Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#46
எபிசோடு : 45

மார்த்தாண்டம், மந்தாகினி ஊரிலிருந்து திரும்ப வந்தாள். ஒரு குறுகிய கால விடுமுறையைக் கழித்துவிட்டு ஊருக்கு வந்த வைஷ்ணவி பங்களாவின் முதன்மை நிர்வாக அதிகாரி மந்தாகினிக்கு, அந்த வாரம் அங்கே நடந்த விஷயங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
கிரிஜாவிற்கும் சுரேஷுக்கும் இடையே நடந்த கள்ளக் கலவி பற்றி வைஷ்ணவி எதுவும் மந்தாகினியிடம் தெரிவிக்கவில்லை. அப்படியெல்லாம் இன்னொருத்தரைப் பற்றிப் பேசும் அளவிற்கு வைஷ்ணவி பழக்கப்படவும் இல்லை.
ஆனால், அந்த வீட்டில் முன்பு இருந்த இலகுவான சூழல் மாறி, இறுக்கமான சூழலாக மாறியிருக்கிறது என்பது மட்டும் மந்தாகினியால் புரிந்துகொள்ள முடிந்தது. முன்பு போல வைஷ்ணவி அடிக்கடி கிரிஜாவைக் கூப்பிடுவதில்லை. கிரிஜாவுடன் வைஷ்ணவி அம்மா காரில் வருவதில்லை என்பது மட்டும் மந்தாகினி குறித்துக்கொண்டாள். என்னவோ சம்திங்க் ராங்க்!
வைஷ்ணவியும் சுரேஷிடம் சரியாகப் பேசுவதில்லை என்பதும் அவள் புரிந்து வைத்திருந்தாள். எங்காவது போக வேண்டுமென்றால் கூடச் சுரேஷை நேரடியாகக் கூப்பிடாமல் மந்தாகினியிடம் சொல்லிக் கூப்பிடுவதும் அவளுக்குப் புதிதாக இருந்தது.
அன்று அப்படித்தான். வைஷ்ணவி மந்தாகினியிடம் சொல்லி சுரேஷைக் கூப்பிடச் சொன்னாள். கேரளா, பத்மநாப சுவாமி கோயில் அருகே ஒரு வி.ஐ.பி-க்கு திருமண மண்டபத்தில் கச்சேரி ஒன்று ஏற்பாடாகி இருக்கிறது எனச் சொல்லி மூவரும் கிளம்பினார்கள்.
தமிழ்நாடு - கேரளா எல்லையில் அவர்களின் கார் செல்ல, அங்கே மக்கள் திரள் அதிகமாக இருந்தது. மைல் நீளத்திற்கு வாகனங்கள் நின்றன.
"ஏன், என்னாச்சு? ஏன் இவ்வளவு கூட்டம்?" வைஷ்ணவி பொதுவாகக் கேட்க, மந்தாகினி சுரேஷைக் கூப்பிட்டு, "என்னனு பாரு சுரேஷ்" என்றாள்.
"சரிங்கம்மா". அவன் இறங்கிப் பார்த்துவிட்டு வந்தான்.
"சினிமா ஷூட்டிங் நடக்குது, மலையாளப் படம் போல. ஒன் ஹவர் ஆகுமாம். நம்மள மாற்றுப் பாதையில் போகச் சொல்றாங்க."
"இது என்ன வம்பா போச்சு! பிசியான ரோட்ல பிசியான சமயத்துல ஷூட்டிங் நடத்துறாங்களே. வழிவிடச் சொல்லுப்பா" வைஷ்ணவி சொல்ல, "சொன்னா கேட்க மாட்டாங்கம்மா. சரியாவே பதில் சொல்ல மாட்டறாங்க" அவன் அலுப்பாய்ச் சொல்ல, "அவங்க சொன்னத கேட்டுட்டு சும்மாவே வந்துட்டியா?" மந்தாகினி இடைமறிக்க, "என்ன பண்றதும்மா, நான் உண்டு என் வேலை உண்டு, எந்த வம்புக்கும் தும்புக்கும் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். இருக்குற கொஞ்ச காலம் பேரைக் கெடுத்துக்கக் கூடாதுல்ல" எனச் சொல்லிவிட்டு வைஷ்ணவியைப் பார்த்தான். வைஷ்ணவி மௌனமாக இருந்தாள்.
"சரி, ஆல்டர்னேட் ரூட்டைப் போய் விசாரியேன்" மந்தாகினி விரட்டினாள்.
"சரிங்கம்மா" அவன் ஓடினான்.
கால் மணி நேரம் கழித்து அவனும் விசாரித்துவிட்டு வந்தான். "அம்மா, ஒரு கிராமத்தில் போயி திரும்ப மெயின் ரோட்டுக்கு ரிட்டர்ன் வரணும்மா. பாதை வேற சரியில்லைன்னு சொல்றாங்க. முழுக்க முழுக்க மண் பாதையாம். அம்மாவுக்குச் சரின்னா போலாம்" என்றான்.
"சரி போலாம், வண்டி எடு. மேடத்துக்கு டைம் ஆகுது."
"வண்டியை நேத்து தான் சர்வீஸுக்கு விட்டு எடுத்தோம். வாட்டர் வாஷ்லாம் பண்ணியிருக்கு. அதான் மண் ரோட்டுல காரை விடணுமான்னு பாக்குறேன்."
"இல்ல இல்ல, அதெல்லாம் வேண்டாம்" வைஷ்ணவி முணுமுணுத்தாள்.
"வெயிட் பண்ணலாமா மேடம்?"
"ஆறு மணிக்கு புரோகிராம். இப்பவே மணி அஞ்சாகப் போகுது," வைஷ்ணவி முணுமுணுத்தபடி, சுரேஷை அழைத்து, "ஷூட்டிங்க் ஆளுங்ககிட்ட போயி கரெக்டா எவ்வளவு நேரம் ஆகும்னு கேளு. கால் ஹவர்னா பரவாயில்லை."
"இல்லம்மா, எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொல்றாங்க."
"இது என்னடா வம்பா போச்சு!"
"கிராமத்துல பூந்துடலாமா?"
"சுத்தி இருட்டு வேற ஆகுது," மந்தாகினி சொல்ல, வைஷ்ணவி சுரேஷைப் பார்த்து, "சுரேஷ், வழி விடுவாங்களா மாட்டாங்களா? ஷூட்டிங்க் நடத்த பர்மிஷன் வாங்கி இருக்காங்களா கேட்டுட்டு வா. இதென்ன அவங்க தாத்தா வீட்டுச் சொத்தா? மடையனுங்க," வைஷ்ணவி கொதிக்க, "சரிங்கம்மா, போய் கேட்கறேன்" என்றான்.
"ஒரு விஷயத்துக்கு போனா ஒழுங்கா உனக்கு எதுவுமே கேட்கத் தெரியாதா? சொன்னாத் தான் செய்வியா?" அவள் கத்த, "சரிங்கம்மா, உடனே போறேம்மா" என்றான்.
அவன் போன வேகத்தைப் பார்த்தால் கண்டிப்பாய் ஒரு அடிதடி, தள்ளுமுள்ளு இருக்கும் என்றுதான் இருவருக்கும் தோன்றியது. 'இவன் சும்மாவே ஆடுவான், நாம் வேற சலங்கை கட்டி கோபத் தூபம் போட்டுட்டோமோ?' என அவள் தாமதமாக உணர, தூரத்தில் எதிர்பார்த்தது போல பத்து நிமிடத்தில் படப்பிடிப்பு மையத்திலிருந்து கலவரக் குரல்கள் கேட்டன.
"ஐயோ!" எனத் தலையில் கை வைத்துக்கொண்டாள். "இவனுக்கு ஒரு விஷயத்தைக் கரெக்ட்டா ஹேண்டில் பண்ணி முடிக்கத் தெரியல. சரியான காட்டனா இருக்கான், சண்டை வளர்த்துட்டான் போல" என்றாள்.
"கத்தறதைப் பார்த்தா அய்யோ, பெரிய சண்டை போல, சுரேஷ் குரல் தான்" மந்தாகினி மிரள, "ப்ச், போய் என்னன்னு பாக்கலாமா?"
"நாம என்னன்னு போய் பார்க்கிறது, லேடீஸ். அவனே வரட்டும்" என்றாள்.
அவன் கோபமாக வந்தான். அவனது சட்டை எல்லாம் கசங்கி இருக்க, "தாயோளி, பேச்சுன்னா பேச்சா தான் இருக்கணும்" அவன் பேசிக்கொண்டே காருக்கு வர, "ஷ், கார்ல அம்மா இருக்காங்க, பார்த்துப் பேசு" மந்தாகினி கண்டிக்க, "மன்னிச்சுக்கங்கம்மா, பர்மிஷன் காட்டுடான்னா நட்ட நடு ரோட்ல என்மேல கை வைக்கிறானுங்க. ஷூட்டிங்க் நடத்திட்டு என்னை பொறாமை புடிச்சவன்னு சொல்றானுங்க மலையாளத்தானுங்க,"
"அடிச்சாங்களா?" வைஷ்ணவி கோபப்பட்டாள்.
"ஆமா, தள்ளி விட்டானுங்க,"
"அடடா,"
"நீ மட்டும் உம்முன்னு சொல்லும்மா, மொத்த ஷூட்டிங்கையும் அடிச்சு உடைச்சிடுறேன்."
"அதெல்லாம் ஒன்னும் வேணாம், அமைதியா இரு" மந்தாகினி கையமர்த்த, "கார்ல அம்மா இருக்காங்களேன்னு அவனுங்களைச் சும்மா விட்டேன், மந்தாகினி மேடம்."
"ஃபைனலா என்ன சொல்றாங்க?"
"வழி விட மாட்டாங்களாம். நாலு ஹவர் கூட ஆகுமாம். லோக்கல்ல எம்.எல்.ஏ சப்போர்ட்ல ஆடறானுங்க. ஒரு போலீஸ் கூட பந்தோபஸ்துக்கு இல்ல. ஆக்ட்ரஸ் ரேஷ்மி நாயர் கேரவன்ல இருக்கு. அதில்லாம ஒரு கேரவான் வேன் ரோட்ல நின்னுகிட்டு இருக்கு. அதை எடுத்தா கூட நம்ம வண்டி போயிடும்,"
"பிரஃபா,"
"ரெண்டுல ஒன்னு எடுத்தாக்கூட போதும், அதையும் எடுக்க மாட்டாங்களாம்,"
"பர்மிஷன் இருக்கா இல்லையா?"
"பர்மிஷன் வாங்கிட்டுப் பண்றீங்களான்னு கேட்டா, அதெல்லாம் எந்த மயிாத்துக்கு உனக்குக் காட்டணும்னு கத்துறான்."
"யார் அப்படி சொன்னது?"
"ஒரு புரொடக்ஷன் மேனேஜர்மா. அவன் சொல்லப் போய் தான் அவனுங்க என்னை தள்ளி விட்டாங்க."
வைஷ்ணவிக்கு பி.பி எகிறியது. "வண்டிய ரைட்ல எடுத்து ஏறிப் போ."
வைஷ்ணவிக்கு எளிதில் கோபம் வராது, இப்போது வந்துவிட்டது. 'இத்தனை மக்களின் அவசரங்களைப் புரியாமல் என்ன ஷூட்டிங் நடத்துகிறார்கள்?' என கேள்வி வந்தது.
"அம்மா, ஆப்போசிட்லயா?"
"ஆமா, முடிஞ்ச அளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட் கிட்ட கொண்டு போ," என்றாள்.
அவள் ஏன் அப்படி சொல்கிறாள் என அவனுக்கும் புரியவில்லை. அவள் உத்தரவை ஏற்று அவன் காரை எடுத்தான். கார் ராங் சைடில் ஏறிப் போனது. ஹார்ன் சத்தம் ஒலித்துக் கொண்டே காரின் வேகத்தைப் பார்த்து மக்கள் மிரள, "நிறுத்தாம போ" வைஷ்ணவி உத்தரவிட, கூட்டத்தைப் பிளந்து கொண்டு கார் வேகமாய் சரேலென போனது.
"ஏஏய்ய்ய், கார், கார் வருது!"
எல்லோரும் திடுக்கிட்டு விலகி வழி விட, பிளாஸ்டிக் தடுப்புகள், கயிறுகளை அறுத்துக் கொண்டு வண்டி பாய, கேரவானை முட்டிக் கொண்டு நிற்பது போல அருகில் 'கிரீச்' என பிரேக் பிடித்துக் கொண்டு டயர் தேய நிற்க, "ஏய்ய்ய்ய், நில்றா!" ஷூட்டிங் ஆட்கள் கலவரமாயினர்.
"அய்யோ, யார்ரா அவன்?"
கேரவான் வரை போய் அதற்கு மேல் கார் முன்னேற முடியவில்லை. அந்த புரொடக்ஷன் மேனேஜர் திரும்பிப் பார்த்து ஓடி வந்தான்.
"ஏய்ய், அறிவு கெட்ட," அவன் மோசமான வார்த்தையைக் கார் பின்சீட்டை பார்த்துச் சொன்னான்.
வைஷ்ணவி கோபத்தில் விழிகள் விரித்தாள்.
"அவனை அடி."
"அம்மா,"
"அவனை அடி சுரேஷ்!" வைஷ்ணவி ருத்ரமாய் சொல்ல, அவனுக்குப் புது ரத்தம் பாய்ந்தது போல கதவைத் திறந்தான். பேச்சே இல்லை, மேனேஜருக்கு ஒரே கை வெட்டு தான். நேராகத் தாடையில் பட்டுத் தாடை கிழிந்தது. கீழே விழுந்த மேனேஜரைக் காலால் உதைத்து மேலேறி நின்றான்.
"த்தா, ரோட்டையா பிளாக் பண்றீங்க, வாங்கடா!" சுரேஷ் முஷ்டியை முறுக்கினான்.
கூட வந்த ஆளும் சுரேஷை அடிக்கப் பாய, "அவனையும் போடு!" கூடவந்தவனுக்கு வெட்டு அல்ல, குத்து! கழுத்திலும் வயிற்றிலும் பலமான குத்துகள். அவன் எகிறி விழ, அவனது உக்கிரமும் பலமும் பார்த்து ஷூட்டிங்கின் ஒரு பகுதி பின்வாங்க, ஒரு சிலர் மட்டும் அவனை நோக்கி வந்தார்கள்.
"போதும், உட்கார் சுரேஷ், சமரசம் பேச வந்தா போவோம்," வைஷ்ணவி காத்திருக்க, சுரேஷ் காரில் உட்கார்ந்து கதவை மூடினான்.
"ஏம்பா, தொழில் பண்ற இடத்துல கலாட்டா பண்றியே" ஒரு மத்திம வயது ஆள் கத்தினான்.
"யோவ், உங்களை ஷூட்டிங் நடத்தட்டும், வேணாம்னு சொல்லல. ஒரு பக்கமும் வழி விட்டு நடத்துங்க. இந்த கேரவானைத் தூக்கி ஓரம் நிப்பாட்டுங்க. ஒரே ஒரு கார் போறதுக்காவது வழி விடலாம்ல."
"அதுக்கு அடிப்பியா?"
"வம்பா பேசுனா வாய்லதான் போடுவோம். இது எவ்ளோ முக்கியமான ரோடு! ரோடை அடைச்சிட்டு அராஜகம் பண்றீங்க, நாங்க கச்சேரிக்கு கரெக்ட் டைமுக்கு போக வேணாமா?"
"கச்சேரியா? என்ன கச்சேரி?" ஷூட்டிங் கூட்டத்தில் ஒருவன் கேட்க, "அம்மா யாருன்னு நினைச்சுக்கிட்டே?" அவன் கார் விண்டோவை எட்டி கீழிறக்க, வைஷ்ணவியின் அழகைக் கூட்டம் குனிந்து பார்த்தது. பார்த்து விசில் அடித்தது. மந்தாகினியைப் பார்த்து சைட் அடித்தது. அந்த கூட்டத்துக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் எந்த தொடர்புமில்லை.
"ஏய்ய், இவளுங்களும் நடிக்கறவளுங்கப்பா." மந்தாகினி காதுகளைப் பொத்திக் கொண்டாள்.
"ஆமாண்டா, மினுக்கி மினுக்கி பாட்டுக்கு ஆடுவாளே." வைஷ்ணவி திகிலடைய, "ஏய்ய், என்னடா சொன்னீங்க?" சுரேஷ் கூட்டத்தைத் தள்ள, சுற்றி இருந்த கூட்டம் சிதறி ஓட, ஷூட்டிங் ஆள்கள் மட்டும் அவனை எதிர்த்தார்கள்.
"யோவ், இங்க இத்தனை பேரு வெயிட் பண்றாங்க, உனக்கு என்ன மயிரு அவசரம்?"
"ஏய், மரியாதையா பேசு! அம்மா இருக்காங்கன்னு பார்க்கறேன், உனக்கு மேல நான் பேசுவேன்."
"எவடா உங்க முதலாளி?" அந்த ஆள் குனிந்து பார்த்தான். "எங்கடா இவளுங்களை தள்ளிகிட்டு போறே?" என ஒரு மாதிரியாகச் சொல்லி சிரிக்க, "ஏய்ய்ய்!" சுரேஷ் கட்டுப்பாட்டை இழந்தான். படாரென கதவைத் திறந்து அந்த ஆளை அடித்தான்; மரண அடி! அவன் அடித்த ஒரே அடியில் வேகம் தாங்காமல் அவன் சாலையில் படுத்து உருண்டான்.
ஒரே கலவரமானது. யார் யாரோ வந்தார்கள், சரமாரியாக அடி வாங்கினார்கள். சுரேஷ் அத்தனை பேரையும் சமாளித்தான். சுரேஷை யாராலும் நிறுத்த முடியவில்லை. வருகிறவர்களையெல்லாம் அடித்துக் கொண்டே இருந்தான். பல பேர் அடிவாங்கி காயமானார்கள். சினிமா ஷூட்டிங்கை விட அது இன்னும் தத்ரூபமாக, ஆக்ரோஷமாக இருந்தது.
"இது வழிவிடாததுக்கு," "இது எங்க மேடத்தை தப்பா பேசுனதுக்கு," என ஒவ்வொன்றுக்கும் சொல்லி நிதானமாக அடித்தான்.
"நல்லா போடு வாத்யாரே! ரேஸ்மியை காட்டுன்னா அசிங்கமா திட்றான், நல்லா கவனிச்சு செஞ்சு விடு தலைவா" கூட்டம் கத்த, அங்கே இருந்த இரும்பு ராடு அவன் கைக்குக் கிடைக்க, சுரேஷ் இரும்பு ராடால் இன்னும் பல பேரைச் செமத்தியாகக் கவனித்தான்.
'மொத் மொத்'தென அடி வாங்கினார்கள். கத்தியபடியே சிதறினார்கள்.
"வாங்கடா, வாங்கடா, இன்னும் எத்தனை பேர்டா வருவீங்க?"
இடையில் இந்த சண்டைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஒல்லி ஆள் திபுதிபுவென "ஏய்ய், என்னப்பா, என்னப்பா?" என ஓடிவர, "மயிருப்பா!" அவன் இடுப்பையும் சுரேஷ் நின்ற இடத்திலேயே எட்டி உதைத்தான்.
"அய்யோ, டைரக்டரை அடிச்சிட்டான், டைரக்டர் விழுந்துட்டார்!" யாரோ கத்த, சந்தனம் போட்டு வைத்த ஒரு ஆள் கடைசியில் ஓடி வந்தார்.
"ஏய்ய், என்னப்பா, யார் பா அது எல்லாரையும் அடிச்சிகிட்டு இருக்கான்?" "ஒரு காட்டான் எங்க எல்லாரையும் அடிச்சிட்டிருக்கான் சார்," "ஏன், சபாபதி இல்ல?" "அவன் முதல்ல அடிச்சு போட்டதே சபாபதி சாரை தான்." "யோவ், என்னப்பா கலாட்டா?" அவர் கலவரமானார்.
அவர் தான் புரொடியூசர். பதற்றமாய் சுரேஷை நோக்கி வர, அதற்குள் இரண்டு மூன்று யூனிட் ஆட்கள் சுரேஷிடம் மோசமாய் அடி வாங்க, புரொடியூசர் அதிர்ச்சியில் திடுக்கிட்டார்.
"யோவ்வ், ப்ளீஸ் ஸ்டாப்! யார் நீங்க, அடிக்காதீங்கோ!" ஓடி வந்து சுரேஷிடம் கை கூப்பினார். "சமூகம் மன்னிக்கணும், கோபத்தை விடணும்."
"அட போய்யா!" அவன் யாரையும் பார்க்கவில்லை. அவனுக்கு ஏற்றி விட்ட கோபம் இறங்க வழியில்லாமல் திணற, "வாடா மச்சி, வாழக்காய் பஜ்ஜி, த்தா இதை ஷூட்டிங் எடுங்கடா!" ராடை சுழட்டியபடியே சுரேஷ் புரொடியூசர் சட்டையைப் பிடித்துத் தூக்க, "நோ, சுரேஷ், ஸ்டாப்! லீவ் ஹிம்!" மந்தாகினி கத்தினாலும் அவன் விடவில்லை.
"சுரேஷ், என்ன பண்றே? வயசான ஆளைப் போய், ம்ம்ம்ம், விடு" வைஷ்ணவி பதறிப் போய் கார் கதவைத் திறந்து அவனை நோக்கிக் கத்த, அவன் பிடியை விட்டான். வைஷ்ணவி அருகே வர சுரேஷ் பவ்யமாய் ஒதுங்க, "சாரி டிரைவர் சார். சண்டை வேணாம், சூட்டிங் நடக்க விடுங்க. 30 லட்சம் போட்டு இன்னைக்கு சூட்டிங் நடத்துறோம். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க," தயாரிப்பாளர் மிரண்டு போய் பணிவாய் குனிய, "என்கிட்ட எதுவும் பேசாத போய்யா!" என சுரேஷ் கத்த, "சுரேஷ் போதும், சீட்ல போய் உட்காரு," வைஷ்ணவி குரலுயர்த்த, அந்த ஆள் வைஷ்ணவியைப் பார்த்தான்.
",அய்யோ, வைஷ்ணவி அம்மா நீங்களா? சாரிங்க மேடம், உங்களுக்குச் சிரமம் கொடுத்துட்டோம் மேடம்," புரொடியூசர் தாழ் பணிந்தார்.
"ஏன் இப்படி இம்பிரப்பரா ஷூட்டிங் பண்றீங்க, எவ்ளோ நியூசென்ஸ்?"
"மன்னிச்சிடுங்க, மன்னிச்சிடுங்க, ரொம்ப சாரி,"
"அம்மாவை தப்பா உங்க ஆளுங்க தான் பேசினாங்க. இப்ப அம்மா வந்தாங்க, வெச்சுக்க உங்கலை அவ்வளவு தான்" சுரேஷ் கர்ஜித்துவிட்டு டிரைவர் சீட்டில் போய் உட்கார்ந்தான்.
"வைஷ்ணவி அம்மா, மன்னிச்சுக்கோங்க. நீங்க போறதுக்கு, உங்க வண்டி போறதுக்கு ஒரு வழி பண்ணி தர்றேன். யோவ் சண்முகம், இங்க வாய்யா" என அவர் கூப்பிட்டார். "எதுக்குய்யா வந்த இடத்துல சண்டை போடுறீங்க? உள்ளூர் ஆளுங்களை பகைச்சிட்டு சூட்டிங் நடக்க முடியுமா?"
"முதல்ல நீங்க பர்மிஷன் வாங்கினீங்களா இல்லையா? அதைச் சொல்லுங்க" வைஷ்ணவி கைகட்டிக்கொண்டு கேட்க, "வாங்கினியா இல்லையா சொல்லுய்யா, அம்மா கேக்குறாங்க பாரு" புரொடியூசர் குரல் கொடுக்க, அவன் தலையைச் சரித்தான்.
"பர்மிஷன் வாங்காம உங்களுக்கு ஏன் இவ்வளவு திமிர்? எவ்ளோ வண்டி பின்னாடி நிக்குது தெரியுமா? மரியாதையா ஒரு ஒரு மணி நேரம் உங்க சூட்டிங்கை நிறுத்தி வைங்க" வைஷ்ணவி உத்தரவிட, "அப்படியே ஆகட்டும்மா. யோவ், கிரேன் எல்லாம் ஓரங்கட்டுங்க, சாங் தானே, ஏழு மணிக்கு மேல எடுத்துக்கலாம். டிராலி எடு, லைட்ஸ் ஆஃப் பண்ணு, கிரௌட் கிளியர் பண்ணு" மளமளவென உத்தரவுகள் பிறந்தன.
"சார், ஹீரோ சார் போகணும்னு சொல்றாரு."
"அவரு போனா போகட்டும், நாளைக்கு காலைல சீக்கிரம் வர வச்சு எடுத்திடலாம். ரேஸ்மி ஷாட்ஸ் எடுங்க."
"எங்க எடுக்கறது? டைரக்டர் செமத்தியா அடிவாங்கி இருக்கார்."
"டான்ஸ் டைரக்டர் வெச்சு எடுங்க, அந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் இருக்கான்ல,"
"ம்ம், கேரவான்ல இருக்கார். அந்த கேரவான் வண்டியால தான் இவ்ளோ பிராப்ளம். ரோட்ல அடைச்சிகிட்டு நிக்குது."
"எடுக்க வேண்டியது தானே,"
"அவரு தூங்கறாரு, வண்டியை அசைச்சா அவர்க்கு கோவம் வரும்,"
"மயிர்ல வரும்! அவனா இப்ப செவுள்ல அறை வாங்கினான்? போய் கேரவானை ஓரம் கட்டி, ரூட்டை கிளியர் பண்ணு,"
"சரிங்க சார்."
கேரவான், கிரேன், பேரிகார்ட் எல்லாம் வேகமாய் நகர்த்தப்பட, வாகனங்கள் மெல்ல ஊர்ந்து போகத் துவங்கியது.
"நாளைக்கு சண்டே தானே? கூட்டம் இருக்காது, டிராஃபிக் இருக்காது. ஹீரோ போகட்டும். அந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் மட்டும் இருக்கட்டும், அவர் சீன் எடுத்துக்கலாம்முன்னு டைரக்டர் சொன்னாரு" ஒரு உதவி இயக்குனர் சொல்ல, "இந்த அறிவு முதல்லயே இருந்தா இவ்ளோ சண்டை வந்திருக்காது. எவ்ளோ பேருக்கு அடி! ஒத்தை ஆளு போட்டு பின்னி எடுத்துட்டான். என் சட்டையைப் பிடிச்சு தூக்கறான். இதெல்லாம் தேவையா, த்தூ,"
",,"
"என்னய்யா பிளான் பண்றீங்க?" அந்த புரொடியூசர் கத்தினார்.
"சார், கேரக்டர் ஆர்டிஸ்ட் நைட்டு முழுக்க நடிக்க ஒத்துக்கணுமே."
"எல்லாம் ஒத்துக்கணும், எங்க போறான்?"
"இல்ல சார், என்னதான் இருந்தாலும் ஒரு காலத்துல ஹீரோவா நடிச்சவரு,"
"இருக்கட்டும், அது அந்த காலம். இப்ப அந்த ஆளு வெறும் கேரக்டர் வேஷம் தானே, நான் சொல்றதை செய்ய சொல்லு" எனச் சொல்லி துரத்த, வைஷ்ணவி கார் நகரத் துவங்கியது.
வைஷ்ணவி அங்கிருந்த வேடிக்கை பார்க்கும் ஆளை அழைத்து, "என்ன படம் ஷூட்டிங் நடக்குது?" என கேட்க, "தமிழ் படம் தான் மேடம். மலையாளம், தமிழில் ஒரே சமயத்துல நடக்குது."
"ஹீரோ யார்?"
"துல்கர் சல்மான். ஹீரோயின் ரேஸ்மி நாயர்,"
"சரி, யாரோ ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கேரவன்ல தூங்கறதா சொன்னாங்களே? அது யாரு?" அவள் ஆர்வமாய் கேட்க, "அவரு ஒரு காலத்துல ரொம்ப ஃபேமஸா இருந்த ஆக்டர். மூணு வருஷம் கழிச்சு இப்ப திரும்ப நம்ம படத்துல தான் நடிக்கிறார்."
"ஓ, அப்படியா? யார் அவர்? பேர் என்ன?" என்று கேட்டாள்.
"ஆக்டர் ஷியாம்" என்றான்.
வைஷ்ணவி விசாரிப்பதை ஓரம் கட்டப்பட்ட வேனிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆக்டர் ஷியாம்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 01:53 PM



Users browsing this thread: 1 Guest(s)