அனைத்தும் ராகவ் என்பவனுக்கு அடிமை ஆகி இருப்பதை இப்போதுதான் பூதக் கண்ணாடி வைத்து தன் ஆழ் மனதை பார்த்து தெரிந்துகொண்டாள் சங்கீதா.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 20-09-2019, 09:50 AM



Users browsing this thread: 3 Guest(s)