02-08-2026, 03:04 PM
எபிசோடு : 69
அவள் உதறிய வேகத்தில், அவளது கால் நல்ல வேளை அவனது முகத்தில் பட்டிருக்கும். அவன் தோள் புஜத்தில் அவளது கால் பட, அவன் பயந்து நடுங்கியபடி காலை விட்டு திகைத்து போய் பின்வாங்கி அப்பால் சென்றான்.
"ஏம்மா?" அவன் திகைப்பாய் கேட்க,
"அம்மா,"
"போதும்."
"எனக்கொன்னும் இல்லை, நீ போலாம்."
"சரி கிரிஜா வர்ர வரைக்குமாவது,"
"ஒன்னும் வேணாம்னு சொல்றேன்ல? வெளியே போ!" என்று கத்தினாள்.
அவன் அங்கே நின்றால்கூட, அவனே அருகில் வந்தால் என்னாவது? பாதத்தை பிடித்தவன் முழங்காலில் கை வைத்தால்? அதற்கு மேல் கையை நுழைத்து விட்டால்? மதுக்குடம் சாய்ந்தால்? அம்பு பாய்ந்து வந்தால்? அய்யோ அவன் இருந்தால், இன்னும் தொட்டால், ஏதாவது நடந்துவிடும் என்று பயந்தாள். அவள் மேலேயே அவளது கற்பு திடத்தின் மீதே அதிசயமாய் இன்று அவளுக்குத் துளியும் நம்பிக்கையில்லை.
'காமமே பிறவிக்கு வித்தாகும், காமமே அவத்தையில் காக்கச் செய்திடும், காமமே நரகெல்லாம் காணியாக்குமே,' பாடல் ஓடினாலும், 'என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதமும்' சீராய் ஒலிக்க,
"சரிம்மா போறேன்" அவன் வாஞ்சையுடன் சொல்ல,
'சே ரொம்ப நல்லவன், அரை மணி நேரமாய் தைலம் தேய்க்கிறான், தப்பை என் மீது வைத்துக் கொண்டு ஏன் இப்படிக் கத்தினோம்?' என்று அவமானமாயிருந்தது. 'டிரைவர் நம்மை பற்றி என்ன நினைப்பான்?' இப்படி தன் அந்தரங்க பலவீனத்தைத் தானே இப்படி வெளிக்காட்டிக்கொண்டதை நினைத்து வருந்தினாள்.
ஆனால் இவன் தொடர்ந்து இங்கேயே இருந்தால், என்னை தொட்டால்? அது பெரிய விபரீதமாகும். அவன் உட்கார்ந்த சீட்டில் நான் உட்கார்ந்து அந்த சூடு எனக்குள் ஏறியதையே என்னால் தாங்க முடியவில்லை. இவனது கண்ணை பார்த்து பேசமுடியவில்லை. கண் மார்புக்கும் தோளுக்கும், அவன் திரும்பினால் பரந்த முதுகையும் பார்க்க தோன்றுகிறது. இப்படி ஒரு ஆண்மகன் இங்கே இருக்க கூடாது.
"நீ எப்ப அந்த புது வேலைக்கு போறே?" அவள் இரக்கமில்லாமல் கேட்டாள்.
அவன் அந்த கேள்வியை, அந்த நேரத்தில் அவளிடமிருந்து எதிர்பார்க்கவேயில்லை.
",,பொ, பொங்கலுக்கு அப்புறம்." அவன் குரல் உடைந்த சத்தம் அவளுக்கு கேட்டது.
அவள் எழுந்து உட்கார்ந்தாள். அவளால் அவனை பார்க்க முடியவில்லை. அவளுக்கு ஒரு வழி தோன்றியது. சுரேஷ்ஷை அருகே அழைத்து,
"ஒன்னு பண்ணு, நீ நாளைக்கு அப்புறம் வர வேணாம், எனக்கு எங்கேயும் கார்ல போற வேலை இல்லை,"
",,,,"
"பொங்கல் வரைக்கும் லீவு போட்டு உன் வீட்டுக்கு போய்டு, நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பொங்கலுக்கு அப்புறம் அங்கே போய் ஜாயின் பண்ணிக்க."
"சரிங்க."
"லீவுக்கு சம்பளமும் போட்டுத் தந்துடறேன், நீ போ" என்றாள் அவனை பார்க்காமல்.
அவன் அந்த வீட்டில், அந்த அறையில் தொடர்ந்து இருப்பதால் எழும் சபலங்களை அவன் இல்லாமலிருப்பது மூலம் ஒழித்துவிடலாம் என்று திடமாக நினைத்தாள்.
"கை கழுவிக்கிறேன்மா."
அவன் மௌனமாக அந்த அறையின் மூலையில் இருந்த வாஷ் பேசினுக்கு போனான். சோப்பு போட்டு கை கழுவினான்.
'ஆண்டவனே! இவன் பாவம், இவனை ரொம்ப நேரமாக சுடுசொல்லாக விரட்டி கொண்டே இருக்கிறேன், என் தவறுகளுக்கு என்னை மன்னித்துவிடு. மேலும், இதெல்லாம் தாண்டி போகும் ஆத்ம பலம் தா,'
எதைச் சொன்னாலும் "சரிங்கம்மா" என்று மட்டுமே சொல்லும் இந்த அப்பாவியை ஏன் திடுமென்று லீவு கொடுத்து அனுப்ப வேண்டும்? அவன் கூட இருந்தால் ஒரு ஆத்திர அவசரத்துக்கு இப்படி ஜுர சமயங்களில் கையை, காலைப் பிடித்து விடுவான். நன்றாக சூடு பறக்கத் தேய்த்துவிடுவானே, யார் செய்வார் இப்படி? அவள் இப்படி நினைத்தாலும் உடனே, 'இது தப்பு, நாம் எங்கோ நழுவி விழுவதாக' அவளுக்குத் தோன்றியது.
'ஆண்டவனே! என்ன இது? எனக்கு ஜுரம் வந்ததே இல்லையா? யாராவது தைலம் தேய்த்து கொண்டே தான் இருந்தார்களா? சே, ஏன் இந்த உடல் இத்தனை பலவீனமாக இருக்கிறது? இந்த மார்கழி குளிரைத் தாங்கும் சக்தியைக்கூட எனக்கு அளிக்கக்கூடாதா? உண்மையிலேயே குளிர்கிறதா? அல்லது தைலம் தேய்க்க வேண்டும் என எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா? அட ஏன் இப்படியெல்லாம் தப்பான கெட்ட எண்ணங்கள்? கல்யாணம் ஆகியும் கன்னி கழியாதது அவ்வளவு பெரிய குற்றமா? அந்த பாழாய் போன கன்னித்தன்மை கழியவில்லையென்றால் தான் என்ன? யாருக்கு இப்போ என்ன ஆச்சு? ஏன் இந்தத் தடுமாற்றம்? ச்சே ஆன்மீக பாடல்களை தினம் தினம் பாடியும் என் மனம் கொஞ்சம் கூட வயதுக்கேற்றார் போல வளர்ச்சியடையவில்லையே.'
அவள் பாதங்கள் வெளியே தெரியாதவாறு மூடி, இடுப்பு வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தாள். வெளியே இருந்து காற்று சிலுசிலுவென்று வீசியது. ஏசி, மின்விசிறி போடாமல் இருந்தாலும், அறையில் குளிர்ச்சி நிலவியது. போர்வையை கழுத்து வரை இழுத்து விட்டுக்கொண்டாள். அப்படியும் அவளுக்கு குளிரெடுப்பதாகவே தோன்றியது. யாராவது பக்கத்தில் இருந்தால் தேவலை போலிருந்தது, கிரிஜா அல்லது மந்தாகினி அல்லது இவன். சே இவனா?
அவன் இன்னமும் கை கழுவி கொண்டிருக்க, 'அய்யோ அந்த முரடனைப் பார்க்காதே பார்க்காதே' என மனம் தடுத்தாலும் அவளது கண்கள் அவனது விரிந்த முதுகை பார்த்தது. மெயின் வாசற்கதவைப் போல இவனுக்கு முதுகு தான் எத்தனை அகலம், தூண்கள் போல பருமனான ஆனால் கரளை கரளையான கால், கைகள். டிரைவராக இருந்தாலும் நல்ல நாகரிகமான பேச்சு, 'அய்யோ எனக்கென்ன ஆச்சு? ச்சீ, இவனை போய் நாம் பார்க்கிறோமே,'
தறி கெட்டு சிதறி ஓடும் எண்ணங்களை அந்த இளம்பெண்ணால் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் அறையில் ஒரு ஆண்மகன் இவ்வளவு நேரம் இருக்கிறான் என்பதே அவளுக்கு தடக் தடக்கென அடித்துக் கொண்டது.
திடீரென, "இந்த கிரிஜா எங்கே போய்ட்டா? வெந்நீர் எடுத்து வர இவளுக்கு இவ்வளவு நேரமா?" என கத்தினாள்.
"தோ போய் பார்க்கிறேன்மா."
"வேணாம், வேணாம் நீ உன் ரூமுக்கு போ."
இந்த நேரத்தில் இவன் கிச்சனுக்குப் போய் நின்றால்? அந்த கிரிஜா, புருஷன் இல்லாத கிரிஜா இவனை வீழ்த்த திட்டம் போட்டால்? பழிகாரி, அந்த முருகேசனைப் போல இவனையும் வளைத்துப் போட்டுவிட்டால்?
'ச்சே அய்யோ மானங்கெட்ட மனமே! நான் இதெல்லாம் நினைக்கிறேனே? யார் யாருடன் இருந்தால் என்ன? இப்போது மந்தாகினி இல்லையா? அனிருத்துடன் பழகவில்லையா? அப்படியானால் அய்யோ, இவனும் எனக்கு துரோகம் செய்வானா? ச்சே டேய் சுரேஷ் ரூமை விட்டு போய் தொலையேன்டா,'
அவள் மனதுக்குள்ளேயே, 'தோடுடைய செவியன் விடையேறி ஒரு தூவெண் மதி சூடி,' என ஆள் பாட முயன்றாள். ஆனால் குரல் கொஞ்சம் கூட எழவேயில்லை. திடீரென பாடல் வரிகளே மறந்து விட்டன போல் பிரமை. கோபமும், காமமும் நிறைய இருந்தால் மறதி வரும் என்பார்கள். எனக்கு இருப்பது கோபமா? காமமா?
வைஷ்ணவிக்கு இதயம் வழக்கத்துக்கு மாறாக படபடவென்று துடித்தது. 'காமநோக்கில் இப்படி பாழாய் போனோமே!' என நினைத்த போது விரல்கள் நடுங்கின. போர்வை போர்த்தி இருந்ததால் கழுத்துக்கு கீழேயும், ரகசிய இடங்களிலும் வியர்வை முத்து முத்தாய் அரும்பு கட்டி நின்றது.
'இவன் சீக்கிரம் ரூமை விட்டு போனால், போர்வையை உதறி விடலாம். ஆனால் போனால் தானே? ரெண்டு கையை எவ்வளவு நேரம் தான் கழுவுவான்? எல்லாத்துக்கும் மேலே அந்த சதி லீலாவதி கிரிஜா, சீக்கிரம் வராளா பார்? கேஸில் பாத்திரம் வைத்து தூக்கக் கலக்கத்தில் போய் படுத்திருப்பாள். பலமுறை இந்த வீட்டில் அப்படிச் செய்திருக்கிறாள். அவளைச் சொல்லிக் குற்றமில்லை. நேரம் கெட்ட நேரத்தில் வேலை செய்ய சொன்னால் அவளென்ன செய்வாள்? பாவம்,'
வைஷ்ணவிக்கு உடம்பு கனகனவென்று இருந்தது. தலையணையைக் கெட்டியாய் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். கண்டிப்பாக தான் நார்மலாக இல்லை. தனக்கு ஏதோ ஒரு கேடு காலம் திடீரென வந்து விட்டதாகவும், தனக்குள் யாரோ புகுந்து கொண்டு காலை, மாலை, இரவு எந்நேரமும் தன்னை வதைப்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.
'சுரேஷ்ஷை இங்கிருந்து விரட்ட, தன் கண்ணில் படாமல் இருக்க செய்யத்தானே டிரைவருக்கு லீவு கொடுத்து அனுப்பினோம்? அப்படியெனில் நான் தானே பலவீனமானவள்? தன் பலவீனம் தானே இவனிடமிருந்து தள்ளி இருக்க செய்கிறது? தனக்கு இதையெல்லாம் எதிர்த்து போராட காமத்தை வேறறுக்க ஆன்ம பலம் கிடைக்காதா? இவ்வளவு படித்தும் என்ன பயன்? வழி தெரியாத, அல்லது வழியே இல்லாத ஒரு பேரிருளின் உள்ளே மாட்டிக்கொண்டு தவிப்பதைப் போலல்லவா எனக்கு இந்த சூழ்நிலை இருக்கிறது? அய்யோ இந்த பேதைக்கு மணமாகியும் கணவன் இல்லை. துணைக்கு யாருமில்லை, தாயுமில்லை, தந்தையுமில்லை. ஆண்டவனே என்னைக் காப்பாற்று! நீதான் என்னைக் கரையேற்ற வேண்டும்!'
நல்லவேளை அவன் போனான்.
"போறேன்மா," அவளை குனிந்து ஓரக்கண்ணில் பார்த்தபடி அவன் கதவை நோக்கி நடக்க,
"ம்,ம்" என்றால் அவனைப் பார்க்காமல்.
அவன் கதவருகே போகையில், அவள் சும்மா இல்லாமல், அவள் எட்டி தன் கண்ணாடியை எடுத்தாள். கை நீட்டி தள்ளி இருந்த மேசை மீது கையை துழாவினாள். இந்த புத்தகம் தான் என்றில்லை, ஏதோ ஒரு புத்தகம் கிடைத்தால் போதும், படித்து கவனத்தை திருப்பினால் போதும், இந்த கடங்காரி கிரிஜா வரும்வரைக்கும்,
அவள் கை நீட்டி துழாவ, புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை. அவள் தலையைத் தூக்கி உடம்பைப் பின்னுக்கு இழுத்து படுத்த நிலையிலேயே கட்டிலில் சாய்ந்துகொண்டு இன்னும் கையை நீட்ட, மேலிருந்த சில்வர் டம்ளர் தடாலென விழ,
"எ, என்னாச்சும்மா?" கதவு வரை போனவன் திரும்ப ஓடி வந்தான்.
"ஒ, ஒன்னுமில்லை, போ."
"அச்சோ புக்ஸ் வேணுங்களா? நான் எடுத்து தர்றேன்."
",,,,"
"புக்ஸ் கேட்டா நான் தர போறேன், உங்களுக்கு எதுக்கு சிரமம்?"
அவன் விறுவிறுவென வந்து, கட்டிலின் விளிம்பினில் நின்று சாய்ந்து அந்த பக்கமிருந்த டேபிளில் இருந்த புக்ஸை எட்டி எடுக்க, அவனது பனியன் தூக்கிக் கொள்ள, அவனது மயிரடர்ந்த வயிறு அவள் முகத்துக்கு அருகே வர, அவன் வாசம் அவளுக்கு நிரட, அவன் இன்னும் எக்க, பனியன் விலகி அவனது தொப்பை போடாத வயிறும், அதற்கு மேலே பொசுபொசுவென முடியும் அவள் கண்ணுக்கு தெரிய, 'இதென்ன இவனுக்கு கரடி போல முடி?' அவள் யோசித்து மார்பு விம்மி, கண்ணை மூட, இப்போது அவனது இடுப்பு பாகம் அவள் முகத்தில் அழுந்துவது போல வர, அவனை தள்ளி விட அவள் அவனது வயிற்றில் கை வைக்க, அவன் இன்னும் அவள் முகத்தை அழுத்த, அவள் முகத்தை திருப்பிக் கொள்ள,
"தோ, எடுத்தாச்சு," அவன் புத்தகம் ஒன்றை எடுத்து அவள் கையில் தந்தான்.
அவள் நடுக்கமாய் வாங்கி கொண்டாள்.
"அப்ப நான் போகட்டுமா?"
",,ம்ம்" அவள் அவசரமாய் புத்தகத்தைப் பிரிக்க,
"இவ்வளவு உடம்பும் சரியில்லாத சமயத்துல புக்ஸ் எதுக்கு?" அவன் மெல்ல பிடுங்க பார்க்க அவள் இழுத்துக் கொண்டாள்.
"நோ, நான் இப்ப படிக்கணும்."
"எல்லாம் உடம்பு சரியான அப்புறம் படிக்கலாம்."
இப்போது மேடமும் இல்லை, அம்மா என்றும் கூப்பிடவில்லை. ரொம்ப அன்னியப்பட்டு போனதால், அவனை டிரைவராகவும் நினைக்க முடியவில்லை. அவள் மார்பு நடுவே புதைந்த அந்த புத்தகத்தை பொறாமையாக பார்த்தான்.
"படுத்து தூங்குங்க, எதுவும் படிக்க வேணாமே இப்ப."
அவன் அடுத்து செய்த காரியம் மகா விசித்திரமானது, பயங்கர துணிச்சலானது. அவள் அவனையே நம்பமுடியாமல் பிரமை பிடித்தாற்போல பார்க்க, இதுவரை நின்றிருந்த சுரேஷ் அவளது கட்டிலிலேயே அவளுக்கருகே அமர்ந்தான். சுரேஷ்ஷா இப்படி? அடப்பாவி! அவளுக்கு அணலாய் மூச்சு வர, அவனையே திகைத்துப் போய் வெறித்து பார்க்க, அவன் முழங்கையைப் பிடித்துப் பார்த்தான். எவ்வளவு மென்மை! வருடினான். கன்னத்தில் புறங்கை வைத்துப் பார்த்தான்.
"உடம்பு கொஞ்சம் சூடு குறைஞ்சிருக்கு, ரெஸ்ட் எடுக்கணும்" என்றான்.
அவள் திகிலடைந்து இன்னும் பின்னடைய, அவன் ஊர்ந்து அருகே வந்தான். அவள் நெற்றியை வருடி, அவளது கண்ணாடியை கழற்றினான்.
"கண்ணு இப்பவே சிவந்திருக்கு" என்றான்.
'ஏய்!' அவளது பயக்குரல் உள்ளுக்குள்ளேயே அமிழ, 'இவன் ஒரு முடிவோடு தான் திரும்ப வந்திருக்கிறான்' என நினைத்தாள். அவன் அவளது காதுகளை மூடிய கூந்தலை வழித்து பின்னால் போட்டான்.
அவன் செய்கைகளைப் பார்த்து வைஷ்ணவி திகைத்தாள். அவனை போவென விரட்ட நா எழவில்லை. கட்டிலின் அந்த முனைக்கு நகர்ந்து ஒதுங்கிப் படுத்துக்கொண்டாள். சுரேஷ் அவளையே சிறிதுநேரம் உற்றுப்பார்த்து இலேசாய்ச் சிரித்தான். அவனது கண்ணில் இப்போது பவ்யமும், பணிவும் இல்லாது போல் இருக்க, அந்தச் சிரிப்பையும் அந்தக் கண்களையும் பார்த்த வைஷ்ணவி இலேசாக பயமடைந்தாள்.
'ஏன் இவன் இப்படி செய்கிறான்? கிரிஜா வந்தால் என்ன நினைப்பாள்? எஜமானி என மரியாதை இல்லையா? எனக்கு ஏன் கோபம் வரவில்லை? ஆண்டவனே என்ன சோதனை இது! இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இன்று போய் புதிதாக, ஒரு நெருடல், மனசறுக்கல்? இவன் ஒரு ஆளா என்ன? இவனைப் பார்த்து எனக்கு ஏன் பயம் தோன்றவேண்டும்? ஏன், டிரைவர் தானே? போடா என்றால் எழுந்து போகப் போகிறான்?'
அவன் அவளது போர்வையை மெல்ல இழுத்தான். 'அய்யோ ஏன் இழுக்கிறான்?' அவள் மிரள, போர்வை விலக, அவள் சேலையும் ரவிக்கையும் அவனுக்கு தெரிய அவள் கை வைத்து மூடிக் கொண்டாள். அவன் மூஞ்சியில் சிரிப்பே குறையவில்லை. 'அய்யோ இந்த நாசகாரனுக்கு என்ன வேண்டும்? இவன் இன்னொரு நித்யானந்தன்னா? கடவுளே எனக்கு சக்தியே இல்லையா? இவனை எட்டி உதைத்து தள்ளிவிடவேண்டும், கிரிஜா சீக்கிரம் வா என கத்த வேண்டும். நான் ஏன் இப்படி இவ்வளவு மோசமாக மெதுவாக யோசிக்கிறேன்? ஏன் மூளையின் செயல்வேகம் எப்படி குறைந்தது? அய்யோ, என் பலமெல்லாம் எங்கே போய்விட்டது? இவன் என் அருகில் வந்து பனியனை தூக்கி மார்பு வரை முடிச்சுருளை ஏன் காட்ட வேண்டும்? என் முகத்தில் நேராக அவன் வயிறை கொண்டு வந்து ஏன் அழுத்த வேண்டும்? என் கண்ணாடியை பிடுங்கி போட்டு, கூந்தலை தொட்டு, தடவி விட்டு, சுரேஷ் ஏன் என்னை காமத்துடன் இப்படிப் பார்க்க வேண்டும்? ஆண்டவனே எனக்கு இதய சுத்தியைக் கொடு! இதய பலத்தைத் தா, காமம் என்னும் மாயை தவிர்த்து விடு,' அவள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு தனது பலவீனத்தைப் பார்த்து சிரிக்கும் அந்தக் கண்டு, தன்னுடைய எந்தவித காம பலவீனமும், கன்னிப் பெண்ணுக்குண்டான அலைபாயும் மன ஓசையும் வெளியே தோன்றாதவாறு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு பெரிய பங்களா எஜமானியாய், எப்போதும் போலவே சர்வசாதாரணமாய் இருக்க வெகுவாகப் பாடுபட்டாள். ஆனால் முடியவில்லை.
அவனோ கட்டிலில் ஏறி ஒரு கால்களால் முட்டி போட்டு தவழ்ந்து அவள் அருகே வந்தான். "சொன்ன கேக்கமாட்டீங்களா? ரெஸ்ட் எடுக்க மாட்டீங்களா?"
அவள் ஒரு கன்னத்தையும் பிடித்தான். மெல்ல பிடித்தான்; பிசைந்தான். உதட்டை நீள் வட்டமாய் இழுக்க வைஷ்ணவியின் ஆரஞ்சு சுளை உதடு பிளந்து பல்வரிசை தெரிய,
'நீருள் குளிப்பினும் காமம் சுடுமே, குன்றேறி ஒழிப்பினும் காமம் சுடுமே,' அவள் மனதுக்குள் பாடல் வரிகள் இசை ஏதுமின்றி வெறுமனே எழுத்தாய் ஓட, அவன் அவள் உதட்டில் கை வைத்தான். மெல்ல கீறினான்; எச்சில் திவலைகளை தீண்டினான். கட்டை விரல் அவளது கண்ணுக்கு ஏற, அவள் கண்ணை மூட அவளது நெற்றியில் உள்ளங்கையை வைத்துப் பார்த்தான்.
காமம் ஒரு பெரு நதியென உச்சியில் திரண்டு பெருமேகம் போல நின்றது; விழுமா? சரியுமா? பள்ளம் நோக்கி விழுமா?
அவள் மெல்ல கண்களை திறக்க அவள் திடுக்கிட்டாள். அவனது கண்கள் அவள் அருகே வந்து அவளை துளைத்தன. அவனது மீசை அவள் முகம் மீது படுவது போல இருக்க, அவள் கண்கள் தளர்ச்சியாக அவனை பார்க்க,
அய்யோ, இதென்ன விபரீதம்? அன்று நித்யானந்தன் போல இவனா? அவள் பயந்தபடியே பின்வாங்க, சுரேஷ் வெடுக்கென்று சற்றும் வைஷ்ணவி எதிர்பாராத வகையில் அவளை அப்படியே வாரியெடுத்து அணைத்தான்.
"ஆய்ய்ய்ய்ய்யேழேழே!"
அவள் வெட்டிய வாழைமரமாய் அவன் மார்பில் தன் இளமாங்கனிகள் மோத, அவன் முத்தங்களை சொரிந்தான். அவளது மொத்த ஜீவனும் சொக்கி திணறுவது போல் அப்படி ஒரு பிரமை.
சுரேஷ் அவளது கூந்தலை ஒரு பக்கமாய் ஒதுக்கி, "ப்ப்ஸ்ப்ச் ப்ச்ச்ச்" என வைஷ்ணவியின் செழுமையான கன்னத்திலும், வெண் கழுத்திலும், இதழ்களிலும் முத்தம் சொரிய,
"காமக்கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம் வைத் துழன்றேன்,"
அவள் மனம் பயங்கர ஓசையுடன் இதைச் சொன்னாலும், அவள் உடல் தன் சொல் பேச்சை கேட்காமல் சுழலுவது அவளுக்குப் புரிந்தது.
"ஆஅ பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து, நெஞ்சுக்குள்ள சாரக் காத்து, தொட்ட பாகம் தொட்டுப் பாத்து, சாய்வதென்ன கண்கள் பூத்து ஊஊஊ" - இந்த வரிகள் தான் இசைக்கப்பட்டன.
அவள் சரிந்து போய் முகத்தினை துவண்டு அண்ணாந்து பார்த்து, தனது கையறு நிலையைக் கண்டு அவனை நேருக்கு நேராக பார்க்காமல், மேல் நோக்கி அழுவது போல அவனை பார்க்க, அவன் விடாது வைஷ்ணவியின் செவ்விள இதழ்களில் மாறிமாறி முத்தங்களைச் சொரிந்தான்.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)