♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
Episode - 175

[Image: images.jpg]

இஷிதா: "(கை கொட்டி, நக்கலாகச் சிரித்தபடி) ஹா... ஹா... ஹா! என்ன கதை விடுகிறாய்? ஒரு பெண்தானே அவள்? அதுவும் நீ வர்ணித்த அந்த ஒல்லி இடுப்புப் பெண், அவ்வளவு பெரிய அசுரக் காட்டுப் பன்றியைத் தூக்கி ஒரே அடியில் வீழ்த்தினாளாம்! சும்மா கதை புனைந்து பேசாதே... உன் தோல்வியை மறைக்க அவளுக்கு அமானுஷ்யப் பலம் இருப்பதாகக் கற்பனை செய்கிறாயா?"

அவளது நக்கல் சிரிப்பைக் கேட்டதும் அந்தச் சென்டினல் பையனின் முகம் கோபத்தாலும், உண்மையான பயத்தாலும்  சிவந்தது.

சென்டினல் பையன்: "என் குல தெய்வத்தின் மீது ஆணை இஷிதா... நான் சொல்வது அத்தனையும் அப்பட்டமான உண்மை! அன்று அந்த இருட்டுப் பள்ளத்தாக்கில் நான் என் சொந்தக் கண்களால் பார்க்காமல் இருந்திருந்தால், இந்தச் சம்பவத்தை உன்னைப் போல நானும் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன். இப்பவும்... அன்று அந்தப் பன்றியின் கழுத்தை வெட்டி, அதன் ரத்தக் கறை படிந்த முகத்தோடு பலிபீடத்தின் முன்னே அவள் விஸ்வரூபம் எடுத்து நின்ற கோலத்தை நினைக்கும் பொழுது என் ஈரக்குலை நடுங்கும்! அன்றே... அந்த விநாடியே அவளது உடல் மீது எனக்கு இருந்த மோகம் முற்றிலும் வடிந்துவிட்டது!"

அவனது முகத்தில் தெரிந்த அந்த உண்மையான மரண பயத்தைக் கண்டதும் இஷிதாவின் சிரிப்பு மெல்ல அடங்கியது. அவளது கண்கள் லேசாகச் சுருங்க, அவள் ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்கினாள்.

சியாமந்தக மாலை என்பது பேரறிவையும், எல்லையற்ற செல்வத்தையும் அள்ளித் தரும் ஒரு அபூர்வப் பொருள் என்று இஷிதா கேள்விப்பட்டிருக்கிறாள். அதை அணிந்திருப்பவர்களின் மேனி ஒரு தெய்வீக ஒளியோடு மின்னும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

ஆனால், அந்த மாலை ஒரு பெண்ணுக்குள் இப்படிப்பட்ட ஒரு அசுரத்தனமான, காட்டு மிருகங்களையே அலேக்காகத் தூக்கி அடிக்கும் அமானுஷ்ய சக்தியை உருவாக்குமா என்பதைப் பற்றி அவளது அப்பா அவளுக்கு எச்சரிக்கவில்லை! ஒருவேளை அந்தச் சக்தி சிற்பிகாவின் வம்சாவளி வழியில் வருகிறதா, அல்லது மாலையின் உண்மையான விஸ்வரூபமா என அவள் உள்ளுக்குள் கணக்குப் போட்டாள்.

அவள் தன் யோசனையிலிருந்து மீண்டு, அவனது தோளைத் தொட்டு, "சிற்பிகாவுக்கு அந்தப் பலத்தைத் தந்தது அந்த மாலைதான் என்றால்... அந்தச் சியாமந்தக மாலை இப்போது எங்கே இருக்கிறது? அதை எப்படி அடைவது?" என்று கேட்கத் தயாரானாள்.

இஷிதா சற்றும் தாமதிக்காமல், தன் புன்னகையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள்.

இஷிதா: "சரி... நீ சிற்பிகாவிடம் ஆசைப்பட்டு, உனக்குக் கிடைக்காமல் போன அந்த முழு சுகத்தையும்... இதோ, இந்த நொடியில் இருந்து நான் உனக்கு முழுசாகத் தரத் தயாராக இருக்கிறேன்!"

அவள் அதைச் சொல்லி முடிக்கும் பொழுதே, அந்தச் சென்டினல் பையனின் கண்கள் காம வெறியால் சட்டென ஒளிர்ந்தன! அவளது பால் போன்ற மேனியும், நீலக் கண்களும் அவனது அடங்கிப்போயிருந்த அசுரத் திமிரை மீண்டும் உசுப்பிவிட்டன. அவன் எச்சிலைக் கூசாமல் விழுங்கியபடி, அவளது ஒல்லி இடையைப் பற்றிக் கசக்கிப் பிழிய உக்கிரமான காமத்துடன் அவளை நோக்கி நெருங்கினான்.

அவன் தன் முரட்டுக்கரங்களால் அவளது உடம்பைத் தீண்ட வந்த அந்த விநாடி, இஷிதா தன் மெல்லிய கரங்களை நீட்டி அவனது மார்பில் கைவைத்து அசாத்தியமாகத் தடுத்து நிறுத்தினாள். அவளது முகத்தில் ஒரு தந்திரமான சிரிப்பு விளையாடியது.

இஷிதா: "இரு... அவசரப்படாதே! இந்த இஷிதா அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் அத்தனை எளிதாகக் கிடைத்துவிட மாட்டாள். எனக்கு அந்தச் சியாமந்தக மாலை வேண்டும்! அந்த மாலை எப்போது என் கைக்கு வருகிறதோ... அந்த அடுத்த விநாடியே, என் இந்த வழுவழுப்பான உடம்பு அங்கேயே உனக்கு ஆசை தீர அனுபவிக்கக் கிடைக்கும்! இது என் சத்தியம்!"

அவளது நிபந்தனையைக் கேட்டதும், அவனது முகத்தில் இருந்த காம வெறி சட்டென மறைந்து, ஒரு பயங்கரமான நடுக்கம் மீண்டும் குடியேறியது. அவன் அவளை உற்றுப் பார்த்துத் தன் கைகளை உதறினான்.

சென்டினல் பையன்: "அந்த மாலையை எடுக்க வேண்டுமா? இஷிதா... நீ நினைப்பது போல அது அத்தனை எளிதல்ல! அந்தச் சியாமந்தக மாலையை நீ எடுக்க வேண்டும் என்றால், இங்கிருந்து கடலைக் கடந்து அந்தப் பேராபத்து நிறைந்த எங்க சென்டினல் தீவுக்குத்தான் (Sentinel Island) போக வேண்டும். ஆனால், அங்கே நீ கால் வைத்தால்... உன்னை உயிரோடு விடமாட்டார்கள், அங்கேயே கொடூரமாகக் கொன்று குவித்துவிடுவார்கள்!"

எங்கள் தீவின் சட்டப்படி, வெளியுலகில் இருந்து எந்தவொரு அந்நிய மனிதன் தீவுக்குள் நுழைந்தாலும், அவனது நெஞ்சில் விஷ அம்புகளைப் பாய்ச்சிப் பிணமாக்குவதுதான் எங்கள் இன மக்களின் வழக்கம்.

இஷிதா தன் கண்களில் அனல் பறக்கும் துணிச்சலோடு, அவனது எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு நேராக அவனது முகத்தைப் பார்த்துப் பேசினாள்.

இஷிதா: "இங்கே பார்... எனக்கு அந்தச் சியாமந்தக மாலை வேண்டும், அதற்கு இந்த உலகத்தில் எந்த ஆபத்தான பகுதிக்குச் செல்வதற்கும் நான் தயார்! உன்னுடைய சென்டினல் தீவு என்ன... அதைவிட நரகத்திற்கே செல்ல வேண்டியிருந்தாலும் நான் பின்வாங்க மாட்டேன். நான் உன் தீவுக்கு வருகிறேன்!"

அவளது இந்த அசாத்தியமான பேராசையையும் துணிச்சலையும் கண்ட சென்டினல் தீவுப் பையன், சில நொடிகள் ஆழ்ந்து யோசித்தான். அவளது வழுவழுப்பான உடலை அடைய வேண்டும் என்ற காம வெறியும், சிற்பிகாவை வீழ்த்த வேண்டும் என்ற குரோதமும் அவனுக்குள் ஒரு சதித் திட்டத்தை உருவாக்கியது.

சென்டினல் பையன்: "சரி, அப்போ ஒன்று செய் இஷிதா... நானும் சிற்பிகாவும் இன்று இரவு சென்டினல் தீவுக்குத் துடுப்புப் படகில் செல்லப் போகிறோம். அமாவாசைக்கு முன்பு கடல் நீரோட்டம் இங்கிருந்து எங்கள் தீவை நோக்கித்தான் இருக்கும். மொத்தம் 23 கிலோமீட்டர் தூரம்தான். சரியாகத் துடுப்புப் போட்டால் இரண்டு மணி நேரத்திற்குள் தீவைச் சென்று அடைந்துவிடலாம்."

இஷிதா: "ஏன்... இங்கிருந்து அதிவேக மோட்டார் படகில் (Motor Boat) செல்ல முடியாதா? துடுப்புப் படகில் ஏன் இவ்வளவு நேரம் வீணடிக்க வேண்டும்?"
அவன் தன் தலையை 'ம்ஹீம்' என்று பலமாக மறுத்து ஆட்டினான்.

சென்டினல் பையன்: "ம்ஹீம்... மோட்டார் படகில் சென்றால் அந்தச் சத்தம் கேட்டு இந்தியக் கடலோரக் காவல் படை (Indian Coast Guard) நம்மைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிடும்! அதனால், சத்தமில்லாமல் துடுப்புப் படகில் மட்டும்தான் செல்ல முடியும்."

இஷிதா: "சரி... அதைப்பற்றி நீ கவலைப்படாதே, அதை நான் பார்த்துக் கொள்கிறேன்! உன்னுடைய திட்டத்தைச் சொல்..."

சென்டினல் பையன்: "நானும் சிற்பிகாவும் இன்று இரவு 10 மணிக்கு இங்கிருந்து படகில் புறப்படுவோம். நீங்கள் எங்களுக்குப் பின்னாடியே சிறிது நேரம் கழித்து உங்கள் படகில் வாருங்கள். எங்கள் தீவுக்குள் மின்சார வெளிச்சம் கிடையாது... வெறும் தீப்பந்தம் மட்டும்தான் இருக்கும். அதிலும் கடற்கரைக்கு அருகே எந்தத் தீப்பந்தமும் இருக்காது, முற்றிலும் இருட்டாக இருக்கும்.நான் உனக்காக முன்னே சென்று,அங்கே கடற்கரையில் காத்து இருப்பேன். இரவில் நீ தீவுக்குள் வந்தாலும் அவ்வளவு எளிதில் என் இனத்து மக்களின் கண்களில் நீ அகப்பட மாட்டாய்!"

விடிவதற்குள் நீ வந்த காரியத்தை முடித்துவிட்டு, அந்தச் சியாமந்தக மாலையோடு இங்கிருந்து கிளம்பிவிடலாம். பிறகு நீ எனக்குச் சொன்ன அந்தப் படுக்கைச் சுகத்தின் சத்தியத்தை அங்கேயே நிறைவேற்றி கொடுக்க வேண்டும். !"

[Image: images-1.jpg]

அவன் விவரித்த அத்தனை சூழல்களையும் தன் மூளைக்குள் அலசிப் பார்த்த இஷிதாவுக்கு, அந்தத் தீவின் கும்மிருட்டும், கடற்கரையில் அவன் காத்திருப்பும் ஒரு பொன்னான வாய்ப்பாகத் தெரிந்தது.

தீவுக்குள் நுழைய இன்னொரு நபரின் துணை இருந்தால் தேவலாம் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், காலடி வைத்தாலே மரணம் நிச்சயம் என்று தெரிந்த அந்தச் சென்டினல் தீவுக்குள் நுழைய  யாரும் துணிய மாட்டார்கள்! இஷிதா தன் விரல்களால் பாறையைத் தட்டியபடி யோசித்தபோது, அவள் மனதில் தோன்றியது ஒரே ஒரு உருவம் தான்.
இஷிதா (மனதிற்குள் வக்கிரப் புன்னகையோடு): "ரியான்... கண்டிப்பாக இந்தத் தீவுக்குள் நுழைய உன்னைத் தவிர வேறு யாரும் வர மாட்டார்கள். உன்னோட பலவீனம் சிற்பிகா என்பதை நான் நன்றாக அறிவேன்!"

ரியானுக்குச் சிற்பிகாவின் மீது இருக்கும் அந்த அடக்க முடியாத ஈர்ப்பையும் காதலையும் இஷிதா ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தாள். சியாமந்தக மாலையை அடைவதற்காக எதையும் செய்யத் துணிந்தவள் என்பதால், அவளுக்குள் இப்போது பல புதிய சதித் திட்டங்கள் மின்னல் வேகத்தில் உருவாகின.

அதில் முதன்மையானதும் மிகக் கொடூரமானதுமான திட்டம் — ரியானை பலி கொடுப்பது!

அடுத்து சென்டினல் தீவு நோக்கிய ஆபத்தான பயணம்


[+] 10 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Geneliarasigan - 08-06-2026, 10:56 PM



Users browsing this thread: 11 Guest(s)