சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
சங்கீதா - இடை அழகி 57

எந்த ஒரு உறுதியான மரத்துக்கும் அதன் வேர் தான் காரணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் IOFI என்கிற மரத்துக்கு விதை போட்ட மாமனிதர் Mr.Mahesh Yadhav வை நாம் யாரும் மறக்க முடியாது. முற்றிலும் உழைப்பால் உயர்ந்தவர். தற்போதிய CEO Mr.Raghav Yadhav னுடைய தந்தைதான் இவர். (இப்போது, கூட்டாம் முழுவதும் சங்கீதா பேசுவதைக் கேட்பதற்காக நல்ல அமைதி நிலவியது..)


Mr.Mahesh Yadhav ஒரு திறமையான வியாபாரி. ஆரம்ப கட்டத்தில் வெறும் தையல் வேலை பார்த்தவர், நாடகங்களில் நடிப்பவர்களுக்கு துணிகளை தைக்க ஆரம்பித்து, பின் low budget படங்களுக்கு costume designer ஆக பணியாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 2000 மாவது வருடத்தில் இருந்து ஹிந்தியிலும் கால் பதித்து, இன்று அகில இந்தியா முழுவதும் பிரபலமாகி ஒரு நிறுவனத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்றார். இவர் ஆரம்பித்த இந்த IOFI நிறுவனம் இன்று உலகில் எங்கெல்லாம் அதி நவீன கலை நிகழ்ச்சிகள், costume designing, நடக்கிறதோ அங்கு மட்டும் இல்லாமல், Industries, corporates, மற்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப் படும் இந்திய த் திரைப்படங்களும் உட்பட பல இடங்களில் எங்கெல்லாம் fashion எண்ணும் வார்த்தைக்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் தனது கால்களைப் பதித்து இருக்கிறார். இந்த நிறுவனத்தின் செயலாளராக இருந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்த நிறுவனத்தை தலைமை தாங்குவது Mr.Raghav, அவருடைய தவப் புதல்வன். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது போல தன் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானத்தை சேகரித்ததைக் காட்டிலும் அதைவிட 80% நிறுவனத்தின் லாபத்தை இவர் அதிகரித்துள்ளார். (கரகோஷம் பலமாக ஒலித்தன. அப்போது சங்கீதா மென்மையாக கூட்டத்தைப் பார்த்து சிரித்து கை தட்டல்கள் அடங்க சில நொடிகள் குடுத்து மீண்டும் ஆரம்பித்தாள்.) “பல முறை என்னையே முந்திவிட்டான் எனது தவப்புதல்வன்” என்று பெருமைப் பட்டு மார்தட்டிக் கொள்ளும் தந்தையை நாம் இங்கே நம் கண் முன் காணலாம். – என்று சங்கீதா பேசி முடிக்க camera Mr.Mahesh Yadhav மீது பாய, stage ல் உள்ள ஒரு பெரிய screen மீது projector உதவியால் அவருடைய முகம் திரையில் தெரிய அனைவரும் அதிக சத்தம் கேட்கும் வண்ணம் பலமாக கை தட்டினார்கள்


இப்போது அவர் மேடையில் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வர் என்று அழைப்பு விடுத்ததும்… (கை தட்டல்கள்.) Mr.Mahesh Yadhav பேசத் தொடங்கினார்…. விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரே ஒரு வரியை சொல்லிக்கொள்கிறேன். 25 ஆண்டுகளுக்கு முன் IOFI, Mahesh என்கிற ஒரு ஏழையை மட்டும் கொண்டு வாழ்ந்தது, இப்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கும் மேல் France, Germany, London, USA, Italy, India, Australia ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. நான் அதிகம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மற்றவர்களின் programs நடக்கட்டும். மீண்டும் ஒரு முறை இந்த IOFI சிகரத்தை எட்டுவதற்கு உலகம் முழுதும் இருந்து எனக்கு உதவி வரும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் பல ஜாம்பவான் நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் குறிப்பிட்டு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டவர்கள் ஹிந்தி கலை உலகை சேர்ந்த BibB அவர்களுக்கும் அசாத்திய சிந்தனை வாய்ந்த படைப்பாளி Aamir Khan அவர்களுக்கும், மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த கலை உலக ஜாம்பவான்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கும் எனது ஆழ் மனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…. – என்று அவர் சொல்லும்போது கூட்டத்தில் கரகோஷம் காதைக் கிழித்தது. இப்போதுதான் சங்கீதாவுக்கு அவர்களும் கூட விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து ஒரு நொடி மனதுக்குள் திடுக்கிட்டாள். (பின்னாடி திரும்பி சஞ்சனாவைப் பார்த்து “அப்படியா?” என்று சங்கீதா கண்களால் கேள்வி எழுப்ப, சஞ்சனா குறும்பாக சிரித்துக் கொண்டே “ஆமாம்” என்பது போல முகபாவனை செய்தாள்)..


இப்போது அவர் கீழே இறங்கியதும். சங்கீதா பேசத் தொடங்கினாள் “நன்றிகள் திரு Mahesh Yadhav அவர்களே. விழா என்றாள் அதற்க்கு பல விஷயங்கள் உயிர் சேர்க்கும், அவைகள், பாடல்கள், இசைகள், நடனங்கள். அந்த வகையில் நமக்கெல்லாம் காதுகளில் மிகவும் இதமாக ஒலிக்க ஒரு பாடலை தரவிருக்கிறார் பாடகர் திரு உண்ணி கிருஷ்ணன் அவர்கள். (மேடையில் விளக்குகள் அனைய பாடகர் உன்னி கிருஷ்ணன் தோன்றும்போது மீண்டும் விளக்குகள் எரிந்தன…. கரகோஷம் மிதமாக எழுந்தன. – அவர் பாடிய பாடல் (click here to listen) ….. – இந்த உன்னதமான பாடலில் “சாமி தவித்தான், தாயையை ப் படைத்தான்” என்ற வரி வரும்போது கேட்கும் அனைவரது கண்களிலும் சற்று நீர்த்துளிகள் லேசாக பணித்தன. – (வாசகர்களும் இதைக் கேட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.) இந்த பாடல் பாடும் தருவாயில் கிடைத்த சிறிய gap ல் சங்கீதா சஞ்சனாவை அருகே அழைத்து காதைத் திருகி “ஏண்டி இவ்வளோ பேர் வரப் போறாங்கன்னு “எனக்கு முன்னாடியே சொல்லல?” என்று செல்லமாக கோவித்துக் கொண்டாள். ஆஹ்ஹ்ஹ் வலிக்குது வலிக்குது…. சொல்லி இருந்தா நீங்க மேடை ஏறி இருப்பீங்களா? இப்போ பாருங்க ரெண்டு வார்த்தை பேசினதுக்கு அப்புறம் மணசு கொஞ்சம் relaxed ஆக இருக்குமே?….- என்று சொல்லிவிட்டு dressing room ல் மறந்து வைத்த mobile phone ஐ சங்கீதாவிடம் குடுத்தாள் சஞ்சனா. உண்ணி கிருஷ்ணன் பாடல் முடிந்ததும், மீண்டும் மேடைக்கு சென்று பேசத் தொடங்கினாள் சங்கீதா.. “IOFI இன்று வரை வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் ஆடை அலங்காரம்தான் என்பது நமக்கெல்லாம் தெரியும். இருப்பினும் சமீபமாக design செய்த ஓரிரு ஆடைகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதை மனதில் வைத்து இந்த நபருக்கு நாம் பரிசளிக்க போகிறோம்.” என்று ஒரு envelope பிரித்து படித்தாள். “இந்த விருதை வழங்க Mr.Mahesh Yadhav மற்றும் CEO Mr.Raghav அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். (கரகோஷம் ஒலித்தன..) இருவரும் மேடைக்கு வந்தார்கள். ராகவ் கண்களில் ஒரு பெரிய excitement கலந்த சிரிப்பு தெரிந்தது. அதற்க்கு காரணம் இப்போது தெரியும்.. And the winner is (சந்கீதவால் நம்ப முடியவில்லை. அவளுக்கு மூச்சு பேச்சில்லை ஒரு நொடி.) “come on sangeetha… read.. dont delay…. start saying the name…” – என்று பின்னாடி இருந்து சஞ்சனா மெதுவாக கத்த பெயரைப் படித்தாள் ” And the winner is சங்கீதா குமார்”.. (பேப்பரை அப்படியே mike அருகே போட்டுவிட்டு கண்களில் லேசான நீர்துளிகளோடு கரகோஷம் எழும்பும் சத்தத்துடன் கேட்டு அதிர்ச்சியும் சந்தோஷமும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் நின்றாள்.) ராகவ் “Come on sangeetha” என்று கூலாக சங்கீதாவை கை பிடித்து மேடையின் நடுவில் கூட்டி நிற்க வைத்தான். இப்போது உரிமையுடன் தானே மைக் எடுத்து பேச ஆரம்பித்தான் ராகவ்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 24-08-2019, 04:53 PM



Users browsing this thread: 1 Guest(s)