மான்சி கதைகள் by sathiyan
வேணாம் சத்யன்" ஒரு வார்த்தையில் தனது மனதைச் சொல்ல முயன்றாள்...

அவளிடமிருந்து பதில் வர தாமதம் ஆனதும் சத்யனிடமும் நிதானம் வந்திருந்தது "மன்னிச்சிடு சிமி,, கொஞ்சம் எமோஷனாகிட்டேன்"

"ம்ம்,, இப்போ நீங்க எங்க இருக்கீங்க? யார் கூட இருக்காங்க?"

"அப்பா வந்திருக்கார்... என் ரூம்ல தான் இருக்கேன்... காலேஜ்க்கு கொஞ்ச காலம் லீவு போட்டாச்சு.. அடுத்த வருஷம் வந்து படிப்பைத் தொடர சொல்லிருக்காங்க... இன்னும் இரண்டுநாளில் அப்பாக் கூட இந்தியா வரப் போறேன் சிமி"

இன்னும் அதிகமாக அதிர்ந்தாள்...,இவ்வளவு நடந்திருக்கா? அருணகிரி அங்கிள் கலிபோர்னியா போகும் அளவிற்கு சத்யன் பாதிக்கப் பட்டிருக்கானா? துயரப்பட முடியாதளவுக்கு துக்கம் பிரமாண்டமாய் நின்றது...

அவன் நலம் அறியாமல் உறக்கம் வராது "நான் உங்கப்பா கூட பேசனும் சத்யன்"

"என்னது?"

"ஆமாம் சத்யன் உங்கப்பா கூட பேசனும்... வாய்ஸ் சாட் மூலமா பேசனும்" தீர்மானத்துடன் பதில் அனுப்பினாள்...

சற்றுநேரம் சத்யனிடமிருந்து பதிலில்லை... பிறகு "இப்பக்கூட என்கிட்ட பேசனும்னு உனக்குத் தோனலையே சிமி?" வார்த்தைகள் சொன்னது அவனது விரக்தியை....

"ப்ளீஸ் சத்யன்" நிஜத்தில் அழுது அனுப்பினாள் தகவலை...

"ம் சரி எப்போ பேசனும்?"

"இன்னைக்கு ஈவினிங் ஆறரை மணிக்கு பேசுறேன் சத்யன்...."

"சரி அப்பாக்கிட்ட சொல்றேன்"

"ம்... நேரமாச்சு போய் தூங்குங்க சத்யன்"

"தூங்குறேன்... அதுக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்வி"

"கேளுங்க"

"நீ சொன்னது பொய் தானே சிமி?"

அவனது நேசத்தைக் கண்டு கோபம் தான் கொந்தளித்தது "நிஜம் சத்யன்.. சொன்னது நிஜம்... நான் ஜீவனாய் சுவாசிக்கும் என் தாய் மீது தாய்க்காக எழுதும் கவிதைகள் மீது சத்தியம்... நான் திருமணம் ஆனவள்... என்னை உயிராய் நேசிக்கும் புருஷன் இருக்கார் சத்யன்... அவரோட உன்னதமான வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்... அவரின் அடையாளம் என் கழுத்தில் தாலியாக.... எல்லாம் நிஜம் சத்யன்" மெசேஜ்ஜை அனுப்பியப் பிறகும் மான்சியால் நிதானப்பட முடியவில்லை....

வெகுநேரம் கழித்து "ஓ..... சரி சிமி,, குட்நைட்... காலை சந்திப்போம்" என்ற பதிலுடன் ஆப்லைன் போனான் சத்யன்...

மீண்டும் தண்ணீர் குடித்து கண்ணீரை அடக்கினாள்.... நான் தேவியின் மகள் சத்யா.... உபகாரம் மட்டுமே தெரியும்... உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்....


“ உன் சேலை வாசம்

“ மறக்கவும் இல்லை..

“ நீ கொஞ்சிய நாட்கள்

“ என் நெஞ்சம் விட்டு

“ நீங்கவும் இல்லை...

“ இன்றும் வாடுகிறேன்

“ இன்னும் தேடுகிறேன்

“ என்னை மறந்து..

“ எங்கே சென்றாய் அம்மா?

“ இமயம் போன்ற இடர்கள் வந்து...

“ இதயத்தை நொறுக்குகிறதே அம்மா...

“ என்னுயிர் காக்க இன்னுயிர் தந்த தாயே...

“ துயர் தீர வழித் தெரியவில்லை...

“ மீண்டும் குழந்தையாக மாற்றி

“ துன்பம் தீண்டா உலகுக்கு....

“ உன் தோளில் சுமந்து சென்றுவிடேன்...
[color][font]

சத்யனின் அப்பாவிடம் பேசுவதாக சொல்லிவிட்டாள், ஆனால் உள்ளுக்குள் உதறலெடுத்தபடியே தான் இருந்தது..... ஐந்து மணிக்கெல்லாம் அவசர அவசரமாய் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டாள்... அலுவலகத்தில் இன்னும் பரபரப்பு அடங்காததால் நகத்தைக் கடித்தபடி பதட்டமாக அமர்ந்திருந்தாள்....

எம்டி கிளம்பிச்சென்ற அரைமணி நேரத்தில் மற்ற ஊழியர்களும் வேலை முடிந்து ஒவ்வொருத்தராக கிளம்பினர்.... இன்னும் தனது வேலை முடியாதது போல் பாவனை செய்து கொண்டு அமர்ந்திருந்தாள்....

மணி ஆறானது... அலுவலகத்தில் சந்தடிகள் அடங்கியது...... ஆயிரம் தெய்வங்களை துணைக்கழைத்தபடி ஆன்செய்தாள்... திரை திறந்து கொண்டது...... அரட்டைப் பகுதியை திறந்து அவளின் ஆத்மாவைத் தேடினாள்....

பச்சை விளக்கு ஒளிர தயாராக இருந்தான் சத்யன்.... இப்போது அவனது நேரம் அதிகாலை நான்கு முப்பது என்று தெரியும்... இந்த நேரத்தில் விழித்திருந்து காத்திருக்கும் அவனை நினைக்கையில் இதயத்தில் ஈரம் கசிய ஆரம்பித்தது.... "ஹாய் சத்யன்" என்று எழுதியனுப்பினாள்....

அடுத்த நொடி பதில் வந்தது "வந்துட்டியா சிமி?"

அந்த வந்துட்டியா என்ற வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி? உள்ளுக்குள் போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது... "ம்ம்" என்று இவள் சொன்னதும்...

"இந்த ம்ம்,, நீ சொன்னா மட்டும் எவ்வளவு அழகா இருக்கு சிமி"......

நக்கலடிக்கிறான் என்று தெளிவாகப் புரிந்தது.... "உங்க அப்பா இருக்காங்களா?"

"ம் இருக்கார்.... கொஞ்சநேரம் நாம பேசிட்டு அப்பாவை கூப்பிடலாம்னு நினைச்சேன்" அசடு வழியும் பொம்மையுடன் வந்தது செய்தி....

"இல்ல எனக்கு ஆபிஸ் குளோஸிங் டைம்... சீக்கிரமா பேசிட்டு கிளம்பனும்"

"ஓ...... சரி சரி... ஆனா அப்பாகிட்ட என்ன பேசப்போற சிமி?"

"அதை அவர்கிட்ட சொல்றேன்.... "

"யப்பா ரொம்ப கரார் பேர்வழியா இருக்கயே?"

"...........?"

"ஓகே ஓகே... டாடிய வரச்சொல்றேன்... நீ வாய்ஸ் சாட் ஆன்பண்ணு சிமி" என்றவன் வாய்ஸ் சாட்க்கு ரிக்வெஸ்ட் அனுப்பினான்....

உடனடியாக அக்சப்ட் செய்துவிட்டு மைக்ரபோனுடன் கூடிய ஹெட்போனை எடுத்து காதில் மாட்டிக்கொண்டாள்....

தனது ரசனைக்குரிவள் சிமியின் குரலை கேட்கப்போகிறோம் என்று சத்யனுக்குள்ளும்.... தனக்காக ஒருவன் தரணியில் பிறந்திருக்கிறானே அவனின் குரல் கேட்கப்போகிறோம் என்று மான்சிக்குள்ளும் ஒரே சமயத்தில் சிலிர்ப்பு ஓடிய அந்தத் தருணம்....... இருவரின் மனதுக்குள்ளும் குறிஞ்சிப் பூத்தத் தருணம்....

முதலில் அழைத்தது சத்யன் தான் "சிமிம்மா" என்ற அந்தக் குரல் கூறிய நேசத்தை குறை கூறவே முடியாதே....

பதில் கூற வார்த்தையின்றி பரிதவித்தாள்.... வார்த்தையின் கம்பீரம் அவளின் இதயத்தை கசக்கியெடுத்தது....

மீண்டும் அவனது நேசக்குரல் சாமரம் வீசுவது போல் "சிமி பேசு ப்ளீஸ்" என்று அழைத்தது....

மான்சி பேசவில்லை.... டைப் செய்தாள் "உங்க அப்பாவிடம் மட்டுமே பேசுவேன்... அவரை கூப்பிடுங்கள் சத்யன்"

"உன் நெஞ்சை கல்லாலயா செய்தாங்க?" என்று பேசியவன் "சரி நீ இரக்கமில்லாதவன்னு தான் ஏற்கனவே தெரியுமே.... இரு டாடியை கூப்பிடுறேன்" என்றான்....

உருண்டு வந்த விழிநீரை இமை மூடி உதிரவிட்டாள்.... தனது கைக்குட்டையை எடுத்து ஹெட்போனிலிருந்த மைக் மீது சுற்றினாள்.... அருணகிரி இவளின் குரலை அடையாளம் காணக் கூடாதே.... அவர் காணாவிட்டாலும் சத்யன் இதை ரெக்கார்ட் செய்தால் அதுவும் என்றாவது ஒருநாள் தன்னைக் காட்டிக்கொடுத்துவிடுமே?

சற்றுநேரம் பொறுத்து "நான் சத்யனோட அப்பா பேசுறேன்" என்ற அருணகிரியின் குரல் வந்தது....

"ம்,, நான் சத்யனோட தோழி சிமி... சிவாத்மிகா பேசுறேன் அங்கிள்" சத்யன் அவளுக்கு வைத்தப் பெயரையே அவனது தந்தைக்குச் சொன்னாள்....




"ம்.. நல்லது... ஏதோ பேசனும்னு சொன்னீங்களாம்?"

"ஆமாம் அங்கிள்..... பக்கத்துல சத்யன் இருந்தால்... கொஞ்சம் வெளியேப் போகச் சொல்லுங்க... நான் உங்ககூட தனியாக பேசனும்"

"சரிம்மா" என்றவரின் குரல் பக்கத்திலிருந்த சத்யனிடம் பேசுவது கேட்டது.... பிறகு "ம் சொல்லும்மா"

"அங்கிள்,, இப்போ சத்யன் எப்படியிருக்கார்? என்னதான் ஆச்சு?"

"தெரியலைம்மா,, போன வாரத்துல ஒருநாள் இவன் காலேஜ்ல இருந்து கால் பண்ணி சத்யன் சூசைட் அட்டம்ப்ட் பண்ண ட்ரை பண்ணிட்டான் உடனே கிளம்பி வாங்கன்னு சொன்னாங்க... நானும் கிளம்பி வந்தேன்... வந்து விசாரிச்சதுல தூக்க மாத்திரைக்கள் போட்டுக்கிட்டு க்ளாஸ் ரூம்லயே மயங்கி விழுந்திருக்கான்.. காலேஜ் நிர்வாகம் பயந்துட்டு என்னை வரவழைச்சிருக்காங்க... நான் பார்க்கும் போது ஆஸ்பிட்டல்ல தான் இருந்தான்... ஆபத்தில்லைனு சொன்னாலும் நீங்க இந்தியா கூட்டிப் போயிடுங்க... சில கவுன்சிலிங் பிறகு வந்து ஸ்டடியை கண்டினியூ பண்ணட்டும்னு கல்லூரி நிர்வாகம் சொல்லிட்டாங்க... அவன் தங்கியிருக்கும் வீட்டுக்காரங்களும் காலி பண்ண சொல்லிட்டாங்க... இன்னும் ரெண்டுநாள்ல இந்தியா கிளம்பி வர்றோம்" என்று தனக்குத் தெரிந்ததை எதையும் மறைக்காமல் அப்படியேச் சொன்னார் அருணகிரி.....

மறுபடியும் கேட்ட சத்யனின் காதல் சரிதம் மான்சியை கலங்க வைத்தது "சத்யனோட பியூச்சரே போயிடுச்சே" என்று கலங்கிய குரலில் கூறவும்...

"அப்படிச் சொல்லிட முடியாதும்மா.... படிப்பு முடிய ஒரு வருஷம் தாமதமாகும் அவ்வளவு தான்.... ஆனா சத்யனோட இந்தப்பிரச்சனை?" என்று மேலே கூறாமல் நிறுத்தினார்....

"ம்ம்... நான்தான் காரணம்னு தெளிவா புரியுது அங்கிள்.... உங்களுக்கு எவ்வளவு தெரியும்னு தெரியலை.... ஆனா நான் தெரிஞ்சே எதையும் செய்யலை அங்கிள்... நீங்க நம்பனும்" கலங்கிய குரலை திடப்படுத்த முயன்று தோற்றுப் போனாள்...

"இதுல நம்புறதுக்கு எதுவுமில்லைம்மா..... சத்யன் எல்லா விஷயமும் சொல்லிருக்கான்.... ஆனால் திருமணம் ஆனப் பெண்ணை என் மகன் விரும்பியிருப்பான்னு எனக்கு இன்னும் நம்பமுடியலைம்மா" என்ற அருணகிரியின் வேதனைக் குரல் அவளின் இதயத்தைப் பிசைந்தது 
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 23-07-2019, 09:57 AM



Users browsing this thread: 1 Guest(s)