02-08-2026, 01:11 AM
(This post was last modified: 02-08-2026, 02:43 AM by Peterparker69. Edited 1 time in total. Edited 1 time in total.)
எபிசோடு : 3
'என்னை எதுக்கு உங்கம்மா வீடியோ எடுக்கறாங்க?' வைஷ்ணவி வெட்கமாய் அந்த குண்டு பெண்மணியிடம் கேட்டாள்.
"நீங்க வேலை தரலன்னா கூட பரவாயில்ல. என் மக உங்க முன்னாடி உக்காந்து நீங்க கேக்கறதுக்கு பதில் சொல்றாளே, அதுவே போதும் என் மனசு நிறைஞ்சி போச்சு.." அந்த அம்மா அதீதமாய் செய்வது போல இருந்தது.
"ஆனா இந்த இன்டர்வியூ,,?"
“என் பொண்ணு., அஞ்சு வயசு வரைக்கும் பேசல மேடம்., பயந்து போய் பத்மநாப சுவாமி கோயிலுக்குதான் வேண்டிகிட்டோம்.. குரல் வந்தா போதுமுன்னு அழுதோம். இப்ப பாடவே செய்யறா.. ஏய்ய் நர்மதா.. ஆராவகணம் பாடு”
அவள் பாட ஆரம்பிக்க.,
"சரி சரி போதும். நான் கூப்பிடறேன். இப்ப சாப்பிட்டு கிளம்புங்க”
“தஞ்சாவூர்லருந்து வரோம். கையில் ஆர்டர் தந்தீங்கன்னா, கையோடு வாங்கிட்டு போய் பிரகதீஸ்வரர் பாதத்துல வெச்சி விமோசனம் வந்துடுச்சின்னு அழுது தீத்துடுவோம்" சொல்லும் போதே அந்த அம்மாள் அழுதாள்.
“ஆர்டர்லாம் ரெஜிஸ்டர் போஸ்ட்ல தான் வரும். இப்ப கிளம்புங்க” வைஷ்ணவி கெஞ்சாத குறையாக அனுப்பினாள்.
அவர்கள் போனபிறகு., 'கிரிஜா., கிரிஜா' எனக் கத்த, அவள் பதறி போய் வந்தாள்.
“எத்தனை தடவை சொல்றது?., கேண்டிடேட்ஸ் மட்டும் அனுப்பு., பேரன்ட்ஸ்லாம் அனுப்பாதன்னு. உள்ள வந்து அந்த அம்மா என்னை வீடியோ புடிக்குது”
"எவ்ளோ சொல்லியும் கேக்கல, என்னை தள்ளிவிட்டு வருது..”
"ஐ சீ,,. அவங்க போய்ட்டாங்களா?"
"இல்ல மதியம் பந்தி எப்போன்னு கேட்டுட்டு இருக்கு?"
"அடபாவமே.„ சரி இன்னும் எத்தனி பேரு..?"
"பதிமூனு பேரு.."
"சரி வெய்ட் பண்ண சொல்லு. நான் சாப்பிட்டு வரேன்"
வைஷ்ணவி சீட்டிலிருந்து எழுந்து உணவறைக்கு சென்றாள்.
அந்த வீட்டின் எஜமானி, தமிழகத்தின் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி. மண்ணில் இறங்கி வந்த தேவதைகள் எல்லாம் வெட்கப்பட்டு ஒதுங்கிச் செல்லும் பேரழகி வைஷ்ணவி. அந்த இளம் மஞ்சள் பட்டு சேலையிலும், சிவப்பு ரவிக்கையிலும் வைர மூக்குத்தி டால் அடிக்க, மெல்ல இருக்கை விட்டு ஒரு பூந்தேர் அசைவது போல் அந்த இடத்தை விட்டு அகல, கிரிஜா விழிகள் விரிய அவளின் சாத்வீக அழகை பார்த்தாள்.
ஆஹ்ஹ என்ன நிறம்? என்ன உடலமைப்பு? என்ன ஒரு கனிவு..? இவளுக்கு மட்டும் வயசு குறைஞ்சுகிட்டே போகுதே?
காலை எழுந்தவுடன் பல் துலக்கி ஏதோ ஜூசாம். கேட்டால், ஆப்பிள், காரட், பீட்ரூட் மூன்றும் கலந்து பாதாம் பிஸ்தா போட்டு ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் முழுக்க குடிக்கிறாள். ஒரு நாள் தவறுவதில்லை. முப்பது வயது தாண்டினாலும், இருபத்து ரெண்டு வயசு போல் ஒரு துள்ளல், இழுத்துக் கட்டியது போல ஒரு மேனி. கிரிஜாவும் குடித்து பார்த்தாள், முடியவில்லை. என்ன இருந்தாலும் நுனி நாக்கு கசக்கும் பில்டர் காபி குடித்தால் தான் அந்த நாளே சுகமாய் போகிறது.
ஆனால் வைஷ்ணவி அப்படியில்லை. அவளை நாள் முழுக்க பார்த்தாலும் அசதி இல்லை. கிரிஜா, அவளது காலை நேர அழகை பார்த்து பிரமித்தாள். நடையும், மிடுக்கும். அப்பப்பப்பா., புருஷன், புள்ளை, குட்டி, பிடுங்கல் இல்லாததால் இவளுக்கு மட்டும் வயது கூடாமல் இறங்கிக் கொண்டே போகிறதே?
எத்தனை உண்டாலும் இவளுக்கு வயிறு போடவே இல்லை. கட்டுக்கோப்பான உணவு, சரியான அளவிலான தூக்கம், தன்னை மறந்த கடவுள் பக்தி, மெலிதான உடற்பயிற்சி, அப்பப்ப யோகா, டெய்லி வாக்கிங்., காலை மாலை இரண்டு மணி நேரம் சாஸ்திரிய இசை சாதகம், இதெல்லாம் சேர்த்து தான் இவளை எத்தனை இளமையாக மேனி முழுக்க கட்டுக்குலையாமல் வைத்திருக்கிறதோ என்னவோ?
வைஷ்ணவி அந்த விஸ்தாரமான ஹால் தாண்டி அசைந்து நடக்க., அவளின் பின்னால் ததும்பும் உருண்டை அழகை எச்சில் விழுங்கியபடியே பார்த்தாள் கிரிஜா. எந்த புடவை கட்டினாலும் அம்சமாக இருக்கிறாள். அதிலும் அந்த முடி இருக்கே?
வைஷ்ணவியின் பின் புற தேன்குடங்களை தட்டித் தழுவி ஏறி இறங்கி இடதும் வலதும் அசைந்தாடி, கொஞ்ச நேரம் பிளவில் ஆழ்ந்து மறுபடியும் மீண்டு ஆடி அசையும் அந்த நீளமான அடர் கூந்தலழகை பார்த்து திகைத்து தான் போனாள்.
'ம்ம்ஹூம்' என ஒரு பெருமூச்சு விட்டாள்.
அடக்கவும் அடக்கி ஆளவும் அனுதினமும் ஒரு ஆண் இல்லை என்பதாலேயே இவளது பருவ பரிமாணங்கள் குதியாட்டம் போடுகிறதோ?' என நினைத்தாள் கிரிஜா.
கட்டிலில் ஆண்டு அனுபவித்து, ஒரு ஆணோடு கூடி களைத்த நமக்கே இவளை பார்க்கும் போது, இத்தனை சிலிர்ப்பு உண்டாகிறதே? ஒரு வித்தைக்கார கட்டிளம் காளை போல இளவட்டம் யாராவது இவளின் அவயங்களின் ரகசிய அசைவுகளைப் பார்த்தால், எப்படி பித்து பிடித்துப் போவான்?" என யோசித்துப்பார்த்தாள் கிரிஜா.
வைஷ்ணவி கிரிஜாவை விட சிறியவள். வைஷ்ணவிக்கு இந்த கார்த்திகை வந்தால் முப்பத்து ரெண்டு வயது பூர்த்தியாகிறது. தேகம் ஒடிசலாகவும் இல்லாமல் பூசினாற் போல் அல்லாமல் திமிறி கிடக்கும் பொன்னிற மேனிக்கு சொந்தக்காரி வைஷ்ணவி. அவளின் கன்னச் செழுமையும் கருவிழியும் கருங்கூந்தலும் அவளை மார்த்தாண்டத்தின் முடிச்சூடா பேரழகியாக காட்டியது. மேடை ஏறி காசுக்கு பாடும் பாடகி தானே என பக்கத்தில் வந்தவர்கள் எல்லாம் அவளது பொன்னிற பேரழகைப் பார்த்து எட்டிப் போய் பவ்யமாய் 'மேடம்' என்பார்கள்.
இவளது குரலையும் அசரடிக்கும் அழகையும் கேள்விப்பட்ட ஒரு சில கோடம்பாக்கத்து இளவட்ட இசையமைப்பாளர்கள் அவளை எப்படியாவது சென்னைக்கு அழைத்து போக ஆசைப்பட்டார்கள். ஆனால், அவள் எவருக்குமே மசியவில்லை. பெரியவர் வேண்டி கேட்டுக் கொண்டதால் ஒரே ஒரு ஆன்மீக பாடலை பாடிவிட்டு வந்தாள். அதற்கு தந்த சன்மானத்தைக் கூட அங்கேயே யாருக்கோ தானமாக கொடுத்ததாக நினைவு.
பாடித்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் அவள் இல்லை. இருப்பதெல்லாம் தாத்தாவின் சொத்து. அதை அவளது அப்பா தாசில்தார் பாலகிருஷ்ணன் தனது உழைப்பை கொட்டி பல மடங்கு ஆக்கினார்.
அவளைப் பார்த்ததும் திருமணமாகாத ஒரு இளம் பெண் என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் வைஷ்ணவிக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனதென்றால் என்ன? திருமணம் ஆகியும் ஆகாதது போலத்தான். அதெல்லாம் பெரிய கதை.
அற்புதமான தேன் குரலுக்கு சொந்தக்காரியான வைஷ்ணவியின் வாழ்க்கையின் கரி நாட்கள் அவை.
வைஷ்ணவி வேகமாக சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் மாடியில் நடந்தாள். போர்டிகோவையும் தோட்டத்தையும் எட்டிப் பார்க்க கூட்டம் வெகுவாக குறைந்ததை பார்த்தாள். கூட்டத்தை நோட்டம் விட சட்டென அவள் கண்ணில் அந்தப்பெண் பட்டாள்.
யார் அந்த பெண்? கண்மூடி உட்கார்ந்து இருக்கிறாளே என வைஷ்ணவி மாந்தாகினியை உற்றுப் பார்த்தாள். பெண் களையாக இருக்கிறாள். உடையில் லேசாக ஒரு வறுமை தாண்டி பளிச்சென இருக்கிறாள். அப்பா பாலகிருஷ்ணனுக்கும் அம்மா பாக்கியலட்சுமிக்கும் இரண்டாவது ஒரு பெண் குழந்தை இருந்தால் இப்படி தான் இருக்கும் போல.
தனியாக வந்திருக்கிறாள் போல இருக்கிறது. அநேகமாக இந்த ஊராக இருக்காது. அவள் புல் தரையில் சம்மனமிட்டு நிமிர்ந்து நேராய் உட்கார்ந்து இருப்பது அவளுடைய தியான நிலையை சொன்னது. அத்தனை பேர் நடுவில் மாந்தாகினி வைஷ்ணவியின் கண்களுக்கு தனியே தெரிந்தாள்.
தனக்குள் மெல்ல குறுநகை புரிந்து போர்டிகோவின் இடது பக்கம் பார்க்க, 'அட அது யார் அனிருத்தா? சரியா போச்சு!' தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
அனிருத் ஓரிரு வயது வைஷ்ணவியை விட பெரியவன். இவளை போல பணக்காரன். அவனும் நல்ல மேடை பாடகர் தான். மார்த்தாண்டம் டவுனில் இருக்கிறான். சினிமாவில் கூட பாடி இருக்கிறான். அதிக வசதியும் கூட. ஆனால் அலட்டல் அதிகம். எதனாலோ திருமணமாகாதவன்.
யேசுதாஸுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் அருகாமையில் இருக்கும் குரல் அவனது. அவன் குரலைக் கேட்டு, ஓரிரு முறை அவனைக் கூப்பிட்டு, தன்னுடன் இணையாக பாட வாய்ப்புக் கொடுத்த உடனேயே அருகில் வந்து பேசுவது, 'சாப்டாச்சா? நல்லா தூங்கினீங்களா?' என உரிமை எடுத்து பேசுவது என அவன் அணுகும் விதம் அவளுக்கு பிடிக்காமல் போக, அடுத்தடுத்து அவனை கச்சேரிக்கு கூப்பிடுவதை தவிர்த்து விட்டாள். திட்டியும் இருக்கிறாள்.
ஒரு முறை டிரைவர் சுரேஷிடம் கூட சண்டை போட்டிருக்கிறான். இந்த அபிஷ்டு அடிக்கடி வந்து அவளை தொந்தரவு செய்கிறான். இப்போது கூட யாரையோ ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்கிறான். அநேகமாக பி.ஏ வேலைக்கு சிபாரிசுக்காக வந்திருப்பான்.
வைஷ்ணவி வேகமாக படி இறங்கி தனது அலுவலக அறைக்கு வந்தாள்.
"கிரிஜா, வெயிட் பண்றவங்களை ஆர்டரா கூப்பிடு" என சொல்ல, ஆட்கள் வந்து கொண்டு இருந்தார்கள். எத்தனை பேர் வந்தாலும் "வெளியே தியானம் செய்த பெண் வருகிறாளா?" என ஆர்வமாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.
விதம் விதமான பெண்கள். விதம் விதமான நடிப்பு, திறமைகள்.. எல்லாம் பார்த்து களைத்தாள். கடைசியாக வந்த பெண் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டாள்.
கிரிஜா பின்னாலிருந்து கண் காட்டினாள். ஊசி போடுவது போல சைகை செய்தாள். ஏதோ ஒரு டாக்டரின் சிபாரிசு போல.,
"ஏ.. ஏன் இதெல்லாம்? கால்லலெல்லாம் விழக்கூடாது. இது இன்டர்வியூ தான் உனக்கு? எந்த ஊரு?"
"மார்த்தாண்டம் தான் மேல்புழா.. என் பேரு மைதிலி ரங்காச்சாரி"
"அட இங்க தானா? பக்கத்துல..?"
"ஆக்சுவல்லி., நாங்க கும்பகோணம்., இங்க எங்க அங்கிள் இருக்கார்.. அவர் தான் உங்களை பாத்தவுடனே விழுந்து கும்பிடனும்னு சொன்னார்."
அந்த பெண் ஓவராக நடிப்பது போல வைஷ்ணவிக்கு பட்டது.
"இப்ப நான் யாரு உங்க மாமா?ன்னு கேக்கனும், அவ்ளோ தானே?"
"அதுக்கில்ல மேடம்! டாக்டர் நித்யானந்தன் தான் எங்க அங்கிள். ஆனா யார் கிட்டயும் சிபாரிசு வந்து நிக்க மாட்டார்னு சொல்லிட்டார்."
டாக்டர் நித்யானந்தன் என்றதும் வைஷ்ணவிக்கு எரிச்சலாக இருந்தது.
"சரி, ஏன் எங்கிட்ட பி.ஏ வா வரனும்னு நினைச்சே?"
"நல்லா பாட்டு கத்துக் கலாம்.." சொல்லி அவளே சிரித்தாள்.
"யாரு நானா?"
"அய்யோ இல்ல நானு," அவள் போலியாக பதறினாள்.
பெண்கள் ஏன் மக்காவே இருக்கிறார்கள் என அலுத்துக் கொண்டாள் வைஷ்ணவி.
"சரி போ.. கூப்பிடறேன்"
அவள் தயக்கமாய் எழுந்தாள்.
"பாட்டு கத்துக்கறேன் மேடம். எய்ட் இயர்ஸா ஆலாபனை தொடங்கி ஸ்தாயி, வக்ரம் வரைக்கும் பதினாறு ராகமும் படிப்பேன். ஆபேரி, ஆபோகியிலருந்து யதுகுலகாம்போதி, யமுனாகல்யாணி வரைக்கும் ஒப்பிப்பேன்"
"பாட்டுங்கிறது ஒப்பிக்கறது இல்லையே. நீங்க ஒரு வாய்ப்பு கொடுத்தா இன்னும் நல்லா கத்துப்பேன்ன்னு சொல்றேன்"
வைஷ்ணவிக்கு அயர்ச்சியாக இருந்தது.
"புரிது மைதிலி, இப்ப போங்க. நான் அப்புறம் கூப்பிடறேன்"
"சரிங்க மேடம்" அந்த பெண் கருவறையிலிருந்து செல்லும் அதி தீவிர பக்தை போல பின்னால் நகர்ந்து சென்றாள்.
அய்யோடா.. என்னம்மா ஆக்டிங்க் பண்ணுதுங்க? வைஷ்ணவி கிரிஜாவை கூப்பிட்டாள்.
"இவளை யாரு ரெகமண்ட் பண்ணி இருக்காங்க?"
கிரிஜா மறுபடியும் ஊசி சிக்னல் காட்டினாள். "இதே தெருல கிளினிக் வெச்சிருக்காரே டாக்டர் நித்யானந்தன் சார்ம்மா!"
"அவரு இங்க வந்திருந்தாரா என்ன?"
"ம்ம் கேட்ல தான் நிக்கறார்."
"பாரேன்.. சிபாரிசுக்கு வந்து நிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப கேட் வரைக்கும் வந்து நிக்கறதை. அந்த ஆளு ஒரு மாதிரினு சொல்வாங்களே"
"த்..தெரிலம்மா.. சரி அந்த பொண்ணு ஓகேவாம்மா?"
"ஓகேன்னு நீ நினைக்கிறீயா?"
"பணிவும் ஜாஸ்தி"
"பணிவா?" வைஷ்ணவி சத்தமாய் சிரித்தாள். "சரி வேற யாரு?"
"அம்மா மாந்தாகினி, அப்புறம் அனுஷான்னு ஒரு பொண்ணு வெயிட் பண்றாங்க.. அனுஷாவை அனிருத் சார் அழைச்சிட்டு வந்திருக்காரு. ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு. உள்ள அலவ் பண்ண மாட்டேன்னு சுரேஷ் கறாரா சொல்லிட்டான் போல. அவரோட கசின் சிஸ்டராம்"
"அது தவிர வேறு யாரும் இல்லையா?"
"சரி மாந்தாகினியை கூப்பிடு. ப்ரம் மதுரை.."
"இல்லம்மா, அனிருத் சாரு முதல்ல இவங்களை பாக்கணும்னு சொல்ற போல இருக்கு"
வைஷ்ணவி யோசித்தாள்.
"சரி அவளையே கூப்பிடு. மாந்தாகினி வெயிட் பண்ணட்டும்" என்றாள்.
கிரிஜா வெளியில் போய் பாடகன் அனிருத்தின் ரிலேட்டிவ் பெண்ணை அழைத்து வந்தாள். ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.
"ஐ அம் அனுஷ்கா ராவ். ஐ.ஐ.எம் படிச்சிருக்கேன்.." வந்ததும் தடக்கென்று உட்கார்ந்து கொண்டாள். "ஐ அம் சோ கிளாட் மேடம்.. எங்க வீட்ல எல்லாரும் உங்க ஃபேன்ஸ் தான். பட் எனக்கு எம்.எஸ் தான்" என்றாள். தேவையே இல்லாமல் தோளை குலுக்கி பேசினாள்.
"எங்க ஃபேமிலியில எல்லாருக்கும் கர்னாடிக் தான் பேக்ரவுண்ட்.. நான் மட்டும்தான் கொஞ்சம் ஸ்ருதி பேதம். பட் மேனேஜ் பண்ணிக்குவேன்.. பி.ஏக்கு ஆப்ட்டா இருப்பேன்.. கராத்தே தெரியும்.. ஜிம் போறேன். சோ, ஐ அம் ஸ்ட்ராங்க் உமன். உங்களுக்கு சப்போர்டிவ்வா இருப்பேன்"
"ம் அப்புறம்?"
"நான் அனிருத் தங்கச்சி மேடம்"
அதுவே அவளை நிராகரிக்க போதுமான காரணமாக இருந்தது.
"சொல்லி அனுப்புறோம்" என அவளை அனுப்பி விட்டு, "அடுத்த கேண்டிடேட் கூப்பிடு" என்றாள்.
மாந்தாகினி தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். வைஷ்ணவியைப் பார்த்ததும் அளவான குறுநகையுடன் சொன்னாள், "வணக்கம் மேடம்".
சில பேர் பேரை பார்த்த உடனே பிடித்து விடுகிறது. வைஷ்ணவிற்கு மாந்தாகினியை அப்படித்தான் பிடித்துப் போனது.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)