Misc. Erotica மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - Incomplete
#39
இரண்டாவது பாகம்

விந்து கக்கிய சுகத்தில் என் உறுப்பு இளைப்பாறா, நான் மொட்டைமாடியில் அப்படியே
உறங்கிப் போனேன். கவிதாவும் அவினாஷும் என்னை பார்த்து சிரிப்பதை போல கனவு
கண்டேன். கவிதா என்னை அன்பால் அரவணைப்பதை போல கனவு கண்டேன். கவிதா முகம்
தெரியாத வேறு ஆண்களுடன் புணர்வதைப் போல கனவு கண்டேன். புணர்ந்த முகங்கள்
சில அவினாஷை போலிருந்தன.

நான் ஐயோ ஐயோ என அலறிக் கொண்டிருக்க... என்னையறியாமல் கத்திவிட்டேன்..
முழித்துப் பார்த்தால்...காலைச் சூரியனின் இளங்கதிர்கள் என் உடலை தீண்டிக் கொண்டிருந்தன.
வாரி எழுந்து துணியால் என் உடலை மறைத்தேன்.

வீட்டுக்குள் சென்று காஃபி என்று ஏதோ ஒன்றை வைத்து ஹாலுக்கு வந்து சோஃபாவில்
அமர்ந்து நேற்று நடந்தவற்றையெல்லாம் அசைப்போட்டேன். எனக்கு மட்டும் இப்படி நடக்கிறதா
என என் மனம் கேள்வி எழுப்பியது. இல்லை அனைவர் வீட்டிலும் இப்படி காம அந்தரங்கம்
இருக்கிறதா, இல்லை நான் அதீத காமத்தில் உழல்வதால் இப்படியெல்லாம் நடக்கின்றதா,
காமம் அவ்வளவு கொடூரமான கோர முகம் கொண்டதா என சிந்தித்துக் கொண்டிருந்தேன்....
குழப்பமாக இருந்தது.

அந்த குழப்பத்திலும் ஒரு தெளிவு பிறந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கும் கவிதாவுக்கும்
உள்ள உறவு வேறு ஒரு தளத்திற்கு சென்றுவிட்டதை உணர்ந்தேன். எந்த தம்பதியரும்
அடைந்து பார்த்திராதா ஒரு தளம். கட்டுப்பாடுகளற்ற ஒரு உறவு. ஒருவரை ஒருவர் உள்ளிழுக்கும்
அன்பு நிறைந்த ஒரு உறவு இருப்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.

ரஞ்சனியிடம் ரகசியமான ஒரு உறவு. இந்த உறவு ஒரு பலம் தரும் உறவு. இந்த உறவை எப்படி
கையாளப் போகிறேன் என என் மனம் சிந்தித்தது.

கவிதாவை நினைக்க நினைக்க ஆசையாக ஆனந்தமாக இருந்தது. அலைபேசியில் அழைத்தேன்.
“...என்ன சிவா எழுந்திட்டியா...” என அவளின் அன்பு நிறைந்த கலகல குரல் என்
காதில் பாய புத்துணர்வு ஏற்பட்டது.
“...ஆமா கவி..”
“நைட் நல்லா தூங்கினியா...”
“..ஏதோ ஒரு தூக்கம் போட்டேன்...”
“..ஏன் என்னாச்சு மை டியர்..” பதறினாள்.
“..என்ன கவி பண்றது.... நாம கல்யாணம் செஞ்சி இவ்வளவு வருஷத்துல முதல் முறையா
நீ இல்லாம தனியா தூங்கறேனே கவி... ஐ ஃபெல்ட் சோ அலோன்... தனியா எங்கோ இருக்கற
மாதிரி இருந்துச்சு...”
“.........” மறுமுனையில் மவுனம். அவள் மனம் கலங்குவதை உணர்ந்தேன்...
“...ஐயோ..ஐயோ...சாரி கவி கொஞ்சம் எமோஷனலாயிட்டேன்..” என நான் பதறினேன்.
“...சாரி சிவா...” வருத்தப்பட்டாள்.
“..சாரி எல்லாம் எதுக்கு கவி... ரொம்ப நாள் கழிச்சு உங்க வீட்டோட சேர்ந்து போறே...
இத கூட செய்யலேன்னா பொறுத்துக்கலேனா.. எப்படி... இட்ஸ் மை லவ் ஃபார் யூ...” என்று கூறி அவளை
அமைதிப்படுத்தினேன்.

‘...சிவா எனக்கும் வருத்தமாத்தான் இருந்துச்சு... உன்னை தனியா விட்டுவிட்டு வர....
என்னை விட்டு தனியா நீ இருந்தது கிடையாது.... நீ ஏதாவது எடுக்குமடுக்கா செய்துடுவியோன்னு
பயம் வேற.... என்னால உன்னை விட்டு இங்கே தனியா இருக்கவே முடியல சிவா..... உன்னை
பத்தியே நினைச்சுகிட்டே இருந்தேன் சிவா...”
“...பிரிவு தான் நாம ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு மிஸ் பண்றோம்னு காட்டுது கவி...”
“...யெஸ் சிவா...நைட்டெல்லாம் தூங்க முடியல...உங்களை நினைச்சு நினைச்சு கனவெல்லாம்
கண்டேன்... ஏதோ ஏதோ ட்ரீம் பண்ணேன்...” அவள் குரலில் ஒருவித கிறக்கத்தை உணர்ந்தேன்.
“... என்ன மாதிரி நினைச்சே கவி...” என உடல் சூடறே கிசுகிசுப்பாக கேட்டேன்.

“...ம்ம்ம்ம்.... ஒரு பொண்டாட்டி என்ன நினைப்பா... உங்ககிட்டே எப்படியெல்லாம் இருக்கனும்...
உலகத்துல யாரும் செய்யாத செயலெல்லாத்தையும் உங்க கிட்ட செய்யனும்...நீங்க நான்
எப்படி இருக்கனும் நினைச்சீங்களோ அப்படியெல்லாம் இருக்கனும்......ஜஸ்ட் ஐ வெண்ட்
வைல்ட் வித் மை ட்ரீம்ஸ்..” என அவள் காட்டு ஆறாக கூற எனக்கு ஆனந்தமாக இருந்தது..
“...என்ன நினைச்சே கவி...” என குதூகலமாக கேட்டேன்.
“....காலங்கார்த்தால அது பத்தியெல்லாம் சொல்லக்கூடாது... இட் வில் பீ டர்டி... பட் நான்
நீயில்லாம ரொம்ப கஷடப்பட்டேன் சிவா... போத் சைக்காலிஜிக்கலி அண்ட் பாடிலி...
என் உடம்புக்கு நீ தான் தேவைன்னு எனக்கு தீனின்னு உணர்ந்த நைட் சிவா... ஐ ஜஸ்ட்
காண்ட் கண்ட்ரோல் மைசெல்ப்... என்னால இருக்கவே முடியல சிவா.... உன்னை
அப்படியே என் அரவணைப்புல வெச்சுக்கிட்டே இருக்கனும் தோணிச்சு சிவா... என்னால
தூங்க முடியல சிவா... நரக வேதனை சிவா...எப்படி அஞ்சு நாள் கடக்கப் போறேன்னு தெரியல
சிவா...” என துடித்தப்படி சொல்லிக் கொண்டிருந்தாள்.

எனக்கு மனதில் பாரம் ஏறிக் குடிக் கொண்டிருந்தது. அவளை ஓடோடிக் கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
“...நா வேணா கிளம்பி வந்துட்டுமா கவி டார்லிங்..” என காதலுடன் கேட்டேன்.
“...வேணாம் சிவா...இட் வில் பி ஆஃவர்ட்... உனக்கு நிறைய வேலை இருக்கு சிவா....
முக்கியமானதாக ஏதாவது வந்துரும்.. இன்னிக்கு நைட்லேர்ந்து அவினாஷை
என் பக்கத்துல படுக்க வெச்சிருவேன் சிவா... நீங்க இல்லேங்கற வருத்தத்தை அவன்
பூர்த்தி செய்வான் சிவா... ஐ கேன் மேனேஜ் யூர் ஆப்சண்ஸ் வித் ஹிம்...” என அவள் மேலோங்கிய
அன்பில் சொல்ல... என் மனமும் உடலும் ஒரு முறை உதறியது. பல வித உணர்ச்சிகள்
என் மனதில் ஓடியது.

ஆனால் ஒரு பெண் பாதுகாப்பாக இருப்பது தன் மகனிடம் தானே.... அவனும் ஒரு பெண்ணுக்கு
மகன் என்ற நிலையிலும் ஸ்தானதிலும் ஒரு பாதுகாப்பான துணைத்தானே.... இது சமூகம்
ஏற்படுத்திய ஒரு ஏற்பாடு தானே... என்று ஏதோ ஏதோ நினைத்து என் மனம் தன்னை தானே
ஆறுதல் படுத்திக் கொண்டது...

“...அதுதான் சரி கவி...” என்று சொன்னேன். நேற்று இரவில் ரஞ்சனி நடத்திய காம விளையாட்டை
நினைத்து பார்த்தப்படி.
“...டைம் ஆச்சு சிவா... எல்லோரும் கிளம்பிட்டிருக்காங்க... டேக் கேர் ஆஃப் யூர்செல்ஃப்... சிவா...”
என்று அவன் தயக்கம் காட்டுவதை என்னால் இந்த முனையில் உணர முடிந்தது.
“...என்ன கவி..” என்றேன்.

“...சிவா....மறுபடியும் சொல்றேன்... நீ தான் நா...நா தான் நீ... நீ வந்து என்னை நம்பனும் சிவா....
யூ ஹேவ் டு பிலிவ் மீ... ஜஸ்ட் கீப் யூர் ட்ரஸ்ட் இன் மீ... உன்னை நீ என் கிட்ட மொத்தமா
விட்டுட்டே சிவா... எந்த மனுஷியும் செய்ய துணியாத...என் அந்தரங்கத்தை உனக்கு காட்ட
தயாராயிட்டேன் சிவா... கணவன் மனைவி என்கிற உறவுக்கு அப்பால இருக்கற உறவுக்கு நாம
போயிட்டோம் சிவா.. வி ஆர் த லக்கியஸ்ட் பெர்சன்ஸ் இன் த வொர்ல்ட்...” என நிறுத்தினாள்...

நான் மவுனமாக என்ன சொல்ல போகிறாள் என காத்துக் கொண்டிருந்தேன்...

“..சிவா யூர் ஆர் எ சைல்ட்...ஒரு வகையில் எனக்கு சிறு பிள்ளை.... நான் பெத்தெடுக்காத மகன்...
கள்ளம் கபடமற்ற நல்ல மனசுள்ள பையன்.... உன்னை பாதுகாக்கறது என் பொறுப்பு சிவா...
ஐ டோண்ட் வாண்ட் டூ லூஸ் யூ...” என நிறுத்தி.... என மவுனத்தை கேட்டப்படியே தொட்ரந்தாள்.

“....இந்த உலகம் ஓநாய்கள் நிறும்பிய உலகம் சிவா... நல்லவர்களை ஆடுகளா
நினைத்து... இரையாக நினைத்து... கடித்து கொதறி நாசமாக்க ஓநாய்கள் காத்துக் கொண்டிருக்கிறது
சிவா.... யாரையும் நம்பக்கூடாது சிவா.... நல்லவங்க உலகத்துல இருக்கறது ஓநாய்களுக்கு
பிடிக்காது... அதுதான் அவங்களுக்கு இரை...”
நிறுத்தி மீண்டும் தொடர்ந்தாள்....
“...நீ ஒரு குட்டி ஆடு சிவா.... அதை புரிஞ்சிக்கோ... இப்போ தாயில்லாம தனியா காட்டுக்குள்ள
சுத்தற ஒரு ஆடு... ஓநாய்கள் காத்துகிட்டிருக்கு சிவா... பாதுக்காக்க நா உன்கூட இப்ப
வேற இல்ல... அது ஓநாய்களுக்கு தெரியும் சிவா... அதனால ஜாக்கிரதையா இரு சிவா....வேலை...
வேலை விட்டா வீடுன்னு ஜாக்கிரதையா இரு சிவா... பாதைமாறினா... எது தப்பு எது
சரின்னு தெரியாம ஏதோ பண்ணி ஓநாயககிட்ட மாட்ட போற அபாயம் இருக்கு சிவா... ஜஸ்ட்
என்னை பத்தி நினைச்சு பாரு... உன் மகனை அவினாஷை பத்தி நினைச்சு பாரு...மகள் அபினயாவை
பத்தி நினைச்சு பாரு... யூ வில் பீ சேஃப் சிவா... நீ புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன் சிவா...”
என நிறுத்தினாள்.

கவிதா என்ன சொல்ல வருகிறாள் என எனக்கு புரிந்தது...
“...பயப்படாத கவி.... நா வேணாம் உனக்கு சின்ன பையனா இருக்கலாம்...ஆனா
வெளியுலகத்துல நான் பெரியவன்... எனக்கும் என் குடும்பத்துக்கும் ஒரு பாதகம்
வர்ற மாதிரி எதுவும் செய்யமாட்டேன் கவி... நீ சொல்ற மாதிரி ஜாக்கிரதையா இருப்பேன் கவி...
பிராமிஸ் கவி..யூ கேன் பிலிவ் மீ...” என அவளுக்கு ஆறுதல் சொல்லி உறுதியளித்து.

சில பல கொஞ்சல் கெஞ்சல் பேச்சுகளுக்கு பின் தொடர்பை துண்டித்தேன்.

அப்போது எனக்கு தெரியாது...ஆனால் இப்போது சொல்லலாம்...
நான் என்னையறியாமல்...
கவிதாவின் உள்ளர்த்த எச்சரிக்கையை மீறி...
நேராக ஓநாய்களின் கூட்டத்துக்குத்தான் செல்வேன் என்று..

கிளம்பி அலுவலகம் சென்று சுறுசுறுப்பாக அன்றைய அலுவல்களை காலை முடிவதற்குள்
சீக்கிரமாக முடித்துவிட்டு... மதியம் வீட்டுக்கு செல்ல நினைத்த நேரத்தில்...

மதனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது...
“..டேய் சிவா...” குதூகலமாக கூப்பிட்டான்.
“..சொல்லு மதன்..”
"...இன்னிக்கு சுமன் பர்த்டே...இன்னிக்கே பார்ட்டி வைக்கறேன்னு அடம்பிடிக்கிறான்...
வீக் டேஸ்னு சொன்னா கேட்க மாட்டேங்கறான்...சோ நீ மூணு மணிக்கு மேல ஃபிரியா இருந்தா
கச்சேரி வெச்சுக்கலாம்... வீட்டுக்கு சீக்கிரமா போய்டலாம்.... என்ன சொல்ற...சுமன்
பக்கத்துலத்தான் இருக்கான்...”
என் மனம் கூத்தடிக்கப்போகும் நிலைக்கு வந்துவிட்டது..
“....ஆஹா....கவிதா அஞ்சு நாலு ஊர்ல இல்ல மச்சி...வீக் டேஸ் எல்லாம் வீக் எண்டுதான் எனக்கு....
இப்பவே ஃபிரிதான்... சுமன் கிட்ட சொல்லிடு...”
“...அவன்கிட்ட கொடுக்கறேன்...உன்னை இன்வைட் பண்ணனுமா...” சில நொடிகளுக்கு பிறகு சுமனின் பேச்சு கேட்டது...
“..சிவா...என் கெஸ்ட் அவுஸ் ஃபிளாட்டுக்கு மூணு மணிக்கு வந்துறு... நான் எல்லாத்தை
ஏற்பாடு பண்ணனும்... மதனோட வந்தடு...” என்று சுமன் சொல்ல.
“...மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே மச்சி... கண்டிப்பா வந்தர்றேன் மச்சி...
டோண்ட் வொர்ரி..” என சொல்லி அழைப்பை துண்டித்து, நேராக மதன் வீட்டுக்கு சென்றேன்.

சென்னையில் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் அரண்மனை போன்ற மதன் வீட்டினுள் நான் நுழைய,
மதனின் அக்கா மாதவி வரவேற்றாள்...
“...வா சிவா...”
“...எப்ப வந்தீங்க அக்கா...” என்றேன்.
“..நேத்துதான் வந்தேன்... கவிதா எப்படியிருக்கா....அவ ஃபேமிலி டூர் போயிருக்கா
போலிருக்கு..” என்றாள்.
“...ஆமா அவங்க சைடு ஃபேமிலியோட ஒரு அஞ்சு நாள் டூர் போயிருக்கா அக்கா...” என்றேன்.
“... லவ்லி...அவளுக்கு நல்லது... ஆமா ஃபிரண்ட்ஸ் எல்லோரும் கல்யாணம்
பண்ணிகிட்டாங்க... மதன் மட்டும் கல்யாணம் பண்ணிக்காம ஏதோ ஏதோ காரணம் சொல்லிகிட்டு
சென்னையில் தனியா இருந்துட்டு திரியறான்... நீங்கெல்லாம் எடுத்து சொல்லக்கூடாதா...” என அவளின்
வழக்கமான கவலையை சொல்ல ஆரம்பிக்க..

“...அது அப்புறம் சாவகாசமா சிவா கிட்ட சொல்லுங்க... இப்ப எங்களுக்கு முக்கியமான
வேலை இருக்கு...நாங்க கிளம்புறோம்..” என மதன் இடைமறித்தான்.
“.,..ஆமா... இப்படி குடிச்சிக்கிட்டு கும்மாளம் போட்டுகிட்டு எல்லாத்தையும் கெடுத்துகிட்டு
கெடங்க... சொல்லி கேட்கற வயசா இது... கழுதை வயசாயிடுச்சி எல்லோருக்கும்...”
என அவள் சொல்லிக் கொண்டிருக்க..... அதனை பொருட்படுத்தாமல் நானும்
மதனும் கிளம்பினோம்.

இங்கே மதனின் அக்கா மாதவி பற்றி சொல்லியே ஆக வேண்டும். என் மீதும் கவிதா
மீதும் அளவில்லா அன்பு வைத்திருப்பவள். தன் குடும்பத்தின் அங்கத்தினராக பாவிப்பவள்.
கோவையில் பெரிய பணக்கார குடும்பத்துக்கு வாழ்க்கைப் பட்டவள். குழந்தை குட்டியென்று
சந்தோஷமாக வாழ்பவள். அவளுக்கு இருக்கும் ஒரே வருத்தம் மதன் திருமணம்
செய்துக் கொள்ளவில்லை என்பதுதான். மதனுக்கு அறிவுரை சொல்லச் சொல்லி என்னை
உயிரை வாங்கிக் கொண்டிருந்தாள்.

நானும் மதனும் சுமனின் கெஸ்ட் அவுஸ் ஃபிளாட்டுக்கு சென்றோம். மதன் வசிக்கும்
பகுதியில் ஆற்று மற்றும் கடலோர பகுதியில் அமைந்த பெரிய அடுக்குமாடி குடியிருப்பில்
அமைந்திருந்தது சுமனின் கெஸ்ட் அவுஸ்.

அங்கே எல்லாமே தயாராக இருந்தது. மதுபான வகைகள் உணவு வகைகள் எல்லாம்
தாரளாமாக பரப்ப பட்டிருந்தன. அங்கே நாங்கள் ஆறு பேராக இருந்தோம். என்னைத்தவிர
எல்லோரும் பெரும் பணக்காரர்கள். செல்வச் செழிப்பில் கொழிப்பவர்கள். வாழ்கையில்
அனைத்தும் கிடைத்து அனுபவித்தவர்கள். வாழ்கையின் அனைத்து வித்தியாசத்தையும்
பார்த்தவர்கள். அவர்களுக்கு கிடைக்காமல் போனது ஓன்றுமில்லை.

அவர்களை பார்க்கும் போது என் மாமனாரிடம் வரதட்சனை கேட்டு அவர்களை போல
வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என் மாமனாரிடம் இல்லாத பணமா..
அவரும் இவர்களின் ரகம் தானே என என் மனம் நிமைக்கும்.

அங்கே மனதில்
பஞ்சப் பாட்டு பாடிக் கொண்டிருக்கும் என்னுடன் என் ஆருயிர் நண்பன் மதன், அவனை
பற்றி ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்,

அடுத்து சுமன். கேரளாவிலிருந்து வந்து சென்னையில் வியாபாரம் செய்து பணக்கார
குடும்பத்து பையன். சென்னையில் அவன் குடும்பத்துக்கு சொந்தமாக இருக்கும் வீடுகளின்
எண்ணிக்கை அவனுக்கே தெரியாது. மேலும் கேரளாவிலும் சொத்துக்கள் நிறைய இருந்தன.

அடுத்து நாச்சியப்பன். கோவலன் கண்ணகி காலத்திலிருந்து கடல் கடந்து வியாபாரம் செய்த
இனத்திலிருந்து வந்தவன் நான் என்று சொல்லுவான். பணமும் சொத்தும் கொட்டி
கிடக்கின்றது அவனுக்கு. எண்ணுவதற்கே கணக்கு பிள்ளைகள் அவனுக்கு தேவைப்பட்டது.

அடுத்து முருகேசன். தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்து வந்து
வியாபாரத்தில் கொடிக் கட்டி கோடிஸ்வர குடும்பத்தில் பிறந்து செல்வ சீமானாக இருப்பவன்.

அடுத்து ராம் என்கிற பலராம நாயுடு. வட்டி தொழில் விடும் கொல்டி. சொல்லவா வேண்டும்
அவன் பணக்காரத் தன்மையை.

அடுத்து கவுதம். மார்வாடி. எல்லா வியாபாரத்திலும் வியாபித்திருப்பவன். காசு
அவனிடம் மண்டியிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மதனை தவிர அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பெரிய இடத்து பெண்கள்.
பணக்கார அழகும் தேஜஸீம் இருக்கும் பெண்கள். பியூட்டி பார்லரால் இருபத்தி நான்கு
மணிநேரமும் அழகாக இருப்பவர்கள்.

ஏழைகள் ஒரு நாளேனும் அனுபவிக்க துடிக்கும் தசைகளை உடையவர்கள்

இந்த பணக்கார கும்பலில் பஞ்சப் பரதேசியான என்னை எப்படி சேர்த்தார்கள் என கேள்வி எழலாம்.
எல்லாம் மதனால் தான். நானும் அவரும் ஆருயிர் நண்பர்கள். அவன் நண்பர்களான அவர்கள்
என் நண்பர்களாகிவிட்டார்கள். மதனில்லையென்றால் என்னை சீண்ட மாட்டார்கள்.
ஆனாலும் என் மாமனார் அவர்களை போல பணக்காரர் என்பதும்... என் பணி வேலை
நிமித்தம் எனக்கு இருக்கும் திறமை அவர்களை பொறாமை கொள்ள வைத்திருந்தது என்பது
எனக்கு தெரியும். அவர்களுக்கும் எனக்கும் ஒரு இனம் புரியாத தூரம் இருந்தது. ஆனால் நண்பர்களாக
பழக்கிக் கொண்டிருந்தோம்.

சுமன் ஐஸ் கேக்கை வெட்டினான். வாழ்த்துக்கள் பறிமாறப் பட்டன. கூச்சல் தொடங்கியது..
அவரவருக்கு பிடித்த சரக்குகளை ஊற்றி சீயர்ஸ் சொல்லப்பட்டது. நான் வோட்காவை
லைம் ஜூஸில் கலந்து இருண்டு சிப் சாப்பிட்டு சைட் டிஷ்ஷில் கையை வைத்தேன்..
. பேச்சு எங்கு எங்கோ சென்றது.

கவுதம் சினிமா ஃபைனான்ச் செது வட்டிக்காக பிரபல சினிமா நடிகையை போட்ட கதையை
சொல்லிக் கொண்டிருந்தான். அப்படியே பேச்சுக்கள் காமத்தை உடலுறுவை நோக்கி போய்க்
கொண்டிருந்தது.

சுமன் மற்றவர்களிடம் கிசுகிசுப்பாக பேசுவதை பார்த்தேன். என்ன பேசுகிறார்கள் என சரியாக
கேட்கவில்லை . எல்லோரும் பேசுகிற விஷயம் எனக்கு தெரியக்கூடாது என்பதை போல
பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென எல்லோரும் பால்கனிக்கு சென்று ஏதோ
ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதைக்கு அப்போது திரும்பி என்னை பார்த்து
பேசிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது.
என்னிடம் மறைக்குமளவுக்கு அப்படி எண்ணத்தான் பேசுகிறார்கள் என நினைத்து
புழங்கிக் கொண்டிருந்தேன்.

நான் அவர்களை குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் எல்லோரும்
என்னிடம் வந்தார்கள்...
எல்லோர் முகத்தில் மர்மமான ஒரு புன்சிரிப்பு
”...சிவா...உன்னையையும் எங்க குரூப்புல சேர்த்துக்க முடிவு செஞ்சிட்டோம்...” என்று மதன்
என்னை பார்த்து ஒரு ரகசிய புன்முறுவலுடன் சொன்னான்.
நான் முழித்தேன்..
“...அப்போ நா இப்ப வரைக்கும் நா உங்க கூட இல்லையா..” என குழப்பமாக கேட்டேன்.
”...எங்க கூடத்தான் இருக்கே...ஃபிரண்ட்ஸா.... ஆனா இது வேற மாதிரி... வேற
குரூம்...வேற எண்டர்டெயின்மெண்ட்...” என்றான் சுமன்.
“...அப்போ எனக்கு தெரியாம வேற ஒன்னு ஓடுதா...” என்றேன் கொஞ்சம் எரிச்சலுடன்.

எல்லோரும் அமைதியா என்னை பார்த்தார்கள்...
நாச்சியப்பன் பேச ஆரம்பித்தான்...
“..ஒரு வகையில ஆமாம் சிவா....ஆனா எங்களுக்கு நாங்க செய்யறது உனக்கு புடிக்குமா...
புரிஞ்சுக்குற பக்குவம் இருக்குமா... இல்லை தாங்கற சக்தி இருக்குமா... ரகசியத்தை காப்பத்துற
பவன் உன்கிட்ட இருக்குமா... உனக்கு ஏத்ததுதானா... என எங்களுக்குகெல்லாம் ஒரு டவுட்
இருந்துகிட்டே இருந்துச்சு... சின்ன பையன் பாரு நீ... அதான்..” என்றான்.
சின்ன பையன் என்றவுடன் எனக்கு கோவம் வந்திருச்சு...
“...மாடு மாதிரி வளர்ந்து உங்க எல்லோர்கிட்டேயும் சுத்திகிட்டு இருக்கேன்...சின்ன பையன்
சொல்றீங்க...” என எரிந்து விழுந்தேன்.

மதன் சமாதானம் செய்தான்
“..சரி விடு... இப்ப நாங்க சேர்த்துக்க முடிவு செஞ்சிட்டோம்.. நீ ஜாய்ன் பண்ண ஆசையா...” என
மதன் கேட்டான்.
“...இது என்ன கேள்வி... ஐயாம் ரெடி...” என்றேன்.

சுமன் தொடர்ந்தான்.
”,,,ஓ.கே. சிவா... முதல் கண்டிஷன்... இனிமே நீ செய்யப்போற ஓவ்வொரு விஷயத்தையும்
யார் கிட்டேயும் சொல்லக்கூடாது... உயிரே போனாலும் கூட.. இரண்டாவது கண்டிஷன்...ஜாய்ன்
பண்ண பிறகு எனக்கு பிடிக்கல நான் விலகிக்கறேன்னு சொல்லக் கூடாது... ஒரு தடவை
சேர்ந்துட்டா அதுல தொடர்ந்துகிட்டேதான் இருக்கனும்...போட்ற எல்லா திட்டத்தலயும்
உன் பார்ட் இருந்துகிட்டேதான் இருக்கனும்
.... மூணாவது கண்டிஷன் நம்ம வீட்டு ஆட்களை பெண்களை இதில் சம்பந்தப்படத்தவே கூடாது..
இது எல்லாத்துக்கும் ஓத்துக்கிட்டா நீ ஜாய்ன் பண்ணலாம்..” என்று கவனமாக சொன்னான் சுமன்.

ஏதோ ஒரு விபரீத விளையாட்டை விளையாரும் வட்டம் என என் மனம் எச்சரித்தாலும்... இது
ரகசியமாக நடக்கும் ஒரு தப்பு என்று என் மனம் குதூகலமடைந்தது...

“...சரி...உங்க கண்டிஷன்களுக்கெல்லாம் ஓத்துக்கறேன்... நா ஜாய்ன் பண்ண ரெடி..
என்ன குரூப்...” என்றேன் ஆவலாக.
‘..முதல் கண்டிஷன் மீற மாட்டேன் சத்தியம் செய்..” என்றான் சுமன்.
“..சத்தியம்..” என்றேன் தீர்க்கமாக.
“...ரைட் மனசுல வெச்சுக்கோ... கண்டிஷன் மீறவே கூடாது... மீறின குரூப் என்ன செய்யும்னு..
எங்களை பார்த்தா உனக்கு தெரியும்ல...” என்றான் மிரட்டும் தொனியில்.
“...சத்தியமா மீற மாட்டேன்.... சேர்றதுதான் எனக்கு ஆசை..” என்றேன் ஏதோ சாதிக்கும் நோக்கத்துடன்.

சுமன் நாச்சியப்பனை அர்த்தத்துடன் பார்த்தான்...
நாச்சியப்பன் மெதுவாக பேச ஆரம்பித்தான்...
அவன் சொல்ல சொல்ல.... எனக்கு குலை நடுங்கியது...

வேதங்கள் லோகத்தில் ஏழு உலகங்கள் இருப்பதாக சொல்கிறது.... ஏழாவது உலகமான
பாதாளம் மோசமானது என்கிறது... ஆனால் அதையும் தாண்டி மோசமான எட்டாவது உலகம் இருப்பது
அப்போதுதான் எனக்கு தெரிய ஆரம்பித்தது..
Reply


Messages In This Thread
RE: மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 04:21 PM



Users browsing this thread: 29 Guest(s)