19-08-2019, 09:40 PM
ஆரம்பத்தில் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்த லோஸ்லியா, கவினின் காதல் வலையில் சிக்கி மக்கள் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கினார். முக்கோண காதல் விவகாரம் வீட்டுக்குள் விஸ்வரூபம் எடுத்த நிலையிலும், கவினை விட்டு விலகாமலே இருந்து வருகிறார். குறிப்பாக அந்த பிரச்னைக்கு பிறகு தான் கவின் - சாண்டி கேங்குடன் நெருக்கமாக இருக்கிறார் லோஸ்லியா.
நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் - லோஸ்லியாவுக்கு இடையே ஏற்பட்ட உரசல் குறித்து விசாரித்தார் கமல்ஹாசன். அப்போது பேசிய சேரன், தன்னுடைய மகள் லோஸ்லியாவுக்கு அனைவரிடமும் பழகும் முழு சுதந்திரம் உண்டு. சமயம் கிடைக்கும் போது அவருடைய சமீபத்திய நடவடிக்கை குறித்து பேசுவேன் என்றார். அவ்வாறு நிகழ்ச்சி முடிந்தவுடன், லோஸ்லியாவிடம் மனம் விட்டு பேசினார் சேரன்.
கவின் கேங்குடன் சேர்ந்துவிட்டதால் முன்பு போல் லோஸ்லியா இல்லை. நடவடிக்கைகள் மாறிவிட்டன. முன்பு போல தன்னிடம் சகஜமாக பேசுவது கிடையாது. இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது என்று தெரிவித்தார். பேசிக் கொண்டே இருந்த சேரன் திடீரென உடைந்து அழுதுவிட்டார். லோஸ்லியாவும் உடன் அழுதார். அப்போது பேசிய லோஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் இரண்டு முறை சிறைக்கு செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது சேரன் தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றார்.
ஆனால் சேரன், விளையாட்டு வேறு பாசம் வேறு என பதில் அளித்தார். இதனால் லோஸ்லியா சமாதானம் அடைந்தது போல தெரிந்தது. ஆனால் அவர் அடையவில்லை, பழித்தீர்க்க காத்திருக்கிறார் என்று இன்று தான் புரிந்தது. இன்று நடக்கும் எலிமினேஷனுக்கான நாமினேஷனில், சேரன் பெயரை பரிந்துரைக்கிறார் லோஸ்லியா. தான் சிறைக்கு சென்றதை ஆதரித்ததாக சேரன் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பான ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து, லோஸ்லியாவை ஏகத்துக்கும் விமர்சித்து சமூகவலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகியுள்ளன. மற்றொரு ப்ரோமோவில் சேரனை நாமினேட் செய்ததை குறித்து கவின் மற்றும் தர்ஷனிடம் வருத்தம் தெரிவித்து அழுகிறார் லோஸ்லியா. தனக்கு ஆதரவு நிலை எடுக்கவில்லை என்று தான் சேரனை நாமினேட் செய்தேன். அது தவறா? என்று லோஸ்லியா தர்ஷன் மற்றும் சேரனிடம் கேட்கிறார்.
முன்னதாக, நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் சமையலறையில் கவினுடன் பேசி கொண்டிருந்த லோஸ்லியாவிடம் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு உறங்கச் சென்றார். அவர் அங்கியிருந்து சென்றதும் லோஸ்லியாவிடம் பேசிய கவின், எதற்காக இந்த நாடகம்? என்பது போல கேட்டார்.
அதை தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதில், நேற்று கமலிடம் கூறிய அதே காரணங்களை முன் வைத்து சேரன் நாமினேட் செய்கிறார் லோஸ்லியா. இதனால் இன்றைய நிகழ்ச்சி மீது பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் - லோஸ்லியாவுக்கு இடையே ஏற்பட்ட உரசல் குறித்து விசாரித்தார் கமல்ஹாசன். அப்போது பேசிய சேரன், தன்னுடைய மகள் லோஸ்லியாவுக்கு அனைவரிடமும் பழகும் முழு சுதந்திரம் உண்டு. சமயம் கிடைக்கும் போது அவருடைய சமீபத்திய நடவடிக்கை குறித்து பேசுவேன் என்றார். அவ்வாறு நிகழ்ச்சி முடிந்தவுடன், லோஸ்லியாவிடம் மனம் விட்டு பேசினார் சேரன்.
கவின் கேங்குடன் சேர்ந்துவிட்டதால் முன்பு போல் லோஸ்லியா இல்லை. நடவடிக்கைகள் மாறிவிட்டன. முன்பு போல தன்னிடம் சகஜமாக பேசுவது கிடையாது. இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது என்று தெரிவித்தார். பேசிக் கொண்டே இருந்த சேரன் திடீரென உடைந்து அழுதுவிட்டார். லோஸ்லியாவும் உடன் அழுதார். அப்போது பேசிய லோஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் இரண்டு முறை சிறைக்கு செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது சேரன் தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றார்.
ஆனால் சேரன், விளையாட்டு வேறு பாசம் வேறு என பதில் அளித்தார். இதனால் லோஸ்லியா சமாதானம் அடைந்தது போல தெரிந்தது. ஆனால் அவர் அடையவில்லை, பழித்தீர்க்க காத்திருக்கிறார் என்று இன்று தான் புரிந்தது. இன்று நடக்கும் எலிமினேஷனுக்கான நாமினேஷனில், சேரன் பெயரை பரிந்துரைக்கிறார் லோஸ்லியா. தான் சிறைக்கு சென்றதை ஆதரித்ததாக சேரன் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பான ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து, லோஸ்லியாவை ஏகத்துக்கும் விமர்சித்து சமூகவலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகியுள்ளன. மற்றொரு ப்ரோமோவில் சேரனை நாமினேட் செய்ததை குறித்து கவின் மற்றும் தர்ஷனிடம் வருத்தம் தெரிவித்து அழுகிறார் லோஸ்லியா. தனக்கு ஆதரவு நிலை எடுக்கவில்லை என்று தான் சேரனை நாமினேட் செய்தேன். அது தவறா? என்று லோஸ்லியா தர்ஷன் மற்றும் சேரனிடம் கேட்கிறார்.
முன்னதாக, நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் சமையலறையில் கவினுடன் பேசி கொண்டிருந்த லோஸ்லியாவிடம் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு உறங்கச் சென்றார். அவர் அங்கியிருந்து சென்றதும் லோஸ்லியாவிடம் பேசிய கவின், எதற்காக இந்த நாடகம்? என்பது போல கேட்டார்.
அதை தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதில், நேற்று கமலிடம் கூறிய அதே காரணங்களை முன் வைத்து சேரன் நாமினேட் செய்கிறார் லோஸ்லியா. இதனால் இன்றைய நிகழ்ச்சி மீது பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil