மியாமி இரவுகளில் மல்லிகா
#20
#3

நீண்ட பயணத்தின் களைப்பு தீர மல்லிகா குளியலறைக்குள் சென்றாள். வெதுவெதுப்பான தண்ணீர் உடம்பில் பட்டதும், இத்தனை நாள் மனதில் இருந்த சுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது போல இருந்தது.
குளித்து முடித்த பிறகுதான் அவளுக்கு நினைவு வந்தது. அவசரத்தில் தன் துண்டை வெளியே சோபாவிலேயே விட்டுவிட்டு வந்திருந்தாள்.

அவள் கதவை கொஞ்சம் திறந்து, தயக்கத்துடன்,
"ரோஹன்... அந்தத் துண்டை கொஞ்சம் எடுத்துக் கொடுப்பியாப்பா?" என்று அழைத்தாள்.

"இதோ மல்லிகா..." என்று ரோஹனின் குரல் கேட்டது.

சில நொடிகளில் அவன் கதவின் அருகில் வந்து நின்றான். கையில் இருந்த துண்டை கதவின் இடைவெளியில் நீட்டினான்.
மல்லிகா உள்ளே இருந்து கையை மட்டும் வெளியே நீட்டினாள். ஈரமான அவளது விரல்கள் துண்டைப் பிடிக்க முயன்றபோது, எதிர்பாராமல் ரோஹனின் விரல்களைத் தொட்டன.

இருவரும் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டார்கள்.

ரோஹனின் கை அசையாமல் நின்றது. மல்லிகாவின் விரல்கள் மெதுவாக விலகின.

கதவுக்கு இருபுறமும் சில நொடிகள் அமைதி நிலவியது. சொல்லாமல் சொல்லும் ஏதோ ஒன்று அந்தச் சிறிய இடைவெளியில் நின்றது.

அவள் துண்டை மார்போடு இறுக்கமாகப் பிடித்தபடி வெளியே வந்தாள். ஈரமான கூந்தலில் இருந்து தண்ணீர் துளிகள் இன்னும் தோள்களில் வழிந்துகொண்டிருந்தன.

பால்கனி அருகே நின்றிருந்த ரோஹன் அவளது காலடி சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.
ஒரு கணம் அவன் அப்படியே நின்றுவிட்டான்.

குளித்துவிட்டு வந்த புத்துணர்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது. ஈரமான கூந்தல் அவளது தோள்களைத் தொட்டபடி இருந்தது. வழக்கமாக அமைதியாக இருக்கும் மல்லிகாவை விட, அந்த நொடியில் அவள் வேறொரு விதமாகத் தோன்றினாள். உடம்பை இறுக்கிக் கட்டியிருந்த அந்தத் துண்டிற்குள் மல்லிகாவின் முதிர்ந்த உடலின் வளைவுகளும், மார்பின் மிடுக்கான அமைப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன.

ரோஹனின் பார்வை அவளிடம் சில நொடிகள் தங்கியது. அதை உணர்ந்த மல்லிகா, சற்றே தயக்கத்துடன் துண்டை இன்னும் இறுக்கமாகச் சரி செய்து கொண்டாள்.

இருவரின் பார்வைகளும் ஒரு கணம் சந்தித்தன.

ரோஹன் உடனே பார்வையை விலக்க முயன்றான். ஆனால் அவன் முகத்தில் தெரிந்த அந்தத் தயக்கம் மல்லிகாவின் கவனத்திலிருந்து தப்பவில்லை.


அவள் தன் ஈரமான கூந்தலை பின்னால் ஒதுக்கி, துண்டை சற்று சரி செய்து கொண்டாள். ரோஹன் இன்னும் எதுவும் பேசாமல் நிற்பதைப் பார்த்ததும், அந்தச் சூழலை மாற்ற அவள் லேசாகச் சிரித்தாள்.


"என்ன அப்படிப் பார்க்கிற?" என்று கேட்டாள்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு, குறும்பாக,
"துண்டு கட்டி பொண்ணைப் பார்த்ததே இல்லையா?" என்றாள்.


அவளது குரலில் இருந்த இயல்பான சிரிப்பு, இருவருக்கும் நடுவில் இருந்த பதற்றத்தை கொஞ்சம் குறைத்தது.
ரோஹன் லேசாகச் சிரித்தான்.


"பெண்ணைப் பார்த்திருக்கேன் மல்லிகா... ஆனா, இப்படி ஒருத்தியைப் பார்க்கிற வாய்ப்பு இப்பதான் கிடைச்சிருக்கு," என்றான்.
அவன் சொன்ன விதத்தில் இருந்த குறும்பு அவளுக்குப் புரிந்தது. மல்லிகா சிரிப்பை மறைக்க முயன்றாலும், முகத்தில் தெரிந்த சிறிய வெட்கத்தை மறைக்க முடியவில்லை.


"போதும்... ரொம்ப பேசாத," என்று சொல்லி அவள் சோபாவில் அமர்ந்தாள்.
ரோஹனும் எதிரே அமர்ந்தான். இருவருக்கும் நடுவில் இருந்த தயக்கம் இன்னும் முழுவதுமாகப் போகவில்லை. ஆனால் முன்பு இருந்த இறுக்கம் இல்லை.


காபி கோப்பையை கையில் பிடித்தபடி, மியாமியின் வெயில், கடற்கரை, அங்குள்ள வாழ்க்கை என்று ரோஹன் பேசத் தொடங்கினான். மல்லிகாவும் இந்தியாவில் இருந்த நாட்கள், அங்குள்ள பழக்கங்கள், அவளுக்குப் பிடித்த விஷயங்கள் என்று பகிர்ந்தாள்.



சில நிமிடங்களுக்கு முன்பு வரை அந்நியர்களைப் போல இருந்த இருவரும், மெதுவாக பழகியவர்களைப் போல பேச ஆரம்பித்திருந்தார்கள்.


அப்போது மல்லிகாவின் போன் திடீரென ஒலித்தது. ஸ்கிரீனைப் பார்த்தவளின் முகம் மாறியது. இந்தியாவில் இருந்து அவளது கணவர் அழைத்துக் கொண்டிருந்தார்.


"ஹலோ..." என்று அவள் போனை எடுத்தாள்.


மறுமுனையில் கணவரின் கோபமான குரல் கேட்டது.


"ஏண்டி! ஏர்போர்ட்ல இறங்கி இவ்வளவு நேரம் ஆகுது. ஒரு போன் பண்ணி சொல்லணும்னு தோணலையா? அங்க பையன் வேற, 'நான் கலிபோர்னியா போயிட்டேன்'ன்னு மெசேஜ் பண்றான். நீ அங்க என்ன பண்ற? அவன் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் நேரா போயிட்டியா?"
அவர் விடாமல் பேசினார்.
"உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா இல்லையா?" என்று கோபமாகக் கேட்டார்.


"இல்லங்க... இப்பதான் வந்தேன். அவன் ஃப்ரெண்ட் ரோஹன் கூடத்தான் இருக்கேன்..." என்று மல்லிகா மெதுவாக விளக்க முயன்றாள்.


ஆனால் மறுமுனையில் இருந்தவர் அவள் சொல்வதைக் கேட்கவே இல்லை.


"உனக்கு எப்பவும் இதேதான். சொன்னதை கேட்க மாட்ட. பையனோட ஃப்ரெண்ட் சொல்றதைக் கேட்டுட்டு வீட்டுக்குள்ள இரு. தேவையில்லாம வெளிய சுத்தாத," என்று கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.


சில நொடிகள் மல்லிகா போனை கையில் வைத்தபடியே அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.


பிறகு மெதுவாக போனை கீழே வைத்தாள். கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் அவளால் அடக்க முடியவில்லை.


இத்தனை தூரம் வந்த பிறகும், தன் வாழ்க்கையில் எதுவும் மாறவில்லை என்ற உணர்வு அவளை அழுத்தியது.


அவள் சோபாவின் ஓரத்தில் அமர்ந்து, முகத்தை கைகளுக்குள் புதைத்துக் கொண்டாள். சில நொடிகளில் அவளது தோள்கள் மெதுவாக குலுங்கத் தொடங்கின.


ரோஹன் அவள் அழுவதைப் பார்த்ததும் பதறினான்.


சில நொடிகள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவன், மெதுவாக அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
"மல்லிகா..." என்று மெதுவாக அழைத்தான்.


அவள் முகத்தை உயர்த்தவில்லை. கண்ணீர் மட்டும் தொடர்ந்து வழிந்தது.
ரோஹன் அவளது தோளில் மெதுவாக கை வைத்தான்.


"ப்ளீஸ்... அழாதீங்க," என்றான்.


அவள் எதுவும் பேசாமல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஆனால் அதை நிறுத்த முடியவில்லை.


அவளது கைகளை மெதுவாகப் பிடித்த ரோஹன், "பரவாயில்லை... இங்க யாரும் உங்களைத் திட்டப் போறதில்லை," என்றான்.
அந்த வார்த்தைகள் கேட்டதும் மல்லிகா ஒரு கணம் அவனைப் பார்த்தாள்.


அவனது குரலில் இருந்த அக்கறை, அவள் இத்தனை நேரம் தேடிய ஒரு சிறிய ஆறுதலைப் போல இருந்தது.
அவள் மீண்டும் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். ரோஹன் அமைதியாக அவள் அருகில் இருந்தான். அவசரமாக எதுவும் சொல்லவில்லை. அவள் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் வரை அங்கேயே இருந்தான்.


அவளது கவனத்தை வேறு பக்கம் திருப்ப நினைத்த ரோஹன் மெதுவாக எழுந்தான். சோபா டேபிளில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தான்.


சில நிமிடங்களில் மல்லிகாவின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. அவள் தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு அமைதியாக நிமிர்ந்தாள். 


அப்போது டிவியில் புளோரிடாவின் புகழ்பெற்ற 'மிஸ் மியாமி பிகினி போட்டி' ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. திரையில் இளம்பெண்கள் மிகக் குறைவான பிகினி ஆடைகளை அணிந்து, தங்கள் உடலின் அசைவுகளோடு கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.


அறைக்குள் மீண்டும் அமைதி நிலவியது.


ரோஹனின் பார்வை டிவி திரையில் நின்றுவிட்டது. அவன் அதை கவனிக்காமல் இருந்தாலும், மல்லிகாவின் பார்வைக்கு அது தெரிந்தது. அவனது மூச்சு வேகம் லேசாகக் கூடியது. திரையில் இருக்கும் பெண்களின் இளமையும் வடிவமும் ஒரு ஆண்மகனுக்கே உரிய உணர்ச்சி வேகத்தை அவனுக்குள் தூண்டுவதை மல்லிகா கவனித்தாள்.

அவள் தன் அழுகையின் பாரத்திலிருந்து மெதுவாக மீண்டு, ரோஹனின் அந்த ஆண்மைக்கே உரிய தவிப்பை ஒரு முதிர்ந்த பெண்ணின் நிதானத்தோடு வேடிக்கை பார்த்தாள். அவளது கண்கள் ரோஹனின் முகத்தில் இருந்து டிவி திரைக்கும், திரையிலிருந்து அவனது கண்களுக்கும் மாறி மாறிப் பயணித்தன. அவளுக்குள் இத்தனை வருடங்களாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு திமிரான ஆளுமை மெல்ல விழித்துக் கொண்டது.


அவள் மெதுவாகத் தன் கூந்தலை ஒருபுறம் ஒதுக்கினாள். கன்னத்தில் இருந்த கண்ணீரின் ஈரம் இன்னும் முழுவதுமாக காயவில்லை.


சோபாவில் சாய்ந்து அமர்ந்தவள், சில நொடிகள் அமைதியாக ரோஹனைப் பார்த்தாள்.
சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த சோர்வான முகம் மாறியிருந்தது. அவளது உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய சிரிப்பு தோன்றியது. அது என்ன நினைக்கிறாள் என்று புரியாத அளவுக்கு அமைதியாக இருந்தது.


"என்ன ரோஹன்..." என்று மல்லிகா மெதுவாகக் கேட்டாள்.


அவளது குரலில் இருந்த மாற்றத்தை அவன் கவனித்தான்.

"டிவில வர்ற அந்தப் பொண்ணுங்க... உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணறாங்களா?" என்று சிறிய புன்னகையுடன் கேட்டாள்.
ரோஹன் ஒரு கணம் தடுமாறினான். டிவி திரையில் இருந்த பார்வை உடனே அவளிடம் திரும்பியது.


அவளது ஈரமான தோள்களும், சோபாவில் சரிந்திருந்த அவளது முதிர்ந்த உடலின் அழகும் திரையில் இருந்த பெண்களை விடப் பல மடங்கு அவனுக்குள் நெருப்பைக் கூட்டின.


அவன் வார்த்தைகளால் விவரிக்காமல், அவளது இன்னும் கொஞ்சம் அருகில் நகர்ந்து, அவளது முகத்திற்கு மிக அருகில் வந்தான். அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட்டது. அவளது கன்னத்தில் இருந்த கண்ணீரின் மிச்சத் துளியைத் தன் விரலால் மெதுவாகத் துடைத்து எடுத்தான்.


"அந்தப் பொண்ணுங்களோட அழகு ஒரு நிமிஷம் பார்க்கிற மாதிரி தான், மல்லிகா..." என்று ரோஹன் மெதுவாகச் சொன்னான்.
மல்லிகா அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.


"இதான் நீ என்னை சமாதானப்படுத்துற லட்சணமா?" என்று டிவியில் பிகினி ஷோவைப் பார்த்து அவனைக் கேள்வி கேட்டாள்.
அவளது குரலில் கோபம் இல்லை. மாறாக, அவன் சொன்னதைப் பிடித்துக் கொண்ட ஒரு சிறிய கேலி இருந்தது.
ரோஹன் சிரித்தான்.


"வேற எப்படி சமாதானப்படுத்தணும்னு சொல்லுங்க...," என்றான்.


மல்லிகா அவனைப் பார்த்து தலையை லேசாக அசைத்தாள்.
"நல்லா பேசத் தெரியுது உனக்கு..." என்றாள்.


அந்த ஒரு வரியிலேயே, சில நிமிடங்களுக்கு முன்பு இருந்த சோகமான சூழல் கொஞ்சம் மாறியது.


ரோஹன் ஒரு சிறிய சிரிப்புடன், "சில பேரை பார்த்தா பிடிக்கும்... ஆனா சில பேரை மட்டும் மறக்க முடியாது," என அவளது காதோரம் ரகசியமாய், அதே சமயம் தீவிரமான காமத் தவிப்போடு சொன்னான். 


"உங்க மாதிரி பக்குவமா இருக்கறவங்க தர்ற சுகம் எந்தப் பொண்ணுகிட்டயும் இருக்காது மல்லிகா. எனக்கு அந்த மாடலிங் பொண்ணுங்க தேவையில்லை, என் இரவுகளைத் திருடுன இந்தத் தேவதை மட்டும்தான் வேணும்."


அவனது விரல்கள் அவளது கழுத்து வளைவில் மென்மையாக இறங்கியபோது மல்லிகா தன்னுள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தாள். அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள்.


"உங்க உதடுகளோட இந்தத் தவிப்பு, எனக்கு முன்னாடி நீங்க உங்களை மறந்து நிக்கிற இந்த விநாடி... இதுதான் எனக்கு வேணும்," என்று அவன் தழு தழுத்த குரலில் சொல்லி முடித்தபோது, மல்லிகாவின் அத்தனை தடுப்புச் சுவர்களும் உடைந்து, அவள் முழுமையாக அவனிடம் உருகியிருந்தாள்.


அவளது காதோரம் அவன் உதிர்த்த அந்த வார்த்தைகளின் சூடு, மல்லிகாவின் உடம்பில் ஒரு புதிய நடுக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தீவிரம் அவளுக்குப் பழக்கமில்லாதது. அதே சமயம் அவள் மனம் அன்புக்கு ஏங்கியது.


அவள் சட்டென்று தன் கண்களைத் திறந்து, அவனது நெருக்கத்திலிருந்து லேசாக விலகி, நெஞ்சில் கை வைத்துக்கொண்டு, "ச்சீ... போடா!" என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு சோபாவிலிருந்து சட்டென்று எழுந்தாள்.


அவளது உடலின் பாரமும், புடவைக்கு வெளியே தெரிந்த அவளது நடையின் நளினமும், அவள் வெட்கத்தோடு தன் அறை நோக்கி நடக்கும்போது அவளது பின்னழகில் குலுங்கலை ஏற்படுத்தின. ரோஹன் அந்தப் பின்னழகின் வளைவுகளை, அவள் கதவைச் சாத்தும் வரை தன் பசியான கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்.


அறைக்குள் வந்து கதவைச் சாத்திய பிறகும் மல்லிகாவிற்கு இதயம் அடங்கவில்லை. கதவின் பின்னால் சாய்ந்து கொண்டு தன் வேகமான இதயத் துடிப்பைக் கவனித்தாள். புடவையை தளர்த்தி ஒரு மெல்லிய நைட்டிக்கு மாறினாள். ஆனால், அன்று இரவு அவளுக்குத் தூக்கமே வரவில்லை. இந்தியாவின் பகல் நேரம் இங்கு நள்ளிரவாக இருந்ததால், அந்த 'ஜெட் லாக்' (Jet lag) அவளது தூக்கத்தைக் கலைத்து, படுக்கையில் புரள வைத்தது.


அதைவிட, ரோஹன் காட்டிய அந்தப் பார்வைகளும், அவன் சொன்ன வார்த்தைகளும் அவளது காதுக்குள் ரிங்காரமிட்டுக் கொண்டே இருந்தன. உடம்பில் ஒரு புதுவிதமான அனல் ஏறுவது போல் இருந்தது. தொண்டை வறண்டது. தண்ணீர் குடிப்பதற்காக நள்ளிரவு இரண்டு மணிக்கு மெதுவாகத் தன் அறைக் கதவைத் திறந்து ஹாலுக்குள் வந்தாள்.


அங்கே டைனிங் டேபிளுக்கு அருகில் இருந்த பிரிட்ஜ் வெளிச்சத்தில் ரோஹன் நின்று கொண்டிருந்தான். அவனும் தூங்காமல் தண்ணீர் குடிக்க வந்திருந்தான்.


அவனைக் கண்டதும் மல்லிகா அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். ரோஹன் வெறும் கறுப்பு நிற ஷார்ட்ஸ் (Shorts) மட்டுமே அணிந்திருந்தான். அவனது மேல் உடம்பில் எந்த ஆடையும் இல்லை. பிரிட்ஜின் மெல்லிய வெளிச்சத்தில் அவனது அகன்ற மார்பும், ஜிம்மில் ஏற்றிய அவனது கைகளின் தசைக்கட்டுகளும், அவனது இளமைக்கே உரிய அந்த அரைகுறை ஆடைத் தோற்றமும் அப்பட்டமாகத் தெரிந்தன.


நள்ளிரவின் அந்த நிசப்தத்தில், ஒரு கட்டுமஸ்தான இளைஞனை இவ்வளவு அருகில், இந்த அரைகுறை ஆடையில், மல்லிகா தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அவளது கணவனின் தொப்பை விழுந்த உடம்பிற்கும், இவனுக்கும் இருந்த வித்தியாசம் அவளது கண்களை அகல விரித்தது. ரோஹனும் சட்டென்று திரும்பி, நைட்டியின் மெல்லிய துணிக்குள் தன் உடலின் வளைவுகள் தெரிய நின்று கொண்டிருந்த மல்லிகாவைப் பார்த்தான்.


இருவரின் மூச்சுக்காற்று மட்டுமே அந்த நள்ளிரவில் பலமாகக் கேட்டது. வார்த்தைகள் ஏதுமில்லை; ஆனால் இருவருக்குள்ளும் இருந்த அந்தச் சொல்லப்படாத காமத்தின் தாகம், அந்த நள்ளிரவின் இருட்டிலும் இன்னும் தீவிரமாக எரியத் தொடங்கியது.
[+] 4 users Like rainbowrajan2's post
Like Reply


Messages In This Thread
RE: மியாமி இரவுகளில் மல்லிகா - by rainbowrajan2 - 15-07-2026, 05:52 AM



Users browsing this thread: 1 Guest(s)