மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 12

இப்போது ஷாஜஹானின் வலி ஹரினுக்குள்... அவனால் ஒரு பிரம்மாண்டமான கண்ணீர் துளியை கற்பனை செய்ய முடிந்தது..

வர்ணங்களை ஒதுக்கிவிட்டு கண்ணீரின் நிறத்திலேயே அந்த கண்ணீரை வரைந்தான்...

"அற்புதமான ஓவியம்" ஆண்டுகள் பலவற்றுக்குப் பின் அரசர் உதடு மலர்ந்தார்...

"அவள் எங்கே? ஓவியனின் மனைவி எங்கே? அவள் ஏதோ செய்திருக்கிறாள்... ஹரினை.. ஷாஜஹானாய் மாற வைத்து ஓவியம் செய்திருக்கிறாள்"

அமைச்சர் ஆசிப் நடந்ததை கூறுகிறார்... அதிர்கிறார் அரசர் "என்னது அவள் யமுனையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாளா? அந்த ஓவியன் ஹரின் எங்கே?"

யமுனைத் தாய் ஹரினுக்கு மட்டும் இடமளிக்க மறுத்துவிடுவாளா என்ன? தன் மனைவியைத் தேடி யமுனைக்குள் ஹரினும்" என்கிறார் ஆசிப்...

உலகில் எல்லா நதிகளும் சிரித்துக் கொண்டு ஓடினால்... அழுது கொண்டே ஓடும் நதி யமுனை நதியாகத்தான் இருக்கும்.... கரையில் ஒரு காதல் சின்னமும்... தனக்குள் ஒரு காதல் ஜோடிகளையும் புதைத்துக் கொண்ட யமுனை அழத்தான் வேண்டும்....

( " நன்றி,, பா. விஜய் அவர்களின் பதிப்பிலிருந்து சில வரிகள் ")

இதோ இன்று அதன் கரையில் அமர்ந்திருக்கும் மான்சியும் இன்னொரு திலோத்தி தான்... காதலனுக்காக திலோத்தி தற்கொலை செய்து கொண்டாள்... இவளோ காதலுக்காக தன் மனதை கொலை செய்திருக்கிறாள்.... பெண் என்றாலே தியாகத்தின் ரூபம் தானோ?






" பெண் எனும் பிஞ்சுப் பிரபஞ்சமே....

" அன்பிலிருந்து ஆவேசம் வரை...

" உலகின் அத்தனைக்கும் உன் பெயர்...

" நீ தாயாகப் பிறக்காவிட்டால்...

" கடவுளுக்கு கடமைகள்...

" கழுத்து வரை இருந்திருக்கும்..

" கடவுளால் முடியாததை செய்யும்...

" கருப்பொருள் பெண் தானோ??

மான்சியின் விடுமுறை மொத்தமும் யமுனையின் கரையிலேயே கழிந்தது... கொண்டு வரும் மதிய உணவை புறாக்களுக்கு வீசிவிட்டு மாலை வரை அந்த காதல் சின்னத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பாள்...

ஆயிரம் கதை கூறும் தாஜ்மஹால் இவளுக்கு மட்டும் ஆறுதலைக் கூற மறந்தது... நெஞ்சுக்குள் காதல் தீயாய் வளர்ந்து தேகமெல்லாம் எரிய வைத்தது... பறவையின் சிறகாய் இறகுகள் அடித்துக் கொண்டே இருக்கும் நேசத்திற்கு பதில் தெரியாது விழி நீருக்கு வழிவிட்டு விரக்தியாய் அமர்ந்திருப்பாள்...

இறுதியாக ஓரே ஒரு கேள்வி... "என்னவனை விட்டுக் கொடுத்துவிட்டு இயல்பாய் வாழ என்னால் முடியுமா?" கேள்வி எழும் போதெல்லாம் கண்ணீர் மட்டுமே பதிலாய்...

இதோ மூன்று நாள் விடுமுறையும் முடிந்தது.... அதன் தொடர்ச்சியாக வந்த சனி ஞாயிறு விடுமுறையும் சென்று விட்டது... திங்கள் அலுவலகம் கிளம்பினாள்... பிடிவாதமாய் கணனியில் காத்திருக்கும் காதலனை மறந்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினாள்... செவ்வாயையும் வென்றவளால் புதன் கிழமையை வெல்ல முடியவில்லை...

நெஞ்சம் பூஞ்சிறகாய் மாறி அந்த கம்பியூட்டரில் சென்று ஒட்டிக் கொள்ள... இனி முடியாதென்ற நிலையில் தனது மெயிலைத் திறந்தாள்... நேசத்திற்கு முகவரி கொடுத்தவனைத் தேடியது நெஞ்சம்...

ஒப்புக்குக் கூட ஒற்றை மெயில் வரவில்லை... திடுக்கிட்டது மனம்.... கல்யாணக் கதையை நிஜமென்று நம்பி ஒதுங்கிவிட்டானோ? கண்ணீர் திரையை மறைத்தது... சரி அப்படியே இருக்கட்டும் என்றும் விட முடியவில்லை....

மணி பத்தானது... அவள் பதியாக எண்ணியிருக்கும் சத்யனிடமிருந்து ஒரு மெயில் வந்தது.. உள்ளம் துள்ள.. உடலெல்லாம் பதற... ஏழு நாட்கள் கழித்து வந்த தன்னவனின் வரிகளைப் படிக்க ஆயத்தமானாள்.... 

"அன்பு சிமி,,

முதலில் மன்னிக்கவும்... சில நாட்கள் தகவல் தொடர்பின்றி இருந்ததுற்காக மன்னிக்கவும்....

சற்று உடல்நிலை சரியில்லாததால் உன்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை....

நீ சொன்னவற்றை நம்ப முடியாவிட்டாலும் நம்புவதற்கு முயற்சி செய்கிறேன்...

காதலனாய் வேண்டாம்.. தோழனாக வா என்றாய்... அது என்னால் முடியுமா என்று தெரியவில்லை... ஆனால் முயன்று பார்ப்பதென்று முடிவு செய்துவிட்டேன்..... நீ திருமணம் ஆனவள் என்று ஒதுங்கியிருக்க நினைப்பதைவிட நீ விரும்பாத ஒன்றை உனக்குள் திணிக்க எனது பிறப்பும் வளர்ப்பும் ஏற்கவில்லை என்பதே உண்மை... பெண் என்பவள் ஆத்ம சக்தி... இது என் அப்பா சொன்னது... நானும் அதையே சொல்கிறேன்... நீ ஒரு ஆத்ம சக்தி... ஆறுதல் எனும் பெயரில் உன்னை அழிக்க நினைப்பது என் தவறு தான்... இனி உனக்கு தோழனாய் இருக்க முயற்சி செய்கிறேன்... ஆனால் என் காதல் கல்வெட்டு கடைசிவரை என்னுள் கூடவே இருக்கும்.. உனக்குள் புகுத்த மாட்டேன்....

என்றென்றும் எனது தீராக் காதலைப் புதைத்துக் கொண்டு தோழனாய் நடிக்கக் காத்திருக்கும் நண்பன் (?).

மெயில் முடிந்து போயிருந்தது... ஆனாலும் பார்வை விலகிவில்லை... இப்படிக் காதலிக்கப்பட நான் என்ன புண்ணியம் செய்தேன்... உன் காதலால் புனிதப்படுத்தப்பட்ட நான் பாக்கியசாலி தான்.... ஆனாலும் கொடுத்த வாக்கும் எடுத்து வைத்த அடிகளும் என்னை இறுக வைக்கிறதே எனதன்பு காதலா? கவிதை வரிகளிலும் துயரமாய் வந்தன...

கண்ணீர் விட்டு அழக்கூட முடியாத தன் நிலையை வெறுத்தாள்... தோழனா நீ? முடியுமாடா உன்னால்? ஏழுநாள் பிரிவில் இவ்வளவு தான் முடிந்ததா உன்னால்? நான் என்ன செய்தேன் தெரியுமா? வாழ்ந்தேனடா உன்னுடன் ஏழு நாளும் ஏழு உலகிலும் உன்னோடு சுற்றியலைந்து வாழ்ந்தேனடா... உதடுகளைக் கடித்துக் கொண்டு உள்ளக் குமுறலை அடக்கினாள்...

சுடும் என்று தெரிந்தே நெருப்பில் கை வைக்கும் நிலைமை... சுட்டுவிட்டதும் துடிக்கும் உடலும் மனமும்.... தொன்றுத் தொட்டு வரும் இந்தத் துயரம் காதலுக்குத் தோழனா? தோழியா? இல்லை ஓர் சூலில் வந்த இரு பிறப்போ?

கட்டுப்படுத்த முடியாமல் சாட்டை ஓபன் செய்து "சத்யன்?" என்று காதலனை அழைத்துவிட்டு காத்திருந்தாள்....

அந்த வார்த்தை கடல் கடந்து சென்று அவள் காதலனை அடைய ஒரு நொடி தானா ஆகும்? மறுநொடி பதில் வந்தது "சிமிம்மா?"

சிமிம்மா? நான் தான், நெஞ்சில் அறைந்து கொள்ள எழுந்த கரங்களை அவசரமாக கீபோர்டில் வைத்தாள் வார்த்தைகளை இதயத்திலிருந்து சேகரித்தாள் "எப்படியிருக்கீங்க சத்யா?"

இமைக்கும் நேரத்தில் பதில் அனுப்பினான் "நல்லாயிருக்கேன் சிமி... இத்தனை நாளாய் எனைத் தேடவில்லையா நீ?"

என்ன பதில் சொல்வாள்? அவனுடன் வாழ்ந்த கதையை சொல்வாளா? அவனது காதலில் வீழ்ந்த கதையை சொல்வாளா? பதறும் நெஞ்சை பதப்படுத்தும் வித்தை தெரியாதவள் பாவம்.... "நானும் ஆபிஸ் வரலை சத்யன்... அதனால ஆன்லைனிலும் வரலை... இன்று தான் ஞாபகம் வந்து மெயிலை ஓபன் செய்தேன்...." பொய்தான்... வார்த்தையால் அதிகம் அலங்காரம் செய்தால் பொய்யும் பொய்த்துப் போகும்

மான்சியின் பொய்யும் நிமிடத்தில் பொய்த்துப் போனது... "ஹாஹாஹாஹாஹா நம்பிட்டேன் சிமி,, நீ என்னைத் தேடலைனு நம்பிட்டேன்"

மந்திரம் தான் செய்தானோ... நின்ற விழிநீர் மீண்டும் மழைக்கால ஊற்றாக பெருகியது "உங்க உடம்புக்கு என்னாச்சு சத்யன்?" பேச்சை திசைத் திருப்பும் எளிய முயற்சிக்கு இமயம் போல் கனத்தது இதயம்...

"உண்மை சொல்லவா? பொய் சொல்லவா?" சிரிக்கும் பொம்மையுடன்...

"சூழ்நிலைக்கு எது பொருந்துமோ அதைச் சொல்லுங்கள்" இதுதான் கழுவுற மீன்ல நழுவுற மீன் என்ற கிராமத்துப் பழமொழியோ?

"ஹாஹாஹாஹா,, சூழ்நிலைக்குப் பொருந்துவது எப்பவுமே பொய் தான்... ஆனால் இப்போ நான் உண்மை சொல்லப் போறேன்..." சல்யூட் அடிக்கும் பொம்மையின் படம் கூடவே...

"ம்ம் "

"எனக்கொரு காதலி இருக்கின்றாள்.. அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்,, அப்படின்னு நான் நினைச்ச என் காதலி இன்னொருத்தனுக்கு சொந்தமானவன்னு சொல்லிட்டா... அந்த வேதனை கொடுத்த விரக்தியில் தூக்கம் தொலைஞ்சி போச்சு... தூக்கத்தை வரவழைக்கும் முயற்சியாக நான் தின்ற மாத்திரைகளை மயக்கத்தைக் கொடுக்க காலேஜ்ல எல்லாரும் பயந்து போய் ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி என் அப்பாவுக்கு தகவல் சொல்லி பெரிய கலவரமாக்கிட்டாங்க... பாவம் அப்பாவும் பதறியடிச்சிக்கிட்டு கலிபோர்னியா வந்துட்டார்... இப்போ நான் ஓகே தான்.. என் அப்பாவின் ஆறுதலும் அறிவுரையும் என்னை நிதானப்படுத்தியிருந்தாலும் என் காதலை அசைச்சுக் கூட பார்க்க முடியலை... ஹாஹாஹாஹா மகன் வேற காதலன் வேற... மகன் அன்புக்கு மட்டுமில்லை மற்ற அத்தனைக்கும் கட்டுப் படுவான்.. காதலன் எதற்குமே கட்டுப்பட மாட்டான் காதலைத் தவிர" மிக நீண்ட மெசேஜ்ஜாக வந்த விழுந்தன சத்யனின் வார்த்தைகள்...

இதயம் இருக்கிறதா? அது துடிக்கிறதா? என்று தட்டுத்தடுமாறி நெஞ்சில் கை வைத்துப் பார்த்துக் கொண்டாள்.... முல்லைக் கொடியில் முட்கள் முளைக்குமா? முட்கள் முளைத்து இதயத்தைக் கிழித்துக் கொண்டிருந்து... வழியும் ரத்தமெல்லாம் உப்பு நீராய் மாறி விழிகள் வழியாகக் கொட்டியது...

"ஏன் சத்யன் இப்படி?"

"எப்படி? ஏய் நான் நிஜக் காதலன் சிமி... நீ பொய்யாக இருக்கலாம்... என் காதல் பொய்யாகாது... கல்லரை செல்லும் வரை எனது கவிதாயினியை காதலித்துக் கொண்டேயிருப்பேன்... நீ யாருக்கு வேண்டுமானாலும் மனைவியாக இரு எனக்கு அவசியமில்லை... என் காதலை நான் காதலிக்கிறேன்... இனி இதைக் கூட பேச மாட்டேன்... தோழனாய் மட்டுமே உன் கண்களுக்குத் தெரிவேன்... நேசம் எனக்குள் புதைந்து போகட்டும்" வேக வேகமாக வந்த வார்த்தைகளில் தான் எத்தனை வீரியம்?

தவிப்பும் துடிப்பும் மான்சியை செயலிழக்க வைத்து வேடிக்கைப் பார்த்தது... பூப்போன்ற இதயத்துக்குள் புயலடித்துப் பொட்டலானது போன்றதொரு வரட்சி... நெஞ்சு வரண்டு தொண்டைக்கு நாக்கு ஒட்டிக்கொள்ள தண்ணீர் பாட்டிலைத் தேடியது அவள் கரங்கள்.... நீர் குடித்து நிமிர்ந்தவளுக்குள் 'ஒருவனால் இப்படியும் காதலிக்க முடியுமா?' என்ற கேள்விதான் 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 23-07-2019, 09:55 AM



Users browsing this thread: 1 Guest(s)