பூங்காற்று திரும்புமா....
#1
அக்டொபர் 2021.

"சுதா.... இப்படி ஒரு பாயசத்தை எங்க அம்மா கூட செஞ்சதில்லை. பின்னிட்டே"

"தாங்க்ஸ் அத்தான்" என்றேன். மனதெல்லாம் நிறைவாக இருந்தது.

"இனி உன் சமையலை தான் சாப்பிடணும். எக்ஸ்டரா 2 மணி நேரம் வாக்கிங் & ஜிம் போகணும் போல... அருமையா சமைக்கிறே சுதா"

வெட்கம் பற்றிக்கொள்ள, சிறு முன்னகையோடு "இன்னும் கொஞ்சம் பாயசம் கொடுக்கட்டா அத்தான்" என்று கேட்டேன்.

"வயசு 50 ஆயிடிச்சு சுதா. அளவோட நிறுத்திக்கிறது நல்லது. சேகருக்கு கொடேன்" என்றார் என் அத்தான் ரகு. என் கணவர் சேகரின் அண்ணன். குடும்பத்தின் மூத்தவர்.

"நான் தனியா டம்ளர்ல குடிப்பேன் அண்ணா." என்றார் என்னவர்.

"நீயும் சாப்பிட உட்காரு சுதா" அத்தான் அக்கறையோடு சொன்னார்.

"அண்ணா இந்த கழுதைக்கு டைனிங் டேபிள் எல்லாம் சரி வராது. தரையில குத்துக்கால் போட்டு உட்கார்ந்து ஆற அமர சாப்பிடுவா. பொறந்தது தான் பட்டிக்காடுன்னா.... சென்னையில வாழ்க்கைப்பட்டு இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் மாறல" என்று கிண்டல் செய்தார் என்னவர்.

"ச்ச ச்ச....  நல்ல பழக்கம் டா. பாவம் இவ்ளோ சமைச்சி இருக்கா. விருந்துன்னு தான் சொல்லணும். அவ சவுரியத்துக்கு பொறுமையா சாப்பிடட்டும். நான் எழுந்திரிக்க போறேன் சுதா.... இவனுக்கு என்ன வேணும்னு கவனிச்சிட்டு நீயும் போயி சாப்பிடு. மணி 1.45 ஆகுது பாரு" அத்தானின் அக்கறை என்னை உணர்ச்சிகரமாக்கியது.

"சரிங்க அத்தான்" என்று சொல்லிவிட்டு நான் அடுப்படிக்கு நகர்ந்தேன். இருந்தாலும் அவர்கள் பேசிக்கொள்வது என் காதில் கேட்டது.

"இது என்னண்ணா பிரமாதம். புரட்டாசி முடியட்டும். நான்-வெஜ் சமைப்பா பாருங்க.... அசந்துடுவீங்க"

"அதுக்கென்னடா... இனி சுதா கையாள தான சாப்பாடு. தங்கமான பொண்ணு"  

"ஆமாண்ணா. இல்லாத குடும்பத்துல இருந்து வந்தவ தான். அவ வந்த பின்னாடி நான் நல்லா இருக்கேன். ரொம்ப பொறுமை. அதிர்ந்து பேச மாட்டா. ரொம்ப பொறுப்பு. என்ன ஒன்னு வீட்டுக்குள்ளேயே செக்கு மாடாட்டும் இருப்பா"

"குடும்பப்பொண்ணுன்னா அப்படித்தானே இருக்கணும். சுதா கிடைச்சது உன் யோகம் டா சேகர்"

"நிச்சயமாண்ணா."

 "சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி வந்திருந்தாலும், சாமார்த்தியமா குடும்பம் நடத்தி, ரெண்டு பொண்ணுங்களையும் நல்லா வளர்த்து சமர்த்தா ஒரே கல்லுல 2 மங்காவா ஒரே குடும்பத்துல அண்ணன் தம்பிக்கு கட்டிக்குடுத்திருக்கா பாரேன். வெல் டன்."

"எனக்கும் முதல்ல தயக்கம் இருந்ததுண்ணா. மூத்தவளுக்கு இளைய பையனையும், இளையவளுக்கு மூத்த பையனையும் கேட்டாங்களேன்னு...."

"தலைச்சன் பையனுக்கு தலைச்சன் பொண்ணை கட்ட மாட்டாங்கடா"

"அதான் சுதாவும் சொன்னா... அது மட்டும் இல்ல.... எங்க லெவெலுக்கு அது ரொம்பவே பெரிய சம்பந்தம். மலேஷியாவுல வாக்கப்படுத்துங்களேன்னு ஒரு பயம் வேற..."

"நான் தான் சொன்னேனே....  எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட குடும்பம். என் மாமனாருக்கு ரொம்ப குளோஸ் பிரென்ட் உன் மாப்பிளைங்களோட தாத்தா..."

"நீங்க சொன்னதால தானே அண்ணா பொண்ணுங்களை கொடுத்தோம். இதுங்க பிரசவத்துக்கு போறதுக்கு தானே நாங்க பாஸ்போர்ட் வாங்குனதே.... இல்லைனா வாழ்க்கையில பிளைட்டையே பார்த்திருக்க மாட்டோம். மிஞ்சிப்போனா வடக்கே திருப்பதி வரை போயிருக்கோம். உங்களை மாதிரி உலகம் சுத்துனது இல்லையே. எங்களுக்கு என்ன தெரியும்?"

"ம்... எப்படியோ... லாக் டவுன்ல செலவில்லாம கல்யாணத்தை.... அதுவும் 2 பொண்ணுங்களுக்கும் ஒரே நேரத்துல முடிச்சிட்டீங்க. சரண்யா மட்டும் போன வருஷம் உயிரோட இருந்திருந்தா..... நக்கல் பண்ணியே ஒரு வழி பண்ணியிருப்பா..."

"அண்ணி உயிரோட இருந்த வரை எங்களை மனுஷங்களாவே மதிக்கலையே அண்ணா"

"அவ குணம் அப்படி டா.... ரொம்ப வசதியான குடும்பம் இல்லையா அவளது.... நான் சி.ஏ. படிச்சவன்குறதால அந்த குடும்பத்துல எனக்கு மரியாதை. இல்லைனா......"

சிறிது நேரம் அமைதி நிலவியது. நான் கிச்சனில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.

"ஆனா ஒன்னு சேகர்..... நினைச்சுப்பார்த்தா என்ன வாழ்ந்தேன்னு தெரியல டா"

"என்னண்ணா இப்படி சொல்லுறீங்க. உங்க மாமனார் பிசினெஸ் இன்னைக்கு இவ்வளவு பெருசா 20 நாடுகள்ல இருக்குன்னா நீங்க தானே காரணம்"

"அது professional life டா. நீ உன் பேக்டரியில இப்போ மேனேஜர் பதவியில் இருக்க. அது மட்டும் தானா உன் வாழ்க்கை"

"அதை விடுங்க.... நம்ம கௌதம் அமெரிக்காவுல எம்.பி.ஏ. முடிக்கப்போறான். இதெல்லாம் நான் கனவுலயும் நினைக்க முடியாத உயரம் ணா" 

"சேகர்.... என் காலத்துல ரொம்ப சீக்கிரம் சி.ஏ. பாஸ் பண்ணவன்னு எனக்கு நல்ல பேரு. 25 வயசுல கல்யாணம். மாமனார் மச்சான்கள் எல்லாம் அவ்வளோ மரியாதை கொடுப்பாங்க. நீ சொன்னா மாதிரி அவங்க பிசினஸ்ஸை இந்த 25 வருஷத்துல 200 மடங்குக்கும் மேலே வளர்த்துட்டேன். எல்லாம் சரி..... குடும்ப வாழ்க்கை?!"

"அண்ணா.... அண்ணி இருந்தவரை..."

"அவளை குறை சொல்லலை சேகர். அவ கையாள சமைச்சு கொடுத்ததே இல்லை. அவ அம்மா இருந்த வரை அவங்க சமையல் தான். அவ 2 அண்ணிகள்ல ஒருத்தி சமைப்பா. அப்புறம் வசதி பெருக... சமையல்காரி கைமணம் தான் தெரியும். சுதா மாதிரி ஹோம்லி பொண்டாட்டி, மெனக்கெட்டு சமைச்சி வாய்க்கு ருசியா சாப்பிடுறது தனி சுகம் டா. சுதாக்கு என்ன வயசிருக்கும்?"

"40 முடிஞ்சி 3 மாசம் ஆகுது."

"ரொம்ப சின்ன வயசுலேயே கல்யாணம் ஆயிடிச்சு இல்லை"

"ஆமாண்ணா 18 வயசு தான் அப்போ சுதாக்கு"

"அதுவே  பெரிய வரம் இல்லையா. எனக்கும் சரண்யாக்கும் 4 மாச இடைவெளி தான். அவளும் பல ஊரு சுத்திப்பார்த்தவ. உனக்கும் சுதாக்கும் 8 வருஷ இடைவெளி. அதுவும் 18 வயசு பொண்ணு.... இன்னமும் புதுப் பொண்ணாட்டம் இருக்கா பாரு. இன்னமும் ஒரு இன்னசன்ஸ் இருக்கு அவ கிட்ட. இந்தகாலத்துல பசங்க நிறைய படிச்ச தன் வயசு பொண்ணா தேடுறாங்க. நான் என் சொந்த அனுபவத்துல சொல்றேன்.... புருஷனை விட 2 படியாவது பொண்டாட்டி கீழ இல்லைனா.... வாழ்க்கை இனிக்காது சேகர்."

"நம்ம மாப்பிள்ளைங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் வயசு வித்தியாசம்  நிறைய இருக்கேன்னு தோணும்..."

"அப்படி தோணுனா, உன்னையும் என்னையும் கம்பேர் பண்ணிக்கோ. 8 வயசு வித்தியாசத்துல சின்னப்பொண்ணா வெகுளியா பார்த்து கட்டுனே. இன்னைக்கும் அவ இனிக்கிறா இல்லையா..."

"ஆமாம் அண்ணா"

"அதான் டா சொல்றேன்"

"சரிண்ணா. புரிஞ்சிது."

"உன் வீட்டுல மாடி கட்டுறதை பத்தி என்ன முடிவெடுத்து இருக்கீங்க"

"இருங்கண்ணா சுதாவை கூப்பிடுறேன்"

"விடுறா.... அவ சாப்பிடட்டும்"


"ஒரு நிமிஷம்ணா.... ஏய் சுதா (சத்தமாக).."


[Image: 99e6e740-b746-417c-8489-364793d27932_l.jpg] 

"இதோ வந்துட்டேங்க" இதுவரை அவர்கள் பேசியது காதில் விழுந்திருந்தாலும், நல்ல குடும்பப்பெண்ணுக்கு அழகாய், கேட்காதது போல இருந்துவிட்டு கூப்பிட்ட உடன் வந்தேன். சாப்பிட்டு முடிக்கவில்லை என்பதால் எச்சில் கையை அவசர அவசரமாக கழுவி விட்டு, புடவை முந்தானையில் துடைத்தபடி, கால் கொலுசுகள் ஜதி பாட ஓட்டமும் நடையுமாக வந்தேன்.

"இன்னுமாடி சாப்பிட்டு முடிக்கலை..." வழக்கமான அதட்டலோடு என்னவர் கேட்க, 

"முடிக்கப்போறேங்க" என்றேன்.

"சொன்னேன் இல்ல..." அத்தான் குறைபட்டுக்கொண்டார்.

"பரவாயில்லை அத்தான்..."

"ஒன்னும் இல்ல சுதா, உனக்கு இந்த வீடு சௌரியமா இருக்கில்ல"

"என்ன அத்தான் இப்படி கேட்குறீங்க. அரண்மனை மாதிரி இருக்கு" - நாங்கள் 15 வருஷத்து முன்னர் வீடு கட்ட மனை வாங்கியபோது அருகில் அடுத்தடுத்து 3 மனைகளை வாங்கிப்போட்டார் அத்தான். நாங்கள் 1 தளத்துடன் வீடு கட்டவே சிரமப்பட்டபோது  கிட்டத்தட்ட பாதி பணம் அத்தான் கொடுத்தது தான். 3 வருஷத்துக்கு முன்னர் சரண்யா அக்கா (அத்தானின் மனைவி) இறந்து விடவே, அத்தானுக்கு ஊரோடு வந்துவிட வேண்டும் என்ற நினைப்பு வந்துவிட்டதாம். 2 வருஷத்துக்கு முன் (2019ல்) இந்த வீட்டை கட்டத்தொடங்கினார். நடுவில் கோவிட் லாக் டவுன் காரணத்தால் சற்று தாமதம். சென்ற மாதம் (ஆவணி மாதம் 2021) தான் கிரகப்பிரவேசம். அத்தான் மனைவியை இழந்தவர் என்பதாலும், ஹோமத்தில் தம்பதி சமேதராக உட்காரவேண்டும் என்பதாலும் என்னையும் என் கணவரையும் முன்னின்று நடத்தச் சொன்னார். பின்னர், எங்களை இங்கேயே குடி வந்துவிடும்படி சொல்ல, மறுக்க முடியவில்லை. நாங்களும் இந்த பெரிய வீட்டிற்கு குடி வந்து 1 மாதம் ஆகிறது. 

"அந்த (எங்கள்) வீட்டுக்கு மாடியில ஒரு போர்ஷன் கட்டிடலாம் தானே" என்று கேட்டார் அத்தான்.

"அத்தான்.... வந்து..."

"தயக்கம் இல்லாம சொல்லு சுதா"

"இல்ல.... டிவி சீரியல்கள் எடுக்குறவங்க நம்ம வீடு மாதிரியான சின்ன வீடா இருந்தா ஷூட்டிங்கிற்கு கேட்குறாங்களாம். தினப்படி ஷூட்டிங் நடக்கும் நல்ல வருமானம் வரும்னு சொல்றாங்க."

"நல்ல ஐடியா தான். எவனுக்கோ குடியிருக்க வாடகைக்கு விட்டுட்டு, அவன் நல்லவனா கெட்டவனான்னு கவலைப்படுறதுக்கு... இது நல்ல யோசனை. வெரி குட் சுதா"

நான் புன்னகைத்தேன்.

"அந்த விஷயத்தையும் சொல்லுடி" என்னை கிண்டிவிட்டார் என்னவர்.

"என்ன விஷயம்? புதிர் போடுறீங்க ரெண்டு பேரும்" 

நான் சற்று தயங்கி.... "வந்துங்க அத்தான்.... உங்களுக்கும் சின்ன வயசு தான..."

"ம்.... 50 வயசை சின்னதுன்னும் சொல்லலாம் பெருசுன்னும் சொல்லலாம். அரசியல்ல இருந்தேன்னா - நானும் இளம் தலைவர் தான்... ஏன் கட்சி ஏதும் ஆரம்பிக்கப்போறியா சுதா"

"ஐயோ.... இல்லீங்க அத்தான்..... வந்து..... உங்களுக்கு ஒரு துணை...." என்னை விட 10 வயது பெரியவர். படிப்பிலும், அந்தஸ்திலும் நானெல்லாம் யோசித்துப்பார்க்க முடியாத அளவிற்கு பெரியவர். நான் என்ன சொல்வதென்று தெரியாமல் மென்று முழுங்கினேன்.

"என்ன சொல்ல வர்றேன்னு புரியுது" அழுத்தமாக சொன்னார் அத்தான்.

அமைதியாக இருந்தார்.

"அண்ணா.... உங்க வயசெல்லாம் ஒரு வயசே இல்லண்ணா. நல்ல பொண்ணா அமைஞ்சா இன்னும் நிறைய அனுபவிக்கலாம்" என்னவர் கடைசி வார்த்தை சொன்னபோது எனக்கு சற்று கூச்சமாக இருந்தது. 

"ரெண்டு பிரச்சனை இருக்குடா சேகர்"

"என்னண்ணா"

"முதல்ல சொத்து. பிசினெஸ்ல என் பங்கை வித்து எல்லாத்தையும் துபாய்ல இன்வெஸ்ட் பண்ணிட்டேன் தான். கௌதமுக்கு எங்க பிஸினெஸ்ல இண்ட்ரெஸ்ட் இல்லாததால. ஆனால், நாளைக்கு அவன் படிப்பை முடிச்சதும் பிசினெஸ் பண்ணுறதா இருந்தா என் பணம் தான் முதலீடா ஆகும். நீங்க சொல்ல வர்றது எனக்கு இன்னொரு கல்யாணம். சட்டப்படி, வர்றவ என் மகன் கௌதமுக்கு பங்காளி. எனக்கு பின்னாடி கௌதமுக்கு போக வேண்டியதுல சரி பங்கு இவளுக்கும் போகும். "

"ஓ!"

"அந்த காலத்துல ஆம்பளைக்கு என்ன வயசானாலும் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு 20-22 வயசுக்குள்ள இருக்கும். அவ மூலமும் குழந்தை பெத்துக்குவான். நான் சொன்னா மாதிரி பாகம் பிரிஞ்சாலும் ஒரு ஞாயம் இருக்கும். இந்த காலத்துல ரெண்டாம் கல்யாணத்துக்கு வர்ற பொண்ணுக்கும் அது ரெண்டாம் கல்யாணம். எவனுக்கோ பெத்த புள்ளைங்களோட வருவா. நான் உழைச்சு சம்பாதிச்சது.... ஒரு நாள் இல்லைனாலும் ஒரு நாள் அதுங்களுக்கும் போகும் - வர்றவ காலத்துக்கு பிறகு. இல்லையா சுதா"

அட ஆமாம்! படிச்சவர் படிச்சவர் தான். என் கணவர் டிப்ளோமா படித்து படிப்படியாக முன்னேறி இருந்தாலும், இந்த அளவிற்கு நீக்கு போக்கு அவருக்கு தெரியாது.

"ஆ.... ஆமாங்க அத்தான்"

"ம்.... அடுத்த பிரச்சனை என்னன்னு சொல்லு"

"வர்றவங்க எப்படி இருப்பாங்களோ..."

"கரெக்ட். கற்பூர புத்தி உனக்கு சுதா. கேட்டியா சேகர்"

"புரியுதுண்ணா. உங்களுக்கு எப்படிப்பட்ட மாதிரி வேணும்னு சொன்னா...."

"அதெல்லாம் நடக்காதுடா"

"ஏண்ணா இப்படி சொல்றீங்க. ஏய் சுதா சொல்லேண்டி..."

"வந்து அத்தான்.... அவங்க சொல்றா மாதிரி. உங்க எதிர்பார்ப்பை சொல்லுங்க. முயற்சி பண்ணி பார்க்கலாமே..."

சற்று நேரம் என்னை உற்றுப்பார்த்தார் அத்தான்.

"உன்னை மாதிரி வேணும் சுதா" - ஆ! நான் அதிர்வில் வாயை பிளந்தே விட்டேன்.

"இவளுக்கே 2 தங்கைங்க இருக்குது அண்ணா. 4 வருஷம் முன்னாடி தான் கடைசி கழுதைக்கு கல்யாணம் ஆச்சு. இல்லைனா கூட அவளை உங்களுக்கே முடிச்சிருக்கலாம். அந்த ரெண்டும் கூட சுதா மாதிரி சூப்பர் குட்டிங்க." என்னவர் சொன்ன கடைசி வார்த்தை என்னுள் என்னமோ செய்தது.

"சரி. நான் போய் ரெஸ்ட் எடுக்க போறேன். சாயந்தரம் நல்ல சூடா இஞ்சி டீ போடு சுதா" என்று அத்தான் நகர்ந்தார்.

"சரிங்க அத்தான்" என்று இயந்திரத் தனமாக பதில் சொன்னாலும்.... இன்னமும் நான் அதிர்ச்சியில் இருந்தேன்.

அத்தான் மாடி (வீட்டிற்குள்ளேயே மாடிப்படிகள் இருக்கும்) ஏறிப் போனதும்.... "சுதா மாதிரி வேணுமாண்ணா இல்ல சுதாவே வேணுமான்னு கேட்டுட்டு வரவா" என்று என் காதில் என்னவர் கிசுகிசுக்க.... ஒரு வெட்கச்சிரிப்போடு.... "ம்.... என்ன சார்.... என்னை கழட்டி விட்டுட்டு வேற யாரை கட்டிக்க போறீங்க" என்றேன்.

"உன் சொந்தத்துலேயே பல குட்டிங்க இருக்குங்களேடி" என்று என் இடுப்பை கிள்ள....

"உங்களுக்கு வேற வேலை இல்லை..." என்று நான் நகர.....

என்னை பின்னால் இருந்து இருக்க கட்டிக்கொண்டார் என் 48 வயது காளை கணவர்.

"ஐயோ விடுங்க.... நான் இன்னும் சாப்பிட்டே முடிக்கல"

"நாயே.... (அவர் என்னை அடிக்கடி செல்லமாக சொல்வது தான்).... சீக்கிரம் சாப்பிட்டு வா.... மூடாயிடிச்சி..." என்று என் பழுத்த முலைகளை பிசைந்தார். ஐயோ... சேலை வேறு கசங்குகிறது.

"ஆகும் ஆகும்..... பப்பா பாரு. ரெண்டு பொண்ணுங்களுக்கு குழந்தை பிறந்துடிச்சி... நீங்க இப்போ தாத்தா" என்று நாள் சொன்னபோது என் காதுகளை அவர் கடித்தார்.

"அதுக்கென்னடி கழுத" மீண்டும் என் முலைகள் பிசையப்படுகின்றது.

"பாத்திரம் கழுவனும், சுத்தப்படுத்தனும். நிறைய வேலை இருக்கு" சொல்லி முடிப்பதற்குள் என் இடுப்பை கிள்ளிவிட்டார்.

"ஒரு வேலைக்காரி வெச்சிக்கோன்னு சொன்னா கேட்குறீயா" விட்டால் என் கொசுவத்தை எடுத்து விட்டுவிடுவார்.

"வேலைக்காரி இருந்தா இப்படி பிரைவசி கிடைக்குமா" என்று நான் அவர் முகம் பார்த்து குறும்பாக சிரிக்க..... நாங்கள் நின்றுக்கொண்டு இருந்தது ஹாலில். அதன் ஒரு பக்கம் மாடிப்படி. பாதி ஹாலை முதல் மாடியின் பகுதி கூரையாக கொண்டிருக்கும். அதன் மர கைப்பிடியை பிடித்துக்கொண்டு அத்தான் மேலே இருந்து பார்ப்பது, என் கணவருக்கு பின்னால் இருந்த 65" டிவி திரையில் பிரதிபலித்தது. எனக்கு கூச்சமாகி என்னவரை விட்டு விலகி கிச்சனுக்குள் ஓடி விட்டேன். இருந்தும்.... கொலுசு சத்தம் பெரிதாக கேட்டிருக்கும்.
[+] 4 users Like meenafan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
பூங்காற்று திரும்புமா.... - by meenafan - 13-09-2026, 05:24 PM



Users browsing this thread: 4 Guest(s)