20-06-2026, 05:03 PM
(This post was last modified: 01-07-2026, 08:54 AM by imstpd. Edited 2 times in total. Edited 2 times in total.)
2
"மீராவா அது?" என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான்
வண்டி மறைந்து விட்டது. எதிர்ச்சாலை காலியாக இருந்தது.
பா…..ம்ப்..
பின்னாலிருந்த பேருந்தின் ஹாரன் அலறியது..
சிக்னல் மாறிவிட்டது போல..
வண்டி தன்னிச்சையாக மீராவின் அலுவலகம் நோக்கிச் சென்றது..
ஆனால் அதன் வேகம் வடிந்துவிட்டது..
அலுவலகத்துக்கு வெளியே இருந்த பேருந்து நிறுத்தத்தில் மீரா இல்லை..
வண்டியை ஓரங்கட்டி அங்கிருந்த ஆவின் டீக்கடை அருகில் நிறுத்தினான்..
ஸ்டிராங்கா ஒரு டீ..
சொல்லிவிட்டு கடையின் கூரைக்குள் ஒதுங்கினான்..
"அந்த பெண் மீராவா?"
"அவள் வேறு யாராவது இருக்கலாமே?"
"ஆனால் அதே சேலை..."
அதே ஒல்லியான உடல்வாகு..
கூந்தல் கூட ஒரு அரையடி நீளத்தில் தான் அலைபாய்ந்தது…
“சார் டீ”..
டம்ளரை எடுத்துக்கொண்டான்..
அவள் ஏன் வேறு ஒருவனுடன் செல்கிறாள்? எனக்கு தெரியாத நண்பரா?"
"அவள் சிரித்தாளா? இல்லையா?"
"அவள் சாய்ந்திருந்தாளா? இல்லையா?"
டீ உள்ளே செல்லச்செல்ல சற்று நிதானமானான்.. அவன் மனம் அமைதியடையத் தொடங்கியது.
"நான் நல்லவனாக இருந்தால், இந்த உலகும் எனக்கு நல்லதே செய்யும்"
"மீரா என்னை நேசிக்கிறாள். அது எனக்கு தெரியும். மூன்று மாதங்களில் அவள் எனக்காக செய்த விஷயங்கள் பல. அன்பும் அக்கறையும் நிஜம்.. பொய்யா இருக்க முடியாது."
"ஒரு வேளை அந்த வண்டியில் இருந்த பெண் மீரா இல்லாமல் வேறு யாராவது இருக்கலாம். அதே சேலை, அதே போன்ற கூந்தல் உடைய வேறு ஒரு பெண் இந்த ஊரில் இருக்க மாட்டாளா?"
மீராவாக இருந்தால் தான் என்ன? யாரோ தெரிந்தவருடன் செல்கிறாள்..பேருந்தில் கசங்கி வருவதை விட, தெரிந்தவருடன் பைக்கில் சென்றால் நல்லதுதானே.. சந்தேகப்பட என்ன இருக்கிறது..
படிப்படியாக அவனுக்குள் ஒரு நம்பிக்கை வந்தது.
ஒரு அரை லிட்டர் பால், தயிர் பாக்கெட் வாங்கிக்கொண்டு ஜி-பே செய்தான்.
மீராவின் நம்பரை அழைத்தான். அவள் மறு முனையில் பதில் சொன்னாள்.
"ஹலோ கிருஷ்?"
"மீரா, ஆபீஸ் முடிஞ்சுடுச்சா? நான் உன்னை பிக்கப் செய்ய வருகிறேன்" என்றான்.
"நான் சீக்கிரமாவே கிளம்பிட்டேன்.. வீட்டிற்கு பக்கத்துல வந்துட்டேன்..இன்னும் ஒரு நிமிசம் தான் வீடு வந்துடும்.." என்றாள் அவள்.
வண்டிச்சத்தம்.. போக்குவரத்து ஒலி.. காற்றின் இரைச்சல்.. அவள் குரலுடன் கலந்து கேட்டது..
அவள் குரலில் எந்த பதட்டமும் இல்லை. சாதாரணமாக, இயல்பாக பேசினாள். கிருஷ்னணின் இதயம் சற்று வேகமாக துடித்தது.
"நீங்க என்ன சீக்கிரமே கிளம்பிட்டிங்களா?"
"உன்னை பிக்கப் செய்யத்தான் கிளம்பினேன். நீ முன்னால் போய் கொண்டே இரு, நானும் வந்துடறேன்.." என்று சொல்லி போனை வைத்தான்.
அவன் முகத்தில் ஒரு புன்னகை. அவள் வீட்டிற்குத்தான் செல்கிறாள். சந்தேகம் வேண்டாம். காலையில் இருந்த கோபமும் குரலில் இல்லை..
நிம்மதியாக இருந்தது..நல்லதே நடக்கும் என நம்பினான்..
ஆனால் உலகம் என்றைக்கு நல்லவனுக்கு நல்லதே நொட்டியிருக்கிறது..
"மீராவா அது?" என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான்
வண்டி மறைந்து விட்டது. எதிர்ச்சாலை காலியாக இருந்தது.
பா…..ம்ப்..
பின்னாலிருந்த பேருந்தின் ஹாரன் அலறியது..
சிக்னல் மாறிவிட்டது போல..
வண்டி தன்னிச்சையாக மீராவின் அலுவலகம் நோக்கிச் சென்றது..
ஆனால் அதன் வேகம் வடிந்துவிட்டது..
அலுவலகத்துக்கு வெளியே இருந்த பேருந்து நிறுத்தத்தில் மீரா இல்லை..
வண்டியை ஓரங்கட்டி அங்கிருந்த ஆவின் டீக்கடை அருகில் நிறுத்தினான்..
ஸ்டிராங்கா ஒரு டீ..
சொல்லிவிட்டு கடையின் கூரைக்குள் ஒதுங்கினான்..
"அந்த பெண் மீராவா?"
"அவள் வேறு யாராவது இருக்கலாமே?"
"ஆனால் அதே சேலை..."
அதே ஒல்லியான உடல்வாகு..
கூந்தல் கூட ஒரு அரையடி நீளத்தில் தான் அலைபாய்ந்தது…
“சார் டீ”..
டம்ளரை எடுத்துக்கொண்டான்..
அவள் ஏன் வேறு ஒருவனுடன் செல்கிறாள்? எனக்கு தெரியாத நண்பரா?"
"அவள் சிரித்தாளா? இல்லையா?"
"அவள் சாய்ந்திருந்தாளா? இல்லையா?"
டீ உள்ளே செல்லச்செல்ல சற்று நிதானமானான்.. அவன் மனம் அமைதியடையத் தொடங்கியது.
"நான் நல்லவனாக இருந்தால், இந்த உலகும் எனக்கு நல்லதே செய்யும்"
"மீரா என்னை நேசிக்கிறாள். அது எனக்கு தெரியும். மூன்று மாதங்களில் அவள் எனக்காக செய்த விஷயங்கள் பல. அன்பும் அக்கறையும் நிஜம்.. பொய்யா இருக்க முடியாது."
"ஒரு வேளை அந்த வண்டியில் இருந்த பெண் மீரா இல்லாமல் வேறு யாராவது இருக்கலாம். அதே சேலை, அதே போன்ற கூந்தல் உடைய வேறு ஒரு பெண் இந்த ஊரில் இருக்க மாட்டாளா?"
மீராவாக இருந்தால் தான் என்ன? யாரோ தெரிந்தவருடன் செல்கிறாள்..பேருந்தில் கசங்கி வருவதை விட, தெரிந்தவருடன் பைக்கில் சென்றால் நல்லதுதானே.. சந்தேகப்பட என்ன இருக்கிறது..
படிப்படியாக அவனுக்குள் ஒரு நம்பிக்கை வந்தது.
ஒரு அரை லிட்டர் பால், தயிர் பாக்கெட் வாங்கிக்கொண்டு ஜி-பே செய்தான்.
மீராவின் நம்பரை அழைத்தான். அவள் மறு முனையில் பதில் சொன்னாள்.
"ஹலோ கிருஷ்?"
"மீரா, ஆபீஸ் முடிஞ்சுடுச்சா? நான் உன்னை பிக்கப் செய்ய வருகிறேன்" என்றான்.
"நான் சீக்கிரமாவே கிளம்பிட்டேன்.. வீட்டிற்கு பக்கத்துல வந்துட்டேன்..இன்னும் ஒரு நிமிசம் தான் வீடு வந்துடும்.." என்றாள் அவள்.
வண்டிச்சத்தம்.. போக்குவரத்து ஒலி.. காற்றின் இரைச்சல்.. அவள் குரலுடன் கலந்து கேட்டது..
அவள் குரலில் எந்த பதட்டமும் இல்லை. சாதாரணமாக, இயல்பாக பேசினாள். கிருஷ்னணின் இதயம் சற்று வேகமாக துடித்தது.
"நீங்க என்ன சீக்கிரமே கிளம்பிட்டிங்களா?"
"உன்னை பிக்கப் செய்யத்தான் கிளம்பினேன். நீ முன்னால் போய் கொண்டே இரு, நானும் வந்துடறேன்.." என்று சொல்லி போனை வைத்தான்.
அவன் முகத்தில் ஒரு புன்னகை. அவள் வீட்டிற்குத்தான் செல்கிறாள். சந்தேகம் வேண்டாம். காலையில் இருந்த கோபமும் குரலில் இல்லை..
நிம்மதியாக இருந்தது..நல்லதே நடக்கும் என நம்பினான்..
ஆனால் உலகம் என்றைக்கு நல்லவனுக்கு நல்லதே நொட்டியிருக்கிறது..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)