Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#59
எபிசோடு : 58
டிசம்பர் மாத இறுதியில், புத்தாண்டு பிறக்கும் கோலாகலம் ஊரெல்லாம் உற்சாகம் படர, சுரேஷோ முகம் திகிலடைந்து, எப்போது வேண்டுமானாலும் நம்மை வைஷ்ணவி பொங்கலுக்கு முன்னே அனுப்பிவிடுவாள் என்ற அச்சத்திலேயே இருந்தான்.
அந்த வார இறுதியில், "வைஷ்ணவி சொன்னாள்" என மந்தாகினி அழைத்துப்போய், டவுனில் மெயின் தெருவில் ஒரு ஆடிட்டர் வீட்டில் அவனைப் புதிய வேலைக்குக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டினாள். அவர் ஆடிட்டர் ராமநாதன். பணிவானவர், அமைதியானவர், மற்றவர்க்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர். ஆனால் அவர் வீட்டில் உள்ளவர்கள் அப்படி இல்லை.
"அவனது லைசென்ஸ், அடையாளச் சான்றைக் காட்டு," என்றார்கள். அனுபவத்தைக் கேட்டார்கள். "அவனுக்குச் சம்பளம் 20 ஆயிரம்," என்றார்கள். டிரைவர் வேலையைத் தவிர அவன் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை ஆடிட்டர் குடும்பம் பட்டியலிட அவனுக்கு மயக்கமே வந்தது. அவன் ஏதும் பேசவில்லை.
"நீ இங்கேயே ஸ்டே பண்ணிக்கலாம், வா, உன் ரூமைக் காட்டுறேன்." அவன் தங்கப் போகும் இடத்தைப் பார்க்க அவனுக்குக் கடும் அதிர்ச்சியாக இருந்தது. வளர்ப்புப் பிராணிகள் தங்கும் இடத்துக்கு அருகே ஒரு தனி அறை. அறைகூட இல்லை—நாலு சுவர், மேற்பூச்சு பூசாமல், ஆஸ்பெஸ்டாஸ் கூரை. ஓரமாய் ஒரு பிளாஸ்டிக் பட்டைகள் கட்டிய இரும்புக் கட்டில். சின்ன மேடை ஒன்றில் இண்டக்ஷன் ஸ்டவ்.
"உனக்கு என்ன வேணுமோ அதை வாங்கி சமைச்சுக்கலாம்பா," எனச் சலுகை வேறு.
அவன் மனதளவில் நொறுங்கிப் போயிருந்தான்.
"பொங்கலுக்கு நாங்க கூர்க் டூர் போறோம், அதுக்கப்புறம் நீ வந்து ஜாயின் பண்ணிக்கலாம்," சின்னப் பெண் போல ஜடையைத் தூக்கிக் கொண்டை போட்டிருந்த அந்த அம்மாள் மட்டும், "கண்டிப்பா வந்துடுவே இல்ல? கண்டிப்பா வந்துடுவே இல்ல?" எனக் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
"சரிங்கம்மா." அவனுக்கு அந்த வீடும் வேலையும் பிடிக்கவில்லை என்பது மந்தாகினிக்குப் புரிந்தது. என்ன இருந்தாலும் இவன் பாவம் தான். நாம் இந்த வீட்டில் வேலைக்கு வர ஒரு வகையில் இவன் உதவி செய்திருந்தான். அது உண்மைதான்.
ஆனால், இது வைஷ்ணவியின் முடிவு; நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால், இவன் இந்த வீட்டை விட்டு இப்போது போவது சரியானது; நமக்கும் நல்லது. இவனும் கிரிஜாவும் சேர்ந்து வைஷ்ணவியின் பணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நமக்கு சீனியர்கள் என்பதால் நாமும் எதுவும் ஆதிக்கம் செலுத்தி கேட்க முடியவில்லை. வீட்டில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் தரும் மரியாதையை இவர்கள் ரெண்டு பேரும் எனக்கு தருவதில்லை.
இவர்கள் ரெண்டு பேரில் ஒரு ஆள் வெளியே போனால்தான் இன்னொன்று நமக்கு சரிப்படும். சுரேஷ் வேலையை விட்டுப் போனால் கிரிஜா அடங்கிவிடுவாள்; அடங்கித்தான் ஆக வேண்டும். அப்புறம் சமயம் பார்த்து அவளையும் துரத்திவிடலாம். காலத்துக்கும் வைஷ்ணவியின் வலது கரமாக, நிழலாக நாம் இந்த வீட்டில் இருக்கலாம்.
சுரேஷ் - கிரிஜா இடையே ஏதோ ஒன்று ஓடுகிறது. போன மாதம் டவுன் மார்க்கெட்டில் ஏதேச்சையாக வேலை விட்டுப் போன தோட்டக்காரன் மாதவனைப் பார்க்க, 'ஓ'வென அழுகிறான். காய்கறி விற்கிறானாம். காலெல்லாம் நரம்பு வலி, வேறு மருத்துவம் பார்க்கக் கூட காசில்லையாம். கிரிஜாதான் ஏதோ சொல்லி, வைஷ்ணவியிடம் போட்டுக் கொடுத்து அனுப்பி விட்டாளாம். இவள் மந்தாகினி வைஷ்ணவியிடம் விவரம் கேட்க, அவளும் எதுவும் சொல்லவில்லை.
இந்த கிரிஜா மாதவன் போல நம்மையும் ஏதேனும் கலகமூட்டி, வேலை விட்டு அனுப்பி விடலாம். அதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும். நமக்கு கல்யாணம் ஆகும் வரை அல்ல, ஆனபின்னும் நாம் இதே வீட்டில் தான் வேலை செய்ய வேண்டும். இப்படி ஒரு நல்ல வேலை நமது தகுதிக்குக் கிடைக்கவே கிடைக்காது.
அவள் வேறு ஒரு திட்டம் போட்டு காய்களை நகர்த்தினாள். இங்கே பல நண்டுகள் தங்களது சக நண்டுகளைப் பின்னே இழுக்கப் பல வேலைகளைச் செய்துகொண்டிருந்தன. ஆனால் எது வலுவுள்ளதோ அது ஜெயிக்கும் என்பது இயற்கை நியதி.
சுரேஷுக்கு டவுன் ஆடிட்டர் வீட்டில் வேலையை உறுதி செய்த நாளிலிருந்து ஒரு வாரம் கழித்து, காலையில் மந்தாகினி சுரேஷைப் போனில் அழைத்தாள்.
"சொல்லுங்க மேடம், எங்க இருக்கீங்க?"
"நான் வெளியே இருக்கேன், இன்னைக்கு மேடத்தோட அப்பாவுக்குப் பிறந்த நாள் ஆச்சே?"
"சரிங்கம்மா."
"அம்மா நாகர்கோவில் பக்கத்தில் ஒரு கோயிலுக்குப் போகப் போறாங்க. உனக்கு லொகேஷன் அனுப்பி இருக்கேன்,"
"சரிங்கம்மா."
"என்னைக் கூப்பிட்டாங்க, நான் இங்க எங்க அம்மாவோட ரிலேட்டிவ்ஸை பார்க்க வந்திருக்கேன். என்னால வர முடியலைனு அம்மா கிட்ட சொல்லிட்டேன். அப்படியே நாகர்கோவில்ல ஒரு அனாதை இல்லம், கவர்மெண்ட் ஹாஸ்பிடல் எல்லாம் போய் சாப்பாடு, கிஃப்ட் எல்லாம் கொடுக்கணும். மேடம் கொடுப்பாங்க, நீ கூட இரு. நான் எல்லா அரேஞ்ச்மென்ட்ஸும் பண்ணிட்டேன், கிரிஜா வரலையாம்."
"சரிங்கம்மா,"
"நாகர்கோவில்ல லஞ்ச் முடிச்சிட்டு, மேடத்தைக் கூட்டிட்டு நீ கிளம்பு. இதான் ஷெட்யூல், புரியுதா?"
"சரிங்கம்மா,"
"ஃபுட்ஸ், கிஃப்ட்டுக்கெல்லாம் பே பண்ணியாச்சு. அங்க ரமணினு ஒருத்தர் இருப்பார், நீ பேசிக்கோ, நம்பர் அனுப்புறேன்,"
"ஓகேம்மா," (ரமணி நம்பர் என்கிட்டயே இருக்குடி,)
"மேடத்தைப் பத்திரமா அழைச்சிட்டு போயிட்டு வா."
"சரிங்க மேடம்." மந்தாகினி போனை வைக்க, அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
ஜனவரி மூணு, எங்க ஐயாவுக்குப் பிறந்த நாள்னு எங்களுக்குத் தெரியாதா? அடுத்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி அவருக்கு இறந்த நாள் கூட வருதுதான்.
நேற்றே கிரிஜா சொல்லிட்டாள்: "நாளைக்கு மேடத்தோட ஐயாவுக்குப் பிறந்த நாள். அம்மா கோயிலுக்குப் போவாங்க. நான் வீட்டுக்கு தூரம், நீயும் மந்தாகினியும் தான் போக வேண்டியிருக்கும்," என கிரிஜா சொல்லிவிட்டாள்.
மேடத்தோட அப்பா பிறந்த தினத்துக்கு மட்டுமல்ல, அவரு இறந்த தினம், அவங்க அம்மா நினைவு தினம், வைஷ்ணவியின் பிறந்த தினம் எல்லாவற்றுக்கும் மார்த்தாண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம் என அந்தப் பகுதிகளில் உள்ள அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லம், மருத்துவமனை, கோயில், அன்னதானங்கள் என தூள் பறக்கும். பத்து வருஷமாக வைஷ்ணவி இதைச் செய்து வருகிறாள்.
வழக்கமாக சுரேஷும் கிரிஜாவும் வந்துவிடுவார்கள். சுரேஷ் மூன்று ஆண்டுகளாகக் கூட இருக்கிறான். இந்த ஆட்டி மந்தாகினி நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறாளே?
இவ எங்கேயோ ஊரைச் சுத்த போயிட்டு, நமக்கு போன் போட்டு வேலை சொல்லுறாளே? இருடி! நான் போறதுக்குள்ள உனக்கு வேட்டு வைக்கிறேன்!
அவன் மனசுக்குள் கறுவினான்.
ஓடிப்போய் காரை வாஷ் செய்து துடைத்து, சீட்டை சுத்தம் செய்து, போர்டிகோவில் கொண்டு போய் நிறுத்தினான். நாகர்கோவில் ரமணியிடம் போன் செய்து உணவு பொட்டலம், கிஃப்ட் பார்சல் ஏற்பாடுகள் பற்றிக் கேட்டறிந்தான்.
மணி ஒன்பதாக, வெண்பட்டு சேலை, மெரூன் ரவிக்கையில் சந்தனப் பொட்டிட்டு பளீர் தேவதையாக வைஷ்ணவி வந்தாள். அவன் திகைத்துப் போய் வணக்கம் சொன்னான்.
"போகலாமா?" கேட்டாள்.
"போகலாம்மா."
ரொம்ப நாள் கழித்து மந்தாகினி இல்லாமல், கிரிஜா இல்லாமல், வைஷ்ணவியுடன் தனியாக காரில் போக வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது.
இதைச் சாக்காக வைத்து அவளிடம் மனம் விட்டு கெஞ்சி பேசலாம் என்று நினைத்தான். நாகர்கோவில் இங்கிருந்து முப்பது கிலோமீட்டர், ஒரு மணி நேரப் பயணம். ஒரு அஞ்சு நிமிஷம் நமக்குக் கிடைக்காதா? அவன் யோசித்தாலும் அவனது தன்மானம் அவனைத் தடுத்தது.
ஒரு பெண்மணி, 'ஆம்பளையே வேண்டாம்' எனச் சொல்லி நம்மை கண்டிப்பாக வேலை விட்டுப் போக வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்க, நாம் இதற்குத் திரும்பத் திரும்பப் போய் கெஞ்ச வேண்டுமா என்ற எண்ணமும் அவனுக்கு வந்து கொண்டிருந்தது.
வைஷ்ணவி அலங்கார தேவதையாக அவனுடன் காரில் ஏறினாள். பின் சீட்டில் உட்கார்ந்து அவள் கொஞ்ச நேரம் மெல்லிய குரலில் முணுமுணுப்பாகப் பாடிக் கொண்டிருந்தாள். அவன் மெய்மறந்து அந்த இலவச கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்தான். அதன் பின் அவளின் அப்பாவின் சொந்தக்காரர்கள் போனில் பேச, அவனுக்கு வைஷ்ணவியுடன் பேச எந்த வாய்ப்பும் இல்லை.
நாகர்கோவிலில் ஒரு பிரசித்தி வாய்ந்த கோவிலுக்குப் போனார்கள். அர்ச்சனை செய்தார்கள். அது தவிர, அனேக இடங்களுக்கு அவர்கள் போனார்கள். சாப்பாடு, கிஃப்ட் எல்லாம் கொடுத்தார்கள். வைஷ்ணவி பலரிடமும் இன்முகமாக ஆதரவாகப் பேசினாள்.
மத்தியானம் ஒரு ஹோட்டலில் அவளை இறக்கி விட்டான்.
"நீ சாப்பிட்டியா?" சம்பிரதாயத்துக்குக் கேட்டதாக அவள் தொனியே சொன்னது.
"சாப்பிட்டுக்கறேன்மா, நீங்க கொடுத்த பொட்டலத்துல ரெண்டு வாங்கி வச்சுட்டேன்."
"சரி." அவள் மட்டும் ஹோட்டலுக்குப் போனாள்.
நம்மைக் கூப்பிடுவாள் என அவன் எதிர்பார்ப்பு பொய்யானது. போன தடவை அவனும் கிரிஜாவும் வைஷ்ணவியுடன் போய் ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்தியது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
அட, செல்ஃபி கூட எடுத்தோமே! இந்த வருடம் எல்லாம் மாறிவிட்டது. எந்தக் காட்சியும் இங்கே நிரந்தரமில்லை. நாம் வெளியே நாய் போல நிற்கிறோம். கடைசி வரை நாம் டிரைவர் தான்.
வைஷ்ணவி சாப்பிட்டு வர,
"நேரா வீட்டுக்குத் தானேம்மா?"
"ஆமா, ஆனா போறப்ப கல்லுப்பாலம் இசக்கி அம்மன் கோயிலுக்குப் போகணும், ரொம்ப நாளாச்சு, அப்பாவுக்கு புடிச்ச கோயில்."
"சரிங்கம்மா."
கார் சாமியார் மடம் வரை நெடுஞ்சாலையில் விரைந்து, பின் அங்கிருந்து வலது பக்கம் திரும்பியது. வைஷ்ணவி அவனிடம் அளவாகவே பேசினாள். முன்பு போல நம்மிடம் பாசமாக ஏதும் பேசவில்லை. 'மூணு வருஷம் நம்மிடம் காரை ஓட்டி, வேலை விட்டு நிரந்தரமாகப் போகிறானே?' என்பது பற்றியும் ஆதரவாக ஏதும் சொல்லவில்லை.
வழக்கமாக இது போன்ற சமயங்களில் அவனது அப்பா, அம்மாவைப் பற்றி விசாரிப்பாள். இப்போது அதுவும் இல்லை.
அவன் விரக்தியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். வைஷ்ணவியும் அவனது மனநிலையை அறியாமல் இல்லை. ஆனால், இப்போது அவனிடம் பேசத் தொடங்கினால், அவன் அழத் தொடங்கினால் மறுபடியும் நமது மனம் வலிக்கும். அவன் 'இங்கேயே இருந்து விடுகிறேன்' என்பான். நாமும் 'சரி' என்போம். அதன் பின்னால் மாதவனுக்கும் கிரிஜாவுக்கும் என்ன நடந்ததோ, அதுபோல சுரேஷுக்கும் கிரிஜாவுக்கும் நடக்க ஆரம்பிக்கலாம்.
'இனி நம் பங்களாவில் ஆண்களே இங்கே இருக்கக் கூடாது!' என்பது மட்டும் உறுதி என நினைத்தாள் வைஷ்ணவி.
எந்த ஆணாக இருந்தாலும் சரி, அது நித்யானந்தன் போன்ற டாக்டராக இருந்தாலும் வீட்டுக்கு உள்ளே வரக்கூடாது என்று விட்டுவிட்டால் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
மாலை மணி நான்கைத் தாண்டியிருக்க, கார் இசக்கி அம்மன் கோயில் அருகே நின்றது. கூட்டம் குறைவாக இருந்தது. சுரேஷ் வெளியிலேயே இருக்க, அவள் தனியாகப் போய் கோயிலைத் தரிசித்துவிட்டு வந்தாள். அவளைப் பற்றி அங்கே அதிகம் பேர் தெரிந்திருக்கவில்லை என்பதால் அவளுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லை.
அவள் கோயிலைத் தரிசித்துவிட்டு வெளியே வர, சுரேஷ் கோயிலின் வாசலக்கருகே வந்து நின்றான்.
"என்ன இங்க? கார்ல வெயிட் பண்ண வேண்டியதுதானே?" கண்டிப்பாய்ப் பேசினாள்.
"அ, அம்மா இங்கே தேவகிரி மண்டபம் ரொம்ப விசேஷமாகச் சொல்லுவாங்க, அதுக்கு போறீங்களா? அதோ அங்க?"
"தேவகிரி மண்டபமா? தெரியுமே?"
"ஆமா, 108 நடன சிற்பங்களும் இருக்குன்னு சொல்லுவாங்க,"
"தெரியும் தெரியும், ரொம்ப சின்ன வயசுல போயிருக்கேன்." அவள் மணியைப் பார்த்தாள். மணி அஞ்சாச்சே!
"அதுக்கப்புறம் போய் நீங்க பார்க்கலையா?"
"ஆமா, கேள்விப்பட்டிருக்கேன், அது இங்கதான் இருக்கு, ஆனா அதுக்கு கார்ல போகணுமா? வேண்டாமா?"
"கார் போற பாதை இல்லை, நடந்தே போகலாம், அங்க இருக்கு பாருங்க," என அவன் கை காட்டினான்.
அது கோயிலுக்கு முன்பே இங்கு வந்த பழங்கால மண்டபம் என சொல்வார்கள். நாகர்கோவில், கன்னியாகுமரி கடற்கரைக்குக் கப்பல் மூலமாக வந்த போர் வீரர்கள் இங்கே வந்துதான் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதாக ஒரு வரலாறும் இருக்கிறது.
இவ்வளவு தூரம் வந்துட்டு அதை பார்க்கலாமே என அவள் நினைத்தாள்.
"சரி சுரேஷ், நீ காரிலேயே இரு, நான் மட்டும் போயிட்டு வரேன்," சொல்லிவிட்டு வைஷ்ணவி நடக்கத் தொடங்கினாள்.
வெறும் காலில் அந்தப் புல்தரையில் நடப்பதற்கு இதமாக இருந்தது.
கூட அந்த வாயாடி மந்தாகினி இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என ஏனோ நினைத்தாள். வழிநெடுக இருந்த பூக்களும் புதுவிதமான தாவரங்களும் அவள் மனதைக் கொள்ளைகொள்ள, நாசியில் கமழும் நறுமணம் அவள் மனதை லேசாக்கியது.
பணம் என்கிறார்கள், அந்தஸ்து என்கிறார்கள், புகழ், நகை, குடும்பம், காமம் எதுவும் வேண்டாம்; இது போன்ற ஒரு வனாந்தர இடத்தில் தன்னந்தனியாக உலவிக்கொண்டிருந்தாலே போதும்.
'ஆண்டவனே, அப்படி நடமாடுவதற்கு நல்ல தேக ஆரோக்கியத்தை மட்டும் கொடுத்துவிடு. சில வாரங்களுக்கு முன்பு ஆனது போல என் உடம்பைப் போட்டு படுத்தி விடாதே!' என அவள் நினைத்துக் கொண்டு நடந்தாள்.
அந்த தேவகிரி மண்டபத்தை அடைந்தாள். அங்கும் கூட்டம் குறைவாக இருந்தது. எல்லாரும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்க, அவள் ஒவ்வொரு சிற்பங்களையும் பார்த்து வியந்தாள்; புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தாள்.
அந்த ஒரு ஏக்கர் அளவில் பரவியிருந்த அந்தப் பெரிய மண்டபத்தை, ஒவ்வொரு தூணிலும் படிகட்டிலும் சுவரிலும் சாய்ந்து உட்கார, நிற்க, படம் எடுக்க அவள் மனது பெரிதும் பிரகாசமானது.
எல்லாச் சிற்பங்களையும் பார்த்துவிட்டு, பின் மண்டபம் வழியாக வெளியேற வழி இல்லை என்ற போர்டைப் பார்த்தாள். அந்தத் தடுப்பு சற்றே விலக்கப்பட்டிருக்க, தடுப்புக்கு பின்னே இருந்த அந்த ஓவியமும் சிற்பமும் அவள் கண்ணைப் பறித்தன.
சிற்பம், ஓவியம், நடனம், இசை இந்த நான்கும் ஒன்றை ஒன்று அண்டியது தானே! எதைப் பிரித்தால் எது வாழும்? எது நிலைக்கும்?
அவள் தடுப்பைப் பெரிதாக நகர்த்தி உள்ளே போனாள். பெரிய வராந்தா போல இருந்த அந்த வழியில் அவள் கடைசி வரை நிதானமாகப் போனாள். படம் எடுத்தாள். அந்த அமைதியான சூழ்நிலையில் அவள் ஒரு ஆலாபனை பாடலாம் என நினைத்தாள்.
மெல்ல நிதானித்து அவள் பாடக் குரலெடுக்க, 'ம்ம்ம்ஸ்ஸ்ஸ்' என ஒரு சத்தம் கேட்டது. அவள் திகைத்து வராந்தாவின் கடைசியில் உள்ளே எட்டிப் பார்க்க, நீளமான கூண்டு போன்ற அறையில் அங்கே ஒரு சிறிய இடுக்கில் யாரோ நின்று இருந்தார் போல் தோன்ற, அவள் சுவரோடு கண் பொருத்திப் பார்த்தாள்.
யாரோ ஒருவர் இல்லை, இருவர் இருந்தாற்போல் இருந்தது. ஆம், ரெண்டு பேர்—ஆண், பெண். அவர்களுக்கு இந்தத் தனியிடத்தில் என்ன வேலை? அவர்கள் தன்னிலை மறந்து இருந்தார்கள்.
"ஆஆஆ, ஸ்ஸ்ஸ்ஸ்" என மூச்சு சப்தம் கேட்டது. தொடர்ந்து "ப்ஸ்ப்ப்ச்" என முத்த சத்தம்,
"சீசீசீசீ," அய்யோ, இதென்ன? எந்த இடத்தில் வந்து என்ன அநாகரிகம் இது?
"ம்ம்ம்ம், இவ்வளவு போதும் விடுங்க."
"ஏண்டி?" அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
"இங்கெல்லாம் வேண்டாம்," என்று பெண் குரல்.
"ஏய், இங்கெல்லாம் யாரும் வர மாட்டாங்க, காட்டு."
"ஐயோ, எனக்கு மணி ஆச்சு, போகணும்."
"இல்லைடி, இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, தொட்டிப்பாலத்துக்குக் கீழேயே உன்னைக் கவிழ்க்க வேண்டியது, மிஸ் ஆகிட்டே! காட்டு."
"ம்ம்கூம், போதும், இருட்ட ஆரம்பிச்சிடுச்சு."
"இருட்டுதான்டி வசதி, ஜட்டிய அவுரு,"
"ஏய்யெய்ய்ய், பால் மட்டும் குடிக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப பாருங்க, ஏஏழ்ழ்ழ்,"
"இதுவும் பால்தான், எனக்கு புடிச்ச பால்."
வைஷ்ணவியின் காதுகளில் அந்த ஆணும் பெண்ணும் பேசும் காமக்குரல்கள் மாறி மாறி ஒலித்தன. அவர்கள் அந்த குறுகலான இடத்தில் தங்களது இச்சைகளைப் பூர்த்தி செய்ய விரைந்து கொண்டிருந்தார்கள்.
அவரது சிணுங்கலும் முனங்கலும் அந்த இடத்தில் பொருந்தாமல் ஒலித்தது. கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் பச்சை பச்சையாய் வார்த்தைகளை மாறி மாறி பேச ஆரம்பித்தார்கள். அதெல்லாம் வைஷ்ணவி தன் வாழ்நாளிலேயே கேட்காதது. அவர்கள் பேசப் பேச அந்த குரல்கள் அவர்களுக்கு பரிச்சயமாக இருந்தது.
அவள் திகைத்துப் போய் உற்று கேட்க, ஆம், அந்த பெண் குரல், அட! அந்த ஆண் குரல், அய்யோ, அது அனிருத்? அடப்பாவி, வைஷ்ணவிக்கு தொண்டை உலர்ந்தது.
அட திருட்டுப் பயலே, இந்த அனிருத்திடம் சோரம் போகும் இந்த கேடுகெட்ட பெண் யார்?
அட இது, அய்யோ இது, மந்தாகினியின் குரல் அல்லவா?
வைஷ்ணவி திடுக்கிட்டுப் போனாள். என்னங்கடா நடக்குது இங்கே? அவளுக்கு அதிர்ச்சி தாங்க முடியாமல் தலை கிறுகிறுத்தது.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 02:22 PM



Users browsing this thread: 1 Guest(s)