10-06-2026, 07:51 PM
(This post was last modified: 10-06-2026, 07:59 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Episode - 176 தொடர்ச்சி
படகு கரையை நெருங்க நெருங்க, தீப்பந்தங்களின் சிவந்த வெளிச்சத்தில் அந்தத் தீவின் கோர முகம் இன்னும் அப்பட்டமாகத் தெரிந்தது.
அங்கே... அவனுக்காக அந்தத் தீவின் மொத்தக் கூட்டமும் தயாராகக் காத்துக்கொண்டிருந்தது! அவர்களின் கறுத்த உடல்களில் தீப்பந்தங்களின் வெளிச்சம் பட்டுப் பளபளத்தது. கைகளில் விஷ அம்புகள் பூட்டப்பட்ட வில்லுகள், கூர்மையான ஈட்டிகள், கற்கள் எனப் பயங்கரமான ஆயுதங்களுடன் அவர்கள் நின்றிருந்தனர்.
ஒவ்வொருவரின் கண்களிலும் நாகரிக மனிதர்கள் மீதான மரண வெறியும், வன்மமும் அனலாகத் தெறித்தன. தங்களின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அந்த ஒற்றை மனிதனைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதற்காக, அவர்கள் நாக்கைக் கடித்துக்கொண்டு, விசித்திரமான ஒலிகளை எழுப்பியபடி கரையின் விளிம்பில் காலடி எடுத்து வைத்து நின்றனர். படகின் அடிப்பகுதி கரையின் மணலில் "சுரீர்" என்று உரசி நின்ற அந்த நொடி, ரியானின் இதயமே நின்றுவிட்டது போல இருந்தது.
மரண பயத்தின் உச்சியிலும், ரியானின் கண்கள் அந்தப் பழங்குடி கூட்டத்தின் நடுவே ஒரு முகத்தைத் தேடி அலைந்தன. தன் ஆருயிர்ச் சிற்பிகா அங்கேதான் எங்காவது நின்றுகொண்டிருப்பாள் என்று அவன் நம்பினான். அவளைப் பார்த்துவிட்டால், இந்த மரணத்தையும் தான் எதிர்கொள்ளத் தயார் என்ற துணிச்சல் அவனுக்குள் இருந்தது.
ஆனால்... அங்கே ஒரு பேரதிர்ச்சி அவனுக்காகக் காத்திருந்தது.
அந்தத் தீவின் மொத்தக் கூட்டமும் அங்கே திரண்டிருந்ததே தவிர அங்கே சிற்பிகாவை மட்டும் காணவே இல்லை!
அவள் வந்த படகோ, அல்லது அவளை அழைத்து வந்த அந்தச் சென்டினல் தீவுப் பையனோ அந்தக் கூட்டத்தில் எங்குமே தென்படவில்லை.
காதலை தேடி வந்தவன் மரணத்தின் கரையில் நின்றான்.
Next update
படகு கரையை நெருங்க நெருங்க, தீப்பந்தங்களின் சிவந்த வெளிச்சத்தில் அந்தத் தீவின் கோர முகம் இன்னும் அப்பட்டமாகத் தெரிந்தது.
அங்கே... அவனுக்காக அந்தத் தீவின் மொத்தக் கூட்டமும் தயாராகக் காத்துக்கொண்டிருந்தது! அவர்களின் கறுத்த உடல்களில் தீப்பந்தங்களின் வெளிச்சம் பட்டுப் பளபளத்தது. கைகளில் விஷ அம்புகள் பூட்டப்பட்ட வில்லுகள், கூர்மையான ஈட்டிகள், கற்கள் எனப் பயங்கரமான ஆயுதங்களுடன் அவர்கள் நின்றிருந்தனர்.
ஒவ்வொருவரின் கண்களிலும் நாகரிக மனிதர்கள் மீதான மரண வெறியும், வன்மமும் அனலாகத் தெறித்தன. தங்களின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அந்த ஒற்றை மனிதனைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதற்காக, அவர்கள் நாக்கைக் கடித்துக்கொண்டு, விசித்திரமான ஒலிகளை எழுப்பியபடி கரையின் விளிம்பில் காலடி எடுத்து வைத்து நின்றனர். படகின் அடிப்பகுதி கரையின் மணலில் "சுரீர்" என்று உரசி நின்ற அந்த நொடி, ரியானின் இதயமே நின்றுவிட்டது போல இருந்தது.
மரண பயத்தின் உச்சியிலும், ரியானின் கண்கள் அந்தப் பழங்குடி கூட்டத்தின் நடுவே ஒரு முகத்தைத் தேடி அலைந்தன. தன் ஆருயிர்ச் சிற்பிகா அங்கேதான் எங்காவது நின்றுகொண்டிருப்பாள் என்று அவன் நம்பினான். அவளைப் பார்த்துவிட்டால், இந்த மரணத்தையும் தான் எதிர்கொள்ளத் தயார் என்ற துணிச்சல் அவனுக்குள் இருந்தது.
ஆனால்... அங்கே ஒரு பேரதிர்ச்சி அவனுக்காகக் காத்திருந்தது.
அந்தத் தீவின் மொத்தக் கூட்டமும் அங்கே திரண்டிருந்ததே தவிர அங்கே சிற்பிகாவை மட்டும் காணவே இல்லை!
அவள் வந்த படகோ, அல்லது அவளை அழைத்து வந்த அந்தச் சென்டினல் தீவுப் பையனோ அந்தக் கூட்டத்தில் எங்குமே தென்படவில்லை.
காதலை தேடி வந்தவன் மரணத்தின் கரையில் நின்றான்.
Next update


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)