மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 14

பெங்களூர் வந்திறங்கிய இருவரையும் காருடன் காத்திருந்த மேனஜர் எதிர்கொண்டு நலம் விசாரித்தப் பிறகு வீட்டுக்கு அழைத்து வந்தார்...

சத்யன் சாதரணமாக காலேஜ் விடுமுறைக்கு வந்தாலே வீடு திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.... இன்று வெளிநாடு சென்று திரும்பி வருகிறான்... ஆனால் வீட்டில் சந்தோஷமில்லை... கண்ணீரும் துயரமுமாகவே கிடந்த சந்திரா மகனுக்காக எழுந்து வெளியே வந்து வாசலில் நின்றிருந்தாள்...

சத்யன் காரை விட்டு இறங்கியதும் மகனின் தோளில் கைப்போட்டு அழைத்துவந்தார் அருணகிரி.... மகனை கண்டதும் தாயின் கால்களுக்கு இறகு முளைத்தது "சின்னும்மா" என்றபடி வேகமாக ஓடிவந்து மகனை அணைத்துக் கொண்டாள்...

மனம் இருந்த நிலையில் தாயை கண்டதும் இளங்கன்றாய் மாறினான் சத்யனும்.... "ம்மா...." என்றபடி அணைத்து தோளில் முகம் புதைத்தவன் கண்களிலும் கண்ணீரின் தடம்....

மனைவியின் தோளைத் தட்டி "வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போ சந்திரா" என்று அருணகிரி கூறியதும் மகனை அணைத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தாள்...

சோபாவில் சத்யனை அமர்த்திவிட்டு பக்கத்தில் அமர்ந்து தனது விரல்களால் மகனின் முகம் முழுவதும் வருடினாள் "என்ன சாமி ஆச்சு? உனக்காகத் தானே நாங்க உசுரோட இருக்குறதே? எங்களைப் பத்தி ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாமே சின்னு?" மகன் தற்கொலைக்கு முயன்றான் என்ற அதிர்ச்சி நீங்காமல் பேசினாள்...

சத்யன் பதில் சொல்லவில்லை... அமைதியாக தலைகுனிந்தான்... மனைவியின் அருகில் வந்த அருணகிரி "மொதல்ல ஏதாவது சாப்பிடக் குடுத்து அவனை ரூமுக்கு அனுப்பு... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்.... மத்ததெல்லாம் பிறகு பேசலாம்" என்றார்...

"ம் சரிங்க" என்ற சந்திரா மகனின் கையைப் பற்றி "முகம் கழுவிட்டு வா சின்னு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்று அன்பாக கூறவும்...... சரியென்று தலையசைத்துவிட்டு எழுந்து சென்றான் சத்யன்.....

பார்வையால் மனைவியை எச்சரித்துவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார் அருணகிரி...... என்ன நடந்தது என்று புரியாமல் அந்த தாயுள்ளம் தவிப்புடன் இருக்க... மகனுக்கு உணவு எடுத்து வைக்க சென்றாள்...



அமைதியாக உணவு முடிந்தது... பட்டும் படாமலும் சாப்பிட்ட மகனைப் பார்த்து கண்ணீர் நீர் கசிந்தவளை "பரவாயில்லை விடு.. சரியாயிடுவான்" என்றார்.....

சத்யன் அவனது மாடியறைக்கு சென்றதும் மனைவியை அழைத்துக்கொண்டு தங்களின் அறைக்கு வந்தார் அருணகிரி.... உள்ளே நுழைந்ததுமே "என்னங்க இப்புடியிருக்கான்?" வேதனையின் விழிம்பில் நின்று கேட்டாள்....

அமைதியாக கட்டிலில் அமர்ந்தவர் "விதி சந்திரா விதி.... சத்யன் வாழ்க்கையில ரொம்ப வேடிக்கையா விளையாண்டிருக்கு....." என்றவர் கலிபோர்னியா சென்றதிலிருந்து நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்.... சிவாத்மிகாவிடம் பேசியதையும் அவளின் நற்குணத்தையும் கூறவும் சந்திராவின் கண்களில் கண்ணீர் தான் வழிந்தது...

"என்னங்க இது சோதனை? சத்யனுக்கு கல்யாணம் செய்ய நாம ஆசைப்பட்ட தேவியோட மகள் சிமிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு... நம்ம சின்னு ஆசைப்பட்ட சிமிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.... ஏன் நமக்கு மட்டும் இப்படிலாம் நடக்குது?" என்றவள் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்த மனைவியை ஆறுதலாகப் பார்த்தார்.....

"கடவுள் எதை விதிச்சிருக்கானோ அது தான் கிடைக்கும் சந்திரா.... நாம நினைக்கிறதெல்லாம் நடந்துட்டா அப்புறம் தெய்வம் தேவதைலாம் எதுக்கு இருக்காங்க? எது கிடைக்குதோ அதைதான் ஏத்துக்கனும்" என்றவரின் குரலில் குடும்பத்தில் யாருடைய ஆசையும் நிறைவேறாத ஆதங்கம் தெரிந்தது....

"நீங்க சொல்றது புரியுதுங்க... ஆனா இப்படியிருக்குறவன் கிட்ட போய் பத்ரி அண்ணன் மகள் ரீத்துவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எப்படி சொல்றது? ஒத்துக்குவானா?" சந்தேகமாக கேட்டாள்....

"இப்ப எதையும் சொல்ல வேண்டாம்.... இன்னும் கொஞ்சநாள் போகட்டும்... சொல்ற விதமா சொல்லி சம்மதிக்க வைக்கலாம்.... அதுவரைக்கும் என்கூட பேக்டரிக்கு வரட்டும்...." என்று அருணகிரி சொல்லவும் "சரிங்க" என்று சம்மதித்தாள் சந்திரா....

மகனைப்பற்றி கவலையில் அன்று இரவு உறக்கம் கூட வரவில்லை இருவருக்கும்..... ரீத்துவுடன் கல்யாணத்துக்கு எப்படி சம்மதிப்பான் என்ற கவலையே அதிகமாக இருந்தது.....

பெற்றவர்களின் கவலை இப்படியிருக்க அவர்களின் மகனோ தனது முதல் காதல் முன்னுரை எழுதும் முன்பே முற்றுப்புள்ளி வைக்கப்படதன் துயரம் தாளாமல் விரக்தியுடன் விழித்துக் கிடந்தான்.....

சிமியுடன் நட்பு மட்டுமே போதுமென்று தன்னால் இருக்க முடியுமா? அதெப்படி முடியும்? காதலி மனைவியாகலாம்... மனைவியாக நேசித்தவள் மறுபடியும் தோழியாக முடியுமா? சத்யனது எதிர்காலம் அவனையே பயமுருத்தத் தொடங்கியது.... எப்படி யோசித்தாலும் முடிவு தெரியாமல் விழி பிதுங்கியது....

கலக்கமாய் நோக்கும் தந்தை... கண்ணீருடன் தடுமாறும் தாய்... இவர்களுக்காக வேனும் தெளிவுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு சிமியின் ஞாபகம் வந்தது... நூற்றில் ஒரு சதவிகிதமாக அவள் கூறிய திருமணம் ஆனவள் என்ற செய்தி நிஜமாக இருந்தால்?.... அடுத்தவன் மனைவியை நேசிக்கும் ஈனத்தை செய்வதும் பெற்றோரின் வளர்ப்புக்கு இழுக்கு தானே? அவர்களின் நிம்மதிக்காவது தன்னிடம் மாற்றம் தேவை என்றும் தோன்றியது.... குழம்பிய குட்டையாய் மனம் தவிக்க விடிய விடிய விழித்திருந்தவன்... விடியும் தருவாயில் தான் விழி மூடினான்.....

மறுநாள் காலை உணவு முடிந்து அருணகிரி பேக்டரிக்கு கிளம்பி வந்தார்.... "சத்யா,, என்கூட கம்பெனிக்கு வாயேன்ப்பா... மனசுக்கு ஒரு மாற்றமா இருக்கும்" என்று மகனை அழைத்தார்....

"நாளையிலருந்து வர்றேன்ப்பா...." என்று மட்டும் பதில் சொல்ல.... சரியென்று தலையசைத்தவர் மகனைப் பார்த்துக் கொள்ளும்படி மனைவியிடம் பார்வையால் சொல்லிவிட்டு கிளம்பினார்....

தனது அறைக்கு வந்தவன் லாப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு திரையையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.... மணி பத்தடித்ததும் சட்டென்று சுறுசுறுப்படைந்தவன் சாட்டை திறந்து "சிமி இருக்கியா?" என்று தகவல் அனுப்பினான்

அழைக்கப்பட்டவளிடமிருந்து பதில் இல்லை.... அலுவலகத்தில் வேலை அதிகமிருக்கலாம் வந்துவிடுவாள் என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டு சிமியின் தகவலுக்காக காத்திருந்தான்.....

பதினொன்று இருபதுக்கு பதில் வந்தது "நல்லபடியா வந்துட்டீங்களா சத்யன்?"

சட்டென்று உடலின் அத்தனை செல்களும் உயிர்பிக்கப் பட்டது போல ஒரு புத்துணர்வு பரவ.... "வந்துட்டோம் சிமி... நீ எப்படியிருக்க?" என்று கேட்டு அனுப்பினான்...

"நல்லாருக்கேன் சத்யன்,, உங்க அம்மா நல்லாருக்காங்களா?"

"நல்லாருக்காங்க சிமி"


"சத்யன் ப்ளீஸ் வெயிட்... போன் கால்" என்ற தகவலுடன் சில நிமிடங்கள் காணமல் போனாள்....

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆன நிலையில்.... "சிமி என்னாச்சு... இருக்கியா?" என்று சத்யன் செய்தி அனுப்பவும்..

"ம் ம்" என்று பதில் வந்து இரண்டு நிமிடம் கழித்து "ஸாரி சத்யன்... ரொம்ப நேரமா பேசிட்டேன்... மனுசன் வைக்க மாட்டேங்குறார்..." என்ற தகவலுடன் சிரிக்கும் பொம்மை ஒன்று...

"ஓ...... யாரது?"

"அவர்தான் சத்யன்.... என் ஹஸ்பண்ட்.... எப்பவும் நைட்ல தான் கால் பண்ணுவார்... இப்போ திடீர்னு இந்த நேரத்துல பண்ணிட்டார்.... ஏன்னு கேட்டா.... பேசனும்னு தோனுச்சு கால் பண்ணேன்னு கொஞ்சுறார்" காதலைச் சொல்லும் பொம்மையுடன் வந்தது செய்தி....

"ஓ.........."

"ம்ம்... தினமும் ஒன் அவர் பேசலைனா மனுசனுக்கு தூக்கம் வராது"

"ஓ.... சரி சரி... நீ பேசு சிமி.... நான் பிறகு வர்றேன்"

"இல்ல அவர் வச்சிட்டுப் போய்ட்டார்.... இதோட நைட் தான்.... நீங்க சொல்லுங்க"

"என்ன சொல்லனும்?"

"என்ன சத்யா இப்படி சொல்றீங்க? ரொம்ப நாள் கழிச்சி அம்மாவைப் பார்த்திருக்கீங்க.... அவங்க எத்தனை கிஸ் குடுத்தாங்க? நீங்க அவங்களுக்கு எத்தனை குடுத்தீங்க? அம்மாவோட அன்பு கலந்த முத்தம்னாலே ஸ்பெஷல் தானே சத்யா?"

அப்போது தான் சத்யனுக்கு ஞாபகம் வந்தது.... சிமி சொல்வது நிஜம் தான்... கொஞ்சியோ கெஞ்சியோ ஒரு நாளைக்கு பல முத்தங்களை பெற்றுவிடுவான்... ஆனால் வந்ததிலிருந்து தாயிடம் சரியாக முகம் கொடுத்தே பேசவில்லையே....

"இன்னும் அம்மா கூட சரியா பேசவே நேரமில்லை சிமி.... அம்மா கொஞ்சம் பிஸி" என்று பொய்யுரை அனுப்பினான்....

"அதான் தப்பு... இதெல்லாம் எப்பவுமே கிடைக்காது... போங்க போய் அம்மாவோட கழுத்தை கட்டிக்கிட்டு நிறைய முத்தம் வாங்கிக்கங்க.... அப்புறம் சாப்பாடு போட்டு ஊட்டிவிடச் சொல்லி அடம் பண்ணுங்க.... மடியில படுத்து தான் தூங்குவேன்னு பிடிவாதம் பண்ணுங்க...... அம்மா மடி சம்திங் ஸ்பெஷல் சத்யன்... எப்படிப்பட்ட துயரத்தையும் போக்கி நிம்மதி தரும் சக்தி நம்ம தாய்மடிக்கு உண்டு" சிமி சாதரணமாக சொன்னாலும் அதில் அப்பட்டமாய் அவளது வலிகள் தெரிந்தன....



"இது எதுவுமே உனக்குக் கிடைக்கலையே சிமி?"

"ஹாஹாஹாஹா இதெல்லாம் கிடைக்கலைன்னா என்ன சத்யன்?? இதைவிட பலமடங்கு சக்தி வாய்ந்த என் கணவரோட காதல் கிடைச்சிருக்கே? அவரோட காதல் தான் இப்போ என்னை வாழ வைக்குது சத்யன்"

"ஓ..... நீ லக்கி தான் சிமி.... காதலிப்பதை விட... காதலிக்கப்படுவதில் தான் சுகம் அதிகம்"

"ம்ம் நிஜம்.... அவரோட காதலுக்கு எல்லையே இல்லை சத்யன்"

"ம்ம்.... ஓகே சிமி... நீ உன் ஒர்க் பாரு.... நான் பிறகு பேசுறேன்"

"ஓகே சத்யன்.... ஆனா இப்போ போய் அம்மா கூட பேசுங்க.... பை... டேக் கேர்" என்ற செய்தியுடன் காணாமல் போனாள்....
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 30-07-2019, 06:21 PM



Users browsing this thread: 2 Guest(s)