Adultery நண்பர்கள் இணைந்த புள்ளி (Nanbargal Inaintha Pulli)
#8
அத்தியாயம் - 1





மனிதர்கள் எல்லோருக்கும் இங்கு இரண்டு வாழ்க்கை தான் இரண்டு முகங்கள் தான். ஒன்று சமூக வாழ்க்கை....மற்றொன்று தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை...இதில் சமூக வாழ்க்கை எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும்...தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை என்பது ரகசியமானது...யாருக்கும் தெரியாதது....இப்படி எல்லோருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. மற்றவர்க்கு தெரியாத அந்த அந்தரங்க வாழ்க்கை என்பது சமூக நடைமுறைகளை உடைப்பதாக இருக்கலாம்...ஆனால் அரசின் சட்டங்களை உடைப்பதாகவோ அடுத்த மனிதர்களை துன்புருத்துவதாகவோ இருக்கக் கூடாது.


[Image: tYZcUCk4_o.jpg]


அப்படிப்பட்டவன் தான் இந்த புகழ் என்பவன்...எல்லோரைப் போலவும் இரண்டு முகங்கள் கொண்டவன்...ஒன்று போட்டோகிராபி மற்றும் மீடியாவை தொழிலாக கொண்டவன்....இதனால் அவ்வப்போது ஊர் சுற்றுபவன். இதில் எல்லோரும் புகழும் திறமை வாயந்தவன்தான்...இதைத்தவிர பாடல் ஆடல் போன்றவற்றிலும் ஆர்வம் உள்ளவன். விற்பனை தொழிலும் செய்யத் தெரிந்தவன். உலக வரலாறுகளும் உலக அறிவும் உள்ளவன். தன் உடலையும் மனதையும் பயிற்சி செய்து எப்போதும் பலமாக வைத்திருப்பவன். இதுபோல் பன்முகத்தன்மை உள்ள ஒருவன்தான் இந்த புகழ். கோவையில் வாழ்பவன். திருமணமானவன் தான் ஆனால் இந்த கதை ஓட்டத்தில் அவனுடைய மனைவியின் பங்கு எங்கும் இல்லாததால் அவளைப்பற்றிய விளக்கம் இங்கு தவிர்க்கப்படுகிறது. தன்னுடைய இன்னொரு முகமான அந்தரங்க விசயத்தில் இவன் யாருக்கும் அடுத்த மனிதர்களுக்கு தொந்தரவான மனிதன் அல்ல...ஆனால் தன் ஆசைகளையெல்லாம் தீர்த்துக் கொள்ள நினைக்கும் ஒரு மனிதன். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவன். அடுத்தவர்களுக்கு துன்பம் தராமல் வாழ்க்கையை எப்படி வேண்டுமாலும் வாழலாம் என்று வாழ்பவன். அந்தரங்கம் என்பதில் முதலிடம் பிடிப்பது காமம் தான்...அதிலும் இவன் இதே விசயத்தை தான் கடைப்பிடிக்கிறான்...



இந்த நவீன யுகத்தில் எல்லோருக்கும் சமூக வலைதள கணக்குள் எல்லா ஆப்களிலும் இருக்கும். அதில் பெரும்பாலானோருக்கு இரண்டு கணக்குகள் இருக்கும். ஒன்று எல்லோருக்கும் தெரிந்த பொதுவான ஒரு கணக்கு. மற்றொன்று தனிப்பட்ட சுய முகம் காட்டாத, தன் அந்தரங்க உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கும் ரகசிய இரண்டாவது கணக்கு. அடுத்தவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அளவு இந்த இரண்டாம் கணக்குகள் இருந்தால் நல்லது. அப்படித்தான் புகழுக்கும் வலைத்தளங்களில் தன் அந்தரங்க விருப்பங்களை வெளிப்படுத்த முகம் காட்டா கணக்கை இவனும் வைத்திருந்தான். 



அதில் இவன் தன்னுடைய ரகசிய ஆசைகள் சம்பந்தப்பட்டவைகளை கவிதைகளாகவும் மீம்ஸாகவும் அழகான புகைப்படங்களாகவும் பதிவேற்றுவான். அது ரசிக்கும்படி எதார்த்தமாக இருக்கும். இது போன்ற கணக்குகளில் தன்னைப்போலவே ஒத்த சிந்தனை உடைய நபர்களுடைய தொடர்பு கிடைப்பது எளிது. அவ்வாறு பல தொடர்புகள் இவனுக்கு இங்கு கிடைத்தது. அதில் சிலது தான் நெருக்கமாக நட்பாக அமையும். 



 அப்படித்தான் ஜெயனும் புகழுக்கு அறிமுகம். ஜெயன் நன்கு உயர்கல்வி படித்த உலக அறிவுள்ள மனிதன். அதைத்தவிர அதிக வாசிப்பு பழக்கமும் உள்ளவன். அதே நேரம் பலருக்கு வேலை தந்து கொண்டிருக்கும் நல்ல திறமையான பிஸினஸ் மேன். தொழில் சம்பந்தமாக அடிக்கடி வெவ்வேறு ஊர்கள் சுற்றுபவன். நல்ல மனிதன். திருநெல்வேலியை ஊராக கொண்டவன் தற்போது இருப்பது பெங்களூரில். இவனும் புகழைப் போலவே உலக வரலாறுகளும் உலக அறிவும் அதிகமாக உள்ளவன். இவர்கள் இருவரும் நண்பர்களாக மாறுவதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும் இந்த காரணமும் முக்கியமானதாக இருக்கலாம். "கற்றோரை கற்றோரே காமுருவர்" என்பதைப் போல.  இருவருமே உலகின் ஆதி அந்த தேடல் அதிகமாக உள்ளவர்கள். காமம் உள்பட....


[Image: pRC6D3lp_o.jpg]


வீணா ஜெயனுடைய மனைவி கணவனைவிட அதிகமாகப் படித்தவள். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடமெடுக்கும் ஆசிரியை. மாணவர்களிடத்திலும் சமுதாயத்திலும் நன்மதிப்பை பெற்றவள். நல்ல குணங்கள் உடைய படித்த குடும்பத்துப் பெண். இவர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லும் தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார்கள். ஊரில் எல்லோராலும் மதிக்கப்படகூடிய அழகான அமைதியான குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். ஜெயனின் அம்மாவும் அப்பாவும் தனி வீட்டிலிக்க இவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களை பார்த்துக் கொள்ளும் அளவு ஆதரவாக அவர்களை கவனிப்பவர்கள். 



முன்பு சொன்னதைப்போல புகழ் சமூக வலைத்தளங்களில் இரண்டாம் கணக்கு வைத்திருப்பதைப்போலவே ஜெயனும் வைத்திருந்தான். அதில்தான் ஜெயன் புகழுக்கு அறிமுகமானான். புகழுடைய கவிதைகளுக்கும் புகைப்படங்களுக்கும் ஜெயன் மிகப்பெரிய ரசிகனாக மாறிப்போனான். அந்த பதிவுகளில் இலை மறை காயாகவும் சில சமயம் நேரடியாகவும் இருக்கும் அந்தரங்க விசயங்கள் சார்ந்த எதாரத்தமான கருத்துக்களும் விஷயங்களும் ஜெயனுக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் புகழ் எதார்த்தமான மனித மனங்களுக்குள் குறிப்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்கள் மனதில் உண்டான உண்மையான உணர்வுகளை அதில் கொட்டியிருந்தான். இப்படிப்பட்ட பதிவுகளாலும் உண்மையான உணர்வுகளாலும் ஜெயன் புகழை நோக்கி இயல்பாக ஈர்க்கப்பட்டு அவனுடைய தீவிரமான ரசிகனாக ஜெயன் மாறிப் போனான்.



நாளடைவில் இருவரும் தனிப்பட்டு தங்கள் உணர்வுகளை ச்சேட் செய்ய ஆரம்பித்தார்கள்....




நட்பு தொடரும்....
[+] 1 user Likes Manmadhaa's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பர்கள் இணைந்த புள்ளி (Nanbargal Inaintha Pulli) - by Manmadhaa - 8 hours ago



Users browsing this thread: 1 Guest(s)