02-08-2026, 01:15 AM
(This post was last modified: 02-08-2026, 02:46 AM by Peterparker69. Edited 1 time in total. Edited 1 time in total.)
எபிசோடு : 4
மாந்தாகினி அவளின் உயரத்துக்கும் உடலமைப்பிற்கும் ஏற்ற, கண்ணை உறுத்தாத ஒரு வெளிர் நீல நிறத்தில் சுரிதாரை அணிந்திருந்தாள். இயல்பிலேயே அழகு என்பதால், அதிக அலங்காரம் இல்லை. பாசாங்கு இல்லை, போலி மரியாதை இல்லை. அவள் அவளாகவே இயல்பாக இருந்தது வைஷ்ணவிக்கு பிடித்திருந்தது. மூக்கும் முழியும் இவ்ளோ லட்சணமா?
அந்த வெளிச்ச அறையில் நடு நாயகமாக தங்க நிலவு போல ஜொலிக்கும் வைஷ்ணவியைப் பார்த்தவுடன் மாந்தாகினிக்கு உள்ளுக்குள் பேரதிர்ச்சியாகவும் பெரும் திகைப்பாகவும் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக வணக்கம் சொல்ல.,
"உட்காரும்மா. உன் பேரு மாந்தாகினி. மதுரை, ஓகே. என்ன படிச்சிருக்க? ஓ.. பி.ஏ கார்ப்பரேட் செகரட்டரியா? இதுக்கு முன்னாடி பி.ஏ வா ஒர்க் பண்ண அனுபவம் இருக்கா?" ஃபைலை பார்த்துக்கொண்டே கேட்டாள்.
"அனுபவம் இல்ல மேடம், பட் மார்க்கெட்டிங்கில் தான் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ். இரண்டு வருஷமா மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருந்தேன்."
"சோ யூ நோ வெரி வெல் அபௌட் ஹவ் டு அப்ரோச் அதர்ஸ்?"
"எஸ் மேடம், ஓரளவு."
மாந்தாகினி அவளுடைய கல்வி, குடும்பம் பற்றியெல்லாம் அவளிடம் சுருக்கமாக சொல்லிக் கொண்டே இருந்தாள்.
கேட்ட பிறகே, எல்லா கேள்விகளுக்கும் கருத்தூன்றி கவனித்து பதில் சொல்வது வைஷ்ணவிக்கு பிடித்திருந்தது. பேசும்போதே இடைமறித்தால் கூட சட்டென பேச்சை நிறுத்தி கேட்கும் அவளின் பழக்கம் வைஷ்ணவியைக் கவர்ந்தது.
இந்த பத்து நிமிடத்தில் ஒரு முறை கூட அவள் வைஷ்ணவி பற்றியும், கர்நாடக இசை பற்றியும் பேசாமல் இருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது.
"பி.ஏ இந்தியன் மியூசிக் படிச்சுட்டு., நம்ம பக்கம் வராம, ஏன் மார்க்கெட்டிங்க் சைட்? ஏன் இப்படி டபுள் மைண்ட்?"
"இல்ல மேடம், அப்பா நாயன வித்துவானா இருக்காரு.. ஐ மீன் இருந்தாரு, அதனால எனக்கு கர்நாடக சங்கீதம்னா ரொம்ப பிடிக்கும். அது இயல்பாக கத்துக்க ஆரம்பிச்சேன். ஆனா அப்பா தான் சொன்னாரு 'வெறும் கர்நாடக இசை பாட்டு சோறு போடாது, என்ன மாதிரியே கஷ்டப்படுத்தும்' அப்படின்னு சொன்னாரு. ஏன்னா அவரு நாயனத்தால காசு சம்பாதிக்கல."
"ஆனா பணம் சம்பாதிக்க கலையை தேர்ந்தெடுக்கக்கூடாது இல்லையா?"
"உண்மைதான் மேடம். ஆனா சோறு கூட போடலைன்னா அந்த கலையை வைத்து என்ன பண்றதுன்னு எங்க அப்பா கேப்பாரு. இருக்கறவங்களுக்கு கலை அங்கவஸ்திரம்., இல்லாதவங்களுக்கு அது வேட்டின்னு சொல்வாரு"
",..ம் கிரேட்! வாஸ்தவம் தான். எல்லாருக்குமே எல்லாமே அமைஞ்சிடாது."
"அப்பா ரொம்ப கேட்டுக்கிட்டார்னு அவருக்காக பி.ஏ கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிச்சேன். ஆனா, எனக்கு பிடிச்சது இந்தியன் மியூசிக். நான் ரெண்டுத்துலயுமே ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கிறதா நினைக்கிறேன்."
"சரி. ஒரு ஜெனரலா பி.ஏக்கு ஒர்க் என்னவா இருக்கும்?"
"அது பாஸை பொறுத்து இருக்கும் மேடம். சில பேர் கூட ஒர்க் அதிகமா டென்ஷனா இருக்கும், சில பேர் கூட டென்ஷன் இல்லாமயும் போகும்."
"புரியல."
"ஒரு அரசியல்வாதியுடைய பி.ஏ வேலை வேறு விதமாக இருக்கும். அதுவே ஒரு தொழில் முனைவோர், அதான் ஆன்டர்பிரைனர் பி.ஏ வேலைன்னா அப்படியே வேறு விதமாக இருக்கும். 'பாய்ஸ்' படத்துல செந்தில் சாருக்கு வர்ர தூக்குச்சட்டி பையனும் பி.ஏ தான், கூகுள் சுந்தர் பிச்சைக்கு வர்ர அமிர்தராஜூனும் பிஏ தான். ஆனா ரெகுலர் பி.ஏன்னா அதுக்கு எல்லாம் நிறைய ஆளுங்க மார்க்கெட்ல இருப்பாங்க.. உங்க ரெக்யூர்மென்ட் கொஞ்சம் ரேர் தான்."
"சரியா சொல்றே?"
"கர்நாடக இசை, சங்கீதம், மேடை, கச்சேரி, பார்ட்டி, வீடுன்னு இருக்கிற ஒரு ஃபேமஸ் வி.ஐ.பி லேடிக்கு பி.ஏவா இருக்கிறது ஈசி இல்ல மேடம், ரொம்ப கடினம்."
"ஏன்?"
"ஏன்னா நாங்க உங்க சார்பா பேசணும், உங்களை பாதுகாக்கணும், ஈவென்ட் பிக்ஸ் பண்ணனும், சேலரி ரெம்யூனரேஷன் பேமென்ட் ஃபாலோ அப் பண்ணனும். உங்களை வெளியே கூட்டி அழைச்சிட்டு போயி ரொம்ப பாதுகாப்பா கூட்டிட்டு வரணும். அதுவுமில்லாம லேடிஸ் அப்படி என்றதால அவங்களோட சேஃப்டி எல்லாம் அந்த பி.ஏ தான் பாத்துக்கணும்" சொன்னதும் அவள் சிரித்து விட்டாள்.
"அப்படி எல்லாம் நீ ஒன்னும் பயப்படுறாப்போல இருக்காது."
"இல்ல மேடம், பொதுவா சொன்னேன்."
"என்னுடைய டிரைவரே ஒரு பவுன்சர் போல என்னை பாதுகாப்பா பாத்துக்குவான்."
"எஸ் மேடம்! இருந்தாலும் அவர் ஒரு ஆண் என்றதால் எல்லா இடத்துலயும் அந்த ஆளு உங்க கூட இருக்க முடியாது. நான் பி.ஏ ஆகிட்டா, அந்த பவுன்சர் கூட என்னுடைய பாதுகாப்பு வளையத்தின் மீதுதான் உங்ககிட்ட வர முடியும்."
ரொம்ப வாய் பேசுற பொண்ணா இருக்கே என்றதும் இருவரும் சிரித்து விட்டார்கள்.
"சரி ரொம்ப தாங்க முடியாம கேக்குறேன். என்னை பத்தி கேள்விப்பட்டு இருக்கியா? இல்லையா? கண்டுக்கவே மாட்டிறியே!"
"மேடம், உங்கள பத்தி தெரியாம இந்த ஜென்ரேஷன்ல ஒருத்தர் கர்நாடக சங்கீதம் பாட முடியுமா? ரொம்ப நல்லா தெரியும் மேடம்."
"சரி, கர்நாடக இசை?"
"ஓரளவு தெரியும் மேடம்."
"எதுவுமே பாடி காட்டலயே நீ? என்ன பத்தியும் எதுவும் நீ சொல்லலயே. அதாவது என்னை இம்ப்ரஸ் பண்ணவே இல்லையே நீ!"
"ஏன் மேடம் நான் உங்களை இம்ப்ரஸ் பண்ணனும்? நான் உங்களுக்கு பி.ஏ-வா உதவ தானே வந்து இருக்கேன்? உங்களுக்கு போட்டி பாடகியாவா வந்து இருக்கேன்?" மந்தாகினி சொன்னதும் வைஷ்ணவி அழகாக சிரித்தாள். அந்த சிரிப்பு ஒன்றே போதும், சம்பளம் கூட இரண்டாம் பட்சம் என தோன்றியது மந்தாகினிக்கு.
அம்மாவிடம் போய் இதெல்லாம் சொல்லி வாயடிக்க வேண்டும் என நினைத்தாள் மந்தாகினி.
"மேடம்! இப்போ உங்களுக்கு தேவை உங்க கூட ஒத்தாசையா, உதவியா, சினேகிதியா இருக்கக்கூடிய ஒரு அசிஸ்டன்ட். உங்க யூட்யூப் சேனல், புக்ஸ் ஒர்க்ல ஹெல்ப் பண்ணனும், டிராவல்ல கேரிங்கா இருக்கனும். அவங்க லேடியா இருந்தா நல்லது. அதிலும் உங்கள பத்தி தெரிஞ்சவங்களா இருந்து கர்நாடகா மியூசிக் தெரிஞ்சிருந்தா ரொம்ப ரொம்ப நல்லது. அப்படிப்பட்ட ஒரு பொண்ணு தான் தேடிட்டு இருக்கீங்க."
"ஓ, அது நீயா?"
"அப்படின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் நானாகவும் இருக்கலாம்."
மறுபடியும் வைஷ்ணவி சிரித்தாள்.
"சரி, என்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்ற. என் பாட்டெல்லாம் கேட்டு இருக்கேன்னு சொல்ற. என்னைப் பார்த்த உடனே என் கூட ஒரு போட்டோ கூட பிடிக்கனும்னு உனக்கு தோணவே இல்லையே?"
"மேடம்! மேடம்! எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லைன்னு யாரு சொன்னா? வெளியே பொது இடத்தில் பார்த்தேன்னா விழுந்தடிச்சு போட்டோ எல்லாம் பிடிச்சு உங்களை ரொம்ப தொந்தரவு பண்ணி இருப்பேன். ஆனா இங்க வந்திருக்கிறது நான் என் வேலைக்காக. இங்க என்னை விட, உங்களை விட வேலை தான் முக்கியம். வேலை கிடைச்ச அப்புறம் உங்க கூட செல்பி எடுத்துட்டா போச்சு," என்றாள்.
"அய்யய்யோ! உன் கூட பேசியே ஜெயிக்க முடியாது போல இருக்கே? தேங்க் காட்! மந்தாகினி! காலையிலிருந்து செல்பி எடுத்துக்கிறேன், குரூப் போட்டோ எடுத்துக்கிறேன்னு சொல்லி ஒரே தொந்தரவு. ஏன்டா ஓபன் இன்டர்வியூ பண்ணோம்னு தெரியல. ஓகே, பை த வே நீ கிளம்பலாம்."
"சரிங்க மேடம், ரொம்ப தேங்க்ஸ் மேடம்."
"நீ செலக்ட் ஆயிட்டியா இல்லையா அப்படின்னு எதுவுமே கேட்கலையே?"
"செலக்ட் ஆனீங்கன்னா ரிஜிஸ்டர் போஸ்ட்ல ஆர்டர் அனுப்புவீங்கன்னு கேள்விப்பட்டேன். சோ, ஐ ஆம் வெயிட்டிங் ஃபார் யுவர் ஆர்டர்."
வைஷ்ணவி விழுந்து விழுந்து சிரித்தாள். "நீ ரொம்ப கிளவர். அதேசமயம் இன்னொசென்டா இருக்குற போல நடிக்கிற. நீ அப்பாயின்மென்ட் ஆயிட்டேன்னு உனக்கே நல்லா தெரியும்."
"மேடம், அப்ப ஆர்டர்? அந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம்?"
"வேணாம். சரி, உனக்கு யூட்யூப் சேனல் வீடியோ எடிட்டிங், பேஜ் டிசைனிங் இதெல்லாம் தெரியுமா?"
"நல்லா தெரியும் மேடம். எங்க பழைய கம்பெனி யூட்யூப் சேனல், சோஷியல் மீடியா போஸ்டிங்லாம் நான் தான் பாத்துப்பேன்."
"ம்ம்.. எங்களுக்கு லேண்ட், பங்களா, பிராப்பர்ட்டி, பெட்ரோல் ஏஜென்சி இதெல்லாம் இருக்கு. கலெக்ஷன் போகனும், அக்கவுன்ட்ஸ் பாக்கனும், அப்பாய்ன்மென்ட்ஸ்லாம் பாக்கனும்,"
"கண்டிப்பா மேடம்! அட்மின் அண்ட் ஃபீல்ட் ஒர்க் ஆல்வேஸ் ஆசம்!"
அவளது நேர்மறையான பதில்கள் வைஷ்ணவிக்கு பிடித்து போக, "சரி.. நாளைக்கு அஷ்டமி, அதுக்கு மறுநாள் நவமி. சோ திங்கள்கிழமையில இருந்து நீங்க ஜாயின் பண்ணிக்கங்க," என்றதும்,
"அய்யோ மேடம்! நான் செலக்ட் ஆவேன்னு நம்பிக்கை இருந்தது. ஆனா வெளியே இருந்த கூட்டத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன். ஆனாலும் உள்ள மனசுல ஏதோ ஒன்னு சொல்லுச்சு, கண்டிப்பா உங்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன் அப்படின்னு," என சொல்லி அவள் கை நீட்ட, வைஷ்ணவி அவள் கையை நட்புடன் பிடித்துக் கொண்டாள்.
"மேடம், இங்க தங்கறதுக்கு ரென்டட் ஹவுஸ்லாம் கிடைக்கும்ல?" தயங்கி தான் கேட்டாள்.
வைஷ்ணவி சிரித்தாள். "ஏன் ரென்ட் ஹவுஸ்? இவ்ளோ பெரிய வீடு போறாதா உனக்கு?"
"இ, இ,ங்கேயா?" ஒருவேளை அவுட் ஹவுஸை சொல்கிறாளோ?
"யெஸ்! ஆறு பெட்ரூம்ஸ் இருக்கு. இதுல எதுல வேணா தங்கிக்கலாம், என் ரூமை தவிர."
"மேடம்..?" அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள். சம்பளம் எவ்வளவு என கேட்கலாமா என்று நினைத்தாள். கேட்டால் நம்மை அல்பமாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? அதற்காக பத்தாயிரம் கொடுத்தால் வாங்கிக் கொள்வதா? என அவள் குழப்பம் அடைந்தாள். மறுபடியும் அவளுக்கு வணக்கம் சொல்லிவிட்டு திரும்ப,
"இரு மந்தாகினி, கொஞ்சம் வெயிட் பண்ணு. ஒர்க் கன்பர்ம் ஆர்டரோட போனா, உங்க அப்பா அம்மா சந்தோஷப்படுவாங்க இல்ல?" என சொல்லி அவளே ஆர்டரை ரெடி செய்து கொடுத்தாள்.
ஆர்டரை படித்துக் கூட பார்க்காமல் வைஷ்ணவிக்கு சிரித்தபடியே வணக்கம் சொல்லி விட்டு பையோடு அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
சாலையில் இறங்கி நடந்த உடனே ஆர்டரை பிரித்து பார்த்தாள். அட..! சம்பளம் 60 ஆயிரம் இருந்தது! அவளுக்கு தார்ச்சாலை தங்கச்சாலையாக ஜொலித்தது. 'அப்பனே முருகா உனக்கு ஒரு கோடி நன்றி!' என்றாள்.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)