02-01-2019, 07:02 PM
ஜீரோ டிகிரியைத் தொட்டது... உறைந்தது கொடைக்கானல்!
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தற்போது காஷ்மீரைப்போல காட்சியளிக்கிறது. இப்போது நீங்கள் கொடைக்கானலுக்குப் போனால் புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது என பாடத் தொடங்கிவிடுவீர்கள். அந்தளவுக்குப் பனிப் பொழிவு இருக்கிறது.
வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும். கடந்த ஆண்டு இதே நாளில் 7 டிகிரி வரை வெப்பநிலை குறைந்தது. ஆனால், தற்போது ஜீரோவைத் தொட்டிருக்கிறது.
அப்சர்வேட்டரி பகுதியில் இன்று ஜீரோ டிகிரி பதிவாகியுள்ளது. இன்று இரவு மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. புல்வெளிகள் வெண்மையாகப் பனி படர்ந்து உறைந்து கிடக்கின்றன. கடுமையான குளிர் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தச் சூழலை மிகவும் ரசிக்கின்றனர். மதியம் 2 மணி வரை வெயில் அடிக்கிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் குளிர் நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவத் தொடங்கிவிடுகிறது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தற்போது காஷ்மீரைப்போல காட்சியளிக்கிறது. இப்போது நீங்கள் கொடைக்கானலுக்குப் போனால் புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது என பாடத் தொடங்கிவிடுவீர்கள். அந்தளவுக்குப் பனிப் பொழிவு இருக்கிறது.
![[Image: IMG-20190102-WA0096_16086.jpg]](https://image.vikatan.com/news/2019/01/02/images/IMG-20190102-WA0096_16086.jpg)
![[Image: IMG-20190102-WA0087_16110.jpg]](https://image.vikatan.com/news/2019/01/02/images/IMG-20190102-WA0087_16110.jpg)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)