10-06-2026, 07:50 PM
(This post was last modified: 10-06-2026, 08:04 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Episode - 176
இஷிதா தான் என்னவோ மிகச் சரியாகத் திட்டமிட்டு, காய் நகர்த்திச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தன் சாணக்கிய மூளையை நினைத்துப் பெருமிதம் கொண்டு இருந்தாள். ஆனால், உண்மையில் விதிதான் தன் இஷிதாவை ஒரு வெறும் பகடைக்காயாக வைத்து, எல்லா விளையாட்டையும் அவளைக் கொண்டே விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதைப் பாவம் அவள் அறியவில்லை!
அதே நேரத்தில், மறுபுறம்...
சிற்பிகா தன்னைத் துரத்திவிட்ட பிறகு, ரியானால் அந்த அவமானத்தையும், அவள் மீதுள்ள அந்த அடக்க முடியாத ஈர்ப்பையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் தன் அலுவலக அறையில் நிலை கொள்ளாமல், நெஞ்சில் ஒருவித தவிப்போடு இங்கும் அங்கும் அனல் பறக்க நடந்து கொண்டு இருந்தான். அவனது மூளை முழுக்கச் சிற்பிகாவின் உடல் வனப்பும், அவள் நிலவு முகம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தன.
சரியாக அந்நேரத்தில், தன் சதித் திட்டத்தின் முதல் பகடையை உருட்டுவதற்காக இஷிதா அவனது அலுவலக அறைக்குள் சத்தமில்லாமல் நுழைந்தாள்.
அறைக்குள் நுழைந்தவள், ரியான் பைத்தியம் பிடித்தவன் போலத் தன் கைகளைக் பிசைந்து கொண்டு, வியர்வை வழிய இங்கும் அங்கும் நடப்பதைக் கூர்ந்து கவனித்தாள். அவனது அந்தப் பலவீனமான தவிப்பைக் கண்ட இஷிதாவுக்கு, உள்ளுக்குள் காட்டுத் தீயாய் சிரிப்பு பொங்கியது!
![[Image: Kayadu-Lohar-Unmasking-Her-Elegance-in-Close-Up.jpg]](https://i.ibb.co/nTsCY0S/Kayadu-Lohar-Unmasking-Her-Elegance-in-Close-Up.jpg)
இஷிதா (மனதிற்குள் வக்கிரமாக): "ஹாஹா... இவன் இன்னும் அந்தத் தீவுக் பெண்ணின் வசியத்தில் இருந்து மீளவில்லை! தன் ஆண்மை காயப்பட்டுத் தவிக்கும் இந்த மிருகத்தை என் வலைக்குள் வீழ்த்துவது எனக்கு இன்னும் எளிதாகிவிட்டது. இவனைப் பலிகடா ஆக்க இதைவிடச் சிறந்த நேரம் கிடைக்காது!"
அவள் தன் முகத்தில் ஒரு போலிப் பரிதாபத்தையும், வசியப் புன்னகையையும் வரவழைத்துக் கொண்டு, அவனது நெருங்கிச் சென்று தன் மென்மையான குரலில் பேசத் தொடங்கினாள்.
இஷிதா: "என்ன ரியான்... இப்படி நிலை கொள்ளாமல் அறைக்குள் அலைந்து கொண்டிருக்கிறாய்? எத்தனையோ பிசினஸ் டீல்களை (Business deals) ஒற்றைக் கையால் முடித்த உன்னுடைய இந்தத் தவிப்புக்குக் என்ன காரணம்..."
அவளது குரலைக் கேட்டதும் ரியான் திடுக்கிட்டுத் திரும்பினான். அவனது கண்கள் சிவந்திருந்தன. அவளிடம் தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்ள விரும்பாமல், "இஷிதா... நீ ஏன் இப்போது இங்கே வந்தாய்? எனக்குக் கொஞ்சம் தனிமை தேவை" என்று கரடுமுரடான குரலில் கூறினான்.
ஆனால் இஷிதா பின்வாங்கவில்லை.
இஷிதா:"(அவனது தவிப்பைக் கண்டு தன் உதடுகளில் ஒரு மாயப் புன்னகையை வரவழைத்துக்கொண்டு) உன்னோட இந்த நிலைமைக்கு என்ன காரணம் என எனக்கு நன்றாகத் தெரியும் ரியான்... அந்தச் சிற்பிகாதானே?"
அவளது வாயிலிருந்து சிற்பிகாவின் பெயர் வெளிப்பட்ட அந்த விநாடி, ரியான் இடி தாக்கியவன் போலத் திடுக்கிட்டுத் திரும்பினான்! அவனது கண்கள் அகல விரிய, தன் ரகசியம் இவளுக்கு எப்படித் தெரிந்தது என்ற அதிர்ச்சியில் அவளை உற்றுப் பார்த்தான்.
ரியான்:"உனக்கு... உனக்குச் சிற்பிகாவைப் பற்றி எப்படித் தெரியும் இஷிதா?
இஷிதா சற்றும் பதற்றமடையாமல், தன் முகத்தில் ஒரு மாபெரும் போலி வருத்தத்தை வரவழைத்துக் கொண்டாள். அவளது கண்கள் லேசாகக் கசிவது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றினாள்.
இஷிதா:"(நெஞ்சில் கைவைத்து, ஏமாற்றமடைந்த காதலி போல) நாம் இந்த அந்தமான் தீவுகளுக்கு வருவதற்கு முன்னால்... ரியான் என் மீது எவ்வளவு கண்ணாக இருந்தான்? என் அழகிலும் பேச்சிலும் மயங்கிக் கிடந்தான். ஆனால், இங்கே இந்தத் தீவுக்கு வந்த பிறகு அவன் முற்றிலும் மாறிவிட்டான்! உனக்குள் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்பதை என் பெண்மை உணர்ந்தது ரியான். அதனால்தான் உன்னை நான் ரகசியமாகப் பின் தொடர்ந்தேன்... அப்பொழுதுதான் அந்தச் சிற்பிகாவைப் பற்றிய எல்லா விவரமும் எனக்குத் தெரிந்தது!"
அவள் சொன்னதைக் கேட்டதும் ரியானின் முகம் கோபத்தால் சுருங்கியது. தன் கம்பெனியின் கீழ் வேலை செய்யும் ஒரு பெண், தன் சொந்த ரகசியங்களை உளவு பார்த்தாள் என்பதை அவனது ஆண்மை திமிரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் அவளது கையைப் பற்றி உக்கிரமாகக் கத்தினான்.
ரியான்: "என்ன..? என் ரகசியங்களையே நீ பின் தொடர்ந்தாயா? எவ்வளவு தைரியம் இருந்தால் நீ என்னையே உளவு பார்த்திருப்பாய் இஷிதா!"
ரியானைப் பலிகடா ஆக்கத் துணிந்த இஷிதா, அவனது அந்தக் கோபத்தைக் கண்டு சற்றும் பயப்படவில்லை. அவள் அவனது கண்களை நேராகப் பார்த்து, வசியக் குரலில் அந்த இறுதித் தூண்டிலைப் போட்டாள்.
இஷிதா: "நான் உன்னைப் பின் தொடர்ந்தது தப்புதான் ரியான்... ஆனால், நான் அப்படிச் செய்ததால்தான்... அந்தச் சிற்பிகாவை நீ முழுமையாக அடையும் வழி இப்போது எனக்குத் தெரிந்தது!"
அவள் 'சிற்பிகாவை அடையும் வழி' என்று அந்த வார்த்தையைச் சொன்ன அடுத்த விநாடி... ரியானின் உடம்பில் கொதித்துக் கொண்டிருந்த அத்தனை கோபமும், ஆக்ரோஷமும் அப்படியே பனியைப் போல உருகி வடிந்துவிட்டது! அவனது கண்கள் மீண்டும் காமத்தாலும் பேராசையாலும் ஒளிரத் தொடங்கின. அவளைத் துரத்தியடித்த சிற்பிகாவின் அந்த அழகு மேனியைத் தான் அடைவதற்கு இஷிதா ஒரு வழி வச்சிருக்கா என்ற எண்ணம் அவனது உறைந்துபோன நரம்புகளை மீண்டும் உசுப்பியது.
ரியான் தன் கைகளைத் தளர்த்தி, இஷிதாவின் முகத்திற்கு நேரே தன் முகத்தைக் கொண்டு வந்தான். அவனது மூச்சுக்காற்று இப்போது வேகமாக வெளிவந்தது.
ரியான்(பதற்றமும் காமமும் கலந்த குரலில்) சிற்பிகாவை அடையும் வழியா..? இஷிதா... விளையாடாதே! நீ சொல்வது உண்மையா?
இஷிதா: "நான் சொல்வது நூறு சதவீதம் உண்மைதான் ரியான்... ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் முழுமையாகத் தெரியும். சிற்பிகா எவ்வளவுதான் திமிர் பிடித்த பெண்ணாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே? தனக்காகத் தன் உயிரைக் கூடக் கொடுக்கத் தயங்காத ஒரு ஆணை ஒரு பெண் தன் வாழ்நாளில் பார்த்துவிட்டால்... கண்டிப்பாக எப்பேர்ப்பட்ட பெண்ணும் அவனிடம் விழுந்துவிடுவாள்! நீயும் சிற்பிகாவுக்காக உன் உயிரைக் கூடப் பணயம் வைத்து நான் சொல்வது போலச் செய்தால், கண்டிப்பாகச் சிற்பிகா உனக்குக் கிடைப்பாள்!"
அவளது வார்த்தைகள் ரியானுக்குள் ஒரு புதிய நம்பிக்கையையும், அவளது உடலை எப்படியாவது அடைய வேண்டும் என்ற பழைய காம வெறியையும் உசுப்பிவிட்டது. அவன் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அவசர அவசரமாகக் கேட்டான்.
ரியான்: "எனக்கு இன்னும் புரியவில்லை இஷிதா... கொஞ்சம் புரியற மாதிரி தெளிவா சொல்லு! நான் என்ன செய்ய வேண்டும்?"
இஷிதா தன் உதடுகளைக் கடித்துக்கொண்டு, சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துவிட்டு, அவனது காதருகே தன் முகத்தைக் கொண்டு சென்று அந்த ஆபத்தான சதித் திட்டத்தை விவரித்தாள்.
இஷிதா: "விஷயம் ரொம்ப சிம்பிள் ரியான்... இன்னிக்கு இரவு சரியாக 10 மணிக்குச் சிற்பிகா யாருக்கும் தெரியாமல் அந்தச் சென்டினல் தீவுக்கு (Sentinel Island) படகில் போகப் போறா! அதுதான் உனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த வாய்ப்பு."
அவள் அவனது நெஞ்சைத் தொட்டு, அவனது ஆண்மைத் திமிரைத் தூண்டும் விதமாகத் தொடர்ந்தாள்.
இஷிதா: "நீயும் துணிந்து அவளுக்குத் தெரியாமல், அவளுக்குப் பின்னாடியே இன்னொரு படகில் அந்த நரகத் தீவை நோக்கிப் போகணும்! அந்தச் சென்டினல் தீவுக்குப் போன உடனே, அவளுக்கு முன்னாடி போய் நீ கெத்தாக நின்றால்... அவளே அதிர்ச்சி ஆயிடுவா! தனக்காக உயிரைப் பணயம் வைத்து இவன் இந்த தீவுக்கே வந்துவிட்டானே என்று அவளது அந்தத் திமிர் பிடித்த நெஞ்சம் உருகிப்போகும். அங்கே உனக்கு அவளை முழுசாக அனுபவிக்கும் லக்கி சான்ஸ் (Lucky chance) கிடைக்கும்!"
ரியான்: "(கண்கள் விரிய, வியர்க்க விறுவிறுக்க) என்ன இஷிதா சொல்கிறாய்... சென்டினல் தீவா? அங்கே அந்நியர்கள் யாரும் கால் வைக்க முடியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேனே! அம்பு வேட்டைக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பார்களே... அங்கே போவது தற்கொலைக்குச் சமம் இல்லையா?"
இஷிதா: "(ரியானின் அந்தப் பயந்த கேள்வியைக் கேட்டுத் தன் உதடுகளைக் கடித்து, உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு) சிற்பிகாவின் அழகான கட்டுடல் மேனியும், அவளது காதலும் உனக்கு வேண்டும் என்றால்... இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துதான் ஆக வேண்டும் ரியான்! சும்மா ஏசி அறையில் அமர்ந்துகொண்டு அந்தத் தீவு தேவதையை நீ அடைய நினைத்தால் அது நடக்காத காரியம்!"
ரியான் சில நொடிகள் ஆழமாக யோசித்தான். அவனது சாத்தியமற்ற காம வெறி அவனது அறிவைக் குருடாக்கியிருந்தது.
ஆனால், திடீரென அவனுக்குள் இருந்த ஒரு எதார்த்தமான பயம் மீண்டும் தலைதூக்கியது. அவன் தன் தலையைக் கோதியபடி இஷிதாவைப் பார்த்துக் கேட்டான்.
ரியான்: "சரி ஓகே இஷிதா... நீ சொல்வது எல்லாம் சரிதான். ஆனால்... எனக்கு நீச்சல் தெரியாதே! நான் எப்படி தனியாக அந்த நடுக்கடலில் படகை ஓட்டிக்கொண்டு போக முடியும்? நான் பத்திரமாகச் சென்டினல் தீவுக்குச் சென்று, சிற்பிகா முன்னாடி நேராகப் போய் நின்றால்தானே அவளது அன்பை நான் பெற முடியும்? ஒருவேளை அந்த 23 கிலோமீட்டர் நடுக்கடலில் எனக்கு ஏதாவது ஆபத்து ஆகிவிட்டால்... நான் நினைத்ததெல்லாம் வீணாகிவிடுமே?"
இஷிதா (தன் மனதிற்குள் நக்கலாக): "ஹாஹா... இவனோடு எப்படி தீவுக்குள் செல்வது, இவனிடம் எப்படி சம்மதம் வாங்குவது என யோசித்து கொண்டு இருந்தேன். இப்போது விதி எனக்கு அருமையான வழி செய்துவிட்டது! முட்டாள் ரியான்... அங்கே தீவுக்குள் நுழைந்த உடனே உன்னுடைய நெஞ்சைக் குறிவைத்து விஷ அம்புகள் பாயக் காத்துக் கொண்டிருக்கின்றன. நீ என்னவென்றால் நடுக்கடலில் நீச்சல் தெரியாமல் மூழ்கிவிடுவேன் என்று பயப்படுகிறாயா? நீ தீவுக்குப் போய் சேர்ந்தால்தானே என் திட்டம் நிறைவேறும்! உன்னை நான் அத்தனை சீக்கிரம் கடலில் மூழ்கவிட மாட்டேன்."
அவள் தன் முகத்தில் ஒரு போலிச் சோகத்தையும் அக்கறையையும் வரவழைத்துக் கொண்டு, ரியானின் கைகளைப் பற்றினாள்.
இஷிதா:"சரி ரியான்... நீ இவ்வளவு பயப்படுகிறாய் அல்லவா? உன் கூட ஒரே படகில் நானே வருகிறேன்! நாம் இருவரும் மாறி மாறித் துடுப்புப் போட்டுக் கொண்டே செல்வோம்.எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். அதனால் நடுக்கடல் ஆபத்தைப் பற்றி நீ பயப்படவே வேண்டாம். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் — தீவில் இறங்கியவுடன் நேராகச் சிற்பிகாவின் முன்னால் போய் நிற்பது மட்டும்தான்!"
இஷிதாவின் அந்தப் போலிப் பாதுகாப்புக் கதையைக் கேட்டதும், ரியானின் முகத்தில் மீண்டும் ஒரு மாபெரும் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. இஷிதா தன் கூடவே வருவதால் கடலில் எந்த ஆபத்தும் வராது என்றும், தீவில் இறங்கிச் சிற்பிகாவின் மேனியைத் தன் வசமாக்கிவிடலாம் என்றும் அவன் முழுமையாக நம்பினான்.
காலம் தன் அமானுஷ்யக் கணக்குகளைத் தொடங்க, கடிகார முள் சரியாக இரவு 10 மணியைத் தொட்டது.
![[Image: bd3203a42c825b32beaf57f3cf727a85.jpg]](https://i.ibb.co/fdYLL9rS/bd3203a42c825b32beaf57f3cf727a85.jpg)
அந்தச் சென்டினல் தீவுப் பையனும், சிற்பிகாவும் தங்களின் சிறிய மரப் படகில் ஏறி, சத்தமில்லாமல் நடுக்கடலை நோக்கித் துடுப்புப் போடத் தொடங்கினர். கடல் நீரோட்டம் சென்டினல் தீவை நோக்கி வேகமாக இருந்ததால், அவர்களின் படகு சில நொடிகளில் இருளுக்குள் மறைந்தது.
சிற்பிகா கண்களை விட்டு மறைந்த அந்த நொடி, ரியானின் இதயம் பயத்திலும் கவலையிலும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. சுற்றிலும் சூழ்ந்திருந்த அடர்ந்த இருள் அந்த நடுக்கடலை இன்னும் பயங்கரமாகக் காட்டியது.
அப்போது, அவர்கள் மறைந்திருந்த மரங்களின் பின்னாலிருந்து மெல்லிய இலைகளின் சலசலப்பு சத்தம் கேட்டது. ரியான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், இருளுக்குள்ளிருந்து இரண்டு உருவங்கள் மெல்ல வெளிப்பட்டன. கறுத்த உடலமைப்பும், கடலின் உப்புக்காற்றைத் தாங்கிய கரடுமுரடான முகங்களுடனும் அவர்கள் இருவரும் கைகளில் மரத் துடுப்புகளைப் பிடித்தபடி நின்றிருந்தனர். அவர்களின் கண்கள் அந்த இருட்டிலும் கூர்மையாக மின்னின.
ரியான் பதற்றமடைந்து பின்வாங்க முயன்றபோது, இஷிதா அவனது தோளைத் தொட்டு அமைதிப்படுத்தினாள். அவளது முகத்தில் எந்த சலனமும் இல்லை; மாறாக, ஒரு மர்மமான புன்னகை மட்டுமே இருந்தது.
"ரியான்.. பதற்றப்படாதே!" என்று மெல்லிய குரலில் தொடங்கிய இஷிதா, அந்த இருவரையும் சுட்டிக்காட்டி, "இவங்க இந்த தீவில் வசிக்கும் மீனவர்கள். கடலையும் இந்த அலைகளின் திசையையும் இவங்களை விட யாராலும் நல்லா புரிஞ்சுக்க முடியாது. இவங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு படகில் நம்மை இருவரும் அழைத்து செல்வார்கள்" என்றாள்.
ரியான் அந்த மீனவர்களை சந்தேகத்தோடு பார்த்தான். ஆனால், சிற்பிகாவை அடைய வேண்டும் என்ற அவசரம் அவன் புத்தியை மறைத்திருந்தது. இஷிதா தொடர்ந்து பேசினாள்.
"பிறகு Sentinel தீவு அருகில் வந்த உடனே இவர்கள் இருவரும் ஒரு படகில் திரும்பி விடுவார்கள். பிறகு நாம் இருவர் மட்டுமே Sentinel தீவு நோக்கி செல்ல வேண்டும்.. இப்போ நாம கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. வா போகலாம்," என்றாள்.
இஷிதா சொல்லி முடித்ததும், அந்த மீனவர்கள் இருவரும் கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய மரப் படகுகளை இழுத்து வந்து தண்ணீரில் விட்டனர். அலைகள் படகின் பக்கவாட்டில் மோதி பலத்த சத்தத்தை எழுப்பின.
இஷிதா ஒரு மீனவனுடன் ஏறி அமர்ந்துகொண்டாள்.
ரியான் மற்றொரு மீனவனுடன் ஏறிக்கொண்டான்.
"தயாராக இரு ரியான், கடலின் வேகம் அதிகமாக இருக்கிறது!" என்று இருட்டைக் கிழித்துக் கொண்டு இஷிதாவின் குரல் கேட்டது.
மறுநொடி, அந்த இரு மீனவர்களும் தங்களின் வலிமையான கரங்களால் துடுப்புகளைக் கடலுக்குள் பாய்ச்சி, ஒரே சீராகப் போடத் தொடங்கினர். இரண்டு படகுகளும் கரையை விட்டு விலகி, அந்தப் பெருங்கடலின் கும்மிருட்டுக்குள் மெல்ல நகர ஆரம்பித்தன.
கீழே எழும்பி அடங்கும் அலைகளின் சீற்றமும், மேலே வானில் மேக மூட்டத்திற்குள் மறைந்திருந்த நிலவின் மங்கலான வெளிச்சமும் அந்தப் பயணத்தை விவரிக்க முடியாத பயங்கரத்தோடு மாற்றின. சிற்பிகாவைத் தேடி, ரியான் தன் வாழ்நாளின் மிக ஆபத்தான பயணத்தை நோக்கி, இஷிதா விரித்த சதி வலையில் அறியாமல் பயணித்துக் கொண்டிருந்தான்.
கும்மிருட்டு, ஆக்ரோஷமான கடல், பின்னால் துரத்தும் மரணம் என எதுவும் அறியாமல், ரியானும் இஷிதாவும் அந்த இரண்டு தனித்தனிப் படகுகளில் நடுக்கடலை நோக்கிக் பயணித்தனர்.
கரையின் எல்லை தாண்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே கடலின் நிஜமான முகம் அவர்களுக்குத் தெரியத் தொடங்கியது.
அலைகள் சாதாரணமானவையாக இல்லை; அவை கருநாகங்களைப் போலச் சீறிக்கொண்டு படகின் மீது மோதின. ஒவ்வொரு முறை அலையின் உச்சிக்கு படகு ஏறும்போதும், ரியானின் இதயம் தொண்டைக் குழிக்கு வந்தது. அடுத்த நொடி, ஒரு பெரிய பள்ளத்தில் விழுவதைப் போலப் படகு கீழே இறங்கியது.
"சளக்... சளக்..." என்று குளிர்ந்த கடல் நீர் ரியானின் முகத்தில் சாட்டையடி போல வந்து விழுந்தது. சுற்றிலும் கும்மிருட்டு. வானமா, பூமியா என்று பிரிக்க முடியாத அந்தப் பெருவெளியில், அவர்கள் செல்லும் சிறிய மரப்படகு ஒரு தீக்குச்சியைப் போல அலைகளால் தூக்கி வீசப்பட்டது.
படகின் பலகைகள் அலைகளின் அழுத்தத் தாங்காமல் "கிரீச்... கிரீச்..." என்று முனகின. அந்தச் சத்தம் எப்போது வேண்டுமானாலும் படகு இரண்டாக உடையலாம் என்ற பீதியை ஏற்படுத்தியது.
முன்னால் செல்லும் படகில் இஷிதா ஒரு சிலையைப் போல அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளை அழைத்துச் செல்லும் மீனவன், கடலின் சுழல்களையும் நீரோட்டங்களையும் அக்குவேற ஆணிவேறாகத் தெரிந்தவன் போல, அலைகளின் வீச்சிற்குத் தகுந்தபடி துடுப்பை வளைத்துச் செலுத்தி ஓட்டினான்.
ஆனால் ரியானின் படகோ, கடலின் சீற்றத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டு நின்றது. நீரோட்டம் சென்டினல் தீவை நோக்கிச் செங்குத்தாக இழுத்துச் சென்றதால், துடுப்புப் போடாமலேயே படகு அதிவேகமாக முன்னோக்கிப் பாய்ந்தது. அது பயணம் போல இல்லை; ஒரு பெரிய ஆபத்தை நோக்கி வழுக்கிக் கொண்டு ஓடுவது போல இருந்தது. தூரத்தில் மிரட்டும் கறுப்பு நிழலாக சென்டினல் தீவின் அடர்ந்த காடுகள் மெல்லத் தெரியத் தொடங்கின.
ரியானின் உடம்பு குளிரில் நடுங்கியது, ஆனால் அவனது மூளைக்குள் பயமும் காதலும் சேர்ந்து தீயாய் எரிந்து கொண்டிருந்தது.
"நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்? ஒரு தடை செய்யப்பட்ட தீவு... மனிதர்களே செல்ல முடியாத இடம். அங்கே சிற்பிகா ஒரு பழங்குடிப் பையனுடன் தனியாகச் சென்றிருக்கிறாள்.
அவனது உள்ளுணர்வு ஏதோ ஒரு பேராபத்து காத்துக் கொண்டிருப்பதாக எச்சரித்தது. இஷிதாவின் திடீர் உதவி, நள்ளிரவில் இந்த மீனவர்கள், இந்தத் திட்டமிடல்... எல்லாமே ஏதோ ஒரு கணினியில் ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல மிகச் சரியாக நடப்பது அவனுக்குள் லேசான சந்தேகத்தை விதைத்தது.
தன் பக்கத்தில் அமர்ந்து வெறித்துப் பார்த்தபடி துடுப்புப் போடும் அந்த மீனவனின் முகத்தைப் பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
ஒருவேளை நான் சிற்பிகாவைப் பார்ப்பதற்குள் இந்த அலையிலேயே மூழ்கிவிடுவேனோ? அல்லது அந்தத் தீவுக்குள் நுழைந்ததும்...!
ரியான் தன் கைகளை இறுக மூடிக்கொண்டான். பயம் அவனது தொண்டையை அடைத்தது. ஆனால், "சிற்பிகா..." என்ற பெயர் அவனது இதயம் முழுக்க நிரம்பியிருந்ததால், அந்த நடுக்கடலின் மரண பயத்தையும் தாண்டி, அவன் கண்கள் இருட்டைக் கிழித்துக் கொண்டு சிற்பிகாவின் படகோட்டத்தைத் தேடின.
அவன் அறியவில்லை... கடலின் அலைகளை விட, தனக்குப் முன்னால் சென்று கொண்டிருக்கும் இஷிதாவின் வஞ்சக அலை மிகவும் ஆபத்தானது என்று!
அந்தப் பேய்க்காற்றின் இரைச்சலையும், அலைகளின் சீற்றத்தையும் கிழித்துக் கொண்டு, தூரத்து நடுக்கடலில் இருந்து ஒரு மெல்லிய நாதம் காற்றில் மிதந்து வந்தது.
அது ஒரு பெண்ணின் குரல்... மிகவும் பரிச்சயமான, ரியானின் இதயத் துடிப்போடு கலந்த குரல். ஆமாம், அது சிற்பிகாவின் குரல் தான்!
முன்னே இருளுக்குள் சென்றுகொண்டிருக்கும் தன் படகில் அமர்ந்தபடி, துடுப்புப் போடும் அந்தச் சென்டினல் தீவுப் பையனின் மௌனத்திற்கு இடையே, தன் மனதில் தேங்கிக் கிடக்கும் பிரிவுத் துயரத்தை ஒரு சோகப் பாடலாக உதிர்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
"உதிரம் படிந்த சோழ மண்ணின்...
உறைந்து போன என் இதயமே!
நேற்றைய போரில் துடித்த உயிரை,
இன்றும் தேடி வருகிறேனே!
அன்பே... என் பேராசை அன்பே...
என் கண் முன்னே நீ மறைந்தாயே,
இந்த ஜென்மத்திலும் என்னை மறந்தாயே!
பின்தொடர்ந்து வரும் ஒரு காதல் நிழல்,
என் நெஞ்சின் துயரம் அறியவில்லை!
தோள் கொடுக்க இங்கே ஒருவன் உண்டு,
ஆனால் என் ஆத்மா அவனிடம் கரையவில்லை!
சென்டினல் தீவின் இருட்டுக்குள்ளே,
என் சோழ நாட்டு இளவரசன் எங்கே?
காலங்கள் தாண்டி நான் தேடும் கைகள்,
மீண்டும் என்னைத் தீண்டுவது எங்கே?
கடல் அலைகள் என்னை இழுத்துச் செல்ல,
என் கண்கள் உன்னைத் தேடுதடா!
இப்பிறவியின் பாசம் எனக்கு வேண்டாம்,
முன்பிறவியின் மரணமே போதுமடா!
காப்பாற்ற நினைக்கும் இதயத்தை விடுத்து,
காணாமல் போன உன்னைத் தேடி...
கரை சேராமல் மடிகிறேனே!
பாடல் வரிகள் அந்த நள்ளிரவுக் கடலில் எதிரொலித்து ரியானின் காதுகளை அடைந்ததும், அவனுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.
"சிற்பிகா... இது சிற்பிகாவின் குரல் தான்! அவள்தான் பாடுகிறாள்!" என்று ரியான் தத்தளிப்போடு கத்தினான்.
அவள் பாடிய ஒவ்வொரு வார்த்தையும் அவனது இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது.ஆபத்தான கடல் என்ற பயத்தையெல்லாம் விட, "சிற்பிகா... நான் வந்துட்டே இருக்கேன்!" என்று இருட்டைப் பார்த்து சத்தமாகக் கத்தினான் ரியான்.
ஆனால், அவனது குரல் அலையின் சத்தத்தில் அடங்கிப்போனது. அவனுக்குப் முன்னால் இருந்த படகில், இஷிதாவின் முகத்தில் ஒரு வக்கிரமான முறுவல் அரும்பியது.
கடலின் சீற்றம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. அலைகள் படகுகளைத் துவம்சம் செய்துகொண்டிருந்த வேளையில், திடீரென அந்த இரண்டு மீனவர்களும் துடுப்புப் போடுவதை நிறுத்தினர். சுற்றிலும் ஒருவிதமான மயான அமைதி நிலவியது. சென்டினல் தீவின் கரையை மிக நெருங்கிவிட்டதை அந்த மௌனமே உணர்த்தியது.
இஷிதா அமர்ந்திருந்த படகில் இருந்த மீனவன், புயலில் சிக்கிய பறவையைப் போலத் தன் உடலைச் சமன் செய்துகொண்டு, ரியான் இருந்த படகின் விளிம்பைப் பற்றினான். "இப்போவே மாறு!" என்ற அவனது கட்டளை இருட்டையும் தாண்டி அதிரடியாக ஒலித்தது.
இஷிதாவின் படகுக்குத் தாவ வேண்டிய கட்டாயம் ரியானுக்கு ஏற்பட்டது. அவன் எழுந்து நின்றான். ஆனால், கடலின் அந்தப் பிரம்மாண்டமான அலைகள் படகை ஒரு விளையாட்டுப் பொருள் போல அங்கும் இங்கும் தூக்கி வீசின. ரியானால் ஒரு நொடி கூட நிலையாக நிற்க முடியவில்லை. உடல் தள்ளாடியது; கால்கள் வழுக்கின
"ரியான், சீக்கிரம்!" என்று இஷிதா படகின் விளிம்பில் இருந்து கத்தினாள்.
அவளது குரலில் இருந்த அவசரம் பயத்தினால் அல்ல, அவன் விரைவில் அந்தத் தீவின் எல்லைக்குள் சென்று சேர வேண்டும் என்ற வஞ்சகத் துடிப்பு. ரியான் தன் கைகளை நீட்டி, அந்த மீனவர்களை இறுகப் பற்றிக்கொண்டான். இருபுறமும் இருந்த மீனவர்கள் அவனை ஒரு பொதி போலத் தூக்கி, இஷிதா இருந்த படகின் விளிம்பிற்கு இழுத்தனர். ரியான் தடுமாறி, அந்தப் படகின் தட்டுப்பகுதியில் விழுந்து, அப்படியே தவழ்ந்து வந்து இஷிதாவின் அருகில் அமர்ந்தான்.
மூச்சு வாங்கிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தான் ரியான்.
அந்த மீனவர்கள் இருவரும் இருளை உற்றுப் பார்த்தனர். அவர்களின் கண்கள் பயத்தில் விரிந்திருந்தன. ரியானையும் இஷிதாவையும் பார்த்த அந்த மீனவன், கறாரான குரலில் எச்சரித்தான்:
"இங்கிருந்து கரை மிக அருகில் இருக்கிறது. இங்கே அதிக நேரம் இருக்க வேண்டாம். மீண்டும் விடிவதற்குள் இந்தத் தீவை விட்டு கிளம்பி விடுங்கள்... இல்லையென்றால் உங்களை யாரும் காப்பாற்ற முடியாது. இங்கிருக்கும் பழங்குடி மக்கள் மனிதர்களைப் பார்க்க விரும்புவதில்லை. விடிந்தால் நீங்கள் அவர்களின் கண்ணில் பட்டுவிடுவீர்கள்!"
சொல்லி முடித்த அந்த மீனவர்கள், எந்தக் காலதாமதமும் செய்யாமல், காலிப் படகைத் திருப்பிக் கொண்டு இருளுக்குள் வேகமாகப் பின்வாங்கத் தொடங்கினர். அவர்கள் மீண்டும் திரும்புவார்கள் என்று தோன்றவில்லை.
இப்போது, ரியானும் இஷிதாவும் மட்டும் அந்தச் சிறிய படகில், இருள் சூழ்ந்த சென்டினல் தீவின் மடியில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
![[Image: 904318eb-d5d7-444f-a3d5-4aa69592e0bf.jpg]](https://i.ibb.co/qMwTSzQk/904318eb-d5d7-444f-a3d5-4aa69592e0bf.jpg)
அந்த மீனவர்கள் இருட்டுக்குள் மறைந்த அந்த நொடி, நடுக்கடலின் நிஜமான கோர முகம் அவர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டது. சுற்றிலும் மனித நடமாட்டமே இல்லாத, சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஒரு தீவின் எல்லை. நாகரிக உலகம் எட்டாத அந்தப் பெருவெளியில், இப்போது இயற்கை அவர்களை அச்சுறுத்தத் தொடங்கியது.
கடல் அலைகளின் சத்தம் இப்போது வெறும் தண்ணீரின் ஓசையாகக் கேட்கவில்லை; அது ஏதோ ஒரு பசி வெறி பிடித்த மிருகம் கர்ஜிப்பதைப் போலக் கேட்டது.
"ஹூஊஊ... சளக்... பட்!" என்று அலைகள் கரடுமுரடான பாறைகளின் மீது மோதி உடையும் சத்தம், காதுகளைச் செவிடாக்குவது போலத் தீவின் பக்கவாட்டில் இருந்து எதிரொலித்தது.
ஒவ்வொரு முறையும் ஒரு பிரம்மாண்டமான கறுப்பு அலை இவர்களின் சிறிய மரப் படகை நோக்கி வரும்போதும், மரணத்தின் கைகள் தங்களை நோக்கி நீள்வது போன்ற பீதி ரியானுக்கு ஏற்பட்டது. படகின் அடியில் நீர் சுழன்று அடிக்கும் "உஷ்... உஷ்..." என்ற சத்தம், கடலுக்கு அடியில் ஏதோ ஒரு ராட்சத விசித்திர உயிர் காத்துக் கொண்டிருப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியது.
சுற்றிலும் கும்மிருட்டு. வானத்தில் மேகங்கள் திரண்டு நின்றதால், நிலவின் வெளிச்சம் கூட அந்தப் பகுதிக்கு வர அஞ்சியது போல இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கறுப்பு நிறத் திரைச்சீலையைத் தொங்கவிட்டது போல, கடலும் வானமும் ஒன்றோடு ஒன்று கலந்து கிடந்தன.
அவர்களுக்கு மிக அருகில், சில மீட்டர்கள் தொலைவில் சென்டினல் தீவின் அடர்ந்த காடு ஒரு பிரம்மாண்டமான அரக்கனைப் போல எழுந்து நின்றது. காற்றின் வேகத்தில் அங்கிருந்த ராட்சத மரங்களின் கிளைகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் "கிரீச்... மொடக்..." என்ற சத்தம், அந்த நள்ளிரவில் நெஞ்சைப் பிளந்தது.
அவ்வப்போது காட்டின் ஆழத்திலிருந்து விசித்திரமான பறவைகளின் அலறல் சத்தமும், மனிதக் குரல் போன்ற ஏதோ ஒரு விசித்திர ஒலியும் காற்றில் மிதந்து வந்தன. அது அந்தத் தீவின் பழங்குடி மக்கள் இவர்களின் வருகையை அறிந்து எழுப்பும் சத்தமா, அல்லது காட்டு மிருகங்களின் சத்தமா என்று பிரிக்க முடியாத ஒரு திக் திக் நிமிடம் அது!
படகில் தேங்கி நின்ற குளிர்ந்த கடல் நீர் ரியானின் கால்களை உறைந்து போகச் செய்தது. உடம்பு குளிரில் நடுங்கினாலும், பயத்தின் காரணமாக அவனது நெற்றி வியர்த்துக் கொட்டியது.
மீனவர்கள் சொன்ன எச்சரிக்கை அவன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது: *"விடிவதற்குள் கிளம்பி விடுங்கள்... இல்லையென்றால் உங்களை யாரும் காப்பாற்ற முடியாது!"
கூர்மையான அம்புகளைக் கைகளில் ஏந்தி, இருட்டுக்குள் மறைந்திருக்கும் அந்தப் பழங்குடி மனிதர்களின் நடமாட்டம், அந்த மரங்களின் நிழல்களிலேயே தெரிவது போல ரியானுக்கு ஒரு பிரமை தட்டியது. துடுப்பை இறுகப் பற்றியபடி, இருட்டின் ஆழத்தில் எங்கோ இருக்கும் சிற்பிகாவை நினைத்து, தன் வாழ்நாளின் மிக பயங்கரமான நொடிகளை அந்த நடுக்கடலில் அவன் கடக்கத் தொடங்கினான்.
இஷிதா தன் பலம் கொண்ட மட்டும் கரையை நோக்கித் துடுப்பைச் செலுத்த செலுத்த, சென்டினல் தீவின் பயங்கர வடிவம் அந்த இருட்டிலும் லேசாகத் தென்படத் தொடங்கியது. ஆனால், அந்த நிம்மதி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை.
அடர்ந்த கறுப்புச் சுவராக நின்ற அந்த மரக் கூட்டங்களுக்கு இடையே, திடீரென ஒரு சிறு விண்மீனைப் போல ஒரு தீப்பொறி தோன்றியது. அடுத்த சில விநாடிகளில், "திபு திபு" என வரிசையாக நூற்றுக்கணக்கான சிறு சிறு விளக்குகளைப் போல தீப்பந்தங்கள் அந்த இருட்டுக் காடெங்கும் முளைக்க ஆரம்பித்தன.
தீப்பந்தங்களின் சிவந்த வெளிச்சத்தில், கைகளில் வில் மற்றும் அம்புகளுடன் ஆக்ரோஷமாக அசைந்தாடும் மனிதர்களின் நிழல் உருவங்கள் குட்டி குட்டியாக மிரட்டும் விதத்தில் தெரிந்தன. அதைவிடக் கொடூரமாக, காட்டின் ஆழத்திலிருந்து அவர்கள் எழுப்பிய, "ஹூஹூ... ஹா... ஹா..." என்ற விசித்திரமான காட்டுச் சத்தங்கள் நள்ளிரவுக் கடலின் இரைச்சலையும் தாண்டி அலறியது.
அந்தச் சத்தம் கேட்ட அடுத்த கணமே, ரியானுக்கு பயத்தில் அடிவயிறு கலங்கி, கைகால்கள் நடுங்கத் தொடங்கின.
அவர்கள் சுதாரிப்பதற்குள், கரையில் இருந்து எரியும் நெருப்பைக் கக்கிக் கொண்டு, நூற்றுக்கணக்கான அம்புகள் இருட்டைக் கிழித்துக் கொண்டு இவர்களின் படகை நோக்கிச் சரமாரியாகப் பாய்ந்து வந்தன! சில அம்புகள் "சுவ்... சுவ்..." என்று ரியானின் காதோரமாகப் பாய்ந்து கடலுக்குள் விழுந்து அணைந்தன.
பயத்தின் உச்சத்துக்கே சென்ற ரியான், "இஷிதா! நாம் இங்கே வருவது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? இப்போ என்ன பண்றது? சீக்கிரம் படகைத் திருப்பு!" என்று அலறிக் கொண்டே இஷிதாவின் கையைப் பற்றினான்.
ஆனால், இஷிதா அவனது கையை உதறிவிட்டு, அந்தத் தீப்பந்த வெளிச்சத்தில் வக்கிரமாகச் சிரித்தாள். அவளது கண்களில் பழிவாங்கும் வெறி அப்பட்டமாகத் தெரிந்தது.அவளின் வஞ்சக சிரிப்பு அவள் நிழலில் கூட தெளிவாக தெரிந்தது
"இஷிதா... ஏன் சிரிக்கிறாய்?" என்று ரியான் பதறினான்.
"ரியான்! என்னை விட அழகான ஒரு பெண் கிடைத்த உடனே என்னை முற்றிலும் மறந்து விட்டாய் தானே? இந்த இஷிதாவின் காதலைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்தச் சிற்பிகாவின் பின்னால் அலையும் போதே உனக்கு இந்த முடிவுதான் என்று நான் முடிவு செய்துவிட்டேன்.அவர்களுக்கு நீ இங்கே வருவாய் என்று முன்கூட்டியே தகவல் கொடுத்ததே நான்தான்!" என்று வெறித்தனமாகக் கத்தினாள்.
![[Image: Kayadu-Lohar.jpg]](https://i.ibb.co/938WBpm6/Kayadu-Lohar.jpg)
"இஷிதா... நீயா இப்படி...?"
"ஆமாம் ரியான்! உனக்கு இந்த கொடூர மரணம் தேவைதான். என் காதல் கிடைக்காத நீ, இந்த உலகத்திலேயே வாழக் கூடாது!" என்று வஞ்சகமாகச் சிரித்தபடியே, தன் தோளில் இருந்த வாட்டர்ப்ரூஃப் பையை இறுகப் பற்றிக் கொண்டு, படகின் விளிம்பிலிருந்து லாவகமாகக் கடலுக்குள் குதித்தாள்.
அவள் அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட் மற்றும் நீச்சல் உபகரணங்களின் உதவியோடு, கடல் நீரோட்டத்தை பயன்படுத்தி வேகமாகக் நீந்தி மறைந்தாள்.
நெருப்பு அம்புகளின் வீச்சிற்கு நடுவே, துடுப்புப் போடக் கூடத் தெரியாமல் ரியான் படகின் நடுவே நிலைகுலைந்து போய் அமர்ந்திருந்தான். அலைகளின் வேகம் குறையவில்லை; மாறாக, ஒவ்வொரு அலையும் அந்தச் சிறிய மரப் படகை வஞ்சகமே இல்லாமல் சென்டினல் தீவின் கரையை நோக்கியே மெல்ல மெல்ல இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.
ரியானின் இந்த விபரீதமான சூழ்நிலை, வடிவேலுவின் அந்தப் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியைப் போலத்தான் இருந்தது.
படத்தில் வடிவேலு பீச்சில் எப்படியோ கஷ்டப்பட்டுத் திருடிவிட்டு, ஒரு குதிரை மீது ஏறி "ஹையா... தப்பிச்சுட்டோம்!" என்று நினைத்து அதிவேகமாக ஓடுவார். ஆனால், அந்தப் பாழாய்ப்போன குதிரை கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, இவரைச் சுமந்துகொண்டே மீண்டும் திருடிய இடத்திற்கே—அதாவது இவரை அடிக்கக் காத்திருக்கும் ஊர் கூட்டத்தின் நடுவிற்கே—அப்படியே யூ-டர்ன் போட்டுத் திருப்பிக் கொண்டு வந்து நிறுத்தும். அங்கே ஊரே கைகளில் கட்டை, கடப்பாரைகளுடன் வடிவேலுவை 'வரவேற்க' ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருக்கும்.
அதே போன்ற ஒரு கொடூரமான விதியின் விளையாட்டிற்குள் இப்போது ரியான் சிக்கியிருந்தான். அவன் தப்பிக்க நினைத்த கரையை நோக்கியே, அந்தப் படகு அவனைச் சுமந்து கொண்டு அடி மேல் அடி எடுத்து வைத்து நகர்ந்தது.
படகு கரையை நெருங்க நெருங்க, தீப்பந்தங்களின் சிவந்த வெளிச்சத்தில் அந்தத் தீவின் கோர முகம் இன்னும் அப்பட்டமாகத் தெரிந்தது.
இஷிதா தான் என்னவோ மிகச் சரியாகத் திட்டமிட்டு, காய் நகர்த்திச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தன் சாணக்கிய மூளையை நினைத்துப் பெருமிதம் கொண்டு இருந்தாள். ஆனால், உண்மையில் விதிதான் தன் இஷிதாவை ஒரு வெறும் பகடைக்காயாக வைத்து, எல்லா விளையாட்டையும் அவளைக் கொண்டே விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதைப் பாவம் அவள் அறியவில்லை!
அதே நேரத்தில், மறுபுறம்...
சிற்பிகா தன்னைத் துரத்திவிட்ட பிறகு, ரியானால் அந்த அவமானத்தையும், அவள் மீதுள்ள அந்த அடக்க முடியாத ஈர்ப்பையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் தன் அலுவலக அறையில் நிலை கொள்ளாமல், நெஞ்சில் ஒருவித தவிப்போடு இங்கும் அங்கும் அனல் பறக்க நடந்து கொண்டு இருந்தான். அவனது மூளை முழுக்கச் சிற்பிகாவின் உடல் வனப்பும், அவள் நிலவு முகம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தன.
சரியாக அந்நேரத்தில், தன் சதித் திட்டத்தின் முதல் பகடையை உருட்டுவதற்காக இஷிதா அவனது அலுவலக அறைக்குள் சத்தமில்லாமல் நுழைந்தாள்.
அறைக்குள் நுழைந்தவள், ரியான் பைத்தியம் பிடித்தவன் போலத் தன் கைகளைக் பிசைந்து கொண்டு, வியர்வை வழிய இங்கும் அங்கும் நடப்பதைக் கூர்ந்து கவனித்தாள். அவனது அந்தப் பலவீனமான தவிப்பைக் கண்ட இஷிதாவுக்கு, உள்ளுக்குள் காட்டுத் தீயாய் சிரிப்பு பொங்கியது!
![[Image: Kayadu-Lohar-Unmasking-Her-Elegance-in-Close-Up.jpg]](https://i.ibb.co/nTsCY0S/Kayadu-Lohar-Unmasking-Her-Elegance-in-Close-Up.jpg)
இஷிதா (மனதிற்குள் வக்கிரமாக): "ஹாஹா... இவன் இன்னும் அந்தத் தீவுக் பெண்ணின் வசியத்தில் இருந்து மீளவில்லை! தன் ஆண்மை காயப்பட்டுத் தவிக்கும் இந்த மிருகத்தை என் வலைக்குள் வீழ்த்துவது எனக்கு இன்னும் எளிதாகிவிட்டது. இவனைப் பலிகடா ஆக்க இதைவிடச் சிறந்த நேரம் கிடைக்காது!"
அவள் தன் முகத்தில் ஒரு போலிப் பரிதாபத்தையும், வசியப் புன்னகையையும் வரவழைத்துக் கொண்டு, அவனது நெருங்கிச் சென்று தன் மென்மையான குரலில் பேசத் தொடங்கினாள்.
இஷிதா: "என்ன ரியான்... இப்படி நிலை கொள்ளாமல் அறைக்குள் அலைந்து கொண்டிருக்கிறாய்? எத்தனையோ பிசினஸ் டீல்களை (Business deals) ஒற்றைக் கையால் முடித்த உன்னுடைய இந்தத் தவிப்புக்குக் என்ன காரணம்..."
அவளது குரலைக் கேட்டதும் ரியான் திடுக்கிட்டுத் திரும்பினான். அவனது கண்கள் சிவந்திருந்தன. அவளிடம் தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்ள விரும்பாமல், "இஷிதா... நீ ஏன் இப்போது இங்கே வந்தாய்? எனக்குக் கொஞ்சம் தனிமை தேவை" என்று கரடுமுரடான குரலில் கூறினான்.
ஆனால் இஷிதா பின்வாங்கவில்லை.
இஷிதா:"(அவனது தவிப்பைக் கண்டு தன் உதடுகளில் ஒரு மாயப் புன்னகையை வரவழைத்துக்கொண்டு) உன்னோட இந்த நிலைமைக்கு என்ன காரணம் என எனக்கு நன்றாகத் தெரியும் ரியான்... அந்தச் சிற்பிகாதானே?"
அவளது வாயிலிருந்து சிற்பிகாவின் பெயர் வெளிப்பட்ட அந்த விநாடி, ரியான் இடி தாக்கியவன் போலத் திடுக்கிட்டுத் திரும்பினான்! அவனது கண்கள் அகல விரிய, தன் ரகசியம் இவளுக்கு எப்படித் தெரிந்தது என்ற அதிர்ச்சியில் அவளை உற்றுப் பார்த்தான்.
ரியான்:"உனக்கு... உனக்குச் சிற்பிகாவைப் பற்றி எப்படித் தெரியும் இஷிதா?
இஷிதா சற்றும் பதற்றமடையாமல், தன் முகத்தில் ஒரு மாபெரும் போலி வருத்தத்தை வரவழைத்துக் கொண்டாள். அவளது கண்கள் லேசாகக் கசிவது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றினாள்.
இஷிதா:"(நெஞ்சில் கைவைத்து, ஏமாற்றமடைந்த காதலி போல) நாம் இந்த அந்தமான் தீவுகளுக்கு வருவதற்கு முன்னால்... ரியான் என் மீது எவ்வளவு கண்ணாக இருந்தான்? என் அழகிலும் பேச்சிலும் மயங்கிக் கிடந்தான். ஆனால், இங்கே இந்தத் தீவுக்கு வந்த பிறகு அவன் முற்றிலும் மாறிவிட்டான்! உனக்குள் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்பதை என் பெண்மை உணர்ந்தது ரியான். அதனால்தான் உன்னை நான் ரகசியமாகப் பின் தொடர்ந்தேன்... அப்பொழுதுதான் அந்தச் சிற்பிகாவைப் பற்றிய எல்லா விவரமும் எனக்குத் தெரிந்தது!"
அவள் சொன்னதைக் கேட்டதும் ரியானின் முகம் கோபத்தால் சுருங்கியது. தன் கம்பெனியின் கீழ் வேலை செய்யும் ஒரு பெண், தன் சொந்த ரகசியங்களை உளவு பார்த்தாள் என்பதை அவனது ஆண்மை திமிரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் அவளது கையைப் பற்றி உக்கிரமாகக் கத்தினான்.
ரியான்: "என்ன..? என் ரகசியங்களையே நீ பின் தொடர்ந்தாயா? எவ்வளவு தைரியம் இருந்தால் நீ என்னையே உளவு பார்த்திருப்பாய் இஷிதா!"
ரியானைப் பலிகடா ஆக்கத் துணிந்த இஷிதா, அவனது அந்தக் கோபத்தைக் கண்டு சற்றும் பயப்படவில்லை. அவள் அவனது கண்களை நேராகப் பார்த்து, வசியக் குரலில் அந்த இறுதித் தூண்டிலைப் போட்டாள்.
இஷிதா: "நான் உன்னைப் பின் தொடர்ந்தது தப்புதான் ரியான்... ஆனால், நான் அப்படிச் செய்ததால்தான்... அந்தச் சிற்பிகாவை நீ முழுமையாக அடையும் வழி இப்போது எனக்குத் தெரிந்தது!"
அவள் 'சிற்பிகாவை அடையும் வழி' என்று அந்த வார்த்தையைச் சொன்ன அடுத்த விநாடி... ரியானின் உடம்பில் கொதித்துக் கொண்டிருந்த அத்தனை கோபமும், ஆக்ரோஷமும் அப்படியே பனியைப் போல உருகி வடிந்துவிட்டது! அவனது கண்கள் மீண்டும் காமத்தாலும் பேராசையாலும் ஒளிரத் தொடங்கின. அவளைத் துரத்தியடித்த சிற்பிகாவின் அந்த அழகு மேனியைத் தான் அடைவதற்கு இஷிதா ஒரு வழி வச்சிருக்கா என்ற எண்ணம் அவனது உறைந்துபோன நரம்புகளை மீண்டும் உசுப்பியது.
ரியான் தன் கைகளைத் தளர்த்தி, இஷிதாவின் முகத்திற்கு நேரே தன் முகத்தைக் கொண்டு வந்தான். அவனது மூச்சுக்காற்று இப்போது வேகமாக வெளிவந்தது.
ரியான்(பதற்றமும் காமமும் கலந்த குரலில்) சிற்பிகாவை அடையும் வழியா..? இஷிதா... விளையாடாதே! நீ சொல்வது உண்மையா?
இஷிதா: "நான் சொல்வது நூறு சதவீதம் உண்மைதான் ரியான்... ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் முழுமையாகத் தெரியும். சிற்பிகா எவ்வளவுதான் திமிர் பிடித்த பெண்ணாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே? தனக்காகத் தன் உயிரைக் கூடக் கொடுக்கத் தயங்காத ஒரு ஆணை ஒரு பெண் தன் வாழ்நாளில் பார்த்துவிட்டால்... கண்டிப்பாக எப்பேர்ப்பட்ட பெண்ணும் அவனிடம் விழுந்துவிடுவாள்! நீயும் சிற்பிகாவுக்காக உன் உயிரைக் கூடப் பணயம் வைத்து நான் சொல்வது போலச் செய்தால், கண்டிப்பாகச் சிற்பிகா உனக்குக் கிடைப்பாள்!"
அவளது வார்த்தைகள் ரியானுக்குள் ஒரு புதிய நம்பிக்கையையும், அவளது உடலை எப்படியாவது அடைய வேண்டும் என்ற பழைய காம வெறியையும் உசுப்பிவிட்டது. அவன் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அவசர அவசரமாகக் கேட்டான்.
ரியான்: "எனக்கு இன்னும் புரியவில்லை இஷிதா... கொஞ்சம் புரியற மாதிரி தெளிவா சொல்லு! நான் என்ன செய்ய வேண்டும்?"
இஷிதா தன் உதடுகளைக் கடித்துக்கொண்டு, சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துவிட்டு, அவனது காதருகே தன் முகத்தைக் கொண்டு சென்று அந்த ஆபத்தான சதித் திட்டத்தை விவரித்தாள்.
இஷிதா: "விஷயம் ரொம்ப சிம்பிள் ரியான்... இன்னிக்கு இரவு சரியாக 10 மணிக்குச் சிற்பிகா யாருக்கும் தெரியாமல் அந்தச் சென்டினல் தீவுக்கு (Sentinel Island) படகில் போகப் போறா! அதுதான் உனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த வாய்ப்பு."
அவள் அவனது நெஞ்சைத் தொட்டு, அவனது ஆண்மைத் திமிரைத் தூண்டும் விதமாகத் தொடர்ந்தாள்.
இஷிதா: "நீயும் துணிந்து அவளுக்குத் தெரியாமல், அவளுக்குப் பின்னாடியே இன்னொரு படகில் அந்த நரகத் தீவை நோக்கிப் போகணும்! அந்தச் சென்டினல் தீவுக்குப் போன உடனே, அவளுக்கு முன்னாடி போய் நீ கெத்தாக நின்றால்... அவளே அதிர்ச்சி ஆயிடுவா! தனக்காக உயிரைப் பணயம் வைத்து இவன் இந்த தீவுக்கே வந்துவிட்டானே என்று அவளது அந்தத் திமிர் பிடித்த நெஞ்சம் உருகிப்போகும். அங்கே உனக்கு அவளை முழுசாக அனுபவிக்கும் லக்கி சான்ஸ் (Lucky chance) கிடைக்கும்!"
ரியான்: "(கண்கள் விரிய, வியர்க்க விறுவிறுக்க) என்ன இஷிதா சொல்கிறாய்... சென்டினல் தீவா? அங்கே அந்நியர்கள் யாரும் கால் வைக்க முடியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேனே! அம்பு வேட்டைக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பார்களே... அங்கே போவது தற்கொலைக்குச் சமம் இல்லையா?"
இஷிதா: "(ரியானின் அந்தப் பயந்த கேள்வியைக் கேட்டுத் தன் உதடுகளைக் கடித்து, உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு) சிற்பிகாவின் அழகான கட்டுடல் மேனியும், அவளது காதலும் உனக்கு வேண்டும் என்றால்... இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துதான் ஆக வேண்டும் ரியான்! சும்மா ஏசி அறையில் அமர்ந்துகொண்டு அந்தத் தீவு தேவதையை நீ அடைய நினைத்தால் அது நடக்காத காரியம்!"
ரியான் சில நொடிகள் ஆழமாக யோசித்தான். அவனது சாத்தியமற்ற காம வெறி அவனது அறிவைக் குருடாக்கியிருந்தது.
ஆனால், திடீரென அவனுக்குள் இருந்த ஒரு எதார்த்தமான பயம் மீண்டும் தலைதூக்கியது. அவன் தன் தலையைக் கோதியபடி இஷிதாவைப் பார்த்துக் கேட்டான்.
ரியான்: "சரி ஓகே இஷிதா... நீ சொல்வது எல்லாம் சரிதான். ஆனால்... எனக்கு நீச்சல் தெரியாதே! நான் எப்படி தனியாக அந்த நடுக்கடலில் படகை ஓட்டிக்கொண்டு போக முடியும்? நான் பத்திரமாகச் சென்டினல் தீவுக்குச் சென்று, சிற்பிகா முன்னாடி நேராகப் போய் நின்றால்தானே அவளது அன்பை நான் பெற முடியும்? ஒருவேளை அந்த 23 கிலோமீட்டர் நடுக்கடலில் எனக்கு ஏதாவது ஆபத்து ஆகிவிட்டால்... நான் நினைத்ததெல்லாம் வீணாகிவிடுமே?"
இஷிதா (தன் மனதிற்குள் நக்கலாக): "ஹாஹா... இவனோடு எப்படி தீவுக்குள் செல்வது, இவனிடம் எப்படி சம்மதம் வாங்குவது என யோசித்து கொண்டு இருந்தேன். இப்போது விதி எனக்கு அருமையான வழி செய்துவிட்டது! முட்டாள் ரியான்... அங்கே தீவுக்குள் நுழைந்த உடனே உன்னுடைய நெஞ்சைக் குறிவைத்து விஷ அம்புகள் பாயக் காத்துக் கொண்டிருக்கின்றன. நீ என்னவென்றால் நடுக்கடலில் நீச்சல் தெரியாமல் மூழ்கிவிடுவேன் என்று பயப்படுகிறாயா? நீ தீவுக்குப் போய் சேர்ந்தால்தானே என் திட்டம் நிறைவேறும்! உன்னை நான் அத்தனை சீக்கிரம் கடலில் மூழ்கவிட மாட்டேன்."
அவள் தன் முகத்தில் ஒரு போலிச் சோகத்தையும் அக்கறையையும் வரவழைத்துக் கொண்டு, ரியானின் கைகளைப் பற்றினாள்.
இஷிதா:"சரி ரியான்... நீ இவ்வளவு பயப்படுகிறாய் அல்லவா? உன் கூட ஒரே படகில் நானே வருகிறேன்! நாம் இருவரும் மாறி மாறித் துடுப்புப் போட்டுக் கொண்டே செல்வோம்.எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். அதனால் நடுக்கடல் ஆபத்தைப் பற்றி நீ பயப்படவே வேண்டாம். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் — தீவில் இறங்கியவுடன் நேராகச் சிற்பிகாவின் முன்னால் போய் நிற்பது மட்டும்தான்!"
இஷிதாவின் அந்தப் போலிப் பாதுகாப்புக் கதையைக் கேட்டதும், ரியானின் முகத்தில் மீண்டும் ஒரு மாபெரும் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. இஷிதா தன் கூடவே வருவதால் கடலில் எந்த ஆபத்தும் வராது என்றும், தீவில் இறங்கிச் சிற்பிகாவின் மேனியைத் தன் வசமாக்கிவிடலாம் என்றும் அவன் முழுமையாக நம்பினான்.
காலம் தன் அமானுஷ்யக் கணக்குகளைத் தொடங்க, கடிகார முள் சரியாக இரவு 10 மணியைத் தொட்டது.
![[Image: bd3203a42c825b32beaf57f3cf727a85.jpg]](https://i.ibb.co/fdYLL9rS/bd3203a42c825b32beaf57f3cf727a85.jpg)
அந்தச் சென்டினல் தீவுப் பையனும், சிற்பிகாவும் தங்களின் சிறிய மரப் படகில் ஏறி, சத்தமில்லாமல் நடுக்கடலை நோக்கித் துடுப்புப் போடத் தொடங்கினர். கடல் நீரோட்டம் சென்டினல் தீவை நோக்கி வேகமாக இருந்ததால், அவர்களின் படகு சில நொடிகளில் இருளுக்குள் மறைந்தது.
சிற்பிகா கண்களை விட்டு மறைந்த அந்த நொடி, ரியானின் இதயம் பயத்திலும் கவலையிலும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. சுற்றிலும் சூழ்ந்திருந்த அடர்ந்த இருள் அந்த நடுக்கடலை இன்னும் பயங்கரமாகக் காட்டியது.
அப்போது, அவர்கள் மறைந்திருந்த மரங்களின் பின்னாலிருந்து மெல்லிய இலைகளின் சலசலப்பு சத்தம் கேட்டது. ரியான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், இருளுக்குள்ளிருந்து இரண்டு உருவங்கள் மெல்ல வெளிப்பட்டன. கறுத்த உடலமைப்பும், கடலின் உப்புக்காற்றைத் தாங்கிய கரடுமுரடான முகங்களுடனும் அவர்கள் இருவரும் கைகளில் மரத் துடுப்புகளைப் பிடித்தபடி நின்றிருந்தனர். அவர்களின் கண்கள் அந்த இருட்டிலும் கூர்மையாக மின்னின.
ரியான் பதற்றமடைந்து பின்வாங்க முயன்றபோது, இஷிதா அவனது தோளைத் தொட்டு அமைதிப்படுத்தினாள். அவளது முகத்தில் எந்த சலனமும் இல்லை; மாறாக, ஒரு மர்மமான புன்னகை மட்டுமே இருந்தது.
"ரியான்.. பதற்றப்படாதே!" என்று மெல்லிய குரலில் தொடங்கிய இஷிதா, அந்த இருவரையும் சுட்டிக்காட்டி, "இவங்க இந்த தீவில் வசிக்கும் மீனவர்கள். கடலையும் இந்த அலைகளின் திசையையும் இவங்களை விட யாராலும் நல்லா புரிஞ்சுக்க முடியாது. இவங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு படகில் நம்மை இருவரும் அழைத்து செல்வார்கள்" என்றாள்.
ரியான் அந்த மீனவர்களை சந்தேகத்தோடு பார்த்தான். ஆனால், சிற்பிகாவை அடைய வேண்டும் என்ற அவசரம் அவன் புத்தியை மறைத்திருந்தது. இஷிதா தொடர்ந்து பேசினாள்.
"பிறகு Sentinel தீவு அருகில் வந்த உடனே இவர்கள் இருவரும் ஒரு படகில் திரும்பி விடுவார்கள். பிறகு நாம் இருவர் மட்டுமே Sentinel தீவு நோக்கி செல்ல வேண்டும்.. இப்போ நாம கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. வா போகலாம்," என்றாள்.
இஷிதா சொல்லி முடித்ததும், அந்த மீனவர்கள் இருவரும் கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய மரப் படகுகளை இழுத்து வந்து தண்ணீரில் விட்டனர். அலைகள் படகின் பக்கவாட்டில் மோதி பலத்த சத்தத்தை எழுப்பின.
இஷிதா ஒரு மீனவனுடன் ஏறி அமர்ந்துகொண்டாள்.
ரியான் மற்றொரு மீனவனுடன் ஏறிக்கொண்டான்.
"தயாராக இரு ரியான், கடலின் வேகம் அதிகமாக இருக்கிறது!" என்று இருட்டைக் கிழித்துக் கொண்டு இஷிதாவின் குரல் கேட்டது.
மறுநொடி, அந்த இரு மீனவர்களும் தங்களின் வலிமையான கரங்களால் துடுப்புகளைக் கடலுக்குள் பாய்ச்சி, ஒரே சீராகப் போடத் தொடங்கினர். இரண்டு படகுகளும் கரையை விட்டு விலகி, அந்தப் பெருங்கடலின் கும்மிருட்டுக்குள் மெல்ல நகர ஆரம்பித்தன.
கீழே எழும்பி அடங்கும் அலைகளின் சீற்றமும், மேலே வானில் மேக மூட்டத்திற்குள் மறைந்திருந்த நிலவின் மங்கலான வெளிச்சமும் அந்தப் பயணத்தை விவரிக்க முடியாத பயங்கரத்தோடு மாற்றின. சிற்பிகாவைத் தேடி, ரியான் தன் வாழ்நாளின் மிக ஆபத்தான பயணத்தை நோக்கி, இஷிதா விரித்த சதி வலையில் அறியாமல் பயணித்துக் கொண்டிருந்தான்.
கும்மிருட்டு, ஆக்ரோஷமான கடல், பின்னால் துரத்தும் மரணம் என எதுவும் அறியாமல், ரியானும் இஷிதாவும் அந்த இரண்டு தனித்தனிப் படகுகளில் நடுக்கடலை நோக்கிக் பயணித்தனர்.
கரையின் எல்லை தாண்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே கடலின் நிஜமான முகம் அவர்களுக்குத் தெரியத் தொடங்கியது.
அலைகள் சாதாரணமானவையாக இல்லை; அவை கருநாகங்களைப் போலச் சீறிக்கொண்டு படகின் மீது மோதின. ஒவ்வொரு முறை அலையின் உச்சிக்கு படகு ஏறும்போதும், ரியானின் இதயம் தொண்டைக் குழிக்கு வந்தது. அடுத்த நொடி, ஒரு பெரிய பள்ளத்தில் விழுவதைப் போலப் படகு கீழே இறங்கியது.
"சளக்... சளக்..." என்று குளிர்ந்த கடல் நீர் ரியானின் முகத்தில் சாட்டையடி போல வந்து விழுந்தது. சுற்றிலும் கும்மிருட்டு. வானமா, பூமியா என்று பிரிக்க முடியாத அந்தப் பெருவெளியில், அவர்கள் செல்லும் சிறிய மரப்படகு ஒரு தீக்குச்சியைப் போல அலைகளால் தூக்கி வீசப்பட்டது.
படகின் பலகைகள் அலைகளின் அழுத்தத் தாங்காமல் "கிரீச்... கிரீச்..." என்று முனகின. அந்தச் சத்தம் எப்போது வேண்டுமானாலும் படகு இரண்டாக உடையலாம் என்ற பீதியை ஏற்படுத்தியது.
முன்னால் செல்லும் படகில் இஷிதா ஒரு சிலையைப் போல அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளை அழைத்துச் செல்லும் மீனவன், கடலின் சுழல்களையும் நீரோட்டங்களையும் அக்குவேற ஆணிவேறாகத் தெரிந்தவன் போல, அலைகளின் வீச்சிற்குத் தகுந்தபடி துடுப்பை வளைத்துச் செலுத்தி ஓட்டினான்.
ஆனால் ரியானின் படகோ, கடலின் சீற்றத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டு நின்றது. நீரோட்டம் சென்டினல் தீவை நோக்கிச் செங்குத்தாக இழுத்துச் சென்றதால், துடுப்புப் போடாமலேயே படகு அதிவேகமாக முன்னோக்கிப் பாய்ந்தது. அது பயணம் போல இல்லை; ஒரு பெரிய ஆபத்தை நோக்கி வழுக்கிக் கொண்டு ஓடுவது போல இருந்தது. தூரத்தில் மிரட்டும் கறுப்பு நிழலாக சென்டினல் தீவின் அடர்ந்த காடுகள் மெல்லத் தெரியத் தொடங்கின.
ரியானின் உடம்பு குளிரில் நடுங்கியது, ஆனால் அவனது மூளைக்குள் பயமும் காதலும் சேர்ந்து தீயாய் எரிந்து கொண்டிருந்தது.
"நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்? ஒரு தடை செய்யப்பட்ட தீவு... மனிதர்களே செல்ல முடியாத இடம். அங்கே சிற்பிகா ஒரு பழங்குடிப் பையனுடன் தனியாகச் சென்றிருக்கிறாள்.
அவனது உள்ளுணர்வு ஏதோ ஒரு பேராபத்து காத்துக் கொண்டிருப்பதாக எச்சரித்தது. இஷிதாவின் திடீர் உதவி, நள்ளிரவில் இந்த மீனவர்கள், இந்தத் திட்டமிடல்... எல்லாமே ஏதோ ஒரு கணினியில் ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல மிகச் சரியாக நடப்பது அவனுக்குள் லேசான சந்தேகத்தை விதைத்தது.
தன் பக்கத்தில் அமர்ந்து வெறித்துப் பார்த்தபடி துடுப்புப் போடும் அந்த மீனவனின் முகத்தைப் பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
ஒருவேளை நான் சிற்பிகாவைப் பார்ப்பதற்குள் இந்த அலையிலேயே மூழ்கிவிடுவேனோ? அல்லது அந்தத் தீவுக்குள் நுழைந்ததும்...!
ரியான் தன் கைகளை இறுக மூடிக்கொண்டான். பயம் அவனது தொண்டையை அடைத்தது. ஆனால், "சிற்பிகா..." என்ற பெயர் அவனது இதயம் முழுக்க நிரம்பியிருந்ததால், அந்த நடுக்கடலின் மரண பயத்தையும் தாண்டி, அவன் கண்கள் இருட்டைக் கிழித்துக் கொண்டு சிற்பிகாவின் படகோட்டத்தைத் தேடின.
அவன் அறியவில்லை... கடலின் அலைகளை விட, தனக்குப் முன்னால் சென்று கொண்டிருக்கும் இஷிதாவின் வஞ்சக அலை மிகவும் ஆபத்தானது என்று!
அந்தப் பேய்க்காற்றின் இரைச்சலையும், அலைகளின் சீற்றத்தையும் கிழித்துக் கொண்டு, தூரத்து நடுக்கடலில் இருந்து ஒரு மெல்லிய நாதம் காற்றில் மிதந்து வந்தது.
அது ஒரு பெண்ணின் குரல்... மிகவும் பரிச்சயமான, ரியானின் இதயத் துடிப்போடு கலந்த குரல். ஆமாம், அது சிற்பிகாவின் குரல் தான்!
முன்னே இருளுக்குள் சென்றுகொண்டிருக்கும் தன் படகில் அமர்ந்தபடி, துடுப்புப் போடும் அந்தச் சென்டினல் தீவுப் பையனின் மௌனத்திற்கு இடையே, தன் மனதில் தேங்கிக் கிடக்கும் பிரிவுத் துயரத்தை ஒரு சோகப் பாடலாக உதிர்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
"உதிரம் படிந்த சோழ மண்ணின்...
உறைந்து போன என் இதயமே!
நேற்றைய போரில் துடித்த உயிரை,
இன்றும் தேடி வருகிறேனே!
அன்பே... என் பேராசை அன்பே...
என் கண் முன்னே நீ மறைந்தாயே,
இந்த ஜென்மத்திலும் என்னை மறந்தாயே!
பின்தொடர்ந்து வரும் ஒரு காதல் நிழல்,
என் நெஞ்சின் துயரம் அறியவில்லை!
தோள் கொடுக்க இங்கே ஒருவன் உண்டு,
ஆனால் என் ஆத்மா அவனிடம் கரையவில்லை!
சென்டினல் தீவின் இருட்டுக்குள்ளே,
என் சோழ நாட்டு இளவரசன் எங்கே?
காலங்கள் தாண்டி நான் தேடும் கைகள்,
மீண்டும் என்னைத் தீண்டுவது எங்கே?
கடல் அலைகள் என்னை இழுத்துச் செல்ல,
என் கண்கள் உன்னைத் தேடுதடா!
இப்பிறவியின் பாசம் எனக்கு வேண்டாம்,
முன்பிறவியின் மரணமே போதுமடா!
காப்பாற்ற நினைக்கும் இதயத்தை விடுத்து,
காணாமல் போன உன்னைத் தேடி...
கரை சேராமல் மடிகிறேனே!
பாடல் வரிகள் அந்த நள்ளிரவுக் கடலில் எதிரொலித்து ரியானின் காதுகளை அடைந்ததும், அவனுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.
"சிற்பிகா... இது சிற்பிகாவின் குரல் தான்! அவள்தான் பாடுகிறாள்!" என்று ரியான் தத்தளிப்போடு கத்தினான்.
அவள் பாடிய ஒவ்வொரு வார்த்தையும் அவனது இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது.ஆபத்தான கடல் என்ற பயத்தையெல்லாம் விட, "சிற்பிகா... நான் வந்துட்டே இருக்கேன்!" என்று இருட்டைப் பார்த்து சத்தமாகக் கத்தினான் ரியான்.
ஆனால், அவனது குரல் அலையின் சத்தத்தில் அடங்கிப்போனது. அவனுக்குப் முன்னால் இருந்த படகில், இஷிதாவின் முகத்தில் ஒரு வக்கிரமான முறுவல் அரும்பியது.
கடலின் சீற்றம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. அலைகள் படகுகளைத் துவம்சம் செய்துகொண்டிருந்த வேளையில், திடீரென அந்த இரண்டு மீனவர்களும் துடுப்புப் போடுவதை நிறுத்தினர். சுற்றிலும் ஒருவிதமான மயான அமைதி நிலவியது. சென்டினல் தீவின் கரையை மிக நெருங்கிவிட்டதை அந்த மௌனமே உணர்த்தியது.
இஷிதா அமர்ந்திருந்த படகில் இருந்த மீனவன், புயலில் சிக்கிய பறவையைப் போலத் தன் உடலைச் சமன் செய்துகொண்டு, ரியான் இருந்த படகின் விளிம்பைப் பற்றினான். "இப்போவே மாறு!" என்ற அவனது கட்டளை இருட்டையும் தாண்டி அதிரடியாக ஒலித்தது.
இஷிதாவின் படகுக்குத் தாவ வேண்டிய கட்டாயம் ரியானுக்கு ஏற்பட்டது. அவன் எழுந்து நின்றான். ஆனால், கடலின் அந்தப் பிரம்மாண்டமான அலைகள் படகை ஒரு விளையாட்டுப் பொருள் போல அங்கும் இங்கும் தூக்கி வீசின. ரியானால் ஒரு நொடி கூட நிலையாக நிற்க முடியவில்லை. உடல் தள்ளாடியது; கால்கள் வழுக்கின
"ரியான், சீக்கிரம்!" என்று இஷிதா படகின் விளிம்பில் இருந்து கத்தினாள்.
அவளது குரலில் இருந்த அவசரம் பயத்தினால் அல்ல, அவன் விரைவில் அந்தத் தீவின் எல்லைக்குள் சென்று சேர வேண்டும் என்ற வஞ்சகத் துடிப்பு. ரியான் தன் கைகளை நீட்டி, அந்த மீனவர்களை இறுகப் பற்றிக்கொண்டான். இருபுறமும் இருந்த மீனவர்கள் அவனை ஒரு பொதி போலத் தூக்கி, இஷிதா இருந்த படகின் விளிம்பிற்கு இழுத்தனர். ரியான் தடுமாறி, அந்தப் படகின் தட்டுப்பகுதியில் விழுந்து, அப்படியே தவழ்ந்து வந்து இஷிதாவின் அருகில் அமர்ந்தான்.
மூச்சு வாங்கிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தான் ரியான்.
அந்த மீனவர்கள் இருவரும் இருளை உற்றுப் பார்த்தனர். அவர்களின் கண்கள் பயத்தில் விரிந்திருந்தன. ரியானையும் இஷிதாவையும் பார்த்த அந்த மீனவன், கறாரான குரலில் எச்சரித்தான்:
"இங்கிருந்து கரை மிக அருகில் இருக்கிறது. இங்கே அதிக நேரம் இருக்க வேண்டாம். மீண்டும் விடிவதற்குள் இந்தத் தீவை விட்டு கிளம்பி விடுங்கள்... இல்லையென்றால் உங்களை யாரும் காப்பாற்ற முடியாது. இங்கிருக்கும் பழங்குடி மக்கள் மனிதர்களைப் பார்க்க விரும்புவதில்லை. விடிந்தால் நீங்கள் அவர்களின் கண்ணில் பட்டுவிடுவீர்கள்!"
சொல்லி முடித்த அந்த மீனவர்கள், எந்தக் காலதாமதமும் செய்யாமல், காலிப் படகைத் திருப்பிக் கொண்டு இருளுக்குள் வேகமாகப் பின்வாங்கத் தொடங்கினர். அவர்கள் மீண்டும் திரும்புவார்கள் என்று தோன்றவில்லை.
இப்போது, ரியானும் இஷிதாவும் மட்டும் அந்தச் சிறிய படகில், இருள் சூழ்ந்த சென்டினல் தீவின் மடியில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
![[Image: 904318eb-d5d7-444f-a3d5-4aa69592e0bf.jpg]](https://i.ibb.co/qMwTSzQk/904318eb-d5d7-444f-a3d5-4aa69592e0bf.jpg)
அந்த மீனவர்கள் இருட்டுக்குள் மறைந்த அந்த நொடி, நடுக்கடலின் நிஜமான கோர முகம் அவர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டது. சுற்றிலும் மனித நடமாட்டமே இல்லாத, சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஒரு தீவின் எல்லை. நாகரிக உலகம் எட்டாத அந்தப் பெருவெளியில், இப்போது இயற்கை அவர்களை அச்சுறுத்தத் தொடங்கியது.
கடல் அலைகளின் சத்தம் இப்போது வெறும் தண்ணீரின் ஓசையாகக் கேட்கவில்லை; அது ஏதோ ஒரு பசி வெறி பிடித்த மிருகம் கர்ஜிப்பதைப் போலக் கேட்டது.
"ஹூஊஊ... சளக்... பட்!" என்று அலைகள் கரடுமுரடான பாறைகளின் மீது மோதி உடையும் சத்தம், காதுகளைச் செவிடாக்குவது போலத் தீவின் பக்கவாட்டில் இருந்து எதிரொலித்தது.
ஒவ்வொரு முறையும் ஒரு பிரம்மாண்டமான கறுப்பு அலை இவர்களின் சிறிய மரப் படகை நோக்கி வரும்போதும், மரணத்தின் கைகள் தங்களை நோக்கி நீள்வது போன்ற பீதி ரியானுக்கு ஏற்பட்டது. படகின் அடியில் நீர் சுழன்று அடிக்கும் "உஷ்... உஷ்..." என்ற சத்தம், கடலுக்கு அடியில் ஏதோ ஒரு ராட்சத விசித்திர உயிர் காத்துக் கொண்டிருப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியது.
சுற்றிலும் கும்மிருட்டு. வானத்தில் மேகங்கள் திரண்டு நின்றதால், நிலவின் வெளிச்சம் கூட அந்தப் பகுதிக்கு வர அஞ்சியது போல இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கறுப்பு நிறத் திரைச்சீலையைத் தொங்கவிட்டது போல, கடலும் வானமும் ஒன்றோடு ஒன்று கலந்து கிடந்தன.
அவர்களுக்கு மிக அருகில், சில மீட்டர்கள் தொலைவில் சென்டினல் தீவின் அடர்ந்த காடு ஒரு பிரம்மாண்டமான அரக்கனைப் போல எழுந்து நின்றது. காற்றின் வேகத்தில் அங்கிருந்த ராட்சத மரங்களின் கிளைகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் "கிரீச்... மொடக்..." என்ற சத்தம், அந்த நள்ளிரவில் நெஞ்சைப் பிளந்தது.
அவ்வப்போது காட்டின் ஆழத்திலிருந்து விசித்திரமான பறவைகளின் அலறல் சத்தமும், மனிதக் குரல் போன்ற ஏதோ ஒரு விசித்திர ஒலியும் காற்றில் மிதந்து வந்தன. அது அந்தத் தீவின் பழங்குடி மக்கள் இவர்களின் வருகையை அறிந்து எழுப்பும் சத்தமா, அல்லது காட்டு மிருகங்களின் சத்தமா என்று பிரிக்க முடியாத ஒரு திக் திக் நிமிடம் அது!
படகில் தேங்கி நின்ற குளிர்ந்த கடல் நீர் ரியானின் கால்களை உறைந்து போகச் செய்தது. உடம்பு குளிரில் நடுங்கினாலும், பயத்தின் காரணமாக அவனது நெற்றி வியர்த்துக் கொட்டியது.
மீனவர்கள் சொன்ன எச்சரிக்கை அவன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது: *"விடிவதற்குள் கிளம்பி விடுங்கள்... இல்லையென்றால் உங்களை யாரும் காப்பாற்ற முடியாது!"
கூர்மையான அம்புகளைக் கைகளில் ஏந்தி, இருட்டுக்குள் மறைந்திருக்கும் அந்தப் பழங்குடி மனிதர்களின் நடமாட்டம், அந்த மரங்களின் நிழல்களிலேயே தெரிவது போல ரியானுக்கு ஒரு பிரமை தட்டியது. துடுப்பை இறுகப் பற்றியபடி, இருட்டின் ஆழத்தில் எங்கோ இருக்கும் சிற்பிகாவை நினைத்து, தன் வாழ்நாளின் மிக பயங்கரமான நொடிகளை அந்த நடுக்கடலில் அவன் கடக்கத் தொடங்கினான்.
இஷிதா தன் பலம் கொண்ட மட்டும் கரையை நோக்கித் துடுப்பைச் செலுத்த செலுத்த, சென்டினல் தீவின் பயங்கர வடிவம் அந்த இருட்டிலும் லேசாகத் தென்படத் தொடங்கியது. ஆனால், அந்த நிம்மதி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை.
அடர்ந்த கறுப்புச் சுவராக நின்ற அந்த மரக் கூட்டங்களுக்கு இடையே, திடீரென ஒரு சிறு விண்மீனைப் போல ஒரு தீப்பொறி தோன்றியது. அடுத்த சில விநாடிகளில், "திபு திபு" என வரிசையாக நூற்றுக்கணக்கான சிறு சிறு விளக்குகளைப் போல தீப்பந்தங்கள் அந்த இருட்டுக் காடெங்கும் முளைக்க ஆரம்பித்தன.
தீப்பந்தங்களின் சிவந்த வெளிச்சத்தில், கைகளில் வில் மற்றும் அம்புகளுடன் ஆக்ரோஷமாக அசைந்தாடும் மனிதர்களின் நிழல் உருவங்கள் குட்டி குட்டியாக மிரட்டும் விதத்தில் தெரிந்தன. அதைவிடக் கொடூரமாக, காட்டின் ஆழத்திலிருந்து அவர்கள் எழுப்பிய, "ஹூஹூ... ஹா... ஹா..." என்ற விசித்திரமான காட்டுச் சத்தங்கள் நள்ளிரவுக் கடலின் இரைச்சலையும் தாண்டி அலறியது.
அந்தச் சத்தம் கேட்ட அடுத்த கணமே, ரியானுக்கு பயத்தில் அடிவயிறு கலங்கி, கைகால்கள் நடுங்கத் தொடங்கின.
அவர்கள் சுதாரிப்பதற்குள், கரையில் இருந்து எரியும் நெருப்பைக் கக்கிக் கொண்டு, நூற்றுக்கணக்கான அம்புகள் இருட்டைக் கிழித்துக் கொண்டு இவர்களின் படகை நோக்கிச் சரமாரியாகப் பாய்ந்து வந்தன! சில அம்புகள் "சுவ்... சுவ்..." என்று ரியானின் காதோரமாகப் பாய்ந்து கடலுக்குள் விழுந்து அணைந்தன.
பயத்தின் உச்சத்துக்கே சென்ற ரியான், "இஷிதா! நாம் இங்கே வருவது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? இப்போ என்ன பண்றது? சீக்கிரம் படகைத் திருப்பு!" என்று அலறிக் கொண்டே இஷிதாவின் கையைப் பற்றினான்.
ஆனால், இஷிதா அவனது கையை உதறிவிட்டு, அந்தத் தீப்பந்த வெளிச்சத்தில் வக்கிரமாகச் சிரித்தாள். அவளது கண்களில் பழிவாங்கும் வெறி அப்பட்டமாகத் தெரிந்தது.அவளின் வஞ்சக சிரிப்பு அவள் நிழலில் கூட தெளிவாக தெரிந்தது
"இஷிதா... ஏன் சிரிக்கிறாய்?" என்று ரியான் பதறினான்.
"ரியான்! என்னை விட அழகான ஒரு பெண் கிடைத்த உடனே என்னை முற்றிலும் மறந்து விட்டாய் தானே? இந்த இஷிதாவின் காதலைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்தச் சிற்பிகாவின் பின்னால் அலையும் போதே உனக்கு இந்த முடிவுதான் என்று நான் முடிவு செய்துவிட்டேன்.அவர்களுக்கு நீ இங்கே வருவாய் என்று முன்கூட்டியே தகவல் கொடுத்ததே நான்தான்!" என்று வெறித்தனமாகக் கத்தினாள்.
![[Image: Kayadu-Lohar.jpg]](https://i.ibb.co/938WBpm6/Kayadu-Lohar.jpg)
"இஷிதா... நீயா இப்படி...?"
"ஆமாம் ரியான்! உனக்கு இந்த கொடூர மரணம் தேவைதான். என் காதல் கிடைக்காத நீ, இந்த உலகத்திலேயே வாழக் கூடாது!" என்று வஞ்சகமாகச் சிரித்தபடியே, தன் தோளில் இருந்த வாட்டர்ப்ரூஃப் பையை இறுகப் பற்றிக் கொண்டு, படகின் விளிம்பிலிருந்து லாவகமாகக் கடலுக்குள் குதித்தாள்.
அவள் அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட் மற்றும் நீச்சல் உபகரணங்களின் உதவியோடு, கடல் நீரோட்டத்தை பயன்படுத்தி வேகமாகக் நீந்தி மறைந்தாள்.
நெருப்பு அம்புகளின் வீச்சிற்கு நடுவே, துடுப்புப் போடக் கூடத் தெரியாமல் ரியான் படகின் நடுவே நிலைகுலைந்து போய் அமர்ந்திருந்தான். அலைகளின் வேகம் குறையவில்லை; மாறாக, ஒவ்வொரு அலையும் அந்தச் சிறிய மரப் படகை வஞ்சகமே இல்லாமல் சென்டினல் தீவின் கரையை நோக்கியே மெல்ல மெல்ல இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.
ரியானின் இந்த விபரீதமான சூழ்நிலை, வடிவேலுவின் அந்தப் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியைப் போலத்தான் இருந்தது.
படத்தில் வடிவேலு பீச்சில் எப்படியோ கஷ்டப்பட்டுத் திருடிவிட்டு, ஒரு குதிரை மீது ஏறி "ஹையா... தப்பிச்சுட்டோம்!" என்று நினைத்து அதிவேகமாக ஓடுவார். ஆனால், அந்தப் பாழாய்ப்போன குதிரை கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, இவரைச் சுமந்துகொண்டே மீண்டும் திருடிய இடத்திற்கே—அதாவது இவரை அடிக்கக் காத்திருக்கும் ஊர் கூட்டத்தின் நடுவிற்கே—அப்படியே யூ-டர்ன் போட்டுத் திருப்பிக் கொண்டு வந்து நிறுத்தும். அங்கே ஊரே கைகளில் கட்டை, கடப்பாரைகளுடன் வடிவேலுவை 'வரவேற்க' ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருக்கும்.
அதே போன்ற ஒரு கொடூரமான விதியின் விளையாட்டிற்குள் இப்போது ரியான் சிக்கியிருந்தான். அவன் தப்பிக்க நினைத்த கரையை நோக்கியே, அந்தப் படகு அவனைச் சுமந்து கொண்டு அடி மேல் அடி எடுத்து வைத்து நகர்ந்தது.
படகு கரையை நெருங்க நெருங்க, தீப்பந்தங்களின் சிவந்த வெளிச்சத்தில் அந்தத் தீவின் கோர முகம் இன்னும் அப்பட்டமாகத் தெரிந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)