20-06-2026, 01:34 PM
(This post was last modified: 20-06-2026, 01:38 PM by Lust king 66. Edited 2 times in total. Edited 2 times in total.)
![[Image: ec1e946c018ab1ac198a48d3a48d6878.jpg]](https://i.pinimg.com/736x/ec/1e/94/ec1e946c018ab1ac198a48d3a48d6878.jpg)
பூரணி...
பனித்துளி படிந்த தாமரை இதழ் நீ,
கவிஞனின் கையில் சிக்காத மர்மம் நீ!
மை தீட்டிய விழிகள் பேசும் மௌனம்,
காவியத்தின் வரிகள் சொல்லும் ஞானம்.
நாசியில் மின்னும் சிறு வைரமாய்,
இதழ் ஓரத்தில் படர்ந்த மென் புன்னகையாய்,
எழுத்தாணிக்கு எட்டாத பேரழகே,
என் கனவுக்குள் புகுந்த மெல்லினமே!
காலம் உறைந்த இந்த ஒற்றைப் பார்வையில்,
யுகம் கடந்த காதலின் ரகசியம் புதைந்து கிடக்குமோ?
செந்தாமரை மொட்டொன்றை
செவ்விதழ்கள் உரசும் வேளை...
பூ மலரும் முன்னே,
உன் மென்புன்னகையில் மலர்கிறதடி புதுக்கவிதை!
மை தீட்டிய காந்த விழிகளில்
பிரபஞ்சத்தின் அழகெல்லாம் சுருங்கிப் போக,
நெற்றி நிலவில் வீற்றிருக்கும் கரும்பொட்டும்
என் பேனாவிற்கு மையோவியம் தீட்டுகிறது!
மின்னும் மூக்குத்தியின் ஒளியில்
தடம் மாறுகிறது என் சிந்தனை...
பார்வையை சிறைபிடிக்கும் தேவதையே,
நீயோ வார்த்தைகள் ஏதுமின்றி
உன் ஒற்றைப் பார்வையாலேயே
ஓர் அழகிய காவியம் படைக்கிறாய்!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)