Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#2
எபிசோடு : 1
"அம்மா,.., ஓய்.. அம்மா" என கூவிக்கொண்டு மாந்தாகினி, வீடு முழுக்க அம்மாவை தேடிக்கொண்டிருந்தாள். வீடு முழுக்க மார்பகம் அதிர ஓடினாள்; கல்யாண வயதைத் தொட்டிருந்தாலும், வீடு என்பதால், இன்னும் பாவாடை சட்டையிலேயே இருந்தாள்.
"இங்க தாண்டி இருக்கேன்" அம்மாவின் குரல் ஒலிக்க.,
“எங்கேம்மா?"
மொட்டை மாடியில் இருந்து அம்மாவின் குரல் கேட்க, மாந்தாகினி மூச்சு வாங்க படி ஏறினாள். அவள் அணிந்திருந்த புதிய பிரா அவளின் கன பரிமாணங்களை அடக்க முடியாமல் திணற, மென் மார்பகங்கள் சுதந்திரமாய் ஆட முடியாமல் மேலும் கீழும் போய் வந்ததை முன்னால் வாரி விடப்பட்ட அவளது அடர் கூந்தல் ஓரளவு மறைத்தது. 'திமுதிமு'வென பருத்த அவளின் தொடைகள் மட்டும் அந்த வீட்டின் நடுத்தர நிதி நிலைமைக்குப் பொருந்தாமல் செழித்திருந்தது.
"எங்கெல்லாம் உன்னை தேடறது..? டிரெயினுக்கு டைம் ஆகுதுல்லே?"
அவள் பாவாடை சட்டையில் மூச்சுவாங்க மேலே போய் நிற்க., அந்த சட்டைக்குள் அடங்காமல் திமிறும் அவளின் மார்பு பரிமாணங்கள் அவளின் செழுமையை சொன்னது.
"ஏண்டி எருமை? இருபத்து மூணு வயசாகுது? கல்யாணம் பண்ணா வருஷம் ஒரு புள்ளை பெத்து நிப்பே? என்னடி டிரஸ் இது?.. முதல்ல மேல டவல் போடு"
"போம்மா"
“ஏண்டி? கல்யாண வயசாகுது, ஒரு அடக்கம், ஒடக்கம் வேணா?.. எதுக்கு இப்படி திபு திபுன்னு ஓடிவந்து கத்துற? நீ கத்துறது மதுரை மாநகரம் முழுக்க கேட்கும் போல இருக்கு?"
அம்மாவின் கண்டிப்பை உதாசீனம் செய்தாள். டவல் போட்டு தூக்கி நின்ற பருவ மேடுகளை மறைத்தபடி.,
"அம்மா இங்க பாரு இந்த நோட்ஸ், இதுல இருக்குற கொஸ்டின்ஸ் எல்லாம் கேளு, நான் கரெக்டா பதில் சொல்றேனான்னு பாரு”
"கீழ போடி வரேன்"
"அம்மா., இப்பவே ரொம்ப டைம் ஆயிடுச்சு, எனக்கு மதியானம் பஸ். நைட்டுக்குள்ள மார்த்தாண்டம் போயாகணும். நாளைக்கு காலையில இன்டர்வியூ, அதுக்குள்ள நான் பக்காவா தயாராக இருக்கணும்"
“நீ ரெடி ஆகு, என்னைப் போட்டு ஏன்டி படுத்தறே?”
"அம்மா வேதா வள்ளி, இது சாதாரண இன்டர்வியூ இல்ல"
"ஆமாண்டி., பொல்லாத இன்டர்வியூ. உனக்கு என்ன தெரியுமோ அந்த லைன்லயே முயற்சி பண்ணா நீ பெரிய ஆளா ஆகலாம். உனக்கு மார்க்கெட்டிங் நல்லா வரும், வாய் கிழிய பேசுவே. அதை விட்டுட்டு எவளோ ஒருத்திக்கு பி.ஏ ஆவுறது எல்லாம் நீ படிச்ச படிப்புக்கும் உன்னுடைய குணத்துக்கும் ஒத்து வருமா?"
“அய்யோ ஆரம்பிச்சிட்டியா”
“நானும் பல தடவை சொல்லிட்டேன், நீ கேக்குறாப் போல இல்ல. எவளோ ஒருத்திக்கு அஸிடென்ட்டா போறியேடி”
"என்னம்மா சாதாரணமா எவளோ ஒருத்தின்னு சொல்லிட்ட? எவளோ ஒருத்தி இல்ல., தி கிரேட் கர்நாடிக் சிங்கர் வைஷ்ணவி பாலகிருஷ்ணன். சௌத் தமிழ்நாடு வாய்ஸ் ஏஞ்சல் வைஷ்ணவி. அவங்களுக்கு பி.ஏவா இருக்கிறதுன்னா, சும்மாவா?"
“அதுக்கு யாராச்சும் முப்பதாயிரம் ரூவா சம்பளத்தை விட்டு போவாங்களா?”
"இங்க அதுக்கு மேலயும் வரும், வராட்டியும் போலாம். நான் படிச்ச பி.ஏ கார்ப்பரேட் செகரட்டரிஷிப் எதுக்கு உதவுச்சோ இல்லையோ? இப்போ இந்த மேடத்துக்கு உதவுச்சின்னு நான் சந்தோஷப்படுகிறேன்."
"அடி போடி பி.ஏ என்ன எடுபுடி தானே? தண்ணி குடுக்கறது, டவல் துடைக்கறது, பின்னாடியே பையை தூக்கிட்டு போகனும்லே?”
“அப்படியெல்லாம் பேசாதம்மா. அவங்க கூட இருக்கிறது, அவங்க நிழல்ல இருக்கிறதே எனக்கு பெரிய கொடுப்பினை. என் லைஃப்ல அது கிடைச்சாவே போதும். காலம் முழுக்க கூட அவங்க கூடயே நான் இருந்துடுவேன்."
“ஏண்டி ஒரு பக்கம் பி.ஏ இந்தியன் மியூசிக் படிச்ச நீ, கடைசியில பி.ஏ வா வேலை செய்யறது தான் இவ்வளவு படிப்பும்மா?”
“அம்மா., நாயனக்காரன் மாதவன் பொண்ணு. என்னதான் எனக்கும் கர்நாடக சங்கீதம் வரும்னாலும் வைஷ்ணவி மேடம் அளவுக்கு எல்லாம் நம்மளால ஆக முடியுமா? அதெல்லாம் அவங்க ரத்தத்திலேயே இருக்குமா. அவங்க எல்லாம் லட்சத்துல இல்ல கோடில ஒருத்தி. அவங்க குரல் பாவம் சாரீரம்., யாருக்குமே கிடைக்காத ஒரு வரம். எனக்கு மட்டும் இந்த பி.ஏ வேலை கிடைச்சா போதும், நான் கர்நாடிக் மியூசிக் பத்தி இன்னும் ரொம்ப கத்துப்பேன். சொன்னாக் கேளும்மா“
“கேக்கமாட்டேன்மா"
"கேளுமா ப்ளீஸ்"
"ஏய்ய்.. நீ தாராளமா அவகிட்ட வேலைக்கு போ. எடுபுடி வேலை செய். ஆனா மூணு வருஷம் கழிச்சு திரும்பி வந்துடனும். நான் காட்ற மாப்பிள்ளைய கட்டிக்கணும்."
"அதெல்லாம் கட்டிக்கலாம்., கட்டிக்கலாம்.,"
"என் அண்ணன் பையன் சாம்பு,, கேட்டரிங்க் சொந்தமா எடுத்து நடத்தறான்..:"
"அம்மா ப்ளீஸ் எனக்கு இந்த சாம்பு, வேம்பு, கொத்தவரங்கா., முட்டை கோஸ்லாம் வேணாம்மா"
"ஏய்ய்ய்ய்"
"முதல்ல இந்த கொஸ்டின்ஸ் எல்லாம் என்னை கேளும்மா”
"என்னடி இது கொஸ்டின்ஸ் வசவசன்னு?"
"கர்நாடக சங்கீதம் பத்தி சில பேசிக்ஸ் கேள்விங்க.. கொஞ்சம் எங்க மேடத்தை பத்தியும் இருக்கு”
"ஓ அதுக்குள்ளே உங்க மேடம் ஆகிட்டாங்களா? எங்க காட்டு"
அவள் வைத்திருந்த பேப்பர் கட்டுகளை அம்மா வாங்கி பார்த்தாள். அம்மா சங்கீதத்தில் கரை கண்டவள் இல்லை, ஆனால், ஞானசூன்யமுமில்லை.
"கர்நாடக சங்கீதத்தில் எத்தனை ராகம் இருக்கு?" அம்மா கேட்க, மாந்தாகினி சொன்னாள்.
"புன்னாகவராளி ராகத்தில் ஒரு பாட்டு சொல்லு" மாந்தாகினி பாட, கண்ணை மூடி தன் மகள் பாடுவதை கேட்க அம்மாவுக்கு பரவசமாக இருந்தது.
"அம்மா இந்தப் சாங்க்ஸ்லாம் பாடும்மா. நான் டக்குன்னு ராகம் சொல்லிடுவேன்”.
“அடிபோடி! எனக்கு வேலை நிறைய இருக்கு. நீ வேற கிளம்புறங்கிறே”
"அம்மா ப்ளீஸ்.. உன் ஒத்த பொண்ணுக்கு சித்த வேலை செய்ய மாட்டியா? அம்மா”
"நூறு நூத்தம்பது பாட்டு இருக்கேடி,”
"சரி ரேண்டமா கேளு. எந்த ஆர்டர் வேணுமுன்னாலும் கேளு. நான் ராகம் சொல்றேன்"
"ரொம்பத்தான். சரி, எனக்கு பிடிச்ச பாட்டு மட்டும் கேக்குறேன் சரியா?"
"ம்ம்ம்.. கேளும்மா"
அம்மா ஒரு பழைய பாட்டை பாட., "கிருஷ்ணா முகுந்தா,"
"நவ்ரோஜ்"
"மன்மத லீலையை வென்றாருண்டோ,"
"சாருகேசி"
அம்மா ராகமெடுத்து பாட., "சிந்தனை செய் மனமே,"
"கல்யாணி ம்மா"
"மாசிலா நிலவே,"
"மண்டு"
"ஏய்ய்ய் என்னடி வாய் நீளுது?"
"ராகம் பேரும்மா"
"ஏய்ய் அது மாண்டு டி"
"..சாரி.. மாண்டு"
"செந்தமிழ்த் தேன்மொழியாள்,"
"பீலு"
"வசந்த முல்லை போல அசைந்து ஆடும் வெண்புறாவே,"
"சாரங்கதாரா.."
"கரெக்ட்"
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா,தென்ப,..து"
"ரொம்ப இழுக்காத, ஆஹிரி பைரவி"
"ஒரு நாள் போதுமா? நான் பாட இன்னொரு நாள் போதுமா?"
"போதாது தான். அது ராகமாலிகை"
"பாட்டும் நானே பாவமும் நானே"
"கௌரி மனோகரி"
"நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே,"
அம்மா விரல்களை குவிக்க., "இரு இரு கொத்தாதே.. ம்ம்ம் அது புன்னாகவராளி ராகம்மா"
"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்"
"சிந்துபைரவி"
"பேசுவது கிளியா?"
"சாருகேசி.."
"மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?"
"சண்முகப்ரியா"
"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்?"
"பஹாடி"
"பதினாறு உருவன வரலாறு"
"ஆபேரி"
"எல்லாமே சரியா சொல்றேடி.. ராகங்கள்"
"எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டுடி, இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ,"
"பிருந்தாவன சாரங்கா"
"இது ஒரு பொன்மாலைப் பொழுது,"
"கேதாரம்"
"பாடறியேன் படிப்பறியேன்,"
"அதெல்லாம் ஈஸிம்மா.. சாருமதி"
"வான் போலே வண்ணம் கொண்டு பூபாலனே,"
"மோகனம்"
"குடகு மலை காற்று வரும் பாட்டு கேக்குதா?"
"சிவரஞ்சனி ஈஈஈஈ"
"போவோமா ஊர்கோலம்,"
"கீரவாணி"
"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே"
"ஆபோகி"
"தூங்காத கண்கள் ரெண்டு,"
"அமிர்த வர்ஷினி"
"நஞ்சை உண்டு புஞ்சை உண்டு பொங்கு வரும் கங்கை உண்டு"
"சுத்த தன்யாசி"
"சங்கீத தேவதையின் அரங்கேற்றம்., காணாத உன்னை தேடுதே"
"கீரவாணி"
"சரி ரஹ்மான் பாட்டு சொல்லு., பாப்போம்.. காதல் ரோஜாவே எங்கே., நீ எங்கே?"
"காப்பி" குரல் கேட்டு திரும்பினார்கள்.
"ஏய்ய் அப்பாவுக்கு கூட தெரியுதுடி பாரேன்.. எனக்கு காப்பி கேட்டேன்" அப்பா.
"நீ வேறடி இது காப்பி ராகமுனு.." மாதவன் சிரித்தார்.
"யப்பா கொஞ்ச நேரம் இரேன்.. அம்மா நீ கேளேன்"
"போடி எனக்கு நிறைய வேலை இருக்கு.. அப்பா வேற வந்துட்டார்"
"எங்கனாச்சு.. நான் இன்டர்வியூவில பாஸ் ஆகனுமுன்னு உனக்கு அக்கறை இருக்கா,?"
"சரிடி.. கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா”
"கானடா"
"கொஞ்ச நாள் பொறு தலைவா"
"ஆனந்த பைரவி"
"டிங் டாங் கோயில் மணி கோயில் மணி"
"ரசிகப்ரியா"
"உருகுதே உருகுதே,"
"காப்பி" அப்பா குறுக்கில் சொல்ல.,
"அப்பா நீ சும்மா இருப்பா, காபி., காபின்னு கூவாதே,"
"ஏய்ய் அது உண்மையாவே காப்பி ராகம்டி"
"ஓ அதை சொல்றியா?"
"ஏய் இந்த பாட்டை சொல்லு பாப்போம், பேசும் வார்த்தைகள் புரிவதில்லை," அம்மா ஆரம்பிக்க,
"கீரவாணி, கரெக்டா நாயனம்?"
அப்பா மாதவன் அந்த காலத்து நாயன வித்துவான். கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் எல்லாம் செய்திருக்கிறார். ஆனால் ஆஸ்துமா பிரச்சனை காரணமாக நாயனத்தை தூக்கி போட்டு விட்டு ஏடிஎம் வாசலில் செக்யூரிட்டியாக உட்கார்ந்துவிட்டார். ஒரு சங்கீத வித்துவானை, கலா ரசிகரை பேங்கின் வாசலில் காவலுக்கு வைத்துவிட்டது தான் அவருக்கு கிடைத்த அதிகபட்ச அங்கீகாரம்.
மனைவி வேதா வள்ளிக்கு ஓரளவு பாட்டு வரும். இந்த ரெண்டு பேரின் பாதிப்பு மாந்தாகினியையும் தொற்ற., அப்பா தான் அப்போதே தடுத்து விட்டார்.
"பாட்டெல்லாம் சோறு போடாது மாந்தாகினி நீ சி.ஏ படி, 2030 ல இண்டியால 15 லட்சம் சி.ஏ வேணுமாம்"
"15 லட்சத்துல நான் ஒன்னு குறைஞ்சா என்னப்பா கஷ்டம்? நான் பாட்டு சொல்லிக்கறேன்"
மாந்தாகினி கேட்கவே இல்லை அவளுக்கு பாட்டு தான் உயிர். மதுரையில் இருந்த சுமாரான வித்துவான்களிடம் பாட்டு கற்றாள். அப்பா சொன்னதற்காக பி.ஏ கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படித்தாள். தன் ஆசைக்காக பி.ஏ இந்தியன் மியூசிக் படித்தாள்.
படிப்பு முடித்து ஒரு மார்க்கெட்டிங்க் ஆபீசில் வேலை கிடைக்க, 'அடச்சீ நான் ஒரு மார்க்கெட்டிங்க் செய்யும் சாதாரண பெண்ணாக?' என்றாலும், அவள் ஒரு ஆண்டாய் அங்கு தான் சலித்துக் கொண்டு வேலை செய்தாள். இப்போது தான் ஒரு விமோசனம் வந்திருக்கிறது. பாடகி வைஷ்ணவி வடிவில், மேடம் அவர்களிடம் மட்டும் போய் சேர்ந்துவிட்டால் போதும். அவள் உள்ளம் குதித்தது.
"சரி.. வைஷ்ணவி மேடம் பத்தி கேளும்மா”
"வைஷ்ணவி மேடம் முழுப்பேரு..?"
"வைஷ்ணவி பாலகிருஷ்ணன்”
“எத்தினி வயசுல பாட ஆரம்பிச்சாங்க?”
"ம்ம் ஒன்பது வயசு”
“எத்தனை கிராமிய அவார்டு வாங்கி இருக்காங்க?"
“..பதினேழு”
“எத்தனி சினிமா பாட்டு பாடி இருக்காங்க?"
“ஒன்னே ஒன்னு"
“என்ன அது?"
மாந்தாகினி பாடிக் காட்டினாள். “வைஷ்ணவி மேடத்துக்கு புடிச்ச ராகம். அமிர்தவர்ஷினி..” அவள் பாட.,
"ஏய்ய் அதை பாடுனா மழை வரும்னு சொல்வாங்க.. இப்ப தான் துணியை காய வெச்சேன். மழை வரப்போவுது”
“அம்மாவா நீ?'' வைஷ்ணவி அடிக்க, வேதா வள்ளி பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக் கொண்டு திரும்ப மொத்தினாள்.,
மாந்தாகினியின் தந்தை நாயனகாரர் மாதவன் சிரித்தார். பாய்., மாந்தாகினிக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும். மகள் நல்லாவே பாடுகிறாள். தன் வயிற்றில் பிறந்த ஒரே ஒரு குழந்தை மாந்தாகினி. அந்த குழந்தைக்கு இயற்கையாகவே அமைந்த கர்நாடக சங்கீத ஞானம் அவளை பாட்டு பாட அழைக்கிறது. மாந்தாகினிக்கு தேனில் ஊறிய பழம் போல ஒரு அற்புதமான குரல். ஆனால், இதைவிட நூறு மடங்கு சிறந்த குரல் வளம் அந்த வைஷ்ணவி பாலகிருஷ்ணனுக்கு. இளமை துடிப்பாக இருக்கிறது. அவளுக்கு மணமாகவில்லை அல்லது அது பற்றி சரியாக வெளியே தெரியவில்லை. இங்கே குரலே முக்கியம். அவரும் பலமுறை அந்த குரலை கேட்டு இருக்கிறார்.
ஆனாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? அதுவும் மாந்தாகினி, குயில் குஞ்சு அல்லவா?
"வைஷ்ணவி எத்தன மேடைக் கச்சேரி பண்ணி இருக்காங்க?"
“அறுனூத்தி முப்பதும்மா”
"அவங்க பிறந்த ஊர் எது?"
"மார்த்தாண்டம்"
"பாலகிருஷ்ணன்றது யாரு?"
"அவங்க அப்பா”
இன்னும் நிறைய கேள்விகள் அதில் இருந்தன. அதெல்லாம் ஒரு தகவலாக அம்மா கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், மாந்தாகினியோ அதற்கான பதில்களை எல்லாம் ஆத்மார்த்தமாக அனுபவித்து சொல்லிக் கொண்டிருந்தாள். தனது மகளுக்கு அந்த பாடகி மீது எத்தனை காதல் இருக்கிறது? எத்தனை பக்தி இருக்கிறது? என ஒரு நிமிடம் வியந்து போனார் மாதவன்.
இனி இவளை அந்த வேலைக்கு மார்த்தாண்டத்துக்கு அனுப்ப முடியாது என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. வைஷ்ணவியிடமிருந்து, "கர்நாடக சங்கீத ஞானமுள்ள ஒரு பெண் உதவியாள் தேவை" என விளம்பரம் வந்ததிலிருந்து ஒரு வாரமாக அவளிடமும் அப்பாவிடமும் தொடர்ந்து கெஞ்சி கெஞ்சி சண்டை போட்டு கடைசியில் மார்த்தாண்டம் போக அனுமதி வாங்கி விட்டாள்.
"அம்மா வைஷ்ணவி மேடம் பாட்டு கேட்கிறது எனக்கு ரொம்ப புடிச்ச வேலை. அந்த வேலையை செய்றதுக்கு சம்பளம் தர்றாங்க அப்படின்னா அதைவிட நல்ல வேலை எனக்கு கிடைக்குமா?"
“அதுசரி”
"அது மட்டுமில்ல., அவங்க கூட இருந்தா நானும் இன்னும் மியூசிக் அதிகமா கத்துக்கலாம். அது என் கேரியருக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். தயவு செஞ்சு நான் சொல்றதை கேளும்மா”
"தனியா எப்படி அவ்ளோ தூரம் அனுப்பறது உன்னை? தங்கற இடம் சேப்டியா?"
“அம்மா முதல்ல வேலை கிடைக்கட்டும். மார்த்தாண்டம் இங்கேயிருந்து 270 கிலோ மீட்டர் தான்.. என்னை பாக்கனுமின்னா அஞ்சு அவர்ல நீ மதுரையிலருந்து வந்துடலாம். ஒன்ஸ் நீ வா.. இல்ல நான் வரேன்.."
எப்படியோ பேசி அப்பா அம்மாவை சம்மதிக்க வைத்து விட்டாள். துணி மணி பேக்கிங்க் செய்து மார்த்தாண்டம் பஸ் பிடித்து தனியாகவே கிளம்ப., மணி மூன்று., வழிப்பயணத்தில் மாந்தாகினி நிறைய கர்னாடக சங்கீத நுணுக்கங்களை நெட்டுரு போட்டுக் கொண்டே போனாள்.
இரவு போய் மார்த்தாண்டத்தில் டவுனில் இறங்கினாள். அங்கிருந்த ஒரு நல்ல ஹோட்டலில் தங்கி விட்டு மறுநாள் காலையில் உள்ளே 'தேன்கடையூர்' என்னும் சிற்றூரில் வைஷ்ணவியின் வீட்டு விலாசத்தை கண்டுபிடித்து போய் இறங்கினாள்.
உள்ளே நுழையப் போன அவளுக்கு தலையே சுற்றியது. வைஷ்ணவி வீட்டு ஹாலில் கூட்டம் நிரம்பி அதற்கு கீழே போர்டிகோ கார்டன் எல்லாம் ஆட்கள் புல் தரையில் உட்கார்ந்து கொண்டு திருவையாறு கச்சேரி போல கும்பல் கும்பலாய் பாடிக் கொண்டிருந்தார்கள்.
"என்னை என்ன செய்தாய் வெண்குழலி,..ஆஆ" யாரைப்பாத்தாலும் கர்னாடக இசையை பீறிட்டுக்கொண்டிருந்தார்கள். தப்பி தவறி திருவையாறு வந்து விட்டோமா? என்பது போல கர்நாடக சங்கீத பாடல்கள் கோரசாய் சுதி சுத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தன.
எப்படியும் அறுபது பேராவது இருப்பார்கள். மை காட்! அம்மா வேதா வள்ளி என்ன இது சோதனை?. திரும்ப மதுரை போய்விடலாமா? என யோசித்தாள் மாந்தாகினி.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 01:01 AM



Users browsing this thread: 1 Guest(s)