மான்சி கதைகள் by sathiyan
அப்படியே வெறித்தபடி அமர்ந்திருந்தான் சத்யன்... சிமி கூறிய அவள் கணவனின் காதல்.... சத்யனின் மனதை தற்காலிகமாக முடமாக்கியது.... அமைதியாக லாப்டாப்பை மூடிவிட்டு எழுந்தான்...

இப்போது அவனுக்கு நிஜமாகவே தாய்மடி வேண்டும்...

அம்மாவைத் தேடி படிகளில் இறங்கி கீழே வந்தான்... சமையலறையில் இருந்த சந்திரா மகன் வருவதைப் பார்த்து "என்ன சின்னும்மா? ஏதாவது வேணுமா?" என்று அன்போடு கேட்க....

இரு கைகளையும் விரித்தவன் "கொஞ்சநேரம் உன் மடியில தூங்க வைம்மா" என்றான்....

தாயன்பில் இதயம் கசிய "இதோ வந்துட்டேன் சின்னு" என்றவள் மகனை அணைத்தார்ப்போல் அழைத்துவந்து சோபாவில் அமர்ந்து தனது மடியில் மகனை சாய்த்து கேசத்தை விரல்களால் கோதிவிட்டாள்....


“ நிமிர்ந்து படுத்தால்

“ கொடி சுற்றும்!

“ கவிழ்ந்து படுத்தால்

“ மூச்சு முட்டும்!

“ அதிர்ந்து நடக்காமல்!

“ அயர்ந்து தூங்காமல்!

“ ஆசைக்கு உண்ணாமல்!

“ அல்லும், பகலும்....

“ ஈரைந்து மாதங்கள்...

“ கருவோடு என் உயிர் சுமந்த...

“ என் அம்மா!!

“ இன்றும் கூட....

“ இன்னும் சிறகுகள் முளைக்காத

“ சின்னஞ்சிறு குழந்தையாய்

“ உன் சுவாசத்தைத் தேடி நான்!!!

அதன்பின் நாட்கள் விரைவாகத்தான் சென்றது.... தாய்மடி சத்யனை வெகுவாக ஆறுதல் படுத்த... மூன்றாவது நாளிலேயே சுறுசுறுப்படைந்து எழுந்து அப்பாவுடன் அலுவலை கவணிக்க கிளம்பினான்....

வழக்கம் போல சிமியுடன் தனது சாட்டை அலுவலகத்திலிருந்து செய்தான்.... ஆனால் சிமிக்கு தான் அதிக நேரமில்லாமல் போனது... நான்கு வார்த்தை பேசினாள் ஜந்தாவது வார்த்தையாக "ஆபிஸ்ல நிறைய ஒர்க் சத்யன்" அல்லது "ஆடிட்டிங் நடக்குது சத்யன்,, ஸாரி பேச டைமில்லை..." "என் வீட்டுக்காரர் இப்போ கால் பண்றேன்னு சொல்லிருக்கார் சத்யன்,, ஸாரி" இப்படி ஏதாவது சொல்லி சாட் செய்வதை நிமிடங்களாக குறைத்துவிட்டாள்...

அதுவும் தினமும் கணவனைப் பற்றி அதிகமாக பேசினாள்... அவர் இப்படி... இது இவருக்கு பிடிக்கும்... எனக்கு புடவை வாங்கி அனுப்பிருக்கார்... சல்வார் வாங்கி கிப்ட் பண்ணினார்...... இப்படி குறைந்த பட்சமாக காதுகளில் மாட்டும் பிளாஸ்டிக் தொங்கலில் இருந்து... அதிகபட்சமாக வைர மோதிரம் வரை அவள் கணவனின் பரிசுப் பொருட்களை பட்டியலிடுவாள்.....

இவளின் புருஷன் புராணத்தில் எதிர்பக்கம் இருப்பவனின் உயிர் ஊதித் தள்ளப்படுகிறது என்று புரியாமலேயே புருஷனைப் பற்றிய பெருமையை பேசிக் கொண்டேயிருப்பாள்.... இறுதியாக சத்யனே "ஓகே சிமி,, நீ பாரு... நான் பிறகு வர்றேன்" என்று கூறிவிட்டுப் போய்விடுவான்....

ஆனால் சத்யன் தனது சோகத்தால் ஒரு விஷயத்தை யோசிக்க மறந்தான்.... கலிபோர்னியாவில் இருக்கும் வரை ஒருநாள் கூட கணவனைப் பற்றி ஒரு வார்த்தை பேசாதவள்... இன்று வந்ததும் தன்னவனைப் பற்றி பேசுகிறாளே? ஏன்? என்று ஆராய்ந்திருந்தால்.... அது ஏன் என்று அன்றே புரிந்திருக்கும்.....

நெஞ்சு முழுக்க காதலை நிரப்பிக்கொண்டு சுவாசிக்கத் தடுமாறியவனை சிமியின் வார்த்தைகள் இன்னும் மூச்சடைக்க வைத்தது.... முகம் தெரியாத சிமியின் கணவனை சத்யனும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பேசுவாள் சிமி "இன்னைக்கி சிவா கிட்ட உங்களைப் பத்தி பேசினேன்..... அவருக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு சத்யன்"

"யாரது சிவா?"

"ஓ.... ஸாரி சத்யன்... இன்னும் என் கணவர் பெயரை உங்ககிட்ட நான் சொல்லவே இல்லையா... ஸாரிம்மா..... அவரோட பெயர் தான் சிவா... பெயர்ல கூட எங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு பொருத்தம் பார்த்தீங்களா சத்யன்? நான் சிவாத்மிகா.. அவர் சிவா.. ஹாஹாஹாஹா சூப்பர்ல"

"ம் பொருத்தமாதான் இருக்கு"

நாளைடைவில் சத்யனின் மனம் ஏங்க ஆரம்பித்தது... இவன் நாலு வார்த்தை பேசினால் ஒரு வார்த்தையில் பதில் சொல்லும், அந்த தேடல் நிறைந்த சிமிக்காக மனம் ஏங்க ஆரம்பித்தது... இந்த சிமி குறைந்த நேரமே வந்தாலும் நிறைய பேசினாள்... அந்த நிறையவில் புருஷனைப் பற்றி பேச்சு தொன்னூறு சதவிகிதம் இருந்தது.... மீதி பத்து சதவிகிதம் வேறு ஏதாவது பேசுவாள்... நாட்கள் செல்ல செல்ல நலம் விசாரிப்புக் கூட குறைந்து போனது.....

அந்த நாட்களில் சத்யனுக்குத் துணை அவர்களின் பழைய சாட் ஹிஸ்ட்ரி தான்... எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் படித்துப் பார்த்து ஆறுதல் படுத்திக்கொள்வான்...

இப்போதெல்லாம் கவிதைகள் கூட அதிகமாக எழுதுவதில்லை.... அதைப் பற்றி சத்யன் கேட்ட போது "அம்மாவை போல அன்பு காட்ட ஒரு உறவைத் தேடினேன்.... இப்போ என் கணவர் மூலமா அந்த அன்பு கிடைச்சிடுச்சே... அதான் கவிதை கூட சரியா வரலை சத்யன்" என்று காரணம் சொன்னாள்....

சாய்ந்து கொள்ள தோள்களின்றி துவளும் போது தாய்மடியே அவனுக்கு ஆறுதலானது..... அன்று சிமிக்குத் தேவைப்பட்ட தாயின் ஆறுதல் இன்று சத்யனுக்கு அத்யாவசியத் தேவையானது....

மகனுக்காக அருணகிரியும் ஒரு யுக்தியை கையாண்டார்.... கத்தை மாத்திரைகளை கையில் வைத்துக் கொண்டு... "கொஞ்சம் உடம்பு சரியில்லை சத்யா.... பேக்டரில இன்னைக்கு லேபர்ஸ் மீட்டிங் இருக்கு... எம்டியா நீ போய் அட்டன் பண்ணி சின்னதா ஒரு ஸ்பீச் குடுத்துட்டு வந்துடு சின்னு" என்று மிகவும் சோர்வாக படுக்கையில் படுத்துக் கொண்டு சொல்வார்....

கெஞ்சுதலாக கூறும் தகப்பனின் சொல்லைத் தட்ட முடியாமல் கம்பெணி அலுவல்களை கவணித்தவன் நாளடைவில் அவர் சொல்லாமலேயே எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்தான்...

சத்யனின் இந்த மாற்றம் பெற்றவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தாலும் ரீத்துவுடனான திருமணப் பேச்சை ஆரம்பிக்கத் தயங்கி அந்த நாளுக்காக காத்திருந்தனர்.....

சத்யன் கலிபோர்னியாவிலிருந்து திரும்பிய மூன்றாவது மாதம்..... சந்திரமதியின் நாற்பத்தைந்தாவது பிறந்தநாள் வந்தது.... நடு இரவில் வந்து எழுப்பி அணைத்து முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மகனிடம் சந்திரா ஒரு கோரிக்கை வைத்தாள்....

"சின்னும்மா,, இன்னைக்குப் பூராவும் நீயும் அப்பாவும் என் கூடத்தான் இருக்கனும்... ப்ளீஸ்டா" குழந்தையாய் மாறி கெஞ்சிய அம்மாவுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் "ம் சரிம்மா" என்றான்....

அன்று வேலைகாரர்களை விடுத்து இவர்கள் மூவருமே சேர்ந்து காலை உணவை தயார் செய்தனர்... சாப்பிட்டப் பிறகு வேலைகாரர்களுக்கும் விருந்து வைத்தனர்.... மதிய உணவிற்கு அவர்களின் வழக்கமாக ஆசிரமம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தபடி ஆதரவற்ற குழந்தைகளுடன் உண்டனர்... ஆசிரமத்திற்கு நன்கொடை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தனர்... மீண்டும் குளித்து உடை மாற்றிக்கொண்டு பெங்களூரில் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்றனர்....

கோயிலின் அமைதியும் சுற்றுப்புறமும் சத்யனிடம் பேசுவதற்கு ஏற்ற இடம் என்று தோன்ற... அர்ச்சனை முடிந்து சுவாமி தரிசனமும் ஆராதனையும் முடிந்து பிரசாதத்துடன் வெளிப் பிரகாரத்திற்கு வந்து அமர்ந்தனர்....

தேங்காயை உடைத்து மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்துவிட்டு மனைவியைப் பார்த்து ஜாடை செய்தார் அருணகிரி....


first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 30-07-2019, 06:22 PM



Users browsing this thread: 1 Guest(s)