Adultery மல்லி என் மனைவி
அந்த நாளுக்குப் பிறகு ராஜீவ் மேல எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது.
ஆனா...
எனக்கு புத்தி வந்ததுன்னு மட்டும் சொல்ல முடியாது.
ஏன்னா, சில பேரோட நல்ல மனசை புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே, நம்ம வாழ்க்கையில அடுத்த பாடத்தை நாமே தேடிப் போயிடுவோம்.

எனக்கும் அப்படித்தான் நடந்தது.

பிரகாஷ்.
கல்லூரி கல்ச்சுரல்ஸ்ல நடந்த ஒரு drama-லதான் அவனோட பழக்கம் ஆரம்பிச்சது. ஆரம்பத்துல சாதாரண friend-ஆ இருந்தவன், கொஞ்சம் கொஞ்சமா என்னோட நெருக்கமானவனாகிட்டான்.

ரொம்ப அன்பா பேசுவான்.
“சாப்பிட்டியா?”
“என்னாச்சு?”
“நீ tired-ஆ இருக்க மாதிரி தெரியுதே.”

சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கவனிப்பான்.
அதுதான் என்னோட பெரிய weakness.

யாராவது என்கிட்ட கொஞ்சம் அன்பா, பாசமா பேசிட்டாலே...
நான் அவர்களைப் பற்றி நல்லவங்கன்னு முடிவு பண்ணிடுவேன்.
அந்த மனிதன் என்ன மாதிரி ஆள்?
அவன் உண்மையாவே என்னை மதிக்கிறானா?
இல்லை அவனுக்கு வேற ஏதாவது intention இருக்கா?
இதைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்.

அதை நான் புரிஞ்சுக்க ரொம்ப நாளாச்சு.


பிரகாஷ் handsome-ஆ இருந்தான்.
Decent-ஆ நடந்துக்குவான். எல்லாரிடமும் friendly-ஆ பேசுவான்.

கல்லூரி drama-ல ஒரு தடவை நாங்க husband-wife-ஆ நடிச்சோம்.
அந்த drama முடிஞ்ச பிறகும் அந்த chemistry எங்களுக்குள்ள somehow தொடர்ந்தது.

முதல்ல bus-லதான் regular-ஆ college போயிட்டு வந்தேன்.
அதுக்கப்புறம் பிரகாஷ்,
“நான் bike-லதான் வரேன். நீயும் என்னோட வந்துடு,”
ன்னு சொல்ல ஆரம்பிச்சான்.


சின்ன விஷயம்தான்னு நினைச்சேன்.
3 நாள் பஸ் போவேன், 2 நாள் அவனோட பைக்ல

அதுக்கப்புறம் அது வழக்கமாகிடுச்சு.
அவன் என்னை pick up பண்ணுவான்.
நான் அவன் bike-ல போவேன்.

அந்த நேரத்தில் ராஜீவ் இதையெல்லாம் கவனிச்சுக்கிட்டிருக்கிறான்னு எனக்குத் தெரியவே தெரியாது.

என் second year முடியற நேரத்துலதான் அந்த சம்பவம் நடந்தது.
அன்று வழக்கம்போல பிரகாஷ் என்னை pick up பண்ண college வந்திருந்தான்.
நான் வெளியே வரும்போது, எதிரே ராஜீவ் bike-ல வந்து நின்றான்.
நேராக எங்களுக்கு குறுக்கே.

பிரகாஷ் bike-ஐ நிறுத்தினான்.
நான் ராஜீவைப் பார்த்தேன்.
அவன் என்னைப் பார்த்து,

“மல்லி, உங்க அப்பா உன்னை கூட்டிட்டு வரச் சொன்னார்.”
நான் அவனை சில நொடிகள் பார்த்தேன்.
அவன் பொய் சொல்றான்னு எனக்கே தெரியும்.
ஆனா...
ராஜீவ் என்னை தப்பான எண்ணத்தோட எங்கும் அழைக்க மாட்டான்னு எனக்கு தெரியும்.
அவன் மேல அந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தது.
“சரி... நான் வரேன்.”
அப்படின்னு சொல்லிட்டு ராஜீவ் bike-ல ஏறினேன்.

எனக்கே கொஞ்சம் strange-ஆ இருந்தது.
எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிட்டிருந்த நாங்க...
இன்று ஒரே bike-ல நண்பர்களா போறோம் சாரி ராஜீவ் என்ன நடப்பு வட்டத்துக்குள்ள கூட என்ன கொண்டு வரல .

பைக் போயிட்டே இருந்தது
அவன் எதுவும் பேசவில்லை.
நானும் பேசவில்லை.
சில நிமிடங்கள் அப்படியே போனது.

எனக்குள்ள மட்டும் ஒரு சின்ன சிரிப்பு.
ஒருவேளை...
ராஜீவ் என்மேல love-ல இருக்காரோ?
அந்த எண்ணம் வந்ததும் எனக்கே சிரிப்பு வந்தது.
ஆனா அந்த நேரத்தில் நான் ஏற்கனவே பிரகாஷ் மீது  காதல் பண்ற எண்ணம் இருந்ததால   ராஜீவுக்கு என்னைப் பற்றி அப்படியொரு feeling இருந்தால், அதை ஆரம்பத்திலேயே clear பண்ணிடணும்னு நினச்சேன் .

“ராஜீவ்...”
“ம்?”
“நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?”
“சொல்.”
“எனக்கு ஒரு feeling... நீங்க என்ன லவ் ...”
நான் அந்த வார்த்தையை முடிக்கறதுக்குள்ளேயே—
[b]சடக்![/b]

Bike திடீரென்று brake போட்டது.
நான் முன்னாடி சாய்ந்தேன்.
ராஜீவ் bike-ஐ road ஓரமாக நிறுத்தினான்.
“இறங்கு.”

அவன் குரல் ரொம்ப அமைதியாக இருந்தது.
ஆனா அந்த அமைதிக்குள்ள ஏதோ இருந்தது.
நான் கீழே இறங்கினேன்.

ராஜீவும் bike-லிருந்து இறங்கினான்.
அவன் phone-ஐ எடுத்தான்.
“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும்.”
நான் அவனைப் பார்த்தேன்.

அவன் phone-ல் சில photos-ஐ திறந்து என்கிட்ட காட்டினான்.
பிரகாஷ்.
அவனுடன் கார்த்தி.

சமீபத்தில் எடுத்தது போல இருந்த சில photos.
இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“இதென்ன?”
“நல்லா பாரு.”
நான் மீண்டும் பார்த்தேன்.

அதற்குப் பிறகு அவன் இன்னும் சில screenshots காட்டினான்.
கார்த்தியைப் பற்றியும், என்னைப் பற்றியும் ஒரு group-ல் பேசப்பட்டிருந்த சில comments.
அதில் பிரகாஷின் பெயரும் இருந்தது.
என் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.
கார்த்தி என்னை எப்படி நடத்தினான் என்பது  எல்லாருக்கும் தெரியும்.
அப்படி நடந்துகொண்ட ஒருவனோட பிரகாஷ் ஏன் இவ்வளவு friendly-ஆ இருக்கிறான்? அதுவும் என்ன காதலிக்கிறேன் னு சொல்லிட்டு

சில விஷயங்கள் என் மனசுக்குள் ஒன்றோட ஒன்று connect ஆக ஆரம்பித்தன.
பிரகாஷும் கார்த்தி ஓட ஆள் தான் , கார்த்தி என்ன பழிவாங்க ஏதோ பிளான் போட்ருக்கான்
நான் அவனைப் பற்றி நினைத்திருந்த image-ல சின்ன சின்ன cracks விழ ஆரம்பித்தது.
அப்போதுதான் ராஜீவ் பேச ஆரம்பித்தான்.

“மல்லி...”
நான் அவனைப் பார்த்தேன்.
“நீ சின்ன குழந்தை இல்ல.”
அவன் குரலில் கோபம் இல்லை.
ஆனா ஒவ்வொரு வார்த்தையும் நேராக என்னைத் தாக்கியது.
“நான் உன் bodyguard-ம் இல்ல.”

நான் அமைதியாக நின்றேன்.
“ஒரு தடவை நீ அசிங்கப்படப் போனப்போ உன் பக்கம் நியாயம் இருந்தது. அதனால நான் தலையிட்டேன். இன்னொரு தடவை வேற யாரோ உன்னை காப்பாத்தியிருக்கலாம்.”

அவன் என்னைப் பார்த்தான்.
“ஆனா ஒவ்வொரு தடவையும் நானோ, வேற யாரோ ஒருத்தரோ உன்னை காப்பாத்திக்கிட்டே இருக்க முடியாது.”
என் கண்கள் கீழே போயின.

“நீ யாரை வேண்டுமானாலும் love பண்ணு.
அது உன்னோட வாழ்க்கை. நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன்.”
ஒரு நொடி அவன் அமைதியாக இருந்தான்.
“ஆனா உனக்கு இன்னும் ஒரு maturity வரலன்னு எனக்குத் தோணுது.”
நான் மெதுவாக அவனைப் பார்த்தேன்.
“உனக்கு நல்லது எது, கெட்டது எது என்று பிரிச்சுப் பார்க்கிற பழக்கம் இன்னும் வரல.”
அவன் phone-ஐ pocket-ல் வைத்தான்.
“உன் problem என்ன தெரியுமா?”
“யாராவது உன்கிட்ட நல்லா பேசினா, அவங்க நல்லவங்கன்னு உடனே நம்பிடற.”
என் மனசு அந்த வார்த்தையில் ஈட்டி குத்துன் மாறி ஒரு பீல் .

“நல்லா பேசுற எல்லாரும் நல்லவங்க கிடையாது, மல்லி.”
அவன் கொஞ்சம் இடைவெளி விட்டான்.
“அதே மாதிரி, உன்னைப் பார்த்து முறைக்கிற எல்லாரும் கெட்டவங்களும் கிடையாது.”

எனக்கு அந்த வார்த்தை ஏதோ ஒரு இடத்தில் ஆழமாகப் பட்டது.
ஏனென்றால்...
அவன் சொன்னது பிரகாஷைப் பற்றி மட்டும் இல்லை.
அவனைப் பற்றியும் இருந்தது.
நான் எத்தனை நாளா ராஜீவை தவறாகப் புரிஞ்சுக்கிட்டிருந்தேன்?

ஆனால்...
நான் தடுமாறிய ஒவ்வொரு நேரத்திலும் அவன்தான் முதலில் என்னை தெரிஞ்சோ தெரியாமலோ காப்பாத்திருக்கான். அணைக்கு வாசு - கார்த்தி. இன்னைக்கு பிரகாஷ் கார்த்தி


ராஜீவ் மீண்டும் bike-ஐ நோக்கி நடந்தான்.
“அங்கே auto stand இருக்கு.”

அவன் கையால் எதிரே காட்டினான்.
“Auto-ல வீட்டுக்குப் போ.”

நான் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவன் திரும்பிப் பார்த்தான்.

இனி உன்னோட எந்த விஷயத்திலயும் நானா தலையிட மாட்டேன்,
உன்ன நீயே பாத்துக்கோ. எங்கயாச்சும் பாத்தா ஜஸ்ட் ஒரு ஹாய் அதோட செரி .
மறுபடியும் சொல்றேன் நான் உன்ன லவ் பண்ல

“Goodbye, மல்லி.”

அவ்வளவுதான்.

அவன் bike-ஐ எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.
அவன் போன direction-ஐ பார்த்துக்கொண்டே.

அந்த நாளிலிருந்து என் மனசுக்குள் பிரகாஷ் இல்ல.
ராஜீவ் மட்டும் இருந்தான்.
[b]ராஜீவ்.[/b]

நான் ஏற்கனவே பாத்து பழகுனா ஒரு ஆளு , அந்த நாளிலிருந்து புதுசா பார்க்க ஆரம்பிச்சேன்.
இவன் யார்?
எதற்காக என்னைச் சுற்றி நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் இவ்வளவு கவனிக்கிறான்?

எனக்காக என்னைச் சரி பண்ணவே பிறந்தவன் மாதிரி ஏன் நடந்துக்கிறான்?
அது காதலா?
மரியாதையா?
நன்றியா?
இல்லை...

அவன் மேல எனக்குள் உருவாகிக்கொண்டிருந்த வேற ஏதாவது உணர்வா?
அந்த நேரத்தில் அதற்கு என்ன பெயர் வைக்கணும்னு எனக்குத் தெரியவில்லை.
ஆனா ஒரு விஷயம் மட்டும் தெளிவா தெரிந்தது.

[b]ராஜீவைப் பற்றி நான் நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.[/b]
அதுக்கப்புறம் நாங்க அடிக்கடி சந்திக்கவே இல்லை.
பேசவும் இல்லை.
ஆனா எங்காவது பார்த்துக்கிட்டா...
ஒரு பார்வை.
ஒரு சின்ன சிரிப்பு.
அவ்வளவுதான்.

அந்த சின்ன சின்ன தருணங்களே எனக்கு போதுமானதாக இருந்தது.
என் second year அப்படியே முடிவுக்கு வந்தது.

இந்த விஷயத்தைப் பற்றி நான் அதிகமாக யாரிடமும் share பண்ணவில்லை.
சரண்யாவிடம் மட்டும் சொன்னேன்.
அந்த நேரத்தில் என் friend circle-ல இன்னும் என்னோடு நெருக்கமாக இருந்த ஒரே ஆள் அவள்தான்.

அதனால அவளிடம் மட்டும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.
எனக்கே தெரியாமல்...

என் வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியத்தை, என் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாக மாறப்போகும் ஒரு மனிதரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அது எனக்குத் தெரியாமல்...

என் third year ஆரம்பித்தது.
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 3 hours ago



Users browsing this thread: Bobbyprasad753, nishanth1124, Priyaram, rockey005, 18 Guest(s)