Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
பகுதி 28
ஆஸ்பத்திரியின் அந்த நீண்ட காரிடாரில் டெட்டால் வாசனையும், மருந்துகளின் நெடியும் காற்றில் கலந்திருந்தது. இரவு நேரத்தின் அந்த மங்கலான டியூப் லைட் வெளிச்சம் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஐசியு வார்டுக்கு வெளியே இருந்த சிறிய இரும்பு ஸ்டூலில், தலையைக் கைகளில் தாங்கியபடி உக்காந்திருந்தான் கிஷோர். அவனது உடம்பில் இருந்த காயங்களை விட, மனசுக்குள் இருந்த குற்றவுணர்ச்சியும் வலியும் அவனைப் பெருமளவு வதைத்துக் கொண்டிருந்தது.


உள்ளே படுக்கையில் பீட்டர் அசைவற்று கிடந்தான். உடம்பெல்லாம் வெள்ளை நிற பேண்டேஜ் சுற்றப்பட்டு, முகத்தில் பெரிய ரத்தக்கட்டுகளுடன், ஒரு இரும்பு ராடால் வாங்கிக் கட்டிக்கொண்ட அடிகளின் தழும்புகளோடு கிடந்த தன் நண்பனைப் பார்க்கப் பார்க்க, கிஷோருக்கு நெஞ்சு அடைத்தது.


என் ஒருத்தனுக்காக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அந்த மரணக் குழிக்குள்ள வந்து விழுந்துட்டானே என் மச்சான்... கிஷோரின் கண்கள் கலங்கின. ஒரு நாள் முழுக்க அவன் அங்கிருந்து நகரவே இல்லை. பீட்டருக்கு மூச்சு சீராக வருகிறதா, அவனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா எனப் பேயடித்தவனைப் போலப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டான்.

மறுநாள் காலை, பீட்டருக்கு லேசாக மயக்கம் தெளிந்தது. கண்களைச் சிரமப்பட்டுத் திறந்தவன், தன் அருகில் ரத்தக் காயங்களுடன், தூக்கமில்லாமல் சிவந்த கண்களோடு அமர்ந்திருந்த கிஷோரைப் பார்த்தான்.

"ம... மச்சான்..." என்று காய்ந்து போன தொண்டையில் இருந்து வார்த்தைகளை முக்கி எடுத்தான் பீட்டர்.

சட்டெனப் பதறிப்போய் எழுந்த கிஷோர், பீட்டரின் கைகளைத் தன் இரண்டு கைகளுக்கும் நடுவில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். "டேய்... டேய்... ஒன்னும் பேசாதடா... நான் இருக்கேன்... நான் இருக்கேன்டா," என்று கிஷோரின் குரல் உடைந்தது. அவனது இரும்புக் கைகள் தன் நண்பனின் மென்மையான விரல்களை ஆதரவாக வருடின.


"பொண்ணுங்க... பொண்ணுங்க தப்பிச்சுட்டாங்களாடா?" என்று வலியைப் பொறுத்துக்கொண்டு கேட்ட பீட்டரின் வார்த்தைகள் கிஷோரை இன்னும் கலங்கச் செய்தது. தன் உசுரு போற நிலைமையிலும் அடுத்தவங்களைக் பத்தி நினைக்கிற அந்த மனசு கிஷோரை உருக வைத்தது.


ஒரு நாள் முழுவதும் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு, பீட்டரின் நிலைமை கொஞ்சம் சீரானதும், அடுத்த நாள் தன் வீட்டிற்கு வந்தான் கிஷோர்.

வீட்டின் கதவைத் திறந்த அவனது அக்கா சுகன்யா, தம்பியின் கோலத்தைப் பார்த்ததும் அப்படியே ஆடிப்போய் விட்டாள். சட்டையெல்லாம் கிழிந்து, முகத்தில் வீக்கமும், கைகளில் ரத்தக் காயங்களுமாக நின்றிருந்த தம்பியைப் பார்த்ததும் அவளுக்குக் குடலே நடுங்கிவிட்டது.

"கிஷோர்... என்னடா இது? உடம்பெல்லாம் இப்படி ரத்தக்களறியா இருக்கு? எந்த வண்டியிலடா அடிபட்டுச்சு?" என்று பதறியபடி அவனைக் கைத்தாங்கலாக உள்ளே கூட்டிச் சென்று நாற்காலியில் உட்கார வைத்தாள்.

கிஷோர் பெருமூச்சு விட்டு, நடந்த அந்த நரகக் குடோன் சம்பவங்களை, எம்.எல்.ஏ குடும்பப் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை, பீட்டர் பட்ட அடிகளை ஒன்றொன்றாகச் சொன்னான்.

அவன் சொல்லச் சொல்ல சுகன்யாவுக்கு நெஞ்சைப் பிசைந்தது. தன் தம்பி ஒரு பொம்பளையோட மானத்தைக் காப்பாத்தப் போய் இவ்வளவு அடி வாங்கியிருக்கான் என்ற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், பீட்டரின் நிலைமையைக் கேட்டதும் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

"பீட்டர் தம்பிக்கு இவ்வளவு பெரிய அடியா? அந்தப் பசங்க ராடால அடிச்சுப் போட்டானுங்களா? பாவம்டா அவன்... அவனுக்கு யாருடா இருக்கா ?" என்று முந்தானையால் முகத்தை மூடித் தேம்பித் தேம்பி அழுதாள் சுகன்யா. பீட்டரைத் தன் உடன் பிறந்த தம்பியாகவே நெஞ்சில் சுமப்பவள் அவள். உடனே சுடுதண்ணீர் வைத்து, மஞ்சள் தூள் கலந்து ஒரு துணியால் கிஷோரின் காயங்களைத் துடைத்து விட்டாள். ஒவ்வொரு முறை அவள் மருந்து வைக்கும்போதும், அவளது கைகள் தம்பியின் வலியை உணர்ந்து நடுங்கின.


அங்கே எம்.எல்.ஏ கந்தசாமியின் பங்களாவோ ஒரு மயானப் பூமியைப் போலக் காட்சியளித்தது. மூன்று நாட்களாக அந்த வீட்டின் ஜன்னல்கள் கூடத் திறக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒரு பயங்கரமான மனநிலையில் உறைந்து போயிருந்தனர்.

லதா இன்னும் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. இருட்டைப் பார்த்தாலே அவளுக்குக் குடோனின் அந்த நெடி மூக்கைத் துளைத்தது. பூரணியின் நிலைமையும் அதுதான். தூக்கமில்லாமல், கண்கள் குழிவிழுந்து போயிருந்தாள். அந்த மூன்று முரட்டு ஆட்களின் வக்கிரப் பார்வையும், கிஷோரின் அந்தப் பாதுகாப்பான அணைப்பும் அவளுக்குள் ஒரு பெரும் சூறாவளியைக் கிளப்பி விட்டிருந்தது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட வேலைக்காரி பத்மாவுக்கு, அதிர்ச்சியில் வாய் அடைத்துப் போயிருந்தது. மாடியில் இருந்த தையல் மிஷின் அறையைச் சுத்தம் செய்யப் போனவள், அந்த மிஷினையே வெறித்துப் பார்த்தாள்.


சும்மா, துணி தைக்கிற சாதாரணப் பையன்னு நெனச்சோமே... இவ்வளவு பெரிய எம்.எல்.ஏ குடும்பத்தையே ஒருத்தன் ஒண்டிக் கையா நின்னு காப்பாத்தியிருக்கானே... அவனுக்குள்ள எவ்வளவு பெரிய நெருப்பு இருந்திருக்கும்! என்று அவளுக்குள் கிஷோரைப் பற்றிய பிம்பம் ஒரு மாவீரனாக விஸ்வரூபம் எடுத்தது. கிஷோரின் தைரியத்தை நினைத்து அவளுக்கே உடம்பு சிலிர்த்தது.

பங்களாவின் அந்த அமைதிக்குள்ளே கந்தசாமியின் அரசியல் மூளை மட்டும் சைலண்டாக வேலை செய்துகொண்டிருந்தது. அரவிந்தும் அவனது ஆட்களும் அந்தப் பழைய குடோனிலேயே குழியில புதைக்கப்பட்டதை அவர் யாருக்கும் சொல்லவில்லை. அது வெளியே தெரிந்தால் அரசியல் வட்டாரத்தில் பெரிய பூகம்பமே வெடிக்கும் என்பதால், தன் அடியாட்களுக்குக் கடுமையான உத்தரவு போட்டு, அந்த ரகசியத்தை அந்த இருட்டிலேயே ஆழமாகப் புதைத்து விட்டார்.


மூன்று நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. குடும்பத்தினர் அந்தப் பேரதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரத் தொடங்கியிருந்தனர். அப்போதுதான், வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த பூரணியின் கணவன் அருண் பங்களாவுக்குத் திரும்பி வந்தான்.
கையில பெட்டியோடு சந்தோஷமாக வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு, வீட்டின் அந்த மரண அமைதி சட்டென உறைக்கச் செய்தது. நேராகப் பூரணியின் அறைக்குள் சென்றான். அங்கே பூரணி, தலைவிரி கோலமாக, கண்களில் நீர் வற்றிப்போய் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.

"பூரணி... என்னாச்சு? வீடே ஏன் இப்படி இருக்கு? உன் முகமெல்லாம் ஏன் இப்படி வாடிப்போய் கிடக்கு?" என்று பதற்றத்தோடு அவளருகில் சென்று அவளது தோள்களைப் பற்றினான்.


கணவனைப் பார்த்ததும் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அழுகை பூரணிக்கு வெடித்துக் கொண்டு வந்தது. ஓடிப்போய் அருணின் நெஞ்சில் சாய்ந்து கதறினாள். நடந்த அந்தப் பயங்கரங்களை, அரவிந்த் செய்த காரியங்களை, லதாவுக்கும் அவளுக்கும் நடக்கவிருந்த அந்த மானபங்கத்தை விக்கி விக்கி அழுதபடியே சொன்னாள்.

அதைக் கேட்கக் கேட்க அருணின் கண்களில் ரத்தம் கட்டியது. அவனது நரம்புகள் புடைத்துத் துடித்தன. தன் உயிர் காதலி, தன் மனைவியின் உடலை, அந்தத் தெருப் பொறுக்கிகள் தீண்ட நினைத்தார்கள் என்பதைக் கேட்டதும் அவனுக்குள் இருந்த கோபம் எரிமலையாக வெடித்தது.

"எவண்டா அவன்? என் பொண்டாட்டி மேல கை வைக்க எந்த நாய்க்குடா இவ்வளவு தைரியம்? உன்னை இந்தக் கோலத்துல ஆக்குன எந்தப் பொறுக்கியும் இனி உசுரோட இருக்கக் கூடாதுடி!" என்று சிங்கமாக கர்ஜித்தான்.

கோபத்தில் கண்மூடித்தனமாகத் தன் காரின் சாவியை எடுத்துக்கொண்டு பாய்ந்தான் அருண். "அந்த அரவிந்தை நான் என் கையாலேயே வெட்டிச் சாய்க்கிறேன்!" என்று வெறியோடு கிளம்பினான்.

ஆனால், அவனை வாசலிலேயே மறித்தார் கந்தசாமி.

"அருண்... நில்லுப்பா! கோபத்துல எந்த முடிவும் எடுக்காதே. இது சாதாரணப் பிரச்சனை இல்ல, அரசியல்," என்று அவர் அமைதியாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.

"அரசியலாவது, மண்ணாங்கட்டியாவது! என் பொண்டாட்டி மானத்து மேல கை வெச்சவனை நான் சும்மா விடமாட்டேன் அப்பா. நீங்க வழி விடுங்க," என்று அருண் தவித்தான்.

கந்தசாமி அவனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். அவருக்கு மட்டும்தான் தெரியும், அருண் யாரைக் கொல்லத் துடிக்கிறானோ, அந்த அரவிந்தும் அவன் ஆட்களும் ஏற்கனவே மண்ணுக்குள் மக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஆனால் அதைத் தன் மகனிடம் கூடச் சொல்லக் கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்தார்.


"எல்லாம் முடிஞ்சிருச்சு அருண். அந்த நாய்களைப் பத்தி நான் பாத்துக்குறேன். நீ இப்போ பூரணி கூட இரு. அவளுக்கு உன் ஆதரவு தான் இப்போ ரொம்ப முக்கியம்," என்று சொல்லி அவனைத் தடுத்து நிறுத்தினார் கந்தசாமி. அருணுக்குக் கோபம் அடங்கவில்லை என்றாலும், மனைவியின் தவிப்பைப் பார்த்து அவளுக்காக அங்கேயே தங்கிவிட்டான்.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் பங்களாவில் நடந்து ஓய்ந்த பிறகு, அங்கே ஆஸ்பத்திரியில் பீட்டரின் காயங்கள் ஓரளவுக்குச் சரியாகி வந்தன. மருத்துவர்கள் அவனை டிஸ்சார்ஜ் செய்யச் சம்மதித்தனர்.

கிஷோர் ஒரு ஆட்டோவைப் பிடித்து, தன் நண்பனைத் தன் சிறிய வீட்டுக்கு அழைத்து வந்தான். பீட்டர் ஆட்டோவிலிருந்து இறங்கச் சிரமப்பட்டபோது, கிஷோர் அவனைத் தன் தோளில் தாங்கிக்கொண்டு மெதுவாக உள்ளே அழைத்துப் போனான்.


வாசல் படியிலேயே நின்றிருந்த சுகன்யா, பீட்டரைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவனது இன்னொரு கையைப் பிடித்துக் கொண்டாள்.

" உனக்கு எவ்வளவு பெரிய கண்டம் வந்திருச்சு பாரு," என்று சொல்லிக் கொண்டே கண் கலங்கினாள்.


பீட்டரைப் படுக்க வைக்க ஒரு மெத்தையைத் தரையில் விரித்து, அவனை மெதுவாக உட்கார வைத்தாள். உடனே சமையலறைக்குள் சென்று, சூடாக ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

"இந்தா தம்பி, இதைக் குடி. உனக்கு உடம்புல எந்தத் தெம்பும் இல்ல. என் கையால நான் உன்னைக் கவனிச்சுக்குறேன்," என்று தாய்மையோடு அவனைப் பார்த்தாள்.

பீட்டருக்குத் தொண்டை அடைத்தது. சுகன்யா அவனைத் தன் சொந்தத் தம்பியை விட மேலாகப் பார்ப்பதைப் பார்த்து அவனது கண்கள் குளமாகின.

"அக்கா... நீங்க எனக்குக் கெடைச்ச பெரிய சாமிக்கா. உங்களைப் பார்க்கும்போது எனக்கு என் வலியெல்லாம் பறந்து போயிருச்சு," என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினான் பீட்டர்.

அந்தச் சிறிய வீட்டில், அன்பும் பாசமும் நிறைந்து, காயங்களுக்கு மருந்தாகிக் கொண்டிருந்தது. 

ஒரு பெரிய அரசியல் புயல், தன் கோரத் தாண்டவத்தை முடித்துவிட்டு, ஒரு மயான அமைதியோடு ஓய்ந்திருந்தது. ஆனால், பங்களாவிற்குள் பூரணியின் மனதிற்குள் கிஷோரைப் பற்றிய அந்தப் புதிய தவிப்பும், அருணின் அடங்காத பழிவாங்கும் வெறியும், கந்தசாமியின் அந்த ரகசியமும் இன்னும் எரியும் நெருப்பாகவே கனன்று கொண்டிருந்தன.



அந்த எம்.எல்.ஏ பங்களாவின் பெரிய இரும்புக் கேட் மெதுவாகத் திறந்தது. உள்ளே கிஷோரும், அவனது தோளில் கைபோட்டபடி லேசாக நொண்டிக்கொண்டே பீட்டரும் நடந்து வந்தார்கள். பல நாட்களுக்குப் பிறகு அந்தப் பங்களாவுக்குள் அவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.


அன்று சாதாரண வேலைக்காரர்களாக, தையல் மெஷினும் கையுமாக உள்ளே நுழைந்தவர்கள், இன்று அந்த வீட்டின் மானத்தைக் காப்பாற்றிய மாவீரர்களாக உள்ளே வருகிறார்கள். வாசலில் நின்ற வாட்ச்மேன் முதல், தோட்டக்காரன் வரை எல்லோர் பார்வையிலும் இப்போது கிஷோரைப் பார்க்கும்போது ஒரு பிரம்மாண்டமான மரியாதையும் பயமும் தெரிந்தது. வாட்ச்மேன் உடனே ஓடி வந்து, 

"வாங்க தம்பி... பீட்டர் தம்பி எப்படி இருக்கீங்க? காயம் பரவாயில்லையா?" என்று பவ்யமாகக் கேட்டான்.

வேலைக்காரி பத்மா அவர்களைப் பார்த்ததும், ஓடோடி வந்து, "வாங்க ... நீங்க செஞ்சது சாதாரண காரியமில்ல... உங்களை எப்டிக் கும்பிட்டாலும் பத்தாது," என்று கண்ணீர் மல்க வரவேற்றாள்.

கிஷோர் அமைதியாகச் சிரித்துக்கொண்டே, "அதெல்லாம் ஒன்னும் இல்ல... எல்லாம் கடவுள் விட்ட வழி," என்று சொல்லிக்கொண்டே பீட்டரைத் தாங்கியபடி ஹாலுக்குள் நுழைந்தான்.


ஹாலில் எம்.எல்.ஏ கந்தசாமி சோபாவில் தீவிர யோசனையில் அமர்ந்திருந்தார். ஒரு காலத்தில் அதிகாரத் திமிரிலும், அரசியல் கெட்டப்பிலும் நிமிர்ந்து உட்கார்ந்திருந்த அந்த மனிதர், இன்று ஒரு தகப்பனாக, குடும்பத் தலைவனாக மிகவும் தளர்ந்து போயிருந்தார்.

கிஷோரும் பீட்டரும் உள்ளே வருவதைப் பார்த்ததும், ஒரு எம்.எல்.ஏ என்ற பந்தா கொஞ்சம் கூட இல்லாமல், சட்டுனு எழுந்து நின்றார்.

"வாப்பா... வா கிஷோர்... வா பீட்டர்!" என்று அவர் குரல் தழுதழுத்தது.

"ஐயா..." என்று தயங்கியபடி நின்றான் கிஷோர்.

"டேய், அங்கேயே நிக்காதீங்கடா. முதல்ல இங்க வந்து உக்காருங்க," என்று சொல்லிக் கொண்டே தன் எதிரில் இருந்த விலைமதிப்பற்ற சோபாவில் அவர்களை உட்காரச் சொன்னார்.

கிஷோருக்கும் பீட்டருக்கும் தயக்கம். "இல்லய்யா... நாங்க கீழேயே..." என்று பீட்டர் இழுக்க, கந்தசாமி உடனே போய் பீட்டரின் கையைப் பிடித்து சோபாவில் உட்கார வைத்தார். 

"உட்காருடா... என் குடும்பத்துக்காக ரத்தம் சிந்துன உங்களை நான் கீழ உக்கார வெச்சா, எனக்குப் பாவம்டா வந்து சேரும்," என்றார்.

அந்தச் சத்தம் கேட்டு, உள்ளே அறையிலிருந்து லதா வெளியே வந்தாள். ஒரு உயர்குடி குடும்பத்தின் கௌரவமான பெண்மணி, பட்டுப் புடவையும் நகைகளுமாக வலம் வந்த அந்த லதா, இன்று ஒரு சாதாரண காட்டன் புடவையில், முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல், களைத்துப் போய் வெளியே வந்தாள். அவளது கண்களில் இன்னும் அந்தப் பழைய குடோனின் பயமும், இருட்டும் முழுமையாக விலகவில்லை.


ஆனால், சோபாவில் உட்கார்ந்திருக்கும் கிஷோரைப் பார்த்ததும், லதாவின் கண்களில் ஒரு பெரிய ஒளி பிறந்தது. அந்த முரட்டு ஆட்களின் எச்சில் தன் மீது பட்டு, தன் உடம்பையே கசக்கி எறிய நினைத்த அந்த நரகத் தருணத்தில், இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு ஒரு சிங்கம் மாதிரி வந்து நின்ற கிஷோரின் உருவம் அவளுக்குள் வந்து போனது.

லதா வேகவேகமாக நடந்து வந்து, கிஷோரின் எதிரில் நின்றாள். அவளது உதடுகள் துடித்தன, கைகள் நடுங்கின.

"முதலாலியம்மா..." என்று பதறிப்போய் எழுந்தான் கிஷோர்.
சட்டென்று லதா, கிஷோரின் இரண்டு கைகளையும் தன் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் மடைதிறந்த வெள்ளம் போலக் கொட்டியது.

"தம்பி... நீ சாதாரண மனுஷன் இல்லடா... நீ எனக்குச் சாமிடா... கடவுள் ரூபத்துல வந்து என்னைக் காப்பாத்துன சாமிடா நீ..." என்று தேம்பித் தேம்பி அழுதாள் லதா.

அந்தப் பெரிய இடத்துப் பெண்மணி, தன்னைச் சாமி என்று கூப்பிட்டு அழுவதைப் பார்த்து கிஷோர் ஆடிப்போய்விட்டான்.

 "ஐயோ அம்மா! என்ன இது? விடுங்க... நீங்க என் குடும்பம் மாதிரி. அதான் செஞ்சேன்... இதுக்குப் போய் நீங்க..." என்று அவளது கைகளை ஆதரவாக வருடினான்.

"இல்ல தம்பி..." என்று விம்மிய லதா, "என் உசுரு போயிருந்தா கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனா... ஆனா அந்த நாய்கள்... என் கௌரவம், என் மானம், என் தாலி... எல்லாத்தையும் நாசம் பண்ண வந்தானுங்க. நீ மட்டும் அன்னைக்கு வரலன்னா... இன்னைக்கு நான் உசுரோடயே இருந்திருக்க மாட்டேன்டா. என் பொணம்தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கும். என் மானத்தக் காப்பாத்துன உனக்கு நான் என்னடா கைம்மாறு செய்வேன்?" என்று கதறினாள்.

கந்தசாமி வந்து தன் மனைவியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார். அவருக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

"ஆமாப்பா கிஷோர்... என் பொண்டாட்டி சொல்றது நூத்துக்கு நூறு நெஜம். ஒரு ஆம்பளைக்கு எல்லாமே அவனோட குடும்பப் பொம்பளைங்களோட மானத்துல தான் அடங்கியிருக்கு. அன்னைக்கு அந்த மானம் போயிருந்தா, இந்த எம்.எல்.ஏ கந்தசாமியே தற்கொலை பண்ணிக்கிட்டு செத்திருப்பேன். நீங்க ரெண்டு பேரும் உங்க உசுரப் பணயம் வெச்சு என் குடும்பத்தைக் காப்பாத்தியிருக்கீங்க," என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

தன் தழும்புகளைத் தடவிக்கொண்டே உட்கார்ந்திருந்த பீட்டர் இதைக் கேட்டு நெகிழ்ந்து போனான். தங்களை எத்தனையோ பேர் நாயினும் கீழாக நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இன்று, ஊரையே ஆட்டிப் படைக்கும் ஒரு எம்.எல்.ஏ குடும்பம், தங்கள் முன்னால் இப்படி உருகி நிற்பதைப் பார்த்து அவனது தொண்டை அடைத்தது.

"ஐயா... நாங்க உங்க சோத்தத் தின்னவங்க. எங்களுக்கு விசுவாசத்தைத் தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா. கிஷோரும் நானும் உசுரு இருக்குற வரைக்கும் உங்க குடும்பத்துக்காக உழைப்போம்," என்றான் பீட்டர்.

கந்தசாமி பீட்டரின் தோளில் தட்டிக் கொடுத்தார். பிறகு தன் கம்பீரமான குரலில், ஆனால் மிகுந்த பாசத்தோடு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

"இங்க பாருங்கடா... இன்னையில இருந்து சொல்றேன். இனிமே கிஷோர், இந்த வீட்டுக்குத் தையல் வேலைக்குப் வந்த ஒரு ஆள் கிடையாது. அவன் இந்த வீட்டின் முக்கியமான நபர்களில் ஒருத்தன்!" என்று அழுத்தமாகச் சொன்னார்.

பத்மாவும் மற்ற வேலைக்காரர்களும் இதைக் கேட்டு ஆச்சரியத்தில் சிலிர்த்து நின்றார்கள்.

தொடர்ந்து கந்தசாமி, "தம்பி கிஷோர்... உனக்கோ, உன் நண்பன் பீட்டருக்கோ... வாழ்க்கையில எந்த உதவி தேவைப்பட்டாலும், அது பணமோ, பொருளோ, அதிகாரமோ... என்ன வேணும்னாலும் என்கிட்ட உரிமையா வந்து கேளுங்க. நான் உங்களுக்குப் பண்ணக் காத்துக்கிட்டு இருக்கேன். என்றார்.

லதாவும் கண்ணீரோடு தலையாட்டினாள். "ஆமா தம்பி... உங்களுக்கு நான் இருக்கேன்," என்றாள்.

கிஷோருக்கு உடம்பெல்லாம் ஒரு விதமான சிலிர்ப்பு ஓடியது. அந்தப் பழைய குடோனில் அவன் சிந்திய ரத்தத்திற்கும், பீட்டர் வாங்கிய அடிக்கும் இன்று மிகப்பெரிய மரியாதை கிடைத்திருக்கிறது.


பாராட்டு மழைகளும், நன்றிக் கண்ணீரும், நெகிழ்ச்சியான வார்த்தைகளும் முடிந்து, பத்மா அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

ஹாலில் அமைதி நிலவியது. கந்தசாமி பீட்டரிடம் அவனது மருத்துவம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். லதா கிஷோரின் காயங்களை அக்கறையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால்... கிஷோரின் மனசு வேறு எங்கிலோ இருந்தது. காபியைக் கையில் வைத்துக்கொண்டு, அவனது கண்கள் அந்தப் பெரிய வீட்டின் நாலாபுறமும் சுழன்றன.

மாடிப் படிகளைப் பார்த்தான்... பூட்டியிருந்த அறைகளின் கதவுகளைப் பார்த்தான்... அந்த நீண்ட தாழ்வாரத்தைப் பார்த்தான்.

எல்லாரும் வந்துட்டாங்க... லதா சின்னம்மா வந்து பேசுறாங்க, ஐயா பாராட்டுறாரு... ஆனா... அவ எங்க? பூரணி எங்க?

அவனது இதயம் நெஞ்சுக் கூட்டுக்குள் படபடவென அடித்துக்கொண்டது. குடோனில் அரவிந்தின் அந்த வக்கிரப் பார்வைக்குத் தப்பிக் கதறி அழுத அவளது முகம்... அவளை மயக்க நிலையில் அலேக்காகத் தூக்கியபோது அவளது மார்புகள் அவன் நெஞ்சில் அழுந்திய அந்தச் சூடு.

 அவ புருஷன் அருண் வேற ஊர்ல இருந்து வந்துட்டான்னு சொன்னாங்களே... ஒருவேளை அவன் அவளைக் கண்காணிச்சுக்கிட்டு இருக்கானோ? இல்ல அவளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?

கிஷோரின் மூளைக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடின. அவனால் ஒரு நிமிடம் கூட அங்கே அமைதியாக உட்கார முடியவில்லை. அவனது கண்கள் ஒரு திருடனைப் போல மாடிப் படிக்கட்டுகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

காபியைத் தொண்டைக்குள் இறக்கும்போது கூட, அவனது காதுகள் அவளது கொலுசுச் சத்தத்திற்காகக் காத்துக் கிடந்தன. அந்த வீட்டின் கௌரவமான மருமகள், தன் மனதின் மகாராணியாக மாறிவிட்ட அந்தப் பூரணியை... அவளது அந்தச் சிவந்த, பயந்த முகத்தை, ஒரு நொடியாவது பார்த்துவிட மாட்டோமா என்று அவனது கண்கள் ஏக்கத்தோடு
 மாடிப் பக்கமாக அலைபாய்ந்து கொண்டே இருந்தன.


அந்தப் பங்களாவின் அமைதிக்குள், கிஷோரின் இந்த வெறித்தனமான காதல் தவிப்பு ஒரு பெரிய புயலாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 06-06-2026, 02:10 PM



Users browsing this thread: 3 Guest(s)