20-06-2026, 06:13 PM
(19-06-2026, 10:12 PM)Kokko Munivar 2.0 Wrote: பழைய மாதிரி கதைகளும் , கதை ஆசிரியர்களும் இனிமேல் கிடைக்கிறது கஷ்டம் நண்பா...நீங்க சொல்வது முற்றிலும் உண்மை நண்பா... இது போல துரோகம் எல்லா இடங்களிலும்தான் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது....எங்களை போல புதிய வாசகர்கள் மற்ற தளங்களை பார்ப்பதில்லை... எங்கே இதுபோல் நடக்கிறது என்று தெரிந்தால் நாங்கள் அவர்களிடம் கேள்வி கேட்போம்...நீங்கள் எதற்கும் கவலை படாதீர்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வாழ்வது சில காலம் தான் அதுவும் மகிழ்ச்சியாக இருப்பது மிக மிக குறைவு...எனவே உங்களது தொண்டை ஆற்றி அனைவரையும் மகிழ்ச்சிகடலில் மூழ்கிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
நான் கதை எழுதுறது மட்டுமில்லாம மற்ற நல்ல கதைகள் எழுதும் எழுத்தாளரையும் ஊக்குவிக்குற ஆள் தான். நல்ல கதைகளை ஆர்வமா படிப்பேன். கமெண்ட் பண்ணுவேன்.. சில கதை ஆசிரியர்களுக்கு இன்பாக்ஸில் சென்று வாழ்த்து சொல்லுவேன்.. என்னுடைய சில யோசனைகளையும் சொல்லுவேன்..
முன்னாடியெல்லாம் ஒரு கமெண்ட்டை அடிக்கடி பார்க்க முடிஞ்சது.. அது என்ன கமெண்ட்னா..
"" கதை எழுதுறவங்க எல்லாம் தன்னைய பெரிய கடவுள் மாதிரி நெனச்சுக்கிறாங்க... கதைக்கு ஒழுங்கா அப்டேட் போடுறது இல்ல.. கெஞ்ச வேண்டியதா இருக்கு... கதையை ஆரம்பிச்சு ஒழுங்கா முடிக்கிறது இல்ல.. "" இப்படியெல்லாம் அதிகமான கமெண்ட்டை பார்த்திருக்கேன்..
எந்த ஆசிரியரும் தன்னைய கடவுள்னு நினைக்கிறது இல்ல.. கதையை எழுத ஆரம்பிக்கிறப்போ பாதியில நிறுத்தனும்னு நினைச்சு ஆரம்பிக்கிறதும் இல்ல.. சந்தர்ப்பம் சூழ்நிலை தான் கதையை முடிக்காமல் போறதுக்கு காரணம்..
அதுமட்டுமில்லாமல் மேல நான் சொன்ன மாதிரி வாசகர் சப்போர்ட் இல்லாதனாலயும் கதைகள் பாதியில் நின்றுவிடுகிறது..
சோசியா மீடியாவில் Subscription வசதி மூலம் creators சம்பாதிக்கிற மாதிரி இங்கேயும் அந்த வசதியை கொண்டு வந்தால் மீண்டும் அதிகமான எழுத்தாளர்களையும் , புதிய கதைகளையும் பார்க்க வாய்ப்பிருக்கிறது.. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.. ஒரு விசயத்தை உருவாக்குறவங்களுக்கு அதனால எதாவது ஆதாயம் கிடைக்கனும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)