Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பொங்கல் பரிசுத் தொகுப்பு தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படும். 5.30 மணி அளவில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.

அந்த டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வரிசையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். 5.30 மணி அளவில் வரிசையில் வந்து நின்ற அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வரிசையில் காத்திருக்கும் குடும்ப அட்டைத்தாரர்கள் யாரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வருகின்ற வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை நிற்க வைக்கக் கூடாது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்.

பரிசுத் தொகுப்பு வாங்க வரும் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நின்று எவ்வித சிரமமும் இல்லாமல் பெற்று செல்ல வேண்டும். தேவையில்லாமல் வரிசையை விட்டு விலகி செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக உள்ளூர் காவல் துறை பாது காப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், 1000 ரூபாய் ரொக்க விநியோகம் குறித்தும் புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். ஏதாவது புகார்கள் வந்தால் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு அதனை தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்க உரிய வசதிகள் செய்யப்பட வேண்டும். எந்த அலுவலரிடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை அவர்களது தொலைபேசி எண்ணுடன் குறிப்பிட வேண்டும். கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

அரசின் இந்த திட்டம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முறையாக சென்று அடைவதை உறுதி செய்ய வட்ட அளவில் துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 15 கடைகளுக்கு என துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 சரியாக விநியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு தகவலை 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை நடமாடும் குழுவில் உள்ள அதிகாரிகளிடம் தவறாது தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 1000 ஆகியவை சரியானபடி வழங்கப்பட்டுள்ளதா? என்பது சரிபார்க்கப்பட வேண்டும். தவறுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 விநியோகிக்கப்பட்ட நபர்களிடம் பரவலாக ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் பொது விநியோக திட்டத்தின் கீழ் செய்யப்படும் அன்றாட பணிகளுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 05-01-2019, 05:28 PM



Users browsing this thread: