மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 11

அவளுக்கு,, அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றாப்பா...." என்ற சத்யன் கண்களிலும் கண்ணீர் குரலிலும் கண்ணீர்....

அதிர்ந்து போனார் அருணகிரி "என்னடா சொல்ற? கல்யாணம் ஆன பொண்ணையா நீ காதலிச்ச?" என்று கேட்டவரின் குரலிலோ ஒரு மாதிரியான அருவருப்பு

கண்ணீருடன் நிமிர்ந்து தகப்பனின் முகம் பார்த்தவன் "ஆமாம்ப்பா... அப்படித்தான் அவ சொன்னா" என்று கூறிவிட்டு முகத்தை இரு கையாலும் மூடிக்கொண்டு "அதான்ப்பா என்னால தாங்க முடியலை... செத்துடனும் போல இருந்தது டாடி.... நான் அவளை ரொம்ப விரும்பினேன் டாடி" என்று குமுறலாய் கூறிய மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார் அருணகிரி....

அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார் அருணகிரி.... மகனை பார்த்து ஆத்திரமாய் விழித்து "கல்யாணம் ஆன பெண்களை தாயாவும் சகோதரியாவும் நினைக்கின்ற பரம்பரைல வந்தவனாடா நீ? இப்படியொரு கேவலத்தை செய்திருக்கயே?" மகனை குற்றவாளியாக நோக்கினார்....

அந்த பார்வையில் கூசி குறிகிப் போனான் சத்யன் "அப்பா,, ப்ளீஸ்ப்பா... நான் சொல்றதை முழுசா கேட்டுக்கிட்டு அப்புறமா எதையும் முடிவு செய்ங்க.... நான் ஒன்னும் ஒருத்தனோட மனைவியை விரும்பலை.... முன்னாடி அவளே தனக்கு கல்யாணம் ஆகலைனு சொல்லிருக்காப்பா.... அதுமட்டுமில்ல மேரேஜ்ல தனக்கு இஷ்டமில்லைனும் சொல்லிருக்கா.... இப்போ நான் லவ்வை சொன்னதும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றா... என்னை தவிர்க்கறதுக்காக பொய் சொல்றா அப்பா,, சத்யன் தன்னிலை விளக்கமாக நடந்தவற்றைக் கூறியதும்....

குழப்பமாக மகனைப் பார்த்தவர் "மொதல்ல நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ சத்யா,, ஆன்லைன் என்பது தகவல் தொடர்புக்கு மட்டும் தான்.... வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க இல்லை.... அதுவும் இதெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்து வராத ஒரு விஷயம்... இப்போ நீ சொல்றதை வச்சு என்னால ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க முடியுது..... அதாவது நீ தீவிர ரசிகன்னு தெரிஞ்சதும் திருமணம் ஆகாத பெண் அப்படினு சொல்லி உன்கிட்ட பழகியிருக்கா... ஏன்னா நம்ம தமிழ் பசங்களுக்கு கல்யாணம் ஆன பொண்ணு அப்படின்னாலே ஆன்ட்டினு தான் கூப்பிடுவானுங்க... இதை விரும்பாம உன்கிட்ட திருமணம் ஆன விஷயத்தை மறைச்சிருக்கலாம்.... நீ அவளை விரும்பறேன்னு தெரிஞ்சதும் பிரச்சனைகளுக்குப் பயந்து உண்மையை ஒத்துக்கிட்டு ஒதுங்க நினைச்சிருக்கலாம்.... அவ சேப்ஃடி தான் அவளுக்கு முக்கியம் சத்யா...." என்றார்....



தகப்பனிடம் ஆறுதல் தேடியவன் அவர் கூறிய வார்த்தைகளில் இடிந்து போனான்.... "அப்பா அவ அந்த மாதிரி பொண்ணு இல்லப்பா.... ரொம்ப நல்லவ... இதுபோல துரோக சிந்தனைலாம் அவளுக்கு வராதுப்பா" கெஞ்சினான்....

மகனைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.... ஆனால் இது அவனது வாழ்க்கை மட்டுமல்ல உயிர் பிரச்சனையும் கூட என்ற அடிப்படை உண்மை புரிந்தது.... மகனின் எதிர்காலம் பயமுறுத்த "சத்யா அந்த பொண்ணு கூட எத்தனை நாளா பழக்கம்?" என்று கேட்க.....

"ஆறு மாசம் இருக்கும்ப்பா....." சிமியின் முதல் கவிதையும் முதல் பேச்சும் மனதில் படமாக விரிய கண்களில் கனவினை சுமந்தபடி கூறினான்....

"அவளை பார்த்திருக்கியா? ஐ மீன் போட்டோஸ் ஏதாவது?"

"இல்லப்பா,, நான் எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தேன்... அவளோட கான்டாக்ட் நம்பர் கூட குடுக்கலை"

"சரி,, எதை வச்சு அவமேல உனக்கு காதல் வந்ததுன்னு சொல்ற?"

"அப்பா,, அவ எழுத்துக்கள் தான்.... அதிலிருக்கும் தேடல் தான் என் மனசுல பதிஞ்சது... அப்புறம் அவள் தேடும் ஆறுதலாக நான் இருக்கனும்னு நினைச்சேன்... ரொம்ப சீக்கிரத்திலேயே அந்த ஆறுதல் என் மட்டும் தான் கிடைக்கனும்னு.... அதாவது காதலா மாறிடுச்சு... இப்ப அவளை மறக்கவும் முடியலை அவ சொன்னதை ஏத்துக்கவும் முடியலை.... ஒவ்வொரு நிமிஷமும் நரகத்துல இருக்குற மாதிரி இருக்கு டாடி" உணர்ச்சியில் கொந்தளித்து கொதித்து வந்தது அவனது வார்த்தைகள்....

மகனை தீர்க்கமாக பார்த்தார் அருணகிரி "அதுக்காக தற்கொலைக்கு முயற்சி செய்வியா சத்யா... உன்னை அந்த மாதிரி கோழையா வளர்க்கலையேடா?" ஆற்றாமையுடன் பேசியவரைக் கண்டு தலைகுனிந்தான் சத்யன்......

"நீங்களும் அப்படியே சொல்றீங்களேப்பா? செத்துப் போகனும்னு நினைச்சிருந்தா அந்த பாட்டில்ல இருந்த அத்தனை மாத்திரையையும் முழுங்கிருப்பேன்.... ஆறு மாத்திரை மட்டும் சாப்பிட்டிருக்க மாட்டேன்.... எனக்குத் தூங்கனும் டாடி... நான் தூங்கி பலநாள் ஆச்சு.... அவளோட தாக்கம் இல்லாமல் கொஞ்ச நாளாவது தொடர்ச்சியா தூங்க நினைச்சேன்.... தூக்கமின்மையே என்னை அடுத்தது பத்தி சிந்திக்க விடாமல் முடக்கி வச்சதுப்பா.... அதனாலதான் அப்படி செய்தேன்... மாத்திரையோட பவர்ல நான் நினைவிழந்ததும் எல்லாரும் பயந்துட்டாங்க" மெல்லிய குரலில் கூறிய மகனை அந்தப் பெண் எவ்வளவு பாதித்திருக்கிறாள் என்று அந்த தகப்பனால் உணரமுடிந்தது.

"நீ சொல்றதை புரிஞ்சுக்க முடியுது சத்யா,, ஆனா நீ சொன்னதிலிருந்து நான் கெஸ் பண்ணது என்னன்னா.... ஆன்லைன் தவிர வேற எந்தவிதத்திலும் உன்கிட்ட தொடர்பு வச்சுக்க அந்தப் பெண் விரும்பலை... அதாவது அவள் செய்யும் திருட்டுத்தனம் தெரிஞ்சிடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்திருக்கா.... திருட்டுத்தனம்னு நான் சொல்றது அவ சொன்ன மேரேஜ் விஷயத்தைத் தான்..... அதாவது அவ திருமணம் ஆனவனு எந்த விதத்திலும் உனக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு கவனமா இருந்திருக்கா சத்யா,, இது புரியாம காதலை வளர்த்தது உன் தப்பு...." அருணகிரி தீர்க்கமாகப் பேச அதை மறுக்கவும் வழியின்றி மறுகிக் கொண்டிருந்தான் சத்யன்....

தலை குனிந்திருந்த மகனின் கேசத்தை வருடியவர் "சத்யா நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கனும்.... பெண்களைத் தாழ்த்திப் பேசனும்னு நான் இதைச் சொல்லலை... இப்படியும் சில பெண்கள் இருக்காங்க.. அவங்களுக்கும் மனசிருக்கு... அந்த மனதிலும் ஏக்கங்கள் இருக்குன்னு பல ஆண்களுக்கு புரியலை அல்லது புரிஞ்சுக்கவும் அந்த ஆண்கள் தயாராக இல்லைனு தான் சொல்லனும்... அதனால் தான் சில ஆன்லைன் ஆண் பெண் நட்புகள் முறைதவறி அடுத்தக் கட்டுத்துலப் போய் நிற்குது..." என்று சொல்லிக்கொண்டிருந்த அப்பாவை குழப்பமாகப் பார்த்த சத்யன் "புரியலைப்பா,, இதில் தவறு யார்மேலனு சொல்ல வர்றீங்க?" என கேட்க....

"தவறு அப்படின்னு சொல்ல முடியாது சத்யா... அவசர உலகத்தில் ஆண் பெண்ணுக்கான புரிதல் குறைஞ்சிடுச்சின்னு தான் சொல்லனும்.... அதாவது பெண் என்பவள் மென்மையானவள் மட்டுமில்லை எதிர்பார்ப்புகள் நிறைந்தவள்... திருமணமான புதிதில் ஆர்வமும் அக்கரையும் காட்டும் பல ஆண்கள் அதன்பிறகு ஒரு மிஷின் மாதிரி ஆகிடுறாங்க.... ஆனா பெண்ணுக்குள்ளே இருக்கும் எதிர்பார்ப்புகள் அப்படியேதான் இருக்கும்.... அந்தப் பெண்ணுக்குள் ஆயிரக்கனக்கான திறமைகள் இருக்கும் அதில் ஒன்னையாவது ஆண் வெளிக்கொணர முயற்சிக்கனும்...

ரொம்ப சாதரணமா ஒரு உதாரணம் சொல்லனும்னா அழகான கோலங்கள் வரையும் பெண்ணுக்கு அதை ஒருநாளாவது தன் கணவன் பாராட்டனும்னு ஆசையிருக்கும்... பல நாட்கள் பார்க்காமல் செல்லும் கணவனின் நண்பன் ஒரு நாள் வந்து அந்த கோலத்தை ரசித்து பாராட்டும் போது அந்த பெண்ணின் எதிர்பார்ப்பு அந்த நண்பன் பக்கம் திரும்புது... அது நட்பாகவும் இருக்கலாம்... நட்பின் அடுத்தக் கட்டமாகவும் இருக்கலாம்..... அவளைப் பொருத்தவரையில் பாராட்டும் ஆறுதலும் தரும் அவன் தான் ஹீரோ... இந்த தவறு கணவனால் மட்டுமல்ல குடும்பத்திலிருக்கும் மற்ற உறுப்பினர்களாலும் நடக்கும்.... அப்பா அம்மா சகோதரன் சகோதரி யாராயிருந்தாலும் சரி அந்தப் பெண் எதிர்பார்ப்பது ஒரு வார்த்தை பாராட்டு தான்..... இதேபோல் கதை, கவிதைகள், நடனம், பாட்டு, ஓவியம், இப்படி எத்தனையோ வித திறமைகள் கொட்டிக்கிடக்கும் பெண்களுக்கு அதற்கு தகுந்த பாராட்டும் ஆதரவும் கிடைக்காத பட்ச்சத்தில் ஆதரிக்கும் பக்கம் தன்னையறியாமல் சாய்ந்துவிடுகிறாள்.... அப்படித் தடுமாறி சாயும் தோள் ஒரு நண்பனாக இருந்தால் அவளது திறமை மேலும் மெருகேறும்.... அப்படி சாயும் தோள் காமுகனாக இருந்தால் அது புரியாமலே அந்தப் பெண் தடமாறிப் போக அதிக வாய்ப்பு இருக்கு.... இன்றைய அதிகபட்சமான விவாகரத்துகள் இப்படித்தான் புரிதல் இல்லாம புதுப்பிக்கப்படுது சத்யா" அப்பா சொல்ல சொல்ல அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான் மகன்.....

"அப்பா,, அவளும் இப்படிதான் மாறியிருக்கிறாள்னு சொல்றீங்களா" சற்றே கோபம் கலந்த குரலில் கேட்டான் சத்யன்

"இல்ல சத்யா நான் அந்த பெண்ணையோ மற்றவர்களையோ தவறா சொல்லலை... பெண் என்பவள் முகம் பார்க்கும் கண்ணாடியைப் போன்றவள்.... எதன் பிம்பம் கண்ணாடியில் விழுகிறதோ அதாகவே காட்சித் தருபவள்... அப்படிப்பட்ட பெண்ணின் எதிர்பார்ப்புகள் ஏக்கமாக மாறும் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்புண்டுனு தான் சொல்றேன்... இன்றைக்கு பெருகி வரும் நெட்வொர்க் டெக்னாலஜியால் அழகான நட்புகள் பல உருவாகவும் செய்கின்றன.... பெண்மையை மதித்து சகோதரியாக தாயாக நினைச்சுப் பழகுறவங்களும் இருக்கிறாங்க... அதே பெண்களை அவர்கள் அறியாமலேயே அசிங்கப்படுத்தும் சம்பவங்களும் நடந்துக்கிட்டு தான் இருக்கு சத்யா... உனது கவிதை தோழிக்கு வெளியுலகில் கிடைக்காத ஆறுதல் உன்கிட்ட கிடைச்சதால சாஞ்சிருக்கா... ஆனா நீ அந்த நட்பை காதல்னு மொழிபெயர்ப்பு செய்ததால் பயந்து உண்மையைச் சொல்லி ஒதுங்க நினைச்சிருக்கா... இந்தப் பிரச்சனைக்கு முடிவு என்க்கிட்ட கேட்டால்...." அடுத்ததை கூறாமல் அப்படியே நிறுத்திவிட்டு மகனை கூர்ந்து நோக்கினார்.....

"முடிவு? என்ன முடிவு பண்ணுவீங்க டாடி? சொல்லுங்க?" சத்யன் ஆர்வமாக கேட்டான்... 

"நடந்தவை உன்னோட பர்ஸ்னல்னு நீ நினைச்சா நான் உனக்கு விடை சொல்லமுடியாது சத்யா... என்னைப் பொருத்தவரை இது நமது குடும்பம் மொத்தமும் பாதிக்கக்கூடிய விஷயம் சத்யா?"

"புரியுதுப்பா,, நீங்க சொன்னா நான் புரிஞ்சுப்பேன்" சத்யன் நிதானத்துடன் கூற.....

"ம்ம்" என்றபடி தாடையை தடவிக்கொண்டு விண்ணை வெறித்தவர் "இதுக்கு ரெண்டே வழி தான் இருக்கு சத்யா... ஒன்னு இந்த பெண்ணின் நட்பே... அதாவது உன் பார்வையில் அவள் மீதான காதலே வேணாம்னு எல்லாத்தையும் குளோஸ் பண்ணிட்டு வெளியே வரனும்.... அடுத்து அந்தப் பெண் மீதான காதலை மறந்து... அது முடியாது தான் இருந்தாலும் காதலை மறந்துட்டு நல்ல நண்பனா இருக்க ட்ரை பண்ணு... அவளோட வாழ்க்கையை யோசிச்சு இதைச் செய்தே ஆகனும் சத்யா இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு நடந்தால் தான் அவளோட நிம்மதியும்... உன்னோட வாழ்க்கையும் காப்பாற்றப்படும் சத்யா" தீர்க்கமாக சொல்லிமுடித்தார் அருணகிரி...
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 17-07-2019, 10:44 AM



Users browsing this thread: 2 Guest(s)