♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
Episode - 181 தொடர்ச்சி...


அதே நேரத்தில், அந்த அறையிலிருந்து இடைவிடாமல் கசிந்து கொண்டிருந்த அமானுஷ்ய இசைக்கருவிகளின் ராகமும், திரைச்சீலைக்குள்ளிருந்து வெளிவந்த அனுவின் மெல்லிய காம முனகல் சத்தமும், பக்கத்து அறையில் காம ஜுரத்தில் தவித்துக் கொண்டிருந்த பிரியங்காவை காந்தம் போல இந்த அறையை நோக்கி ஈர்த்து வந்தன. ஒருவித மயக்கத்தோடும் பயத்தோடும் மெல்லத் தன் காலடிகளை எடுத்து வைத்த பிரியங்கா, அந்த அறையின் வாசலுக்கு வந்து பார்த்தாள்.

அங்கே காற்றில் அசைந்து கொண்டிருந்த அந்தப் பெரிய திரைச்சீலைக்குள் முதலில் அவளுக்கு ஒரே ஒரு அமானுஷ்ய உருவம் மட்டுமே இருப்பது போலத் தெரிந்தது. அந்த அளவுக்குக் காத்தவராயனும் அனுவும் ஒருவரோடு ஒருவர் எவ்வித இடைவெளியுமின்றி, ஆழமாகப் பின்னிப் பிணைந்து நின்றிருந்தனர். ஆனால், அந்தத் திரைச்சீலைக்குள்ளிருந்து "சப்... சப்..." என இதழ்கள் ஒன்றோடொன்று இணையும் தீவிரமான முத்தச் சத்தமும், மூச்சுத் திணறலின் ஒலியும் அவளுக்குக் கேட்டது. அந்தச் சத்தத்தை வைத்து பிரியங்கா தன் கண்களைச் சுருக்கி, உற்று நோக்கினாள். அப்போதுதான் அந்தத் திரைச்சீலைக்குள் இருப்பது ஒரு உருவமல்ல, இரண்டு உடல்கள் ஒன்றோடொன்று அலாதியாகக் கலந்து கிடக்கும் இரு உருவங்கள் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவளது நெஞ்சு படபடப்புடன் இன்னும் வேகமாக அடிக்கத் தொடங்கியது.

காற்றில் மிதந்து கொண்டிருந்த அந்தப் பட்டுத் திரைச்சீலை, மெல்ல மெல்ல நழுவித் தரைநோக்கி இறங்கிய அந்த விநாடியில், முதலில் பிரியங்காவின் கண்களுக்குத் தெரிந்தது அந்த ஆணின் முகம்தான். கூர்மையான மூக்கு, அடர்ந்த தலைமுடி, காம வெறி ஏறிய அந்த முகம்... அது சில மணி நேரங்களுக்கு முன்பு தன் மேனியில் காம விளையாட்டை விளையாடித் தன்னைத் தவிக்கவிட்ட அதே காத்தவராயன் தான் என்பதைப் பிரியங்கா நொடியில் புரிந்து கொண்டாள்.

ஆனால், அவனது அணைப்பில் மயங்கி இருந்த அந்தப் பெண்ணின் முகம் மட்டும் இன்னும் அவளுக்குப் புலப்படவில்லை. அவனது அகன்ற தோள்களும், அவன் நெருக்கமாகச் சாய்ந்திருந்த தோற்றமும், அந்த உருவத்தை முழுவதுமாக மறைத்திருந்தன.

"யார் அவள்...?"

அந்தக் கேள்வி மின்னலைப் போலப் பிரியங்காவின் மனதில் பாய்ந்தது. அவளது மூச்சு கனத்தது. இதயம் வேகமாகத் துடித்தது. பயமா... பொறாமையா... இல்லை, உண்மையை அறிந்தே ஆக வேண்டும் என்ற தவிப்பா... என்று பிரித்தறிய முடியாத உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகக் கலந்து அவளது நெஞ்சில் கொந்தளித்தன.

திரைச்சீலை இன்னும் கொஞ்சம் கீழிறங்கியது. பிரியங்காவின் பார்வை, அந்த மர்மப் பெண்ணின் முகத்தைப் பார்க்கும் ஏக்கத்தில் இமைக்க மறந்து உறைந்து நின்றது. அடுத்த சில நொடிகளில் தான் காணப் போகும் உண்மை, தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதை அவள் அப்போது இன்னும் அறிந்திருக்கவில்லை.

அந்த நேரத்தில், காத்தவராயன் தன் முகத்தை லேசாகப் பக்கவாட்டில் சாய்த்தான். அந்த ஒரு சிறிய அசைவே, இதுவரை அவனது தோள்களுக்குப் பின்னால் மறைந்திருந்த அந்தப் பெண்ணின் முகத்தை மெல்ல மெல்ல பிரியங்காவின் பார்வைக்கு வெளிப்படுத்தத் தொடங்கியது.

அந்தப் பெண் கண்களை அரைகுறையாக மூடியபடி,காமக் கிறக்கத்தின் உச்சத்தில், அந்த முத்தத்தின் சுகத்தில் முற்றிலும் லயித்துப் போயிருப்பதை பிரியங்கா பார்த்தா.அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகளைப் பார்த்த பிரியங்காவிற்கு, சொல்ல முடியாத ஒரு பதற்றம் நெஞ்சை ஆட்கொண்டது.

ஆனால், அடுத்த நொடியே அவளது பார்வை அந்தப் பெண்ணின் கண்களில் நிலைத்தது.

"இல்லை... இது முடியாது..."

மனதிற்குள் ஏதோ ஒன்று எச்சரிக்கை மணி அடித்தது. அந்தக் கண்கள்... அந்தப் புருவ வளைவு... அவை எங்கோ பார்த்தவை. மிகவும் நெருக்கமாக, மிகவும் பழக்கமாகத் தோன்றின.

காத்தவராயன் சற்றே விலகியதும், அந்தப் பெண்ணின் மூக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. அந்த நேர்த்தியான வடிவம் பிரியங்காவின் இதயத் துடிப்பை இன்னும் வேகப்படுத்தியது.

"இது... யாருடைய முகம்...?"

அவளது மனம் பதிலைத் தேடி திணறியது. ஒவ்வொரு கணமும் அந்த முகம் மேலும் மேலும் தெளிவாக வெளிப்பட, ஏதோ நம்ப முடியாத உண்மை தன்னை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதை பிரியங்கா உணர்ந்தாள். அவளது பார்வை அந்த முகத்தை விட்டு ஒரு கணம் கூட விலகவில்லை.

அவன் இன்னும் கீழே இறங்க இறங்க... அவளது முகத்தின் முக்கால்வாசிப் பகுதி வெளிப்பட்டது. அதே பளபளக்கும் அதே கன்னங்கள், அதே அழகிய தலைமுடி வரிசை... காத்தவராயன் அவளது முகத்தைக் கடந்து இன்னும் கீழே குனிந்து, அவளது மென்மையான கழுத்தில் தன் முகத்தைப் புதைத்து முத்தமிட்டான். இப்போது அவளது செக்கச்சிவந்த இதழ்கள் அப்பட்டமாகத் தெரிந்தன. காத்தவராயனின் உதடுகள் விலகினாலும், அவனது முத்தத்தின் சூடு தாங்காமல் அந்த இதழ்கள் இன்னும் காமத்தில் துடித்துக் கொண்டிருப்பது பிரியங்காவின் கண்களில் விழுந்தது.
பிரியங்காவின் நெஞ்சு அப்படியே நின்றுவிடுவது போல இருந்தது.

"அது வேறு யாரும் இல்லை... அவளே.

காத்தவராயனின் அணைப்பில் கிறங்கிக் கிடந்தது, பிரியங்காவின் சொந்த உருவம்தான்."

[Image: b2564185e89f2de8c3aea84818c824cc.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Geneliarasigan - 28-06-2026, 10:56 PM



Users browsing this thread: