7 hours ago
(8 hours ago)yazhiniram Wrote: நான் இங்கே ஒரு அப்டேட் கொடுக்கத்தான் வந்தேன். உண்மையைச் சொன்னால், இதுவரை எல்லோரும் "அடுத்தது எப்போது?" என்று காத்திருந்த அந்த அடுத்த 10 பாகங்களையும் இன்று ஒரே தடவையில் பதிவிட நினைத்திருந்தேன். அதற்காகவே நேரம் ஒதுக்கி எழுதிக்கொண்டு இருந்தேன்.
ஆனால் சமீபத்தில் வந்த கருத்துகளை எல்லாம் படித்த பிறகு, இந்தக் கதைக்காக நான் செலவிடும் நேரமும், உழைப்பும், ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டமாக எழுத நான் எடுக்கும் முயற்சியும், அதற்குக் கிடைக்கும் வரவேற்பும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு இருக்கிறது என்று புரிந்தது. இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு எழுதுவதற்கும், அதை வாசித்த பிறகு சிலர் காட்டும் அணுகுமுறைக்கும் எந்த மதிப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
சரி. அப்படியானால் இத்துடன் இந்த "இழுவை" கதையை நிறுத்திவிடலாம். "இழுவை" என்று மட்டும் சொன்னால் கூட அது குறைவாகத்தான் இருக்கும். இல்லை... மிக, மிக, மிக இழுவையான கதை. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். இனிமேல் அதைத் தொடர்ந்து எழுத வேண்டிய அவசியமும் இல்லை.
இன்னொரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். லிஃப்ட் சம்பவம் கதையின்படி இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்தான் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அல்ல. கதையின் கால ஓட்டத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மெதுவாக, இயல்பாக, முடிந்தவரை அதிக விவரங்களுடன் எழுத வேண்டும் என்பதுதான் என் நோக்கம். ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு உரையாடலுக்கும், ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு இடைவெளிக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை அவசரப்படுத்தாமல் எழுதினால் "இழுக்கிறது" என்பதும், விரிவாக எழுதினால் "எதுவுமே நடக்கவில்லை" என்பதும், அப்படியென்றால் இனிமேல் அந்த முயற்சியைத் தொடர வேண்டிய காரணம் எனக்குத் தெரியவில்லை.
இவ்வளவு உழைத்து எழுதுவதற்குப் பதிலாக, அதை எழுதாமல் இருப்பதுதான் நல்லது என்று இப்போது தோன்றுகிறது. அதனால், இப்போதைக்கு இந்தக் கதையை கைவிடுகிறேன்.
இதுவரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. மற்றவர்களுக்கும் நன்றி.
உங்களோட தற்போதைய மனநிலைய புரிஞ்சிக்க முடியுது.. நெகடிவ் கமெண்ட்ஸ் பண்றவுங்களுக்காக இந்த கதையை பாதியிலேயே விட்டுட்டு போற நீங்க, அத அப்ரிஷியேட் பண்ற எங்கள மாதிரி வாசகர்களுக்காகவாவது யோசிச்சிருக்கலாம்.
உழைப்ப மதிக்கிறேன்னு சொல்லிட்டு, "வெறும் இழுவை இல்லை.. மகா மகா இழுவை"ன்னு போட்டது என்ன மாதிரி கருத்துன்னு எனக்கு தெரியல.. உழைப்ப மதிக்க தெரிஞ்சவுங்க இந்த மாதிரி போட மாட்டாங்க.. இன்னொருத்தர் இருக்காரு.. அவரு.. "இழுவை மன்னன் இன்னும் அப்டேட் போடவில்லையா?.."
இவருக்கு கொஞ்ச நாளாவே உங்க மேல காண்டுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் சர்காஸ்டிக்காவே பதில் போட்டுட்டு இருக்காரு..
இவுங்க கமெண்ட்ஸ பாத்து பாதிலையே விட்டுட்டு போற நீங்க, உங்க கதைய ஆதரிக்கிற எங்கள மாதிரி வாசகர்கள விட்டுட்டு போயிறாதீங்க..
இன்னொரு முக்கியமான விஷயம்..
இங்க யாரும் காசுக்காக எழுதல.. இங்க இவ்வளவு மெனக்கெட்டு எழுதுறதுனால அவருக்கு ஒன்னும் கிடைக்க போறது இல்ல.. கருத்து சொல்ல வேணாம்னு சொல்லல, ஆனா கதை எழுதுறவரோட மனச பாதிக்காத அளவு கமெண்ட் பண்ணலாம்.. அண்ட் மோர் ஓவர், இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை.. கற்பனை கதைல எப்டி இப்படியெல்லாம் லாஜிக் பாக்குறீங்கன்னு தெரியல.. அது போக இந்த கதை ரொம்ப மெதுவா போகும்னு அவரே சொல்லிட்டாரு.. திரும்பவும் அவரோட கதை ஓட்டத்தில தடை போடுறதுக்கு நமக்கு எந்த உரிமையும் இல்ல..
யாழினி ராம்..
கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவா எடுங்க பிரதர்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)