அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
எனக்கு தெரியல நான் என்ன நிலமையில இருக்கேன்னு.. நான் எனக்கு புடிச்ச train பகுதியை படிக்கலாம்னு வந்தேன். சிறுவனா இருந்தப்ப Madhu கொடுத்த அந்த அரவணைப்பு, எவ்வளவு தடவை படிச்சாலும், அந்த பகுதி என் மனசுக்கு தர அந்த பசுமையான நினைவுகள் மாறவே மாறல. 5 வருஷத்துல பல தடவை படிச்சுட்டேன். ஆனா என்னமோ முழு கதையையும் எப்பயும் முழுசா படிக்க தோணல. ஏன்னா அது first time கொடுத்த உணர்வு அப்படியே இருக்கு. இன்னும் சொல்லப்போனா அந்த உணர்வு எனக்கு அப்படியே இருக்கணும், மறக்ககூடாதுனு நெனைப்பேன். அதை மறுபடியும் படிச்சு அதை மாறிரா கூடாதுனு படிக்க மாட்டேன்

Again இப்பயும் அந்த train sequence படிக்காத்தான் வந்தேன். ஆனா என்னமோ தெரியல, முழு கதையையும் படிக்க தோணுச்சு. படிக்க படிக்க எனக்கு வேற எதுவும் தோணல. அதே உலகத்துக்கு போன மாதிரி இருக்கு. Train sequence படிச்சதுமே என்னால விவரிக்க முடியாத பாசத்துக்கு ஏங்கி தவிச்ச குழந்தையா என்ன உணர்ந்தேன். அதே மாதிரி எனக்கும் கிடைக்காதுனு எப்பயும் எங்குவேன். இப்பயும் அதே ஏக்கம்.

அப்புறம் அவங்கலோட love sequence படிக்க படிக்க, அவ்ளோ ஒரு ஏகாந்தம். இதான் love-ஆ? இப்படித்தான் இருக்குமா love பண்ணுற feelings.. அவ்ளோ lovely.. sometimes ஏக்கமா இருக்கும்.. பல தடவை intimacy scenes வந்தாலும், எனக்கு நீங்க சொல்லுவீங்களே — "love is the primary emotion in sex" — same ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற அன்புதான் பிரதானமா தெரிஞ்சுது.

நீங்க சொல்லுவீங்களே ஒரு VELI (space). "I'm just living in a different space, the different universe created by you." என்னால வெளிய வர முடியல. இல்ல வெளிய வர புடிக்கல. உங்க writing way, உணர்வுகளை கடத்தும் விதம், இது எல்லாம் different league

But actually அதை பத்தி சொல்ல, உங்களை புகழ என்ன நீங்க விட மாட்டீங்க. ஏன்னா அதைவிட உங்க கதை எனக்கு ஏற்படுத்துற தாக்கம் ரொம்ப அதிகம்.

உங்க எழுத்து படிக்க படிக்க அந்த மனநிலை எனக்குள்ள automatic-ஆ பரவுச்சு. First sequence படிக்குறப்போ குழந்தையா அன்புக்கு எங்கி, Madhu கொடுத்த பசத்துல மயங்கி கெடந்தேன். Then love பண்றப்போ, அதே காதல் எனக்குள்ள வந்து ஏகாந்த நிலையில இருந்தேன். இப்போ அந்த பிரிவு தர வலியில, வலியும் வெறுப்பும், கோபமும் எனக்குள்ள கடத்தபடுது. ஒவ்வொரு நிலையும் என்னால பாக்க உணர முடியுது. உங்க எழுத்து அவ்ளோ powerful. உண்மையாவே ஆச்சரியமா இருக்கு. எப்படி உங்களால இவ்ளோ உணர்வுகளை கடத்த முடியுதுன்னு.

உண்மையாவே என்ன மன்னிச்சுருங்க. ஒரு வாசகரா உங்க எழுத்து நடையை ரசிக்கணும். எதெல்லாம் என்ன கவர்ந்துச்சுனு உங்களை புகழணும். ஆனா அதையெல்லாம் மறக்கடிக்குற மாதிரி, நீங்க கொடுத்த உணர்வுகள்தான் என்னை பிரதானமா ஆட்டி படைக்குது.

உங்க story மாதிரி என்ன இவ்ளோ தூரம் affect பண்ணுனது எதுவும் இல்ல. உங்க எழுத்து என்ன ரொம்ப ரொம்ப பாதிச்சிருக்கு. Hits me in deep. Inspired me lot.

ஆனா ஒரே ஒரு வேண்டுகோள். நீங்க திரும்பவும் இந்தக் கதையை எழுதாதீங்க. என்னை இங்க இருக்க வாசகர்கள் அனைவரும் திட்டுவாங்க. இருந்தாலும் பரவலா, நீங்க எழுத வேணாம். ஒரே ரீசன். நீங்க தரப்போற முடிவு. இது நெனச்சத பயமா இருக்கு. நீங்க முழு கதையையும் யோசிச்சுட்டேன்னு சொல்லிட்டு, next part-ல, Ranjith பத்தி (I hate him to be calling as Ranchu) கொடுத்த build up நெனச்சு, எனக்கு பத்திட்டு வந்துச்சு. Then கல்யாணம்னு குண்டா போட்டீங்க. Then Maya வேற. Then Vennila-க்கும் Mathi-க்கும் நெஞ்சு புளியுற மாதிரி flashback வேற. இனி Maya-க்கும் மலைல இரங்குறப்போ பார்த்தான் கீத்தான் காப்பாத்துணாள்னு நெஞ்ச புழியுற flashback வெப்பீங்க. ஆக மொத்தம் ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்த்து மாட்டீங்க. கேட்டா, இந்த வாழ்க்கையே இப்படித்தா நாம நெனச்ச மாதிரி இருக்காது, தொவச்ச மாதிரி இருக்கும்னு dialogue விடுவீங்க. அய்யா சாமி ஒன்னும் வேணாம். வாழ்க்கை எப்படியோ இருக்கட்டும், ஆன வாழ்க்கைய முன்னோக்கி நம்மள நகர்த்தரது நமக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை ஒரு நாள் மாறும்ங்குர "நம்பிக்கை". எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்குது மதுவும் மணியும் ஒன்னு சேர்ந்து நூறு வருஷம் வாழ்வாங்க. I believe you have hinted that.. அந்த நம்பிக்கைல மண்ண அள்ளி போட்டு போய்ரதீங்க சாமி. எனக்கு எதுவும் வேணாம். எனக்கு முடிவும் வேணாம், ஒண்ணும் வேணாம். நான் இதே வெளியில, இதே மனநிலையில வருஷத்துக்கு ஒரு தடவை வந்து இருந்துக்கிறேன்.

Do you know how much this story means to me? I just want this pain endlessly. I am just enjoying this pain. And above all, I want to convert this pain into fuel to become better in my life, just like Mani did with his. I am longing for love and care. It is one of the pinnacle moments of life to receive the purest love from a soul. I am longing for that.

இன்னும் எவ்ளோ time படிப்பேன், எவ்ளோ நாள் படிப்பேன்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு. ஆனா 5 வருஷம் கழிச்சு, இந்த முழு கதையும் படிக்குறப்போ first time-ஐ விட அதிகமா உணர்வுகளால் ஆக்கிரமிக்க பட்டேன். எனக்கு இது போதும். என்னோட life-ல இந்த story எனக்கு பொக்கிஷம். எனக்கு வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு அன்பை share பண்ண ஒரு soul கிடைப்பாங்களானு தெரியல. But அந்த உணர்வை உங்க எழுத்துக்கள் அனுபவிச்சுட்டேன். மறுபடியும் அந்த அன்பை உங்க எழுத்துக்கள் மூலமாவே அனுபவிச்சுக்குவேன். Thanks.

இன்னும் இன்னும் சொல்ல ஆசையா இருக்கு. ஆனா இதுக்கு மேல ஒளர ஆரம்பிப்பேன். ஏற்கனவே ஒளறிதா வெச்சிருக்கேன். So it's better to stop myself.

எதுக்குடா இவன் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கான்னு நீங்க நினைப்பீங்க.. எனக்குமே சரியா தெரியல.. ஆன இந்த கதையின் மீது வைத்திருக்கும் அன்பை, காதலை இங்க வார்த்தையா வெளிப்படுத்துறத தவிர வேற என்ன ஆப்ஷன் என்கிட்ட இருக்கு.. I feel this is the right place to share my feelings


I love you dear author. ❤️
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Idiot17 - 14-07-2026, 11:53 PM



Users browsing this thread: