Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#63
எபிசோடு : 62

ஆக்டர் வேதா அந்த கெஸ்ட் ஹவுஸில் மேலும் சில வாரங்கள் தங்கியிருந்தான். ஷூட்டிங் ஸ்பாட் ആലപ്പുഴவுக்கு மாற்றும் வரையில் இந்த இடம்தான் அவனுக்குச் சௌகரியம் என நினைத்தான். ஷூட்டிங் இல்லாதபோது, பெரும்பாலும் தன்னந்தனிமையில் இருந்தாலும் சிகரெட்டும் அடிக்கடி அனிருத் வாங்கித் தந்த வெளிநாட்டுச் சரக்கும் அவனுக்குத் துணையாக இருந்தது.
போதையில் பால்கனியில் நின்று அவனது கண்கள் அலைந்து திரிந்தபோது, வெளியே இருந்த அந்தப் பெண் கண்ணில் மாட்டினாள். அவள் அனிருத்தின் கெஸ்ட் ஹவுஸுக்கு எதிரே இருந்த வீட்டில் வாடகைக்கு இருந்த ஸ்வேதா. 
'ஓ இவள்தான் ஸ்வேதாவா! ஏதோ நெருப்பு வெறுப்பு என்றானே,' ஆள் பார்க்க அம்சமாக இருந்தாள். முலைகள் வட்டமாக இல்லாமல், கூம்பாகக் குத்திக்கொண்டிருந்தன. ஓரிரு முறை அவள் எதிர் வீட்டிலிருந்து அவனையும் பார்த்தாள், முறைத்தாள். 
குடும்பப் பாரம் ஒரு பக்கம், கைக்குழந்தையுடன் வீட்டு வேலை செய்யும் சோர்வு ஒரு பக்கம் இருந்தாலும், அவள் முகத்திலும் உடம்பிலும் இளமை பொங்கி வழிந்தது. எப்படியும் 30-க்குள் இருப்பாள் என அவன் நினைத்தான்.
'நாம் அவளைப் பார்ப்பது இருக்கட்டும், நாம் இங்கு இருப்பது அவளுக்குத் தெரியுமா? நான் யார் என அவளுக்குத் தெரியுமா? எப்படி அவளிடம் பேசுவது?' என நினைத்துக்கொண்டிருக்க, ஸ்வேதா தன் வீட்டு காம்பவுண்ட் கேட்டைப் பூட்டிக்கொண்டு கைக்குழந்தையுடன் வேதாவின் வீட்டுக்குப் போவதைப் பால்கனியிலிருந்து பார்த்தான் வேதா. 
உடனே அவனும் தன் கதவைப் பூட்டிக்கொண்டு அந்த ஆளில்லாத தெருவில் ஸ்வேதாவின் பின்னாடியே சென்றான். ஸ்வேதா அனிருத்தின் வீட்டுக்குள் சென்றுவிட, இவன் வெளியே இருந்து காலிங் பெல்லை அழுத்த, ஸ்வேதாவும் அனிருத்தின் அம்மாவும் வெளியே வந்தார்கள். 
இவனைப் பார்த்ததும் ஸ்வேதா வெளிறி பின்னடைய, அந்த அம்மா மட்டும், "வாங்க வாங்க, வணக்கம் சார்" என்றார்கள். அவர்களுக்கு இவனைப் பற்றி மகன் மூலமாகத் தெரிந்திருந்தது.
"அனிருத் டவுன் போயிருக்கானே சார்" என அந்த அம்மாள் சொல்ல, 
"ஒண்ணுமில்லம்மா, நான் வெளியே போறேன், ஈவினிங் தான் வருவேன். கெஸ்ட் ஹவுஸ் கீ கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்" 
"அச்சச்சோ, அதை நீங்களே வச்சுக்கலாம் சார், இல்லைன்னா அங்க டோர் பக்கத்துலயே மாட்டலாமே? இதுக்கா இவ்ளோ தூரம் வந்தீங்க, அடப் பாவமே, சரி உள்ள வாங்க சார்," 
"பரவால்லம்மா" 
"அட வாங்க, அனிருத் ஃபிரெண்டு நீங்க, வந்ததுலருந்து இங்க வீட்டுக்கு வரவே இல்ல, உள்ள வாங்க" அவனை அந்த அம்மாள் உள்ளே கூப்பிட்டாள்.
அவன் தயக்கமாக வீட்டுக்குள் நுழைய, உள்ளே இருந்த ஸ்வேதா சங்கோஜப்பட்டாள். 
'வாடி, உனக்காகத்தான்டி இங்க இந்த வீட்டுக்கு வந்தேன்' என நினைத்துக்கொண்டான் வேதா.
ஸ்வேதா அவனை நிமிர்ந்து பார்க்கவே அச்சப்பட, "இருங்க சார், காபி போட்டு வரேன்" என்றவள்.
"ஏய் ஸ்வேதா, சார் கிட்ட பேசிட்டு இரு," என்றாள். 
அவள் அவன் முகத்தையே நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அந்த அம்மா கூடவே ஸ்வேதா கிச்சனுக்குள் நுழைய, 
"ஏண்டி இவளே, அவன் கூட பேசிட்டு இருன்னு தானே உன்னை விட்டு வந்தேன்," 
"போங்க மாமி, எனக்கு அவரு யாருன்னே தெரியல, அவர் கூட போயி, எனக்கு ஐநூறு ரூபா கொடுங்க, நான் அர்ஜெண்டா கடைக்கு போகணும்," 
"ஏய், சார் யாரு தெரியுமில்ல? வேதா, கன்னட ஆக்டர்டி" 
"எ, என்னது?" அவள் விலுக்கென நிமிர்ந்தாள். 
"மூஞ்சியை சரியா பாக்கலியா?" 
"இ, இல்ல பாக்கல" 
"ஏண்டி? உனக்கு தெரியாதா? தெருவுக்கே தெரியும்" 
"எ, என்ன சொல்றீங்க?" 
"பாவம், அவருக்கு மார்க்கெட் டல்லா ஆகிட்டு, இங்க ஷூட்டிங்குக்கு நடிக்க வந்திருக்கு அந்த தம்பி," 
"என்ன மாமி சொல்றீங்க, வேதாவா இது?" அவள் பரபரத்தாள். 
"அய்யோ, நிஜமாவா அவரா?" அவளால் அந்த இன்ப அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 
அவள் பெங்களூரில் இருந்தபோது வாராவாரம் பார்க்கும் சினிமாவில் வேதாவின் படம் கண்டிப்பாக இருக்கும். அவன் நடித்த படத்தையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருப்பாள். கூட தங்கை சுமித்ராவும் பார்ப்பாள். டிவியிலும் சதா வேதாவின் படம்தான், பாடல்தான். இவளுக்கு மேலே சுமித்ராவுக்கு இன்னும் அவனது மேல் வெறி, அளவுகடந்த மோகம்.
"நீங்க ரெண்டு பேரும் பண்ற அளப்பறையைப் பார்த்தா, அக்காளுக்கும் தங்கச்சிக்கும் அந்த வேதாவையே கட்டி வச்சுடப் போறேன்" என அம்மா கூட அடிக்கடி சொல்வாள். அவனது நெற்றியும், கண்ணும், உதடும், மீசையும் படத்தில் ஹீரோயின்களுடன் செய்யும் சேட்டைகளும் பார்க்கப் பார்க்க ஜிவ்வென இருக்கும்.
ஒரு படத்தில் காட்சியில் குளித்துக்கொண்டிருக்கும் வேதா டவல் கேட்பான், ஹீரோயின் டவல் தர, அவளை அவன் பிடித்து உள்ளே இழுக்க, அவள் மறுக்க, அவளைத் தரையில் தரதரவென இழுப்பான், 'வேணாம் வேணாம்' என கதாநாயகி மறுக்க, அவளை பாத்ரூமில் இழுத்து கதவை மூட, சினுங்கல் குரல் கேட்க, காட்சியைப் பார்க்கவே ஜிவ்வென ஆகும், 'சே, வேதா மாதிரியே ஒரு புருஷன் வந்தால் நல்லா இருக்குமே' என்றெல்லாம் வழக்கமான இளம் பெண்கள் போல அக்காவும் தங்கையும் கனவு கண்டுகொண்டிருந்தார்கள்.
ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. கழற்றிப்போட்ட பலூன் போல ஒரு ஆளைக் கூட்டிவந்து 'இவன்தான் மாப்பிள்ளை' என்றார்கள். அக்கா மெடிக்கல் ஷாப்காரனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிக்கொள்ள, தங்கை சுமித்ரா ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு சோப்ளாங்கி கன்னட வாத்தியாரை பெங்களூரிலேயே மணமுடித்துத் தங்களது கனவுகளை முடக்கிக்கொண்டார்கள்.
பல இளம் பெண்களைப் பருவத்தில் ஆட்டிவைத்த பெரிய ஆக்டர் வேதாவா இப்போது சாதாரணமாகத் தெருவில் நடந்து போகிறான்? இவனையா அனிருத் கூட்டிவந்து நம் வீட்டிற்கு எதிரிலேயே தங்க வைத்திருக்கிறான்? அடக் கடவுளே! சுமித்ராவுக்குத் தெரிந்தால் போட்டது போட்டபடி போட்டுவிட்டு இங்கு வந்துவிட மாட்டாள்?
'அடடா அதானே? பார்த்தவுடனே அவனை எங்கேயோ பார்த்தார்போல் இருக்கிறது என பலமுறை யோசித்தோமே! அடையாளமே தெரியவில்லையே, ஆளே மாறிவிட்டானே! அய்யோ, இது மட்டும் சுமித்ராவுக்குத் தெரிந்தால்?'
எதிர் வீட்டுக்கும் அந்த கெஸ்ட் ஹவுஸுக்கும் கிட்டத்தட்ட நாற்பதடி தூரம். அந்தத் தூரத்தில் அவளால் வேதாவை அடையாளம் கண்டுகொள்ளவே முடியவில்லை. அப்போது மட்டுமல்ல, இப்போது கூட அவனைப் பார்த்து அவளால் அடையாளம் காண முடியவில்லை. முதலில் அவனை ஏறிட்டு உற்றுப் பார்த்தால்தானே அடையாளம் தெரிவதற்கு? ஐயோ அவனா இது? அவளால் நம்ப முடியவில்லை.
இவனது போஸ்டர்களை பெட்ரூம் முழுக்க வைத்திருந்ததும், நோட்டுப் புத்தகத்தில் இவனது போட்டோவைக் கத்தரித்து வைத்திருந்ததும், இவன் போட்டோவையும் நம் போட்டோவையும் பக்கத்தில் பக்கத்தில் ஒட்டி வைத்ததும், அடடா, என்ன ஒரு ஹாட்டான காலம் அது! இப்போது முடியுமா? இதெல்லாம் தெரிந்தால் இந்த மாமி என்ன ஆவாள்? வேதா என்ன ஆவான்? ஐயோ, பருவ வயதில் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ஒரு கம்பீர கதாநாயகன் இப்போது வாழ்க்கையில் எல்லாம் தொலைத்துவிட்டு இந்த மாமி வீட்டில் ஒரு காபிக்காக உட்கார்ந்திருக்கிறானே! அவளால் நம்ப முடியவில்லை.
பயமோ, பதற்றமோ, அதிர்ச்சியோ எதுவோ தெரியவில்லை, ஒரு இனம்புரியாத அவஸ்தை அவள் உடல் எங்கும் பரவி வியர்வை ஆறாகப் பெருகிவர, "ஏய் பொண்ணு! என்னடி ரொம்ப திகைச்சு போயிட்டே? போய் காபி கொடுத்துட்டு வா" மாமி காபி கொடுக்க, அவள் குழந்தையை மாமியிடம் தந்துவிட்டு, காபி எடுத்துக்கொண்டு பரவசமாக ஹாலுக்கு ஓடிவந்தாள்.
பேச்சே வரவில்லை, குரல் நடுங்கியது, காபி டம்ளரை டீபாயில் வைத்துவிட்டு, "காபி குடிங்க சார்" 
"தேங்க்ஸ்" 
"சாரி சாரி, நீங்க முதல்ல எனக்கு யாருன்னு தெரியாது. இப்பதான் மாமி சொன்னாங்க"
"ம்ம்ம்ம்ம்ம் யாராம்?" அவன் அழகாய்ச் சிரித்தான். 
"எ, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்" 
"ஓ," 
"நாங்க உங்க படம்னா தூங்காம கூட பார்ப்போம்" 
"தேங்க்ஸ்" 
"சின்ன வயசுல இருந்து எனக்கும் என் தங்கச்சிக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்"
அவன் ஏதும் சொல்லாமல் மௌனமாகச் சிரித்தான். அவளை மேலிருந்து கீழ் வரை நன்றாகப் பார்த்தான். சினிமா நடிகனாலே ஒரு கிரேஸ் இருக்கத்தானே செய்யுது என அவன் பல காலம் மனதில் நினைத்திருந்தது உண்மைதான் போலிருந்தது.
நீல கலர் காட்டன் சேலையில் உடலின் கனபிரமாணங்கள் பிராவில் இறுக்கமாய்க் கட்டிப்பிடிக்க, அந்த கன்னடத்துக்காரியை மேலிருந்து கீழே அங்குலம் அங்குலமாகப் பார்த்தான். 
"நாங்க இங்கதான் மாமி வீட்டுல வாடகைக்கு குடியிருக்கோம், உங்க கெஸ்ட் ஹவுஸுக்கு எதிரே" 
"," 
"உங்களைப் பார்த்திருக்கேன், ஆனா நீங்கதான்னு தெரியாது," 
"ம்ம்ம்" 
"படத்துல பார்க்கிற மாதிரியே இருக்கீங்க," 
"ஓ, தேங்க்ஸ்." அவனும் தன் ஸ்டேட்டஸை மெயின்டெய்ன் செய்துகொண்டே பேசினான்.
"தம்பி சினிமாவில் சான்ஸ் கொடுக்கிறாரு, நம்ம அனிருத்துக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்காரு, இப்ப கூட சூட்டிங்குக்குதான் இங்க வந்திருக்காரு" அனிருத்தின் அம்மா நடுவே சொன்னாள்.
"நீங்க என்ன பண்றீங்க? என்ன படிச்சிருக்கீங்க? உங்க வீட்டுக்காரர் என்ன பண்றாங்க?" எனப் பொதுவாகக் கேட்டான். அவளது தங்கை சுமித்ரா பற்றியும் விசாரித்தான்.
காபி குடித்துவிட்டு "வரேன்" என எழுந்தான். 
"நீங்கதான்னு என்னால இன்னும் கூட நம்ப முடியல, இந்த மாமிகூட என்கிட்ட சொல்லல பாரேன்" 
"ஓ அப்படியா, ரொம்ப தேங்க்ஸ், நான் வரட்டுமா?" எனச் சொல்லி அவன் உடனே கிளம்பினான். அவனைப் பார்த்து அதிர்ச்சியில் ஸ்வேதா இருந்தாள். ஸ்வேதா பெங்களூருக்காரி, வேதாவின் பல திரைப்படங்களைப் பார்த்திருக்கிறாள். 
கல்யாணம் ஆவதற்கு முன்பு வேதா அவளின் ஆதர்ச நாயகன். ஆனால், அந்த வேதா இப்போது ரொம்ப சாதாரணமாக ஒரு வீட்டில் உட்கார்ந்துகொண்டிருக்கிறானே, ச்சீ பாவம்! அவள் சங்கோஜமாய்ச் சிரிக்க, இவன் ஒரு புன்னகையுடன் கிளம்பிப்போய்விட்டான். 
'அந்த ஒரு மீட்டிங் பாயிண்ட் போதும்' என அவன் நினைத்தான்.
அவன் வந்ததையோ அவளிடம் பேசியதையோ அவளால் மறக்க முடியவில்லை. 
'அய்யோ அவனுடன் ஒரே ஒரு போட்டோ கூட எடுத்துக்கொள்ளவில்லையே' என யோசித்தாள். 
'சரி, இங்கதான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் போட்டோ எடுத்துக்கொள்ளலாம்'. 
அவளால் அன்று நடந்ததையே நம்ப முடியவில்லை. சுமித்ராவுக்கு போன் செய்து சொன்னாள். அவளும் நம்பவில்லை.
"உடான்ஸ் விடாதே, அவர்லாம் யாரு தெரியுமா? அவரு என்ன பண்ணுவாரு அந்த வில்லேஜ்ல?"
"சத்தியமாடி" 
"போட்டோ காட்டுனாதான் நம்புவேன்" எனச் சொல்ல, அடுத்த சில நாட்கள் அவள் வீட்டுக்குள்ளே ஒளிந்திருந்து, வேதா பால்கனி வரும்போதும் நிற்கும்போதும் தூரத்தில் இருந்தே போட்டோ எடுத்து அனுப்பினாள்.
"அட போடி புளுகு மூட்டை ஸ்வேதா, ஒண்ணுமே தெரியல, யாரோ ஒருத்தனை பார்த்துட்டு வேதான்னு நம்பிட்டு இருக்க நீ? வேதா எல்லாம் ஏன் அங்க வரப்போறாரு?" 
"அய்யோ நான் பேசினேன்டி! கடவுளே, என் கையால் அவருக்கு காபி கொடுத்தேன்டி!" 
"வேற என்னெல்லாம் கொடுத்தே?" 
"ஏய்ய்ய்!" 
"ம்ஹூம், நம்ப மாட்டேன், சரி, அப்படியே பார்த்தாலும் அவரை சென்னைல பார்த்தேன்னா கூட நம்பலாம், அவரை போயி மார்த்தாண்டம் பக்கத்துல என்ன ஊர் அது?" 
"தேன்திட்டு" 
"ம்ம் தேன்திட்டுல மேட்டுல இருக்கார்னா யார் நம்புவாங்க?" 
"அய்யோ, நம்புடி" 
"அடுத்த வாரம் நாங்க கன்னியாகுமரி டூர் வருவோம்ல, அப்பக் காட்டு நான் நம்ப வைக்கிறேன்"
"என்னை நம்ப வைப்பியா? என்னத்தை நம்ப வைப்பே?" 
"நீ பைத்தியம்கிறதை" 
"போடி, நீதான் பைத்தியம்."
சுமித்ராவை நம்ப வைக்க என்ன செய்வது என அவள் அதை மட்டுமே யோசித்தாள். அவளுக்கு அதுவே பெரிய வேலையாக இருந்தது. அதற்குப் பிறகு ஸ்வேதாவைப் பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கையை அசைப்பான். அவளுக்கும் தன்னுடைய ஆதர்ச நாயகனே நம்மைப் பார்க்கிறானே என பார்த்துச் சிரிப்பாள். 
யப்பா, எத்தனை தடவை அவனை நினைத்து கனவு கண்டிருப்போம்! சாப்பிட்டீங்களா? தூங்கினீங்களா? ஏதாச்சும் வேணுமா? ஒரு அப்பாவி குடும்ப இல்லத்தரசிக்கு அவளது இதயபூர்வ நடிகனிடம் கேட்க அதற்கு மேல் என்ன இருக்கிறது? இதுவே அதிகம். கணவனுக்கு தெரிந்தால்?
ஆனால், இப்போது அவன் கண்முன்னே நிற்கிறானே? இதுதான் காலம் என்பதா? காலத்தின் கோலம் என்பதா? ஒரு நடிகன் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்ப எளிமையாகப் பழகுகிறானே? இவனை ஏன் எல்லோரும் தப்பானவன் என்றார்கள்? எவ்வளவு கண்ணியமாகப் பழகுகிறான்? அவகூட சுத்துனான், இவளை வச்சிருக்கான், எவ்ளோ ரூமர்ஸ்? இப்படி ஒருத்தன் கூட சுத்த ஹீரோயின்களே அலையும்போது மத்தவங்க எம்மாத்திரம்?
அவன் அடுத்த சில நாட்களில் தூரத்தில் இருந்து கைகாட்டி ஸ்வேதாவை வெகுவாக இம்ப்ரஸ் செய்துவிட்டான். 
'பாத்தியா கண்ணா அனிருத்? இவளை நெருப்புன்னு சொன்னியே, பார், நான் பார்க்கிறப்ப பூ மாதிரி, ரப்பர் மாதிரி வளைகிறாள். நீ 'முரிபேமு கலிகே'ன்னு புரியாத பாஷையில பாட்டு பாடற ஆளு. நான் நடிகன். இதான்டா உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். இங்க கன்டென்ட் முக்கியமில்ல, தம்பி கவர்ச்சிதான் முக்கியம். நான் சினிமா கவர்ச்சிடா டேய்,' என நினைத்துக்கொண்டான் வேதா.
'இவளையும் முடிப்பேன். அப்புறம் உன் ஆஸ்தான கதாநாயகி அந்த வைஷ்ணவியையும் முடிப்பேன். மேக்ஸிமம் எனக்கு ஒன் மந்த் போதும்,' அவன் உரக்கச் சொல்லிக்கொண்டான்.
ஸ்வேதாவைப் பார்த்து "என்ன?" எனக் கேட்டான். அடிக்கடி அவளை முறைப்பது போல பார்த்தான். சைகை காட்டிப் பேசினான். 
"ஜுரம்" என்றான். 
"வரியா?" எனக் கேட்டுவிட்டு அவன் பால்கனியை விட்டு மறைய, அந்த அப்பாவி மாத்திரை எடுத்துவந்தாள். அது போதும் அவளை அசைப்பதற்கு,
"எனக்கு மீன் குழம்பு பிடிக்கும்" என்றான். அவள் கணவனுக்குத் தெரியாமல் செய்து எடுத்துவந்து சாப்பிடக் கொடுத்துவிட்டுப் போனாள். விரைவில் அவள் கையையைப் பிடிக்கப் பார்த்தான்.
'பால்கனியில் வந்து நிற்கும்போது எல்லாம் நம்மைப் பார்க்கிறாள். நாம் பார்ப்பது தெரிந்ததும் ஒளிந்துகொள்கிறாள் அல்லது வேறு எங்கோ பார்க்கிறாள்' என அவன் நினைத்தான். 
அவள் வீட்டுக்கு வாசல் கூட்டி நீர் தெளிக்கும்போதும், வெளியே கோலமிடும்போதும் அவன் வராத போனில் சத்தமாகப் பேசினான். 
அவன் பால்கனியில் இருப்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு பிறகு இவன் ஒளிந்துகொண்டான். அப்படி ஒளிவதற்கு முன்பு செல்போனை அவள் வீட்டுக்காய் ஆன் பண்ணி வைத்துவிட்டு ஒளிந்துகொண்டான்.
பத்து நிமிடம் கழித்து செல்போனை எடுக்க, அந்த காட்சியில் அவள் பல நூறு முறை அடிக்கடி அவன் நின்ற பால்கனியைப் பார்த்தாள். 'அட, நான் வருவேனா?' என அலைகிறாள். தலைதூக்கி அடிக்கடி பார்த்திருக்கிறாள் என்பது தெரிந்ததும் சிரித்தான். 
அவ்ளோதான், குடும்பக் குத்துவிளக்கு குப்புற விழுந்துவிட்டாள். அனிருத்துக்குத் தெரியாமல் சீக்கிரம் அவளைத் தொட்டுவிட வேண்டும் என நினைத்தான். 'சொதப்பாமல் வேலை பார்க்க வேண்டும்' எனத் திட்டமிட்டான். ஆனால், அவனுக்கு அவள் பெரிதாக வேலை வைக்கவில்லை.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 02:48 PM



Users browsing this thread: 1 Guest(s)