மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 13

இந்த நம்பிக்கையை நான் உடைக்க வேண்டுமா? வேறு வழியில்லை ஒன்று அழிந்து தான் இன்னொன்று உருவாகவேண்டும்... எனது குடும்பம் உருவாக அழிவது என் காதலாக இருக்கட்டும்... "சத்யன் சொன்னது நிஜம் தான் அங்கிள்.... ஆனால் நான் இதை எதிர்பார்க்கலை.... நட்பு எந்த இடத்துல காதலா மாறிச்சுனு இன்னும் புரியலை அங்கிள்... ரொம்ப குற்றவுணர்வா இருக்கு..... என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்.... இப்போ நீங்க என்ன சொல்றீங்களோ அதைச் செய்ய நான் காத்திருக்கேன் அங்கிள்" கெஞ்சுதலாய் கேட்டாள்....

அருணகிரியிடம் சற்றுநேரம் அமைதி.... பின்னர் "நான் என்ன சொல்றதுனு புரியலைம்மா.... அவன் முதல்ல கேட்டப்பவே நீ கல்யாணம் ஆனவன்னு சொல்லியிருந்தா அவன் உன்னை விரும்பியிருக்கவே மாட்டான்.... விரும்பினதுக்குப் பிறகு அதை மாத்திக்கவும் அவனால முடியலை.... மறுபடியும் நல்ல நண்பர்களா பழக உன்னால் முடியும்.... ஆனா சத்யனால முடியுமானு தெரியலை..... ஒரு விஷயத்தை உறுதியா சொல்வேன்... அடுத்தவன் மனைவின்னு தெரிஞ்சப் பிறகு அவனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது... அதுமட்டுமில்லாம எங்க குடும்ப நண்பரோட மகளை சத்யனுக்கு கல்யாணம் பேசியிருக்கோம்.... அதை சொல்ல நினைச்சப்ப தான் இந்த மாதிரிலாம் நடந்துடுச்சு... இப்போ இந்தியா போனதும் முதல் வேலையா இவனுக்குப் புரிய வச்சு கல்யாணத்தை முடிக்க வேண்டியது தான்" நம்பிக்கையோட அருணகிரி பேசியதும்...

தனது நேசம் வந்து நெஞ்சில் அறைய.... கண்ணீர்க் குரலை கடுமைக்கு மாற்றி... "ரொம்ப சந்தோஷம் அங்கிள்... இப்போ நான் என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க" என்று கேட்டாள்....

"நீ என்ன செய்ய முடியும்ன்னு எனக்குத் தோனலை... முடிஞ்சா சத்யனை மாத்தப் பாரு... அவனை அசைக்கக்கூடிய விஷயம் ஒன்னே ஒன்னு தான்.... சத்யன் இப்படியே இருந்தா உன்னோட குடும்ப வாழ்க்கை பாதிக்கும்னு சொல்லு.... அப்படி பாதிக்கும் பட்சத்தில் நீ உயிரோடவே இருக்கமாட்டேன்னு அவனுக்கு சொல்லு.... தன் உயிரை விட உன் உயிருக்கு அதிக மதிப்பு கொடுப்பான்னு தோனுது... இது சுயநலம் தான்... ஆனா ஒரு தகப்பனா எனக்கு வேற வழி தெரியலைம்மா" அருணகிரியின் குரலில் கண்ணீர்....

"ம்,, புரியுது அங்கிள்.... நிச்சயம் சொல்றேன்... இந்தியா திரும்பும் போது சத்யன் கிட்ட ஓரளவுக்கு மாற்றம் தெரியும்" என்றாள்....

"ரொம்ப நன்றிம்மா....."

"பரவாயில்லை அங்கிள்.. என்னால் ஏற்பட்ட பிரச்சனையை நான்தான் தீர்க்கனும்.... அப்புறம் ஒரு விஷயம்,, இந்த வாய்ஸ் சாட்டை சுத்தமா அழிச்சிடுங்க...." 




"நிச்சயம் அழிச்சிடுறேன்ம்மா..... ஒரு விஷயம் கேட்டா தப்பா நினைக்க மாட்டியேம்மா"

"கேளுங்க அங்கிள்"....

"சத்யன் விரும்புறான் சரி... உன் மனசுல அந்த மாதிரி சலனம் எதுவுமில்லையே?"

மான்சியின் மனம் பதறியது.... என்ன சொல்வது? "இல்லை அங்கிள்... நானும் தமிழ் பொண்ணு தான்.. தாலி கட்டிய கணவனைத் தவிர மற்றொருவனை நேசிக்க மாட்டேன்.... இந்த நிமிஷமே சத்யனோட எந்த தொடர்பும் இல்லாம விலகச் சொன்னாலும் நான் தயார்" என்று அமைதியாக அறிவித்தாள்

"இது போதும்மா..... இது போதும்... நீங்க நண்பர்களா இருக்க நான் தடை சொல்ல மாட்டேன்.. நட்பை மதிக்கிறவன் நான்... ஆனா சத்யன் மாறவில்லை.. அவனை மாற்ற முடியவில்லைன்னா... அவன் விஷயமா உன்னோட இந்த மெயிலுக்கு நான் மெசேஜ் செய்யலாமா?".

"தாராளமா மெசேஜ் பண்ணுங்க அங்கிள்" என்றவள்... ஒரு நீண்ட மூச்சுடன்.... "ஓகே அங்கிள் நான் வீட்டுக்கு கிளம்பனும்..." என்றாள்..

"சரிம்மா நல்லபடியாக போம்மா... எல்லாம் சரியாகும்" என்றார்...

"பை அங்கிள்" என்றுவிட்டு ஹெட்போனை கழட்டிவிட்டு சாட்டை குளோஸ் செய்து கம்பியூட்டரை ஆப் செய்தாள்....

மகன் விரும்பும் பெண்ணிடம் இத்தனை மரியாதையாக பேசும் அருணகிரியின் உயர்ந்த குணம் புரிந்தது... இவர்களுக்கு மருமகளாகப் போகும் ரீத்து புண்ணியம் செய்தவள் தான்.... நான் பாவம் செய்தவள் போல... அன்பு காட்டிய தாயும் அல்பாயுசில் போய்விட்டாள்... தாயைப் போல வந்தவனையும் தானாக ஒதுக்க வேண்டிய நிலைமை.....

அருணகிரியிடம் பேசியதில் மனதுக்கு அமைதி கிடைத்தது... தவிப்பெல்லாம் போய்விட்டு விரக்தி நிலைக்கு சென்றுவிட்டாள்....

அம்மாவின் கவிதைகள் தரும் ஆறுதல் மட்டுமே என் ஆயுட்காலத்துக்கும் போதும் என்று ஆண்டவன் முடிவு செய்துவிட்டான் போலிருக்கு...




“ பூக்கள் கூட புன்னகைக்கும்

“ புராணகாலத்தில்...

“ சூரியனை உதிக்காமல் தடுத்தாள்..

“ நளாயினி!

“ எமனிடமிருந்து கணவனை காத்தாள்...

“ சாவித்திரி!

“ நீ உயிர் துறக்கும் போது....

“ அப்படி எதுவும் நிகிழவில்லையே ஏன்?

“ எனக்கு சக்தியிருந்திருந்தால்

“ உலகையே அழித்து....

“ உன்னை மட்டுமே...

“ உயிர்த்திருப்பேன் அம்மா!
சிமியிடம் பேசி முடித்தப் பிறகு வாய்ஸ் சாட்டை சுத்தமா அழித்துவிட்டு சிமியின் மெயில் ஐடியை மட்டும் குறித்துக் கொண்டார்.... அதிகாலை குளிரில் தோட்டத்தில் உலவிய மகனைத் தேடிச் சென்றார்...

இவரைப் பார்த்ததும் வேகமாக வந்தவன் "பேசிட்டீங்களாப்பா? என்ன சொன்னா?" ஆர்வமாய் கேட்டான்.

அருகே வந்து மகனை தோளோடு அணைத்தவர்.... "அந்த சிவாத்மிகா ஒரு கல்யாணமாகாத கன்னிப் பெண்ணாய் இல்லாமல் போனது நம்ம குடும்பம் செய்த துர்பாக்கியம் தான் சத்யா... அற்புதமான பெண்.... நீ எப்படியாவது போன்னு சொல்லிட்டு ஒதுங்காம.. பிரச்சனையை எப்படித் தீர்ப்பதுன்னு துணிச்சலோட என்கிட்டயே பேசினாப் பாரு... நிஜத்தில் இவள் சாத்வீகம் தான்...." என்று பெருமையாகப் பேசியவரை குழப்பமாக நோக்கியவன்.... "அப்படின்னா......?" என்று கேட்க...

"ம்ம்,, உன்னிடம் சொன்னதெல்லாம் நிஜம்தான் சத்யா.... நீ இப்படி மாறியதற்கு ரொம்ப வருத்தப்படுறா... உன் வாழ்வில் நல்லது நடக்கனும் ஆசைப்படுறா.. அதே சமயம் உன்னால் அவள் குடும்ப வாழ்விற்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாதுன்னும் பயப்படுறா" என்று மகனுக்குத் தெளிவுப் படுத்தினார்

"என்னால் சிமியோட லைப் பாதிக்குமா?" கலங்கிப் போய் கேட்டான்...

"ஆமாம் சத்யா,, நீ இப்படி மாறாமல் இருந்தால் நிச்சயம் சிமியோட லைப் பாதிக்கப்படும்... நீ மாறனும்... நாம் நேசிக்கிறவங்களை நல்லா வாழ வச்சுப் பார்க்கிறதும் உண்மையான நேசம் தான்.... அந்த அற்புதப் பெண்மைக்கு ஒரு ஆத்மார்த்தமான நண்பனா இருக்கனும் சத்யா..." என்றவர் மகனின் முன்பு தனது வலக்கையை நீட்டினார் "சத்தியம் செய் சத்யா... உன்னால் சிவாத்மிகாவோட லைப்ல எந்தப் பிரச்சனையும் வராதுன்னு சத்தியம் செய் சத்யா" என்று உறுதியாகக் கேட்டார்....

"என்னை நம்பலையாப்பா?" கலங்கிய விழிகளுடன் கேட்டான்.........

"என் மகனை நம்புறேன் சத்யா... ஆனா நீ இப்போ காதலால் கருத்தை இழந்தவன்... காதலனுக்கும் காதலுக்கும் விதி செய்ய முடியாது... ம் அந்தப் பெண்ணின் வாழ்வு பாதிக்கது என்று சத்தியம் செய்" இதுவரை அமைதியாகப் பேசியவர் இப்போது மகனிடம் அதட்டலாக கேட்டார்..

சத்யனுக்கு ஒரு மாதிரி இம்சையாக இருந்தது..... எதிரில் நிற்கும் அப்பா அன்னியமாகத் தெரிந்தார்... அவர் கூறும் நியாயத்தை அறிவு ஏற்றாலும் காதல் கொண்ட இதயம் ஏற்க்கவில்லை... சத்தியம் செய்யாமலும் விடமார் போலிருக்கு... தகப்பனின் கையில் தன் கையை வைத்தான் "என்னால சிமியோட குடும்ப வாழ்க்கைக்கு ஒரு பாதிப்பும் வராதுப்பா... நிச்சயம் அவள் நலன் விரும்பும் நல்ல நண்பனா இருப்பேன்" உறுதியாக கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றான்

மகன் செய்த சத்தியம் அருணகிரியை கொஞ்சம் சாந்தப்படுத்தியது... இந்தியா சென்றதும் பத்ரியின் மகளைப் பற்றிச் சொல்லி சீக்கிரமாகவே திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனதுக்குள் உறுதியெடுத்தார்....

மறுநாள் காலை சிமியிடம் பேச சத்யன் முயன்ற போது அவளிடமிருந்து "ஹாய் சத்யா,, ஆபிஸ்ல அதிகமான வேலை,, இன்று உங்களிடம் பேச நேரமில்லை... நாளை பேசலாம்" என்ற தகவல் மட்டும் மெயிலில் வந்திருந்தது... சத்யனின் மனம் சோர்ந்தது.... பச்சை மரத்தில் அடிக்கப்பட்ட ஆணியாக மனதில் பதிந்தவளை தவிர்க்கவேண்டிய நிலைமை.... வேறு வழியில்லையா??
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 27-07-2019, 11:19 AM



Users browsing this thread: 3 Guest(s)