Yesterday, 08:48 PM
(This post was last modified: Yesterday, 09:31 PM by Kathir anbu. Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த சம்பவத்திற்குப் பிறகு கதிர் வசந்தியைத் தொடர்புகொள்ள நினைத்தான். தொலைபேசி மூலமாகவும்
அழைத்துப் பார்த்தான் ஆனால் அவள் நிராகரித்து விட்டால்.
இப்படியே சென்று கொண்டிருக்கையில் திடீரென மாணிக்கத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது.
தன் தந்தையை அழைத்துக்கொண்டு வெளியூரில் வசந்தி பணிபுரியும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அங்கு மீண்டும் இவர்கள் இருவரும் சந்தித்திக் கொண்டனர்.
மாணிக்கத்தை அங்கு அட்மிட் செய்து விட்டு டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தான். வெளியிலிருந்து ,என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தாள் வசந்தி.
"உங்கள் தந்தைக்கு நுரையீரல் நோய் (COPD) எனும் இந்த நோய் இருக்கிறது கதிர்". "எனவே அவரை
கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று டிஸ்சார்ஜ் செய்யும்போது சில ரிப்போர்ட்டுகளைக் கொடுத்தார் மருத்துவர்.
"சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால் ஆக்ஸிஜன் கருவிகளை இயக்கவும் பராமரிக்கவும் உதவி தேவைப்படும். அவரை உடனிருந்து ஒருத்தர் பார்த்து கொள்ள வேண்டும்"
"சரி டாக்டர் நான் பார்த்து கொள்கிறேன்"
இவை அனைத்தையும் வசந்தி வெளியிலிருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
வெளியே வந்தான் கதிர். வரும்பொழுது வசந்தி கண்ணில் பட்டாள். தனக்கு இவளை விட்டால் மருத்துவ உதவிக்கு வேறு யாரைத் தெரியும்? இவளிடமே உதவி கெட்டிட வேண்டும் என்று அன்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கேட்டு, "என் தந்தையைப் பார்த்துக்கொள்ள என் வீட்டிற்கு வாருங்கள். எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்" என்று கேட்டான்.
வசந்தி அங்கு டெம்பரரியாக வேலை செய்யும் ஒரு நர்ஸ் தான் அவளுக்கு சம்பளமும் குறைவுதான் வேலையும் அதிகமாக இருக்கும். எனவே அதை சாதகமாக்கி கொண்டான்.
தன் தந்தையை பார்த்துக் கொண்டால் அதிக சம்பளம் தருவதாகவும் உனக்கு வேலையும் கம்மியாகவே இருக்கும் என்று கேட்டுக்கொண்டான்.
அவள் தயங்கியவாறே சில நிபந்தனைகளை விதித்துவிட்டு சரியென ஒப்புக்கொண்டாள்.
ஆனால் அவன் சம்பளமே இல்லை வா என்று கூப்பிட்டு இருந்தாலும் அவள் வந்திருப்பாள். அது அவனுக்கு தெரியவில்லை.
பிறகு மூவரும் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள். ஒரு வழியாக வசந்தி நினைத்தது போலவே அவனுடன் ஒரே வீட்டில் தங்கப் போகிறாள்.
அவள் மனதிற்குள் சந்தோஷமாக இருந்தாலும், நடக்கப்போவது என்னவென்று யாருக்குத் தெரியும்?
நிபந்தனைகள் என்னவென்றால்,
என்னை நீ தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது.
என்னை நீ ,உன்னுடைய அம்மாவைப் போலத்தான் நடத்த வேண்டும்.
என்னை இனிமேல் 'அக்கா, வாங்க, போங்க, வசந்தி என்று பேர் சொல்லியோ கூப்பிடக்கூடாது,' அம்மா என்றே அழைக்க வேண்டும்.
எனது தேவைகளை நான் பூர்த்தி செய்து கொள்வேன். உனது தேவைகளை நீ பார்த்துக் கொள்.
எனது அறைக்குள் கூட நீ வரக்கூடாது என்ற நிபந்தனைகளை விதித்தாள் இவனும் சரியென தலைசைத்தான்.
இப்போதைக்கு வேறு வழி இல்லையென.
பின் வசந்தியும் கதிரின் வீட்டிற்குள் குடியேறினாள். நாட்கள் ஓடின.
மாணிக்கம் ஏதோ நடமாடி கொண்டிருந்தார்.
ஆனால், விவசாய வேலைகளுக்குச் செல்வதில்லை அவர் வீட்டிலேயே இருந்தார்.
அதற்கு தனியாக ஆள் போடப்பட்டு வேலை நடந்துகொண்டிருக்கிறது.
இப்படியே சென்று கொண்டிருக்கையில் ரொம்ப நாளாக கதிரின் மனதை குடைந்து கொண்டிருந்த அந்த விஷயத்தை யாரிடமாவது கூற வேண்டும் போல இருந்தது.
அவன் தன் தந்தையிடம் அதை பற்றி கேட்க நினைத்தான். ஆம் அது சர்ச் பாதர் கூறிய அந்த விஷயம் தான்.
பிறகு வசந்தி இல்லாத போது அவன் தந்தையிடம் சென்று," அப்பா நான் உங்களிடம் சில விஷயங்களை பத்தி கேட்க விரும்புறேன், எனக்கு நீங்க தெளிவுபடுத்துங்க ".
என்ன சொல்லுப்பா?
அன்று சர்ச் பாதர் கூறிய அனைத்தையும் தன் அப்பாவிடம் ஒப்பித்தான்.
"அப்படியென்றால் என் அம்மா உயிருடன் தான் இருக்கிறாரா? என்று கேட்டான்."
அவர் முகத்தில் எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லை. ஏனெனில் இந்த விஷயம் அவருக்கு முன்பே தெரிந்திருக்கிறது.
அழைத்துப் பார்த்தான் ஆனால் அவள் நிராகரித்து விட்டால்.
இப்படியே சென்று கொண்டிருக்கையில் திடீரென மாணிக்கத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது.
தன் தந்தையை அழைத்துக்கொண்டு வெளியூரில் வசந்தி பணிபுரியும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அங்கு மீண்டும் இவர்கள் இருவரும் சந்தித்திக் கொண்டனர்.
மாணிக்கத்தை அங்கு அட்மிட் செய்து விட்டு டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தான். வெளியிலிருந்து ,என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தாள் வசந்தி.
"உங்கள் தந்தைக்கு நுரையீரல் நோய் (COPD) எனும் இந்த நோய் இருக்கிறது கதிர்". "எனவே அவரை
கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று டிஸ்சார்ஜ் செய்யும்போது சில ரிப்போர்ட்டுகளைக் கொடுத்தார் மருத்துவர்.
"சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால் ஆக்ஸிஜன் கருவிகளை இயக்கவும் பராமரிக்கவும் உதவி தேவைப்படும். அவரை உடனிருந்து ஒருத்தர் பார்த்து கொள்ள வேண்டும்"
"சரி டாக்டர் நான் பார்த்து கொள்கிறேன்"
இவை அனைத்தையும் வசந்தி வெளியிலிருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
வெளியே வந்தான் கதிர். வரும்பொழுது வசந்தி கண்ணில் பட்டாள். தனக்கு இவளை விட்டால் மருத்துவ உதவிக்கு வேறு யாரைத் தெரியும்? இவளிடமே உதவி கெட்டிட வேண்டும் என்று அன்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கேட்டு, "என் தந்தையைப் பார்த்துக்கொள்ள என் வீட்டிற்கு வாருங்கள். எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்" என்று கேட்டான்.
வசந்தி அங்கு டெம்பரரியாக வேலை செய்யும் ஒரு நர்ஸ் தான் அவளுக்கு சம்பளமும் குறைவுதான் வேலையும் அதிகமாக இருக்கும். எனவே அதை சாதகமாக்கி கொண்டான்.
தன் தந்தையை பார்த்துக் கொண்டால் அதிக சம்பளம் தருவதாகவும் உனக்கு வேலையும் கம்மியாகவே இருக்கும் என்று கேட்டுக்கொண்டான்.
அவள் தயங்கியவாறே சில நிபந்தனைகளை விதித்துவிட்டு சரியென ஒப்புக்கொண்டாள்.
ஆனால் அவன் சம்பளமே இல்லை வா என்று கூப்பிட்டு இருந்தாலும் அவள் வந்திருப்பாள். அது அவனுக்கு தெரியவில்லை.
பிறகு மூவரும் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள். ஒரு வழியாக வசந்தி நினைத்தது போலவே அவனுடன் ஒரே வீட்டில் தங்கப் போகிறாள்.
அவள் மனதிற்குள் சந்தோஷமாக இருந்தாலும், நடக்கப்போவது என்னவென்று யாருக்குத் தெரியும்?
நிபந்தனைகள் என்னவென்றால்,
என்னை நீ தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது.
என்னை நீ ,உன்னுடைய அம்மாவைப் போலத்தான் நடத்த வேண்டும்.
என்னை இனிமேல் 'அக்கா, வாங்க, போங்க, வசந்தி என்று பேர் சொல்லியோ கூப்பிடக்கூடாது,' அம்மா என்றே அழைக்க வேண்டும்.
எனது தேவைகளை நான் பூர்த்தி செய்து கொள்வேன். உனது தேவைகளை நீ பார்த்துக் கொள்.
எனது அறைக்குள் கூட நீ வரக்கூடாது என்ற நிபந்தனைகளை விதித்தாள் இவனும் சரியென தலைசைத்தான்.
இப்போதைக்கு வேறு வழி இல்லையென.
பின் வசந்தியும் கதிரின் வீட்டிற்குள் குடியேறினாள். நாட்கள் ஓடின.
மாணிக்கம் ஏதோ நடமாடி கொண்டிருந்தார்.
ஆனால், விவசாய வேலைகளுக்குச் செல்வதில்லை அவர் வீட்டிலேயே இருந்தார்.
அதற்கு தனியாக ஆள் போடப்பட்டு வேலை நடந்துகொண்டிருக்கிறது.
இப்படியே சென்று கொண்டிருக்கையில் ரொம்ப நாளாக கதிரின் மனதை குடைந்து கொண்டிருந்த அந்த விஷயத்தை யாரிடமாவது கூற வேண்டும் போல இருந்தது.
அவன் தன் தந்தையிடம் அதை பற்றி கேட்க நினைத்தான். ஆம் அது சர்ச் பாதர் கூறிய அந்த விஷயம் தான்.
பிறகு வசந்தி இல்லாத போது அவன் தந்தையிடம் சென்று," அப்பா நான் உங்களிடம் சில விஷயங்களை பத்தி கேட்க விரும்புறேன், எனக்கு நீங்க தெளிவுபடுத்துங்க ".
என்ன சொல்லுப்பா?
அன்று சர்ச் பாதர் கூறிய அனைத்தையும் தன் அப்பாவிடம் ஒப்பித்தான்.
"அப்படியென்றால் என் அம்மா உயிருடன் தான் இருக்கிறாரா? என்று கேட்டான்."
அவர் முகத்தில் எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லை. ஏனெனில் இந்த விஷயம் அவருக்கு முன்பே தெரிந்திருக்கிறது.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)