02-08-2026, 01:05 PM
எபிசோடு : 23
மாலை 7 மணி ஆக ஆட்டோவில் வந்து இறங்கினாள் வைஷ்ணவி. சுரேஷ் அவள் வரும்போது போர்டிகோவில் ஓரமாக கைகட்டி நின்றிருந்தான்.
வைஷ்ணவி அவனைக் கண்டுகொள்ளாமல் பூக்கூடையுடன் உள்ளே போக, அவன் பின்னாலேயே போனான்.
"என்ன?" அவனை 'என்ன' என்பது போல பார்த்தாள்.
"அ, அம்மா, வணக்கம்மா."
"உனக்கு வேலை வெளியேதானே? எதுக்கு உள்ள வரே?" எப்போதும் கனிவும் கருணையுமா பேசும் வைஷ்ணவி அம்மாவா இது?
"வணக்கம்மா.. ரெண்டு நாளா எனக்கு எந்த வேலையும் சொல்ல மாட்டேங்குறீங்களே?"
"உனக்கு நான் எந்த வேலையை சொல்றது? வெளியே போ."
"அம்மா, மன்னிச்சுக்கோங்கம்மா.. இனிமேல் ஒழுங்காக நடந்துக்கிறேன்."
"இல்லப்பா, நீ வேலை விட்டு நின்னுக்கப்பா."
"ஐயோ! என்னம்மா, என்ன காரணம்?"
"காரணம் புடலங்காய்லாம் கேட்கக்கூடாது! அடுத்த வாரத்துல இருந்து வேற ஆள் போட்டுக்கப் போறேன். நீ நின்னுக்கலாம்," என்றாள் வைஷ்ணவி தீர்மானமாக.
"அம்மா,?" அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதைக் கேட்டு திகைத்துப் போய் பதிலொன்றும் சொல்லத் தோன்றாமல் கொஞ்ச நேரம் நின்றிருந்தான்.
"ஏம்மா, இவ்ளோ கோபம்? நான் என்ன தப்பு பண்ணேன்?"
"போய்தான் ஆகணும்ப்பா.. சட்டம்லாம் பேசக்கூடாது."
"ஏன்மா? அட சொல்லுங்கம்மா," என்று தயங்கிக் கேட்டான்.
'கிரிஜாவுடன் கூத்தடித்த முருகேசன் போல இனி ஒரு ஆணும் இந்த வீட்டில் வேண்டாம் என எப்படி சொல்வது? இவனுக்கு காரணத்தை என்னவென்று ஒரு ஆணுக்கு சொல்வது?' வைஷ்ணவி இதயம் படபடக்க சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். படி இறங்கி நின்றாள். கையில் பூக்கூடையை ஓரமாய் பூஜை டேபிளில் வைத்தாள்.
'சே, ஒரு ஆம்பளைகிட்ட இதெல்லாம் பேசறது? அவ யார் கூட படுத்தா உனக்கென்னனு இவன் கேட்டுவிட்டால்?' இதுபோல ஒரு இக்கட்டான நிலையை சந்தித்ததில்லை.
"காரணமெல்லாம் கேட்க வேணாம். பிடிக்கலேன்னா நிறுத்திட வேண்டியதுதானே," என்றாள்.
"அம்மா.. திடீர்னு வேலை இல்லைன்னா ரொம்ப கஷ்டம்மா வீட்டுல," அவன் கண்கள் கலவரமடைந்தன. அவனது மயிர் அடர்ந்த பெரிய நெற்றி ஏகத்துக்கும் சுருங்கியது.
ஆஜானுபாகுவான அவன், பலமுறை கூட்ட நெரிசலில் இருந்து பொக்கிஷமாய் அவளைப் பாதுகாத்த அவன், அவள் மீது ஆட்கள் தொட வந்தபோதெல்லாம் தடுத்து நிறுத்தி சண்டை போட்ட முரடன், தான் செய்த தவறால் இப்போது கூனிக் குறுகிப் பணிவாக நின்றபடி அவளை பயமாய்ப் பார்த்தான்.
"வேலை விட்டு நான் போகணுமா?" என்றான். அதற்குள் அவனுக்கு துயர மிகுதியால் தொண்டை அடைத்தது. ஒன்றரை வருஷம் இங்கே வேலை செய்கிறான். இவன் மீது ஒரு தப்பான புகாரும் இல்லை. சுறுசுறுப்பான பிள்ளை என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வான். மேல்நிலை குடிநீர்த் தொட்டி கழுவ ஆள் வராதபோது, "அட, இதுக்கேன் ஆளு? நான் இறங்கி கிளீன் பண்றேன்," எனச் சொல்லி, உடல் முழுக்க பாசி அழுக்கோடு வந்து "தொட்டியை கிளீன் பண்ணிட்டேன்மா," என வந்து சொன்னவன் இவன்.
ஆறு மாசம் முன்னாடி கூட, "இன்டர்வியூ நடக்கப்போகுது.. காம்பவுண்ட் கேட்டெல்லாம் துருப்பிடிச்சாப்பல இருக்கே, பெயிண்ட் அடிக்க ஆளு கூட்டிட்டு வா," வைஷ்ணவி சொல்ல, "சரிம்மா," என்றான்.
ஆனால், மதியம் சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் அவள் நடக்கையில், கீழே கேட்டுக்கு அவனே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தான்.
"ஒரு வேலையுமில்லை, பெயிண்ட் அடிக்க ஏன் இன்னொரு ஆளு?" எனச் சொன்னானாம் உழைப்பாளி. ஆனால் இன்று எல்லாம் தலைகீழ்..
"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலேம்மா. வயசான அப்பா, அம்மா இருக்காங்க.. நான்தான்மா காப்பாத்தணும், வேற வருமானமில்லை. நீங்க திடுதிப்புனு என்னை வேலையில இருந்து நிறுத்திட்டீங்கன்னா நான் எங்கம்மா போவேன்? என்ன வேலை சொன்னாலும் செய்யறேன், சம்பளம் கூட குறைச்சு கொடுங்க.. ஆனா என்னை வேலைக்கு வேண்டாம்னு சொல்லாதீங்கம்மா," என்று அவன் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்.
'இதென்னடா வம்பா போச்சு? பெரிய முரடன்.. வலுவான ஆண்பிள்ளை.. வேலை விட்டு போடா என்றால் இப்படி அழுகிறானே' என்று அவளுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. ஒரு ஆண் அழுவதை வைஷ்ணவி இப்போதுதான் பார்க்கிறாள். மனோகரன் கூட அழுவான், ஆனால் அவன் கபடதாரி. ஒருவேளை இவனும் நாடகமாடுகிறானா? உற்றுப் பார்த்தாள். இல்லை, நிஜமாக அழுகிறான். நல்லவன்தான்.
ஆனாலும் அசைவ பூனைகளை வைத்துக்கொண்டு பண்ணை நடத்த முடியாது. கண்டிப்பாக ஆண்களை இந்த வீட்டில் தங்க வைக்கலாகாது. அவள் உறுதியாக இருந்தாள்.
பனை மரம் போல் இருப்பவன் குனிந்து அழுவதை வைஷ்ணவி என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தாள். கோபமில்லாத அந்தப் பார்வையைக் கண்ட அவன், "இனிமே அந்த மாதிரி எந்தத் தப்பும் செய்ய மாட்டேம்மா," என்று கைகூப்பி வேண்ட, அவனைக் கண்கொண்டு பார்க்கவே சிரமப்பட்டாள்.
'சே.. பாவம், இவன் என்ன தப்பு செய்தான்? செய்ததெல்லாம் அந்த கொழுப்பெடுத்தவளும் முருகேசனும்.. இவன் மீது இரக்கப்படலாமா? நோ, ஆண்கள் மீது இரக்கப்படவே கூடாது. முருகேசன் கூட இப்படித்தானே இருந்தான்? எவ்வளவு பவ்யம்? எவ்வளவு பணிவு?'
யோசித்து, வைஷ்ணவி கொஞ்சம், "இங்க பாருப்பா, நீ இங்க செட் ஆக மாட்டே.. நான் வீட்டு ஒர்க்கர்ஸ் ஃபுல்லா லேடீஸா மாத்தப் போறேன்."
",,,,,."
"கொஞ்ச நாளைக்கு வேணுமானா இங்கேயே கார் ஓட்டு. ஆனா எப்படியும் நான் வேற ஆள்தான் போட்டுக்கப் போறேன். பொங்கலுக்கு அப்புறம் நீ ஒரு வேலை தேடிக்க."
",,,,,."
"இல்லன்னா கூட நானே உனக்கு நல்ல இடத்துல வேலை வாங்கித் தர்றேன்.. பயப்படாத," என்று சொன்னாள்.
"அம்மா,"
"இதே சம்பளத்துல வேலை வாங்கித் தர்றேன். அதுவரைக்கும் இங்க இருக்கலாம். நீ இப்ப கிளம்பு."
"சரிங்கம்மா," என்று தலையை ஆட்டிவிட்டு நகர,
"இனி உன்னை வீட்டுக்குள்ள பார்க்கக் கூடாது, வெளியே அவுட் ஹவுஸிலேயேதான் இருக்கணும். கூப்பிடுறப்ப வந்தா போதும்.. புரிஞ்சதா?"
"சரிங்கம்மா," அதைச் சொல்லும்போதே அவன் குரல் உடைந்தது.
நடை தளர்வாய் அவன் போவதையே பார்த்தாள். பாவம், ரொம்ப பயந்துவிட்டான். முருகேசன் செய்த வேலைக்கு இவன் என்ன செய்வான்? ஆனாலும், ஏனோ கோபப்பட்டு திட்டாமல் விட்டுட்டேன். ரொம்ப பரிவைக் காட்டிவிட்டேனே. 'இன்னியோட நின்னுக்க, நீ வரவேணாம்'னு சொல்ல முடியலை. ஏன் இந்த ராஸ்கலுக்கு இரண்டு மூன்று மாசம் டைம்?
சுரேஷ் சென்னைக்காரன். அவனுக்கு இந்த தென் மாவட்ட ஊர்கள் கலாச்சாரம் எல்லாம் தெரியாது. ஆரம்பத்தில் இங்கே பேசும் சொலவடைகள் கூட அவன் அறியாதது. முதன்முதலாக அவனைக் காணும்போது பரிவும் இரக்கமும் உண்டாவதை உணர்ந்தாள்.
ஆனால் அவன் மேல் மட்டும் அதிகப்படியான பரிவு ஏன் உண்டாக வேண்டும்? காரணம், அவனது பாசாங்கு இல்லாத மரியாதை. ஒரு பெரிய குருவிடம் பழகுவது போல இயல்புடன், பயபக்தியுடன் பேசுகிறான். தெய்வத்தை வணங்கும் தொண்டன் போல அச்சம்.
சுரேஷ் நல்லவன்தான், ஆனால் ஆண்.. இனி ஆண்களே இங்கே வேணாம். கூடிய சீக்கிரம் இவனை வீட்டை விட்டு, வேலையை விட்டு அனுப்பிவிட வேண்டும். அவள் ஒரு முடிவோடு மேலே சென்றாள்.
அவுட் ஹவுஸை நோக்கி தளர்ந்த நடையுடன் சென்ற சுரேஷின் பின்னால் ரகசியமாய் ஓடினாள் கிரிஜா.
"ஏய்ய் சுரேஷ், நில்லு.. அம்மா என்ன சொன்னாங்க? எல்லாம் ஓகேதானே?"
அவன் திரும்பிப் பார்த்தான்.
"உனக்கு ரொம்ப அக்கறைதான்!" என்றான்.
"ஏன்டா, நான்தானே அம்மாகிட்ட போய் பேசணும்னு ஐடியா கொடுத்தேன்? என்ன சொன்னாங்கதானே கேட்கறேன்? கோச்சுக்கிறியே?" அவன் கன்னத்தில் செல்லமாக தட்டினாள்.
"எனக்கு நம்பிக்கை இல்லை கிரிஜா. அவங்க என்னை வேலை விட்டு அனுப்புறதுல உறுதியா இருக்காங்க. அவங்களுக்கு நீ யார் கூடவோ இருந்தது கூட பிரச்சனை இல்லை. இந்த வீட்டில் எப்படி இப்படி ஒரு தப்பு நடந்துச்சுங்கிறதுதான் அவங்களுக்கு தாங்க முடியாத ஆத்திரம். ஆம்பளைங்களே வேணாம்னு பாக்கறாங்க.. லேடி டிரைவரை வெச்சுப்பாங்க போல.."
"ஆமா, மந்தாகினியை வெச்சுப்பாங்க.. அந்த ராங்கிதான் ஐடியா சொல்லியிருப்பாங்க.. இப்போ இந்த மேட்டர்ல சிக்கவே உன்னை,"
"நல்ல மனசை புண்படுத்திட்டோமேன்னு எனக்கு கவலைடி."
"முடிவா என்னதான் சொன்னாங்க?"
"ரெண்டு, மூணு மாசம் டைம் கொடுத்திருக்காங்க. ஆம்பளைங்களே வேணாம்னு முடிவு எடுத்திருக்காங்க. இதை மாத்துறது கஷ்டம்."
"அய்யயோ!"
"சுரேஷே தப்பு பண்ணிட்டான், இவன் பண்ண மாட்டானான்னு நினைக்கறாங்க. எனக்கென்னமோ, நீ இதுல சுரேஷை தேவையில்லாம இழுத்து விட்டுட்டேன்னு நினைக்கறேன். என்னோட வேலை மட்டும் போயிருக்கும். பாவம் அவன்"
"அவங்க எப்படியும் என்னை அனுப்பிடுவாங்க. அதுக்குள்ள நான் வேற வேலை தேடிக்கணும். இல்லன்னா அவங்களே நல்ல வேலையா தேடி தருவாங்களாம். அப்படி,"
"சரி விடு! இந்த ஊரிலேயே எதாச்சும் வேலை கிடைக்குதான்னு பாரு."
"ஏன் இந்த ஊர்ல? நான் சென்னைக்கு தான் போக போறேன். இந்த ஊரே வேணாம்."
"சென்னைக்கு போறியா? அப்ப நானு? என்னை விட்டா போறே?"
"நீயா? போடி, வாழ்ந்த வரைக்கும் போதும் அப்படின்னு பிரிஞ்சிட வேண்டியதுதான்" என்று அவன் விரக்தியாக சொல்ல,
"ஏய் என்னைப் பாரு!" என்றபடி அவனை தன் பக்கம் இழுத்தாள், திருப்பினாள். அவன் மார்பில் முலைகள் நசுங்க அப்படியே அவன் மீது ஏறாத குறையாக போய் எக்கி கட்டி பிடித்துக் கொண்டாள்.
"ஏய்ய் என்னடி பண்றே? இங்க பாரு! அம்மா மேலதான் இருக்காங்க. திடீர்னு இந்த பக்கம் வந்தாங்கன்னா, இப்பவே ரெண்டு பேருக்கும் சீட்டை கிழிச்சி அனுப்பிடுவாங்க. என்னை விடு."
"அனுப்புனா அனுப்பட்டும். என்னை விட்டு போக போறியா?"
"எனக்கு வேற வழி தெரியலடி. சுரேஷ், நிஜமாக ஒரு மாசம் இருக்குல்ல, அதுக்குள்ள அவங்க மனசு மாறினாலும் மாறும். அந்த மந்தாகினி பத்தி ஏதாவது சொல்லுவாங்களா?"
"இந்த விஷயம் சொல்ல மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்" என்றாள் கிரிஜா.
வைஷ்ணவி தனக்கான ஒரு பி.ஏ.வை தேடுகிறாள் என தெரிந்ததுமே, அப்படி வரப்போகிற பி.ஏ. தனது தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து கொள்வாள் என இருவருமே முதலில் பயந்தது உண்மைதான். அதனால்தான் அவர்கள் ஏழ்மை வாசம் வீசும் மந்தாகினியை தேர்ந்தெடுத்தார்கள்.
"சுரேஷ், அந்த பொண்ணு பாரு, லேசா சாயம் போன டிரெஸ்ஸா இருக்கு. நடுத்தர குடும்பத்து பொண்ணு மாதிரி இருக்கு. ரொம்ப அடக்கம். இந்த மாதிரி பொண்ணு தான் நமக்கு சரிப்பட்டு வரும். இல்லன்னா ராங்கிகாரி எவளாச்சும் வந்து தொலைக்க போறா? நம்ம பாடு அவ்ளோ தான். ஏற்கெனவே சுரேஷ் தொல்லை தாங்கல."
"நமக்கு இவ சரியா இருப்பாளா?"
"ம்ம், அந்த ப்ளூ-யெல்லோ சுரிதார், போ, பேசு," என கிரிஜாதான் மந்தாகினியை கைகாட்டி சுரேஷிடம் பேசினாள்.
இன்டர்வியூவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டால் இங்கே வேலை கிடைக்கும், வைஷ்ணவி அம்மாவுக்கு பிடிக்கும் என மந்தாகினிக்கு தாமாகவே போய் சொல்லிக் கொடுத்தார்கள்.
அப்படித்தான் மந்தாகினி இங்கே வேலைக்கு நுழைந்தாள். அவள் வேலைக்கு வந்து இந்த 6 மாதம் வரை பெரிய பிரச்சனை ஏதுமில்லை. இவர்களை அதிகாரம் ஏதும் பண்ணவில்லை. இவர்கள் வேலையில் தேவையில்லாமல் தலையிடவில்லை. ரொம்ப நல்ல பெண். ஆனால் மெல்ல மெல்ல அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டாள்.
"ரெண்டு நாளு முன்னாடி கொடுத்த மூனாயிரம் ரூவாக்கு இன்னும் கணக்கு வரலியே கிரிஜா?" என மந்தாகினி கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. இது போல் வைஷ்ணவி கூட அவளிடம் கேட்டதில்லை.
சுரேஷுக்கும் ஆப்பு விழுந்தது.
"இப்பதானே அஞ்சாயிரம் ரூவாக்கு பெட்ரோல் போட்டோம்?"
"ரிசர்வ் விழுந்திருக்கும்மா."
"அதான் நான் கேக்குறேன். நம்ம மைலேஜ் பதினெட்டுன்னா, 50 லிட்டர்க்கு 900 கிலோ மீட்டர் நாம போயிருக்கனுமே?"
"மேடம், நான் ஒன்னும் பொய் சொல்லல," அவனுக்கு சுர்ரென ஏறியது.
"கோயம்புத்தூர் டிரிப் ஒன்னு போனேமே?"
"ஆமா, வரப்ப திண்டுக்கல்ல அம்மா கிட்ட காசு வாங்கி பெட்ரோல் போட்டியே?"
ஆடி காரில் இருக்கிறாள், எல்லாத்தையும் நோட் பண்ணி வைக்கிறாள்.
"இங்க பாரு சுரேஷ், இனி என் கிட்ட மட்டும் காசு வாங்கி பெட்ரோல் போடு. அப்பதான் கணக்கு வெச்சுக்க முடியும்." அவன் அயர்ந்து போனான்.
ஆனால், அதிகார தோரனையின்றி தான் சொன்னாள். ஆனால், இனி இது அதிகமாகும். மந்தாகினி வந்த பிறகுதான் தெரிகிறது, அந்த இடத்தில் யார் வந்தாலும் பிரச்சனைதான். இந்த ஐந்தாறு மாதத்தில் சீனே மாறிவிட்டது. வைஷ்ணவிக்கு சகலமும் மந்தாகினிதான். இனி டிரைவராகி விட்டால்?
அப்படிப்பட்ட மந்தாகினியிடம் நமது விஷயத்தை வைஷ்ணவி சொல்லி விட்டால்? நம்மை ரொம்ப இளப்பமாக நினைப்பாளே என்றெல்லாம் அவர்கள் பயப்பட, மந்தாகினி மறுநாள் வீட்டில் வந்து இறங்கினாள்.
ஆனால் இவர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை மந்தாகினி கொண்டு வந்திருக்கிறாள் என்பது அப்போது அவர்களுக்கு தெரியாது.
மாலை 7 மணி ஆக ஆட்டோவில் வந்து இறங்கினாள் வைஷ்ணவி. சுரேஷ் அவள் வரும்போது போர்டிகோவில் ஓரமாக கைகட்டி நின்றிருந்தான்.
வைஷ்ணவி அவனைக் கண்டுகொள்ளாமல் பூக்கூடையுடன் உள்ளே போக, அவன் பின்னாலேயே போனான்.
"என்ன?" அவனை 'என்ன' என்பது போல பார்த்தாள்.
"அ, அம்மா, வணக்கம்மா."
"உனக்கு வேலை வெளியேதானே? எதுக்கு உள்ள வரே?" எப்போதும் கனிவும் கருணையுமா பேசும் வைஷ்ணவி அம்மாவா இது?
"வணக்கம்மா.. ரெண்டு நாளா எனக்கு எந்த வேலையும் சொல்ல மாட்டேங்குறீங்களே?"
"உனக்கு நான் எந்த வேலையை சொல்றது? வெளியே போ."
"அம்மா, மன்னிச்சுக்கோங்கம்மா.. இனிமேல் ஒழுங்காக நடந்துக்கிறேன்."
"இல்லப்பா, நீ வேலை விட்டு நின்னுக்கப்பா."
"ஐயோ! என்னம்மா, என்ன காரணம்?"
"காரணம் புடலங்காய்லாம் கேட்கக்கூடாது! அடுத்த வாரத்துல இருந்து வேற ஆள் போட்டுக்கப் போறேன். நீ நின்னுக்கலாம்," என்றாள் வைஷ்ணவி தீர்மானமாக.
"அம்மா,?" அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதைக் கேட்டு திகைத்துப் போய் பதிலொன்றும் சொல்லத் தோன்றாமல் கொஞ்ச நேரம் நின்றிருந்தான்.
"ஏம்மா, இவ்ளோ கோபம்? நான் என்ன தப்பு பண்ணேன்?"
"போய்தான் ஆகணும்ப்பா.. சட்டம்லாம் பேசக்கூடாது."
"ஏன்மா? அட சொல்லுங்கம்மா," என்று தயங்கிக் கேட்டான்.
'கிரிஜாவுடன் கூத்தடித்த முருகேசன் போல இனி ஒரு ஆணும் இந்த வீட்டில் வேண்டாம் என எப்படி சொல்வது? இவனுக்கு காரணத்தை என்னவென்று ஒரு ஆணுக்கு சொல்வது?' வைஷ்ணவி இதயம் படபடக்க சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். படி இறங்கி நின்றாள். கையில் பூக்கூடையை ஓரமாய் பூஜை டேபிளில் வைத்தாள்.
'சே, ஒரு ஆம்பளைகிட்ட இதெல்லாம் பேசறது? அவ யார் கூட படுத்தா உனக்கென்னனு இவன் கேட்டுவிட்டால்?' இதுபோல ஒரு இக்கட்டான நிலையை சந்தித்ததில்லை.
"காரணமெல்லாம் கேட்க வேணாம். பிடிக்கலேன்னா நிறுத்திட வேண்டியதுதானே," என்றாள்.
"அம்மா.. திடீர்னு வேலை இல்லைன்னா ரொம்ப கஷ்டம்மா வீட்டுல," அவன் கண்கள் கலவரமடைந்தன. அவனது மயிர் அடர்ந்த பெரிய நெற்றி ஏகத்துக்கும் சுருங்கியது.
ஆஜானுபாகுவான அவன், பலமுறை கூட்ட நெரிசலில் இருந்து பொக்கிஷமாய் அவளைப் பாதுகாத்த அவன், அவள் மீது ஆட்கள் தொட வந்தபோதெல்லாம் தடுத்து நிறுத்தி சண்டை போட்ட முரடன், தான் செய்த தவறால் இப்போது கூனிக் குறுகிப் பணிவாக நின்றபடி அவளை பயமாய்ப் பார்த்தான்.
"வேலை விட்டு நான் போகணுமா?" என்றான். அதற்குள் அவனுக்கு துயர மிகுதியால் தொண்டை அடைத்தது. ஒன்றரை வருஷம் இங்கே வேலை செய்கிறான். இவன் மீது ஒரு தப்பான புகாரும் இல்லை. சுறுசுறுப்பான பிள்ளை என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வான். மேல்நிலை குடிநீர்த் தொட்டி கழுவ ஆள் வராதபோது, "அட, இதுக்கேன் ஆளு? நான் இறங்கி கிளீன் பண்றேன்," எனச் சொல்லி, உடல் முழுக்க பாசி அழுக்கோடு வந்து "தொட்டியை கிளீன் பண்ணிட்டேன்மா," என வந்து சொன்னவன் இவன்.
ஆறு மாசம் முன்னாடி கூட, "இன்டர்வியூ நடக்கப்போகுது.. காம்பவுண்ட் கேட்டெல்லாம் துருப்பிடிச்சாப்பல இருக்கே, பெயிண்ட் அடிக்க ஆளு கூட்டிட்டு வா," வைஷ்ணவி சொல்ல, "சரிம்மா," என்றான்.
ஆனால், மதியம் சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் அவள் நடக்கையில், கீழே கேட்டுக்கு அவனே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தான்.
"ஒரு வேலையுமில்லை, பெயிண்ட் அடிக்க ஏன் இன்னொரு ஆளு?" எனச் சொன்னானாம் உழைப்பாளி. ஆனால் இன்று எல்லாம் தலைகீழ்..
"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலேம்மா. வயசான அப்பா, அம்மா இருக்காங்க.. நான்தான்மா காப்பாத்தணும், வேற வருமானமில்லை. நீங்க திடுதிப்புனு என்னை வேலையில இருந்து நிறுத்திட்டீங்கன்னா நான் எங்கம்மா போவேன்? என்ன வேலை சொன்னாலும் செய்யறேன், சம்பளம் கூட குறைச்சு கொடுங்க.. ஆனா என்னை வேலைக்கு வேண்டாம்னு சொல்லாதீங்கம்மா," என்று அவன் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்.
'இதென்னடா வம்பா போச்சு? பெரிய முரடன்.. வலுவான ஆண்பிள்ளை.. வேலை விட்டு போடா என்றால் இப்படி அழுகிறானே' என்று அவளுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. ஒரு ஆண் அழுவதை வைஷ்ணவி இப்போதுதான் பார்க்கிறாள். மனோகரன் கூட அழுவான், ஆனால் அவன் கபடதாரி. ஒருவேளை இவனும் நாடகமாடுகிறானா? உற்றுப் பார்த்தாள். இல்லை, நிஜமாக அழுகிறான். நல்லவன்தான்.
ஆனாலும் அசைவ பூனைகளை வைத்துக்கொண்டு பண்ணை நடத்த முடியாது. கண்டிப்பாக ஆண்களை இந்த வீட்டில் தங்க வைக்கலாகாது. அவள் உறுதியாக இருந்தாள்.
பனை மரம் போல் இருப்பவன் குனிந்து அழுவதை வைஷ்ணவி என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தாள். கோபமில்லாத அந்தப் பார்வையைக் கண்ட அவன், "இனிமே அந்த மாதிரி எந்தத் தப்பும் செய்ய மாட்டேம்மா," என்று கைகூப்பி வேண்ட, அவனைக் கண்கொண்டு பார்க்கவே சிரமப்பட்டாள்.
'சே.. பாவம், இவன் என்ன தப்பு செய்தான்? செய்ததெல்லாம் அந்த கொழுப்பெடுத்தவளும் முருகேசனும்.. இவன் மீது இரக்கப்படலாமா? நோ, ஆண்கள் மீது இரக்கப்படவே கூடாது. முருகேசன் கூட இப்படித்தானே இருந்தான்? எவ்வளவு பவ்யம்? எவ்வளவு பணிவு?'
யோசித்து, வைஷ்ணவி கொஞ்சம், "இங்க பாருப்பா, நீ இங்க செட் ஆக மாட்டே.. நான் வீட்டு ஒர்க்கர்ஸ் ஃபுல்லா லேடீஸா மாத்தப் போறேன்."
",,,,,."
"கொஞ்ச நாளைக்கு வேணுமானா இங்கேயே கார் ஓட்டு. ஆனா எப்படியும் நான் வேற ஆள்தான் போட்டுக்கப் போறேன். பொங்கலுக்கு அப்புறம் நீ ஒரு வேலை தேடிக்க."
",,,,,."
"இல்லன்னா கூட நானே உனக்கு நல்ல இடத்துல வேலை வாங்கித் தர்றேன்.. பயப்படாத," என்று சொன்னாள்.
"அம்மா,"
"இதே சம்பளத்துல வேலை வாங்கித் தர்றேன். அதுவரைக்கும் இங்க இருக்கலாம். நீ இப்ப கிளம்பு."
"சரிங்கம்மா," என்று தலையை ஆட்டிவிட்டு நகர,
"இனி உன்னை வீட்டுக்குள்ள பார்க்கக் கூடாது, வெளியே அவுட் ஹவுஸிலேயேதான் இருக்கணும். கூப்பிடுறப்ப வந்தா போதும்.. புரிஞ்சதா?"
"சரிங்கம்மா," அதைச் சொல்லும்போதே அவன் குரல் உடைந்தது.
நடை தளர்வாய் அவன் போவதையே பார்த்தாள். பாவம், ரொம்ப பயந்துவிட்டான். முருகேசன் செய்த வேலைக்கு இவன் என்ன செய்வான்? ஆனாலும், ஏனோ கோபப்பட்டு திட்டாமல் விட்டுட்டேன். ரொம்ப பரிவைக் காட்டிவிட்டேனே. 'இன்னியோட நின்னுக்க, நீ வரவேணாம்'னு சொல்ல முடியலை. ஏன் இந்த ராஸ்கலுக்கு இரண்டு மூன்று மாசம் டைம்?
சுரேஷ் சென்னைக்காரன். அவனுக்கு இந்த தென் மாவட்ட ஊர்கள் கலாச்சாரம் எல்லாம் தெரியாது. ஆரம்பத்தில் இங்கே பேசும் சொலவடைகள் கூட அவன் அறியாதது. முதன்முதலாக அவனைக் காணும்போது பரிவும் இரக்கமும் உண்டாவதை உணர்ந்தாள்.
ஆனால் அவன் மேல் மட்டும் அதிகப்படியான பரிவு ஏன் உண்டாக வேண்டும்? காரணம், அவனது பாசாங்கு இல்லாத மரியாதை. ஒரு பெரிய குருவிடம் பழகுவது போல இயல்புடன், பயபக்தியுடன் பேசுகிறான். தெய்வத்தை வணங்கும் தொண்டன் போல அச்சம்.
சுரேஷ் நல்லவன்தான், ஆனால் ஆண்.. இனி ஆண்களே இங்கே வேணாம். கூடிய சீக்கிரம் இவனை வீட்டை விட்டு, வேலையை விட்டு அனுப்பிவிட வேண்டும். அவள் ஒரு முடிவோடு மேலே சென்றாள்.
அவுட் ஹவுஸை நோக்கி தளர்ந்த நடையுடன் சென்ற சுரேஷின் பின்னால் ரகசியமாய் ஓடினாள் கிரிஜா.
"ஏய்ய் சுரேஷ், நில்லு.. அம்மா என்ன சொன்னாங்க? எல்லாம் ஓகேதானே?"
அவன் திரும்பிப் பார்த்தான்.
"உனக்கு ரொம்ப அக்கறைதான்!" என்றான்.
"ஏன்டா, நான்தானே அம்மாகிட்ட போய் பேசணும்னு ஐடியா கொடுத்தேன்? என்ன சொன்னாங்கதானே கேட்கறேன்? கோச்சுக்கிறியே?" அவன் கன்னத்தில் செல்லமாக தட்டினாள்.
"எனக்கு நம்பிக்கை இல்லை கிரிஜா. அவங்க என்னை வேலை விட்டு அனுப்புறதுல உறுதியா இருக்காங்க. அவங்களுக்கு நீ யார் கூடவோ இருந்தது கூட பிரச்சனை இல்லை. இந்த வீட்டில் எப்படி இப்படி ஒரு தப்பு நடந்துச்சுங்கிறதுதான் அவங்களுக்கு தாங்க முடியாத ஆத்திரம். ஆம்பளைங்களே வேணாம்னு பாக்கறாங்க.. லேடி டிரைவரை வெச்சுப்பாங்க போல.."
"ஆமா, மந்தாகினியை வெச்சுப்பாங்க.. அந்த ராங்கிதான் ஐடியா சொல்லியிருப்பாங்க.. இப்போ இந்த மேட்டர்ல சிக்கவே உன்னை,"
"நல்ல மனசை புண்படுத்திட்டோமேன்னு எனக்கு கவலைடி."
"முடிவா என்னதான் சொன்னாங்க?"
"ரெண்டு, மூணு மாசம் டைம் கொடுத்திருக்காங்க. ஆம்பளைங்களே வேணாம்னு முடிவு எடுத்திருக்காங்க. இதை மாத்துறது கஷ்டம்."
"அய்யயோ!"
"சுரேஷே தப்பு பண்ணிட்டான், இவன் பண்ண மாட்டானான்னு நினைக்கறாங்க. எனக்கென்னமோ, நீ இதுல சுரேஷை தேவையில்லாம இழுத்து விட்டுட்டேன்னு நினைக்கறேன். என்னோட வேலை மட்டும் போயிருக்கும். பாவம் அவன்"
"அவங்க எப்படியும் என்னை அனுப்பிடுவாங்க. அதுக்குள்ள நான் வேற வேலை தேடிக்கணும். இல்லன்னா அவங்களே நல்ல வேலையா தேடி தருவாங்களாம். அப்படி,"
"சரி விடு! இந்த ஊரிலேயே எதாச்சும் வேலை கிடைக்குதான்னு பாரு."
"ஏன் இந்த ஊர்ல? நான் சென்னைக்கு தான் போக போறேன். இந்த ஊரே வேணாம்."
"சென்னைக்கு போறியா? அப்ப நானு? என்னை விட்டா போறே?"
"நீயா? போடி, வாழ்ந்த வரைக்கும் போதும் அப்படின்னு பிரிஞ்சிட வேண்டியதுதான்" என்று அவன் விரக்தியாக சொல்ல,
"ஏய் என்னைப் பாரு!" என்றபடி அவனை தன் பக்கம் இழுத்தாள், திருப்பினாள். அவன் மார்பில் முலைகள் நசுங்க அப்படியே அவன் மீது ஏறாத குறையாக போய் எக்கி கட்டி பிடித்துக் கொண்டாள்.
"ஏய்ய் என்னடி பண்றே? இங்க பாரு! அம்மா மேலதான் இருக்காங்க. திடீர்னு இந்த பக்கம் வந்தாங்கன்னா, இப்பவே ரெண்டு பேருக்கும் சீட்டை கிழிச்சி அனுப்பிடுவாங்க. என்னை விடு."
"அனுப்புனா அனுப்பட்டும். என்னை விட்டு போக போறியா?"
"எனக்கு வேற வழி தெரியலடி. சுரேஷ், நிஜமாக ஒரு மாசம் இருக்குல்ல, அதுக்குள்ள அவங்க மனசு மாறினாலும் மாறும். அந்த மந்தாகினி பத்தி ஏதாவது சொல்லுவாங்களா?"
"இந்த விஷயம் சொல்ல மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்" என்றாள் கிரிஜா.
வைஷ்ணவி தனக்கான ஒரு பி.ஏ.வை தேடுகிறாள் என தெரிந்ததுமே, அப்படி வரப்போகிற பி.ஏ. தனது தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து கொள்வாள் என இருவருமே முதலில் பயந்தது உண்மைதான். அதனால்தான் அவர்கள் ஏழ்மை வாசம் வீசும் மந்தாகினியை தேர்ந்தெடுத்தார்கள்.
"சுரேஷ், அந்த பொண்ணு பாரு, லேசா சாயம் போன டிரெஸ்ஸா இருக்கு. நடுத்தர குடும்பத்து பொண்ணு மாதிரி இருக்கு. ரொம்ப அடக்கம். இந்த மாதிரி பொண்ணு தான் நமக்கு சரிப்பட்டு வரும். இல்லன்னா ராங்கிகாரி எவளாச்சும் வந்து தொலைக்க போறா? நம்ம பாடு அவ்ளோ தான். ஏற்கெனவே சுரேஷ் தொல்லை தாங்கல."
"நமக்கு இவ சரியா இருப்பாளா?"
"ம்ம், அந்த ப்ளூ-யெல்லோ சுரிதார், போ, பேசு," என கிரிஜாதான் மந்தாகினியை கைகாட்டி சுரேஷிடம் பேசினாள்.
இன்டர்வியூவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டால் இங்கே வேலை கிடைக்கும், வைஷ்ணவி அம்மாவுக்கு பிடிக்கும் என மந்தாகினிக்கு தாமாகவே போய் சொல்லிக் கொடுத்தார்கள்.
அப்படித்தான் மந்தாகினி இங்கே வேலைக்கு நுழைந்தாள். அவள் வேலைக்கு வந்து இந்த 6 மாதம் வரை பெரிய பிரச்சனை ஏதுமில்லை. இவர்களை அதிகாரம் ஏதும் பண்ணவில்லை. இவர்கள் வேலையில் தேவையில்லாமல் தலையிடவில்லை. ரொம்ப நல்ல பெண். ஆனால் மெல்ல மெல்ல அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டாள்.
"ரெண்டு நாளு முன்னாடி கொடுத்த மூனாயிரம் ரூவாக்கு இன்னும் கணக்கு வரலியே கிரிஜா?" என மந்தாகினி கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. இது போல் வைஷ்ணவி கூட அவளிடம் கேட்டதில்லை.
சுரேஷுக்கும் ஆப்பு விழுந்தது.
"இப்பதானே அஞ்சாயிரம் ரூவாக்கு பெட்ரோல் போட்டோம்?"
"ரிசர்வ் விழுந்திருக்கும்மா."
"அதான் நான் கேக்குறேன். நம்ம மைலேஜ் பதினெட்டுன்னா, 50 லிட்டர்க்கு 900 கிலோ மீட்டர் நாம போயிருக்கனுமே?"
"மேடம், நான் ஒன்னும் பொய் சொல்லல," அவனுக்கு சுர்ரென ஏறியது.
"கோயம்புத்தூர் டிரிப் ஒன்னு போனேமே?"
"ஆமா, வரப்ப திண்டுக்கல்ல அம்மா கிட்ட காசு வாங்கி பெட்ரோல் போட்டியே?"
ஆடி காரில் இருக்கிறாள், எல்லாத்தையும் நோட் பண்ணி வைக்கிறாள்.
"இங்க பாரு சுரேஷ், இனி என் கிட்ட மட்டும் காசு வாங்கி பெட்ரோல் போடு. அப்பதான் கணக்கு வெச்சுக்க முடியும்." அவன் அயர்ந்து போனான்.
ஆனால், அதிகார தோரனையின்றி தான் சொன்னாள். ஆனால், இனி இது அதிகமாகும். மந்தாகினி வந்த பிறகுதான் தெரிகிறது, அந்த இடத்தில் யார் வந்தாலும் பிரச்சனைதான். இந்த ஐந்தாறு மாதத்தில் சீனே மாறிவிட்டது. வைஷ்ணவிக்கு சகலமும் மந்தாகினிதான். இனி டிரைவராகி விட்டால்?
அப்படிப்பட்ட மந்தாகினியிடம் நமது விஷயத்தை வைஷ்ணவி சொல்லி விட்டால்? நம்மை ரொம்ப இளப்பமாக நினைப்பாளே என்றெல்லாம் அவர்கள் பயப்பட, மந்தாகினி மறுநாள் வீட்டில் வந்து இறங்கினாள்.
ஆனால் இவர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை மந்தாகினி கொண்டு வந்திருக்கிறாள் என்பது அப்போது அவர்களுக்கு தெரியாது.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)