அமுதா - இளம் அண்ணி
அண்ணன் அண்ணிக்காக ஹாலில் அவஸ்த்தையோடு காத்திருந்தான். அவ்வவ்போது கனைப்பதும் தொண்டையை சொரூமுவதுமாக 'நான் இன்னும் தூங்கவில்லை' என்பதை உள்ளே இருந்த எங்களுக்கு உணர்த்துவது போல அவனது செயல்கள் இருந்தன.

அண்ணன் போட்ட சத்தங்கள் அண்ணியை கலவரப்படுத்திவிடவில்லை. பதறாமல் நிதானமாகவே இருந்தாள். என் படுக்கையில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்து தலைமுடியை வருடியபடி இருந்தாள்.

"தலைவலி.. எப்படிற்றா இருக்கு..?"

"போற மாதிரி தெரியல அண்ணி.. மாறி மாறி.. ம்மாஆஆ.. வந்துட்டிருக்கு.."

படுத்திருந்த என் மீது பெட்ஷீட்டால் மார்பு வரை போர்த்தி விட்டாள். நெற்றியை தடவி கொடுத்தாள். கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களால் மசாஜ் செய்வது போல நெற்றியை நீவி விட்டபடியே இருந்தாள். 

என் தலைவலியில் ஒரு பகுதி வலியை போனது போல ஒரளவு சமாளிக்க முடிந்தது. ஆனால் முற்றிலும் போகவில்லை.

"ஆஆ.. டாக்டர்கிட்ட போலாமா அண்ணி..?"

"இந்த நேரத்துக்கு யாரும் இருக்க மாட்டாங்களேடா.. நாளைக்கு ஸ்பெஷலீஸ்ட்கிட்ட போய் செக் பண்ணிக்கலாம்.."

"முடியலயே அண்ணி.." 

உடம்பை வளைத்து மார்பை நிமிர்த்தி என் வலியை வெளிகாட்டினேன்.

என் தோளை பிடித்து கீழே அழுத்தினாள். நார்மலானது போல இருந்தது. பழைய மாதிரி படுத்தேன்.

"பெய்ன் கில்லர் டேப்ளெட் போட்டியாடா..?"

"ஏற்கனவே இரண்டு போட்டுட்டேன் அண்ணி.. இன்னொன்னு போடவா?"

"டேய்.. அதென்ன மிட்டாயாடா.. இஷ்டத்துக்கு சாப்பிடறதுக்கு..?"

'எதாச்சும் செய்ங்க அண்ணி' என்பது போல அண்ணியை பார்வையாலே இறைஞ்சினேன். புரிந்து கொண்ட மாதிரி படுக்கையை விட்டு எழுந்தாள்.

"இருற்றா.. இப்ப வந்துர்றேன்.."

அண்ணி ரூமை விட்டு வெளியே வந்த போது, அண்ணனின் கேள்விகளை எதிர் கொள்ள நேர்ந்தன.

"எப்படிற்றி இருக்கான்..?"

"இரண்டு பெயின் கில்லர் போட்டும் கூட தலவலி இன்னும் நிக்கலங்க.."

"எப்போ அவன் வலி போவும்..?"

அண்ணியை திரும்ப பெட்ரூம்க்குள் தள்ளி கொண்டு போக, மிகவும் முனைப்பாக இருந்தான் என இக்கேள்வியால் அவன் மனதை அறிய முடிந்தது.

"நா என்ன டாக்டராங்க.. எனக்கெப்படிங்க தெரியும்.. கூட இருந்து கவனிச்சுக்கனும்.. நீங்க இருக்கிங்களா..?"

அண்ணி சுளீரென கேட்ட கேள்விக்கு அண்ணனால் பதிலளிக்க முடியவில்லை. 

அரை நிமிடம் வெளியே அமைதியாய் இருந்தது.

"இப்ப என்னடி பண்ணலாம்..?" மெல்ல கேட்டான்.

"நீங்க எமர்ஜென்சிக்கு கால் போட்டு கேளுங்க.. நா அவன் தலை வலி போறதுக்கு எதாச்சும் வழி இருக்கானு பாக்குறேன்ங்க.."

"சரிடி.."

ஒரிரு நிமிடங்கள் கழித்து.. அண்ணி திரும்ப வந்தாள். தன் பழைய பாவாடை ஓரத்தை கிழித்து துண்டாக்கி, கயிறு போல கையில் வைத்திருந்தாள்.

என் தலையை தூக்கியபடி, பாவாடையில் கிழித்த ஓரத்தை தலையை சுற்றி இறுக்க வைத்து கட்டி விட்டாள்.

"இப்படி பண்ணா, வலி கொஞ்சம் குறையும்னு எங்கம்மா சொல்லுவாங்க..."

"ம்ம்.. ரொம்ப தாங்க்ஸ் அண்ணி.."

"வெய்ட் பண்ணி பாக்கலாம்டா.. கண்டிப்பா வலி குறைஞ்சிடும்.."

என் கன்னத்தை வாஞ்சையோடு தடவி விட்டாள்.

"என்ன விட்டு போகாதிங்க அண்ணி.. வலி திரும்ப வர்ற மாதிரி இருக்கு.."

"உங்கண்ணன் எனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்காருடா.." சட்டென குரலில் ரகசியம் கலந்து பேசினாள்.

"நீங்க பக்கத்துல இருந்தா வலி குறைஞ்ச மாதிரி இருக்குண்ணி.. நா தூங்கற வரைக்குமாவது கூட இருங்க அண்ணி.."

அண்ணிக்காக சூழ்நிலைகளை அமைத்து கொடுத்தேன். அண்ணனிடமிருந்து தப்பிக்க அவளுக்கும் அது தானே வேண்டும்.

"தலைவலி பத்தியே நினைச்சுட்டு இருக்காம தூங்குடா.."

"சத்தியமா முடியல அண்ணி.."

யோசிப்பது போல என்னை பார்த்தாள்.

"பால் குடிக்குறியாடா.. குடிச்சா தூக்கம் வரும்னு சொல்வாங்க.."

"ஒகே அண்ணி.."

திரும்ப ரூமை விட்டு வெளியேறினாள் அண்ணி. 

மறுபடியும் அண்ணனின் கேள்விகள்.

"இப்ப எப்படிற்றி இருக்கான்?"

"தலைவலி அப்படியே இருக்குனு துடிச்சுட்டு இருக்கான்.. நீங்க கால் பண்ணி கேட்டிங்களா..?"

"ம்ம்.. அவன் தலைவலி ரொம்ப ஜாஸ்தியானா.. உடனே எமர்ஜென்சிக்கு கொண்டு வர சொல்றாங்கடி.. என்ன பண்ணலாம்?"

"பால் காய்ச்சி குடுத்து பாக்குறேன்ங்க.. ஒரு வேளை தூங்கினா தலைவலி போறதுக்கு சான்ஸ் இருக்குங்க.."

"சரிடி.. சீக்கிரமா ரெடி பண்ணு.."

அண்ணன் பெட்ரூமுக்குள் புகுந்து கொண்டான். அண்ணி கிச்சனுக்கு சென்று விட்டாள்.

அண்ணனை பற்றிய சிந்தனைகள் மேலோங்கியது. 

இதுவரைக்கும் அண்ணன் நல்லா தானே இருந்தான். மேரேஜ்க்கு அப்புறம் ஏன் இப்படி மாறிட்டான்? மார்னிங் என்கிட்ட 'அண்ணிய அழாம பாத்துகிறேனு' சொன்னான்.. இப்ப நைட் என்னடனா அண்ணிய டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான். 

இவன புரிஞ்சிக்கவே முடியலேயே.. ஒரு வேளை எதாவது மனநோயா இருக்குமா? அவங்க தான் அப்படி அப்நார்மலா பிஹேவ் பண்ணுவாங்கனு சொல்வாங்க.. ச்சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது.. இருக்க கூடாதுனு கடவுள வேண்டிக்குறத தவிர வழியில்ல..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் இரண்டு பால் டம்ளர்களோடு கிச்சனை விட்டு வந்தாள் அண்ணி.

முதலில் பெட்ரூமிலிருந்த அண்ணனுக்கு கொடுத்தாள் என்பதை பேச்சு குரல்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

"இந்தாங்க பால்.."

"என்னடி திடீர்னு..?"

"ரொம்ப டல்லா இருக்குறிங்க.. அதுக்கு தான்.."

"சரி..சரி.. சீக்கிரமா தம்பிக்கு கொடுத்துட்டு ரூமுக்கு வர வழிய பாருடி.. அவன் தூங்கற வரைக்கும் வெய்ட் பண்ணாத.."

"சரிங்க.."

அடுத்ததாக நான் இருக்கும் ரூமுக்கு ஒரு பால் டம்ளரோடு வந்தாள்.

"அண்ணி.. பால் குடிச்சு தான் ஆகனுமா..?"

"வெறும் வயித்துல தூங்குனா, தலை வலி அதிகமா சான்ஸ் இருக்கு.. சூடு ஆறத்துக்குள்ள குடிடா.."

"சரி.. குடுங்க அண்ணி.."

எழுந்து அமர்ந்து கொண்டேன்.

டம்ளரை வாங்கி மெதுவாக குடிக்க ஆரம்பித்தேன்.

பாதி குடித்ததும் சட்டென ஒரு யோசனை மனதில் ஓடியது.

"அண்ணி.. என் தலைவலி போறதுக்கு பால்ல தூக்க மாத்திர தானே கலந்து கொடுத்திருக்கிங்க..?"

"ஆமா.. பெருசா கண்டுபிடிச்சுட்டாரு.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.. வீணா கற்பனை பண்ணாம குடிச்சுட்டு டம்ளர காலி பண்ணுடான்னா.."

"நீங்க விஷம் கொடுத்தா கூட நா குடிக்க ரெடி அண்ணி.."

அண்ணியின் கவனம் ஈர்க்க.. வீர வசனம் பேசினேன்.

"அப்டியாடா.. இரு நாளைக்கு டீயில பேதி மாத்திரை கலந்து தர்றேன்.. சந்தோஷமா குடிக்கிறியா..?" கலகலவென சிரித்தாள்.

அச்சத்தில் உடனே மீதி பாலை ஒரே மடக்கில் குடித்து முடித்தேன்.

"ஒரு பேச்சு சொன்னா கூட சிரியஸா எடுத்துப்பிங்களா அண்ணி.."

என் கையிலிருந்த காலி டம்ளரை வாங்கி ரூமை விட்டு போக எத்தனித்த அண்ணியின் கையை பிடித்து தடுத்தேன்.

"ப்ளீஸ் அண்ணி.. கொஞ்ச நேரமாச்சும் கூட இருங்களேன்.. தலைவலி இன்னும் போகல அண்ணி.."

முடிந்த வரைக்கும் அண்ணியை தடுக்க பார்த்தேன்.

"டேய்.. ராஜா.. உங்க அண்ணன் எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காருடா.. நா வரலன்னா சத்தம் போடுவாரு.. நிம்மதியா தூங்கு.. காலையில பேசிக்கலாம்டா.."

அண்ணனுக்கு பயந்து கொண்டு இருந்தாள்.

"சாரி அண்ணி.. என் சுயநலத்துக்காக உங்கள டிஸ்டர்ப் பண்றேன் போல.. எதாச்சும் பிரச்சனைனா தயங்காம வந்து என்ன எழுப்புங்க.. உங்களுக்காக நா இருக்கேன்.. குட்நைட் அண்ணி.."

அண்ணியின் கையை விடுவித்து கொண்டு படுத்து கொண்டேன். லேசாக கண்கள் கலங்கிய அண்ணியை பார்க்க விரும்பாமல் கண்களை முடி கொண்டேன்.

"குட்நைட் ராஜா.."

என் ரூமின் விளக்கை அணைத்தவள்.. கதவை முடி விட்டு போய் விட்டாள்.

மனம் கனத்தது போயிருந்தது. கொஞ்ச நேரத்தில் அண்ணியின் அலறல் கதறல் சத்தங்களை கேட்க என் மனதுக்கு தெம்பு இல்லை. தலைவலி வேறு இடைவிடாமல் படுத்தி கொண்டிருந்தது.

எழுந்து போய் காட்டன் பஞ்சுகளை தேடியெடுத்து என் காது துளைகளில் பொருத்தி வைத்து படுத்து கொண்டேன். பெட்ஷிட்டை தலை வரை போர்த்தி கொண்டேன்.

இப்போது என்னால் தைரியமாக கண் கலங்க முடிந்தது. எதற்கு என் கண்களில் கண்ணீர் வந்தது என்றே எனக்கு தெரியவில்லை.

அண்ணியின் மேல் கொண்ட காதலா இல்லை அண்ணியின் மேல் வந்த இரக்கமா இல்லை அண்ணனுக்கு மட்டும் படுக்கை விரிக்கிறாள் என்ற ஏமாற்றமா? சரியான விடை கிடைக்காவிட்டாலும் இது காதலாக தான் இருக்க கூடும் என‌ முடிவு கட்டினேன்.

அண்ணியின் மேல் காமம் வந்த போது கூட நான் இவ்வாறு கண் கலங்கவில்லை. ஆர்பாரித்த மனதை அடக்கி கொண்டு அமைதியாக தூங்கி முயற்சித்தேன். முடியவில்லை. கண்கள் மட்டுமே முட முடிந்தது.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

ஒரு மென்மையான கை என் தோளை தட்டி எழுப்பியது.

"ராஜா.. தூங்கிட்டியாடா..?" அண்ணியின் குரல் சன்னமாக கேட்டது.

எழுப்புவது அண்ணியா? அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேர திரும்பி பார்த்தேன். இருட்டில் அண்ணியின் முகம் சரியாக தெரியவில்லை. என் காதுகளிலிருந்த பஞ்சை எடுத்து விட்டேன்.

"என்னாச்சு அண்ணி.. எதாச்சும் ப்ராப்ளமா?"

"அதேல்லாம் ஒண்ணுமில்லடா.. இப்ப உன் தலைவலி எப்படி இருக்கு..?"

"அப்படியே தான் அண்ணி இருக்கு.. நீங்க எங்க இப்படி? அண்ணன் பார்த்தா கோபப்பட போறாருங்க.."

"இல்ல.. அவரு தூங்கிட்டாரு.."

"அப்டியா.." ஆச்சர்யமாய் அண்ணியை பார்த்தேன்.

"ஏன் என்ன நம்பலையாடா..?"

"அதில்ல அண்ணி.. அவரு அவ்ளோ சீக்கிரமா தூங்குற ஆளில்லயே.. அதான்.."

"ஏன்னு தெரியலடா.. இன்னிக்கு அசதியல தூங்கிட்டாரு போல.. நீ தான் கூட இருன்னு என்ன கூப்பிட்டல.. அதான் அங்க இருக்க பிடிக்காம வந்துட்டேன்.. நா வந்தது உனக்கு ஒகே தானே.."

"ஏன் அண்ணி.. இப்படி கேக்குறிங்க..? நீங்க திரும்ப வந்தது எனக்கு டபுள் சந்தோஷம்.."

கதவை சாத்தினாள். ஜீரோ வாட்ஸ் லைட்டை போட்டாள். என் பக்கத்தில் அமர்ந்தாள்.

இரவின் தனியறையில் அண்ணியோடு இருக்கிறேன். அதுவும் அண்ணன் வேறு பக்கத்து ரூமில் இருக்கிறான். வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்த மாதிரி இருந்தது. அதே நேரத்தில் லேசாய் வியர்த்தும் கொட்டியது.

ஆனால் அண்ணி சாதாரணமாய் இருந்தாள்.

என் நெற்றியில் விரல்களை வைத்து வருடி விட்டாள்.

"ஏன்டா இன்னும் தூங்க மாட்ற..?"

"நீங்க கலந்து கொடுத்த தூக்க மாத்திரை இன்னும் வேல செய்யலையோ என்னமோ?"

"வர வர உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தியா போயிடுச்சுடா.."

"வாய்னு நீங்க சொன்னதும் ஞாபகம் வந்துடுச்சி.. உங்க உதட்ல எப்படிண்ணி அந்த காயம் வந்துச்சி.."

"அத பாத்தும்மா என்ன கேக்குற..? எல்லாம் உங்கண்ணன் பண்ண வேலைதான்.. உன் பேச்ச கேட்டு கிஸ் தான் கொடுக்க போறானு நம்பி உதட்டை கொடுத்தா.. கடிச்சு வச்சுட்டாரு.. எப்படி கன்னி போச்சுன்னு பாருடா..?"

"ஸோ சேட் அண்ணி.. அவன் இப்படி பண்ணுவானு நா நினைச்சு கூட பாக்கல.."

"காலையில நல்லதனமா இருக்காரு.. நைட்டு தான் இப்படி மூர்க்கமா மாறிடுறாரு.. ஏன்னு தான் புரியல.."

எழுந்து அமர்ந்து கொண்டேன்.

அண்ணியின் கன்னி போன உதட்டை உற்று பார்த்தேன். அண்ணி எதிர்பாராத நேரத்தில், அவள் உதட்டில்.. கன்னிப் போன அந்த இடத்தில்.. என் விரலால் தடவி விட்டேன்.

"ஏய்ய்.. என்ன பண்ற..?"

சிலிர்த்தாள் அண்ணி.

"தொட்டு பாக்கனும்னு தோணிச்சு.. அண்ணன் கடிச்சு பிறகு நிறைய வலிச்சுதா அண்ணி..?"

விரலை அவள் உதட்டிலிருந்து எடுத்து விட்டேன்.

"ம்ம்.. பயங்கரமா கத்திட்டேன்.. நீ மட்டும் தலைவலினு கத்தாம இருக்கலேன்னா.." பெருமூச்சு விட்டாள்.

"ஏன் அண்ணி அங்கேயே இருக்குறிங்க.. ரூம விட்டு வெளிய வந்துர வேண்டியது தானே..?"

"வெளிய போனா அடிப்பாருடா.. எங்க வீட்ல சொன்னா.. எங்கப்பா உங்கண்ணன உண்டு இல்லனு ஒரு வழி பண்ணிடுவாரு.. அதான் பொறுத்து போயிட்டு இருக்கேன்.."

"எனக்கென்னவோ அண்ணனுக்கு மனநோய் வந்துருக்குமோனு ஒரு ட்வுட் இருக்கு அண்ணி.. அவங்க தான் இப்படி அப்நார்மலா பிஹேவ் பண்ணுவாங்க.."

"என்னடா சொல்ற..?"

"டவுட்னு மட்டும் தான் சொன்னேன் அண்ணி.. போக போக தெரிஞ்சுடும்.."

"ரொம்ப தான் பயமுறுத்துற.. சரி, உனக்கு ஏன் இப்படி தலைவலி அடிக்கடி வருது..?"

"ஆக்ஸிடென்ட் ஆன பிறகு, ஜாஸ்தியாயிட்டே இருக்கு அண்ணி.. இதுக்கு முன்னாடி இப்படி வந்ததில்ல.."

"நா பேசிட்டே இருந்தா உனக்கு டிஸ்டர்ப்பா இருக்காடா..?"

"நீங்க என் பக்கத்துல இருந்தால.. பாதி தலைவலி போயிடுச்சு அண்ணி.."

"மீதி தலைவலி போகறதுக்கு என்னடா வழி..?"

"தெரியலியே அண்ணி.."

"சரி.. முதல்ல படு.."

படுத்து கொண்டேன். படபடப்பாக இருந்தது.

"கண்ண நல்லா முடிக்கோ.." கண்களை முடி கொண்டேன்.

என் முகத்தை நோக்கி குனிந்தாள். அவள் வாசனை நெருங்க.. நெருங்க.. படபடப்பு இன்னும் அதிகமாகியது.

என் நெற்றியில் தன் இதழ்கள் பதித்து மென்மையாக முத்தம் கொடுத்தாள். அவள் தாடை என் முக்கில் உரசியது.

உடல் முழுவதும் ஜிவ்வென இருந்தது. அண்ணியின் முதல் முத்தமல்லவா இது?

நிமிர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தாள்.

"இப்ப ஒகேவா..?"

"ம்ம்.. ஆனா மயக்கமா இருக்கு அண்ணி.."

"ஏய்ய்.. என்னடா சொல்ற?"

"தலைவலி போயிடுச்சு.. ஆனா மயக்கம் வர மாதிரி இருக்கு அண்ணி.. ப்பா.. உங்க முத்தம் செம ஸ்ட்ராங் அண்ணி.. அப்படியே ஜெயின்ட் வீல் ராட்டினத்துல கீழே இறங்குற மாதிரி ஒரு பீலிங்.."

சீலிங் பேனை பார்த்தபடி உற்சாகமாக பேசி கொண்டிருந்த என் மார்பில் செல்லமாய் குத்தினாள்.

"ராஸ்கல்.. அண்ணிகிட்ட இப்படியா பேசுறது? நா கொடுத்தது மருத்துவ முத்தம்.. கேள்விபட்டதில்லயாடா..? ஓவரா யோசிக்காத.. படுத்து தூங்கு.."

"எப்ப தலைவலி வந்தாலும்.. முத்தம் கொடுப்பிங்களா அண்ணி.. அதான் மருத்துவ முத்தம் தருவிங்களானு கேட்டேன்..?"

"உனக்கு போய் முத்தம் கொடுத்தேன் பாரு.. முடிட்டு படுற்றானா.."

"எனக்கு தலைவலி போயிடுச்சு.. கூடவே தூக்கமும் போச்சு.. உங்க முத்தம் சான்ஸே இல்ல அண்ணி.. பூ மாதிரி இருக்குது உங்க லிப்ஸ்.. கேர்புஃல்லா ஹேண்டில் பண்ண வேண்டிய உங்க லிப்ஸ போய்.. முரட்டுத்தனமா கடிச்சு.. ச்சே.. அண்ணனுக்கு ரசனையே இல்ல அண்ணி.."

கொஞ்சம் வெட்கப்பட்டாலும்.. கூடவே லேசான கோபத்தை வரவழைத்து கொண்டாள்.

"அதுக்குனு என் புருஷன பத்தி தப்பா சொல்லாதடா.. ஆயிரம் இருந்தாலும் அவரு எனக்கு புருஷன்.."

"க்ரெக்ட் தான் அண்ணி.. இப்ப கூட அண்ணன தப்பா சொல்லல அண்ணி.. அவன் செய்ஞ்சது தான் தப்புன்னு சொல்லிட்டு இருக்கேன்.. நான் மட்டும் எங்கண்ணன் இடத்துல இருந்தேனா.. நடக்குறதே வேற.. உங்கள ரொமான்டிக்ல நனைய விட்டுருப்பேன்.."

கண்கள் விரிய என்னை பார்த்தாள்‌. நா சொன்னதை விரும்பியது போல இருந்தது அவள் முகம்.

"சும்மா வாய்ல வடை சுடாத.. ஷாலு உனக்கு முத்தம் கொடுக்கும் போது.. பதிலுக்கு ஒண்ணுமே செய்யாம ஜடம் போல நின்னுட்டு இருந்தவன் தானே நீ.."

சீண்டி பார்த்தாள் அண்ணி.

"சரி அண்ணி.. அண்ணன் இடத்துலே நா இருந்தா.. என்ன பண்ணுவேனு சாம்பிள் காட்டுறேன்.. நீங்க ரெடியா இருக்கிங்களா..?" சவால் விட்டேன்.

"இரு.. இருற்றா.. கொஞ்சம் டயம் கொடுடா.."

அண்ணியை தின்று விடுவது போல பார்த்தேன்.

கண்களில் ஆச்சர்யமும் பயமும் கலந்து என்னை பார்த்தாள் அண்ணி.
Like Reply


Messages In This Thread
RE: அமுதா - இளம் அண்ணி - by Solosingam - 07-07-2026, 03:34 PM



Users browsing this thread: 7 Guest(s)