Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#23
எபிசோடு : 22

தான் கோர்வையாக சொல்வதை வைஷ்ணவி கேட்டுக்கொண்டிருப்பதே தன்னுடைய வெற்றி என நினைத்தாள் கிரிஜா. இந்த கதையை முழுதும் கேட்ட பிறகும் 'என்னை விட்டு வெளியே போடி' என கண்டிப்பாக இவள் சொல்ல மாட்டாள் என கிரிஜா நம்பினாள். அவளைத் தயக்கமாய்ப் பார்ப்பது போல பார்த்துவிட்டு, பிறகு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள்.
"நானும் சீக்கிரம் முடிச்சிட்டு என்னை விடுவான்னுதான் பார்த்தேன்."
",,,,,,.."
"ஆனா கிட்டத்தட்ட 15 நிமிஷம் அந்த மழையில என்னை வெச்சு நல்லா செஞ்சிட்டான். ஒன் டைம் செஞ்சது போதாதுன்னு திரும்ப என் ரூமுக்கு வந்து.."
"போதும்.. போதும்,"
"ஆமாம்மா.. போதும்.. போதும்னு கெஞ்சினாக்கூட அவன் என்னை செகண்ட் டைம் மறுபடியும் செஞ்சான். எதுக்குடா, ஏன்'னு கேட்டேன். ஒரே டைம் செஞ்சிட்டு விட்டா நான் அவனை வெறுத்துடுவேனாம். திரும்பத் திரும்ப செஞ்சாதான் நான் அவன் ஞாபகமாவே இருப்பேனாம்."
",,,,,."
"ஆனா விடிஞ்சப்புறம் அவனை பார்க்கக் கூடாது, அவன்கிட்ட பேசக் கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா அன்னிக்கே மறுபடியும் ராத்திரி என் கதவைத் தட்டுனான். நல்லா குடிச்சிருந்தான் போல, கால்ல விழுந்து அழுதான். தெரியாம தப்பு பண்ணிட்டேன்னு அழுதான். மன்னிப்பு கேட்டதோடு சரி, மறுபடியும் அவன் மனுஷனா நடந்துக்கல. பெட்டுல தள்ளி மேல ஏறி புரண்டான்."
",,,,,."
"முதல் நாளை விட இன்னைக்கு ரொம்ப கொடூரமான மிருகமா நடந்துகிட்டான். முதல்ல நடந்த செக்ஸில் கொஞ்சம் காதல் இருந்தது, இப்போ அந்த வெறிதான் இருந்தது. ஒரு வெறிபிடிச்ச முரட்டு ஆம்பளைகிட்ட நான் நல்லா மாட்டிக்கிட்டேன். ஆம்பளை திமிர்கிட்ட என்னால எதுவும் செய்ய முடியல."
",,,,,."
"அன்னையிலருந்து அவனுக்கு நான் கொஞ்சம் கொஞ்சமா அடிமை ஆகிட்டேன்மா. அவன் கூப்பிட்ட உடனே போகலன்னா திட்ட ஆரம்பிச்சுட்டான், அடிக்கவும் ஆரம்பிச்சான். முதல்ல எனக்கு அது ரொம்ப புதுசா இருந்தது. ஆனா கட்டுன புருஷன் போல அவன் உரிமையா நடந்துகொண்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் புருஷன் இல்லாதவ தானே."
",,,,,."
"சரி, இந்த ஜென்மத்துல எல்லாம் சரியா அமைஞ்சா இவனையே கட்டிக்கலாம்னு கூட நினைச்சுட்டேன். அந்த நம்பிக்கையில்தான் அவனுக்கு நான் ஓவரா இடம் கொடுத்துட்டேன்."
"சரிடி, என்ன இருந்தாலும்,"
"மன்னிச்சுக்கம்மா."
"சரி, எப்படியாச்சும் போய் தொலை.. ஆனா என் வீட்டுல இந்த அசிங்கத்தை எல்லாம் வச்சுக்கிட்டா நான் பொல்லாதவளா ஆகிடுவேன்."
"அய்யோ அம்மா! இனிமேல் அவன் இருக்கிற பக்கம் கூட தலைவச்சு படுக்க மாட்டேன். என்னை நம்பும்மா."
"சரி, ஒழுங்கா இங்கு இரு."
",,,,,."
"நான் இன்னொன்னு யோசிக்கறேன். ஆம்பளைங்களே இந்த வீட்டுல வேணாம். யெஸ், சுரேஷைக் கூட இந்த வீட்டை விட்டு அனுப்பிடறேன்."
"அம்மா, என்னம்மா சொல்றீங்க?" கிரிஜா உள்ளூர அதிர்ந்தாள். அவள் இதை எதிர்பார்க்கவில்லை.
"ஏன்மா இப்படி?"
"ஏண்டி? உனக்கு என்ன பிரச்சனை?"
"ஓ.. ஒன்னுமில்ல., சரிங்கம்மா., உங்க இஷ்டம்,"
"இங்க பாரு, இந்த வீட்ல செக்யூரிட்டியைத் தவிர எல்லாரும் லேடீஸா இருக்கட்டும். அதான் சரி, மந்தாகினிக்கு கார் டிரைவிங் தெரியும்.. அவளே எனக்கு வண்டி ஓட்டட்டும், யெஸ், அதான் சரி."
",,,,,."
"எதும் பேசாத. அதான் சரி, இனி ஜென்ட்ஸே கண்டிப்பா வச்சுக்க முடியாது."
'என்ன விஷயம் விபரீதமா போகுதே?' கிரிஜா செய்வதறியாமல் விழிக்க,
"இனி ஜென்ட்ஸை இங்க வச்சுக்க முடியாது. இதுக்கப்புறம் உன் கூட யாரைப் பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் எனக்கு அந்த நினைப்புதான் வரும்."
",,,,,,,"
"தப்பு செஞ்சிட்டு வரீங்கன்னு தோணும். அது ரொம்ப கஷ்டம். நீ இவ்வளவு நாளா இங்க இருந்திருக்கே. அக்கா தங்கச்சியா பழகியிருக்கோம். அந்த மரியாதைக்கு உன்னை மட்டும் இங்க வேலைக்கு வச்சுக்கறேன். ஆனா முருகேசனை, சுரேஷை அனுப்புறதே சரி. செக்யூரிட்டி கிழவன் மட்டும் இருக்கட்டும்,"
",,,,,."
"சுரேஷை போகச் சொல்லு., அவன்கிட்ட நீயே சொல்லிடு."
இப்போது கிரிஜா தனக்காகப் பேசுவதா, அவனுக்காகப் பேசுவதா எனப் புரியவில்லை. 'முதலில் தனக்கான வேலை இருப்பு கிடைத்துவிட்டது, அதுவரைக்கும் போதும். அவன் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி என்பதா? அதெப்படி?'
என்ன இருந்தாலும் அவன் ஒரு ஆம்பளை, கார் ஓட்டக்கூடியவன், அவனுக்கு எங்கு போனாலும் வேலை கிடைக்கும். ஆனால் நமக்கு?
அவள் தரையில் இருந்து எழுந்தாள். வைஷ்ணவியைப் பார்த்துக் கும்பிட்டாள்.
"போ, வேலையைப் பாரு. அழுவாத."
"இப்படி ஒரு பெரிய தப்பு பண்ண என்னை மன்னிச்சிட்டீங்களே, அதுவே போதும்மா.. இனிமே அந்த மன்மதனே வந்தாலும் நான் கொஞ்சம் கூட மயங்க மாட்டேன்."
"ம்ம்ம்.. பாக்கலாம், போ."
"இனிமேல் என் லைஃப் ஃபுல்லா நீங்கள்தான். எனக்குன்னு ஒரு குடும்பம், கணவன், சந்தோஷம் எதுவும் நினைச்சுக்கப் பார்க்க மாட்டேன்."
",,,."
"என் வாழ்க்கை பூரா இனி நீங்க மட்டும் தான்," சொல்லிவிட்டுப் போனாள்.
இனி தனக்கு சந்தோஷமே இல்லை என சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகும் கிரிஜாவையே பார்த்தாள் வைஷ்ணவி.
யோசித்துப்பார்த்தால் இவள் செய்த பெரிய தவறும் இல்லை. கணவன் இல்லாத ஒரு இளம் பெண் இத்தனை ஆண்டுகாலம் ஒழுக்கமாய் இருந்ததே பெரிய செயல்தான். பஞ்சு போல இருக்கக்கூடிய கிரிஜாவை அந்த முருகேசன் நெருப்பு வந்து ஆக்கிரமித்துவிட்டான். ஒருவேளை முருகேசன், சுரேஷ் போன்ற ஆள்கள் இல்லை என்றால் இவளை யாரும் மசிய வைக்க முடியாது.
மனோகரன், அனிருத் போன்றவர்களாலேயே கைக்கொள்ள முடியாத கிரிஜாவை இந்தத் தோட்டக்காரப் பயல் ஈசியாக மடக்கி அனுபவித்திருக்கிறான். இவன் மிகவும் பொல்லாதவன். தன்னந்தனியாக இருக்கக்கூடிய ஒரு பெண்ணை வலுக்கட்டமாக அனுபவித்து, ஆசை வார்த்தைகள் கூறி அவளை இச்சை கொள்ளச் செய்து, ஒன்றுக்கு இரண்டு முறை அனுபவித்திருக்கிறான். ராஸ்கல்!
ஒன்றும் அறியாத ஒழுக்கமான குடும்பப் பெண்ணிடம் தன் பொறுக்கித்தனத்தைக் காட்டியிருக்கிறான். பாவம், இருந்துவிட்டுப் போகட்டும். இந்த வீட்டில் கிரிஜா போல ஒரு திறமையான வேலைக்காரப் பெண்மணி கிடைக்க மாட்டாள்.
ஆனால், முருகேசனை அனுப்பியது போலவே இந்த டிரைவர் சுரேஷையும் அனுப்பிவிட வேண்டும். இந்த முரட்டு ஆண்களே வேண்டாம் என அவள் அப்போதே முடிவு செய்துகொண்டாள்.
ஆனால், இவர்கள் இருவரிடையே நடந்த தப்பான விஷயத்தை பி.ஏ. மந்தாகினியிடம் சொல்வதா என்பது மட்டும்தான் அவளுக்கு யோசனையாக இருந்தது. மந்தாகினி என்ன இருந்தாலும் கல்யாணமாகாத சின்னப் பெண். ஒரு நாற்பது வயசுகாரன்கிட்ட கிரிஜா படுத்து உருண்டதை எப்படி சொல்வது?
'இந்த வெட்கங்கெட்டதுங்க ரெண்டும் ஒன்றாக இருந்ததை நான் நேரில் பார்த்துவிட்டேன் என்பதை மந்தாகினியிடம் சொன்னால், நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்?' என்கிற எண்ணம் வைஷ்ணவிக்கு ஓடிக்கொண்டே இருந்தது.
ஆனால், மந்தாகினி திரும்ப மார்த்தாண்டம் வர இன்னும் இரண்டு நாட்கள் ஆனது. அதுவரை அவள் சுரேஷிடம் ஒரு வேலையும் சொல்லவில்லை. 'முருகேசனா, சுரேஷா?' என கிரிஜாவிடம் பலமுறை கேட்டோம். அதற்கு என்ன அர்த்தம்? சுரேஷ் கூட அந்தச் செயலை செய்திருப்பான் என நாம் நம்பியதுதானே!
சோ, இனி சுரேஷ் கூட இங்க இருக்கக் கூடாது. மந்தாகினி வந்தால் அவளிடம் சொல்லி சுரேஷையும் அனுப்ப வேண்டும்.. பெண்கள் இருக்கும் வீட்டில் எதற்கு ஆண்கள்? கெட் லாஸ்ட் ஆல் ஆஃப் தி மென்!
ஒரே ஒருமுறை கோயிலுக்குப் போக இருந்தது. அதற்குக்கூட அவள் ஒரு ஆட்டோவைப் பிடித்து வரச் சொல்லி அதில்தான் போனாள். சுரேஷைக் கூப்பிடவில்லை.
வைஷ்ணவி தனியாக ஆட்டோவில் போனதைப் பார்த்து அதிர்ந்துபோய் அவன் கிரிஜாவிடம் ஓடினான்.
"என்னடி, அம்மா இப்படி பண்றாங்க? ரெண்டு கார் வீட்டில் இருக்கு, ஒன்னுக்கு ஆட்டோவுல போறாங்களே?" அழாத குறையாகக் கேட்டான்.
"என்னை என்ன பண்ண சொல்ற? உன்னைத்தான் போக சொல்லிட்டாங்களே!"
"எல்லாம் உன்னாலதாண்டி. அன்னைக்கு நாம பண்ணியிருக்கக் கூடாது."
"ஏய் சுரேஷ்! இதுவரைக்கும் நீதான் அப்ப என்கூட இருந்தேன்னு அம்மாவுக்கு தெரியாது. அவங்ககிட்ட போய் உளறாதே."
"அதான் பாவம், முருகேசன் மேல பழி போட்டு அனுப்பிட்டியே!"
"இல்லன்னா, நீ இப்ப தெருவுலதான் நக்கிட்டு கிடந்திருப்பே!"
"என்ன பிரயோஜனம்? இனி வீட்டுல ஜென்ட்ஸே வேணாம்னு அம்மா சொன்னதா சொன்னியே."
"ம்ம்ம்ம்ம்."
"மந்தாகினியை வெச்சு காரை ஓட்டிக்குவாங்க போல. இப்போ என்னடி பண்றது? இப்படியே போனா நல்லா இருக்காது. அவங்க என்னையும் முருகேசனை போல வேலை விட்டு அனுப்பணும்னு முடிவு பண்ணிட்டாங்க."
",,,,."
"என் கூட உள்ள இருந்தது யார் யாருன்னு கேட்டுகிட்டே இருந்தாங்க.. 'சுரேஷா, சொல்லு? சுரேஷா சொல்லு?'ன்னு கேட்கறப்ப 'சுரேஷ்'னு சொல்ல வாய் வரல."
"சரி, நானே போயி 'எதுக்கு என்னை போக சொல்றீங்க?'ன்னு கேட்டு பாக்குறேன் கிரிஜா."
",,.."
"அப்படி இல்லன்னா நான் வேலை விட்டு போறேன். என்ன ஒன்னு, உன்னை மாதிரி எனக்கும் ஒரு வயசான அம்மா இருக்கு. சென்னைல அது கிடந்து அல்லாடுது. அது கூடவே நானும் கிடக்கணும்," என்றான்.
அவன் சொல்வதைப் பார்க்க அவளுக்கு பரிதாபமாக இருந்தது. நடந்த தப்பில் இவனை மட்டும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. இவன் ஆசைக்கு நாம் இணங்கியது முதல் தவறு என்றால், அவன் கூப்பிட்டப்பெல்லாம் அவனுக்கு படுக்கை விரித்தது என்னுடைய தப்புதான்.
முருகேசன் போனதோடு பிரச்சனை முடியும் என பார்த்தால், சுரேஷையும் அனுப்ப வேண்டும் என்கிறாளே எஜமானி. இப்போது வைஷ்ணவி என்னைக் கூட மன்னித்து விடுவாள். ஆனா, கண்டிப்பாக இந்த பையனையும் துரத்தத்தான் போகிறாள். ஆனால் இதுவரை அனுப்பவில்லை. ஒரு பெண்ணாகிய என்னையே கூப்பிட்டு நேருக்கு நேர் பேசத் தயங்கியவள் வைஷ்ணவி, ஒரு ஆணை கூப்பிட்டு எப்படி பேசுவாள்?
இதை காரணமாக வைத்து மந்தாகினி மேடம் வந்தவுடன், சம்பளம் செட்டில் பண்ணி இவனை அனுப்பி விடுவாள் என கிரிஜா நினைத்தாள்.
சே, சுரேஷ் நல்லவனாக இருக்கிறான், நம் மீது பாசமாக இருக்கிறானே.. இவன் கூட செட்டில் ஆகலாம். புது வீடு கட்டி பால் காய்ச்சி, நமக்கென ஒரு குடும்பம், சந்தோஷம் கிடைக்கும் எனப் பார்த்தால் எல்லாமே புட்டுகிட்டு போச்சே! சுரேஷ் போல நம்மை புரிஞ்ச ஆள் கிடைப்பது கஷ்டம். கடவுளே..
ஊரில் வீடு கன்ஸ்ட்ரக்ஷன் முடிய இன்னும் அஞ்சு லட்சம் வேண்டும்.. மந்தாகினி வந்தவுடன் வைஷ்ணவி அம்மாவிடம் சொல்லி காசு கேட்கலாம் என பார்த்தால் அதுவும் போச்சு. இனி காசு, பணம் என வைஷ்ணவியிடம் போக முடியுமா?
வீடு கூட பரவாயில்லை, நம்மை தொட்டு ஆண்டு அனுபவித்த ஆம்பளை சுரேஷ் போகிறானே? என்னை தொட்ட நேரமா? அய்யோ, இவன் வேலை போவதற்கு நாமும் ஒரு காரணம்.
தன் முன்னே கலவரமாக நின்ற சுரேஷைப் பார்த்து, "ஒன்னு பண்ணு.. அம்மா கோவிலுக்கு போயிட்டு வரும்போது கொஞ்சம் நல்ல மைண்ட்ல இருப்பாங்க, அப்ப போய் அவங்ககிட்ட பேசிப் பாரு. நீதான் சீன்ல இருக்கேன்னு அவங்களுக்கு தெரியாதே,"
"நான் என்ன தப்பு பண்ணேன்னு பேசிப் பாரு."
"பேசினா?"
"பேசிப் பாரு, உன் லக்.. உன் சமத்து."
"என்னடி இப்படி ஃபுல்லா எஸ்கேப் ஆவுற? அதாண்டி, ஒரு பொண்ணை தொடறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிக்கணும் அப்படிங்கறது."
அவன் பேசுவதைக் கேட்க விரும்பாமல் கிரிஜா உள்ளே போய்விட்டாள். சுரேஷ் வைஷ்ணவிக்காக காத்திருந்தான்.



Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 01:03 PM



Users browsing this thread: 2 Guest(s)